Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavulai Kaattu!
Kadavulai Kaattu!
Kadavulai Kaattu!
Ebook170 pages1 hour

Kadavulai Kaattu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடவுள் இருக்கிறாரா? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? - இப்படி மனித வாழ்க்கையில் பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன. இந்த நவீன யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. விஞ்ஞானிகளில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.

அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த விஞ்ஞானிகள் தரும் செய்திகளை இந்த நூலில் காணலாம். கடவுளைக் காட்டு என்போருக்கு பதிலை பல எடுத்துக்காட்டுகளுடன் தருவதோடு இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இதில் படித்து மகிழலாம். கேள்வி கேட்கும் மற்றவருக்கும் தக்க விடைகளைக் கூறலாம்.

Languageதமிழ்
Release dateOct 10, 2022
ISBN6580151009144
Kadavulai Kaattu!

Read more from S. Nagarajan

Related to Kadavulai Kaattu!

Related ebooks

Related categories

Reviews for Kadavulai Kaattu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavulai Kaattu! - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    கடவுளைக் காட்டு!

    Kadavulai Kaattu!

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. கடவுளைக் காட்டு! - 1

    2. கடவுளைக் காட்டு! - 2

    3. கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை என்பதை நிரூபி!

    4. கடவுளுக்கு சவால்! குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

    5. கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்!

    6. இறைவன் இருக்கிறான்! - அறிவியல் தரும் ஆதாரங்கள்!

    7 இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!)

    8. கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!

    9. கடவுள் எங்கே? – 1

    10. கடவுள் எங்கே? – 2

    11. கம்ப்யூட்டர் கடவுளே சரணம்!

    12. இறைவன் பற்றிய இரகசியங்கள்!

    13. கடவுளும் கம்ப்யூட்டரும்

    14. மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்!

    15. கென்னடி - மிட்சுபிஷி - செர்னோபில் - பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று!

    16. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!

    17. கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!

    18. நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?

    19. காலன் அழைத்தாலும் காத்து விடும் அதிர்ஷ்டம்!

    20. காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!

    21. பிரார்த்தனையின் சிறப்பு

    22. பிரார்த்தனை செய்வது எப்படி?

    23. மொத்தம் எத்தனை கடவுள்?

    24. கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை!

    25. லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!

    26. தர்ம விளக்கம்!

    27. ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?

    28. இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!

    29. தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!

    30. உண்மை ஒன்றே!

    என்னுரை

    மனித வாழ்க்கையில் எழும் சிக்கலான கேள்விகள் பல!

    அவற்றில் முக்கியமான சில : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? - இப்படிப் பல கேள்விகள்.

    இவற்றிற்கு அருளாளர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் அவ்வப்பொழுது விடை அளித்து வந்துள்ளனர்.

    ஆனால் அறிவியல் யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.

    அறிவியலில் தங்கள் தங்கள் சோதனைச்சாலைக்கு ஏற்ப கடவுளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் விஞ்ஞானிகள். அவர்களில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.

    அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

    இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளைத் தொகுத்துத் தருகிறது இந்த நூல்.

    கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இந்த நூல் தருகிறது.

    ஞான ஆலயம், மாலைமலர், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியானவை இவை.

    இவற்றை வெளியிட்டோருக்கும் இவற்றைப் படித்து என்னை ஊக்குவித்த அன்பர்களுக்கும் எனது நன்றி.

    அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    28-9-2022

    ச.நாகராஜன்

    1. கடவுளைக் காட்டு! - 1

    கடவுள் இருக்கிறாரா?

    கடவுள் இருக்கிறார் என்றால் கடவுளைக் காட்டு!

    விஞ்ஞானிகளில் பெரும்பாலோனோருக்கு இந்தக் கேள்வி எழுகிறது.

    இதே கேள்வியைப் பு’திய நாத்திகவாதிகளும்’ கேட்கின்றனர்.

    புதிய நாத்திகம் (New Atheism) என்னும் ‘நியூ அதியிஸம்’ கடவுள் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் மதமும் பகுத்தறிவற்ற தன்மையும் கொஞ்சம் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும் அது வலியுறுத்துகிறது.

    கடவுளின் மீதான நம்பிக்கை பெரும் தவறு என்றும் டார்வினின் பரிணாமக் கொள்கையின் படியும் பல கோடி ஆண்டு இயல்பான வளர்ச்சியில் அணுத்துகள்கள் மாறி மாறி இயற்கைத் தேர்வின் படி மனிதனாக உருவானான் என்றும் அது வற்புறுத்துகிறது.

    பழைய நாத்திகம் என்னும் கொள்கையில் ஊறிப் போன மடலின் மர்ரே ஓ’ஹேர் (Madalyn Murray O’Hare) முதலானோர் நாத்திகம் என்பது மதவாதக் கொள்கை போல ஒரு கொள்கை அல்ல என்றனர்.

    ஆனால் புதிய நாத்திகமோ ‘கடவுள் இல்லை; இயற்கையின் இயல்பான பரிணாம எழுச்சியில் தான் அனைத்தும் உருவானது என்பது ஒரு தீவிரமான கொள்கை தான்’ என்று உறுதிபடக் கூறுகிறது.

    இந்த புதிய நாத்திகம் என்ற சொற்றொடர் 2006ஆம் ஆண்டு கேரி உல்ஃப் (Gary Wolf) என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டது.

    அதை உற்சாகமாக நாத்திகவாதிகள் பலரும் ஆமோதித்து வரவேற்றனர்.

    இதற்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் உலகெங்கும் வெளியாகி விட்டன.

    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விட்டன.

    காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும், ‘இந்தக் கடவுளைக் காட்டு, கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணத்தைக் காட்டு’ என்ற வாதத்திற்கு அவ்வப்பொழுது அந்தந்தக் காலத்திற்கேற்ப அறிஞர் பெருமக்கள் விடை அளித்து வந்துள்ளனர்.

    இவர்களில் விஞ்ஞானிகளும் உண்டு; மெய்ஞானிகளும் உண்டு.

    18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த லியனார்ட் யூலர் (Leonard Euler - தோற்றம் 15-4-1707 மறைவு 18-9-1783) ஒரு பிரபலமான கணித மேதை. இயற்பியல் விஞ்ஞானி. வானவியல் நிபுணர். பூகோளவியல் அறிஞர். தர்க்கத்தில் வல்லுநர். ஒரு பொறியியல் வல்லுநரும் கூட.

    கணிதத்தில் அனலிடிக் நம்பர் தியரி, காம்ப்ளெக்ஸ் அனாலிஸிஸ், இன்ஃபைனட்ஸிமல் கால்குலஸ் (Analytic Number Theory, Complex Analysis, Infinitesimal Calculus) உள்ளிட்டவற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்து உலகை பிரமிக்க வைத்தவர் அவர்!

    ரஷியாவில் செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் அமைந்திருந்த ராயல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்-இல் அனைவரும் போற்றும் ஒரு உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

    ஒரு நாள் பிரான்ஸை சேர்ந்த நாத்திகவாதியான டெனிஸ் டிடராட் (Denis Diderot) ரஷிய ராணியான காதரினின் அழைப்பின் பேரில் ரஷியாவுக்கு வந்தார்.

    எப்படியாவது ஆத்திகவாதியாக இருக்கும் யூலரை நாத்திகவாதியாக மாற்றுவது தான டிடராட்டின் நோக்கம்.

    இதை அறிந்து கொண்ட யூலர் அவரை ராணியின் முன்னிலையில் பொது அவையில் இது பற்றி விவாதிக்க அழைத்தார்.

    அரசவை கூட்டம் கூடியது.

    யூலர் கம்பீரமாக டிடராட்டைப் பார்த்து, ஸார்! ஏ ப்ளஸ் பி டு தி எந்த் பவர் டிவைடட் பை என் ஈக்வல்ஸ் எக்ஸ். தேர்ஃபோர் காட் எக்ஸிஸ்ட்ஸ். ரிப்ளை என்று முழங்கினார்.

    (Sir, a plus b to the nth power divided by n equals x; , therefore, God exists! Reply!)

    கணிதத்தில் ஒன்றுமே தெரியாத டிடராட் முழித்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.

    கூட்டத்தில் அனைவரும் சிரித்தனர். அவமானப்பட்ட டிடராட் மறுநாளே மூட்டை கட்டிக் கொண்டு பிரான்ஸுக்குத் திரும்பினார்.

    கணிதத்தில் நிலை எண்கள் அல்லது மாறிலிகள் (Constants) பலவற்றை ஒன்று சேர்த்து அற்புதமான ஒரு சூத்திரத்தை யூலர் தரவே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் டிடராட் தவித்தார்.

    கடவுள் என்பவர் கணிதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை பல கணித மேதைகள் வற்புறுத்தி வந்துள்ளனர்.

    காலமும் கணக்கும் நீத்த காரணன் இறைவன்!

    பிரபஞ்சமானது தானே தோன்றியது என்ற கூற்றை நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) தனது ஒரே ஒரு வாக்கியத்தால் தவிடு பொடி ஆக்கி விட்டார்.

    பிரபஞ்சம் தானே உருவாக வேண்டுமெனில் one part in 10 to the 10 123rd power என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு எண் அமைந்தால் மட்டுமே அது உருவாக முடியும்.

    அவர் கூறியது தான்:-

    (Penrose has put ‘the probability against the emergence of Universe as 1 divided by ten raised to the power to the power of 123!’)

    கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த எண்ணை

    Enjoying the preview?
    Page 1 of 1