Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maayalogam - Part 1
Maayalogam - Part 1
Maayalogam - Part 1
Ebook148 pages57 minutes

Maayalogam - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல் இது. பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் 2009 முதல் 2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. மூன்று பாகங்களாக இப்போது இது வெளிவருகிறது.

இந்த முதல் பாகம் காஸினி பயணத்தில் ஆரம்பித்து பல அபூர்வமான, பிரமிப்பூட்டும் விஷயங்களைத் தருகிறது. புலன் கடந்த விஷயங்களைப் பற்றிக் கூறும் சுவையான இந்த நூல் அனைவரும் படிக்க ஏற்ற நூலாகும்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010997
Maayalogam - Part 1

Read more from S. Nagarajan

Related to Maayalogam - Part 1

Related ebooks

Reviews for Maayalogam - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maayalogam - Part 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாயாலோகம் - பாகம் 1

    (விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல்!)

    Maayalogam - Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. காஸினி வெளிப்படுத்தும் விந்தைகள்!

    2. கோழிக் குஞ்சிலிருந்து டைனோஸர்!

    3. எதிர்கால விண்வெளிப் போர்கள்!

    4. அமெரிக்காவை அலற வைக்கும் வான ஸர்ப்பங்கள்!

    5. 65 வருடங்களாக உணவு உட்கொள்ளாத யோகி!

    6. இருபது வருடங்கள் கழித்து - மரணம் இல்லை இனி மனிதருக்கெல்லாம்!

    7. வானத்தில் நிலம் உண்டு! வாங்கலாமா ஒரு கிரவுண்டு?

    8. மண்டையோட்டுச் சகோதரிகள் குழு – 1

    9. மண்டையோட்டுச் சகோதரிகள் குழு – 2

    10. வயலில் மர்ம வட்டங்கள்!

    11. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 1

    12. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 2

    13. அற்புத புருஷர் ஸ்ரீ சத்யசாயி பாபா! – 3

    14. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா? - 1

    15. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா? - 2

    16. காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா? – 3

    17. ஆரேகானில் தோன்றிய அதிசய ஸ்ரீ யந்திரம்!

    18. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! - 1

    19. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 2

    20. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 3

    21. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 4

    22. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! - 5

    23. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 6

    24. சிரிப்பே சிறந்த மருந்து என நிரூபித்தவர்!

    25. புலன் கடந்த பார்வையாளர் – குடா பக்ஸ்

    26. வந்து விட்டது மூளையியல் விற்பனை!

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    மாயாலோகம் என்ற பெயரைச் சூட்டி இப்படி ஒரு தொடரை எழுதப் பணித்தவர் அன்பிற்குரிய பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள்.

    11-9-2009 பாக்யா இதழில் தொடங்கி 25-2-2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. தொடர்ந்து 4-3-2011 இதழிலிருந்து மிக நீண்ட தொடரான எனது அறிவியல் துளிகள் தொடர் ஆரம்பமானது.

    காஸினி பயணத்தில் ஆரம்பித்து செவ்வாய் பயணத்தில் முடியும் இந்தத் தொடரில் மாயா லோகத்தில் நாம் காணும் பல ஆச்சரியகரமான, அபூர்வமான, பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன.

    திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர் வெளிவரும் போது வாரந்தோறும் இதைப் பாராட்டி ஊக்கமூட்டிய வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி.

    இதை முதல் பதிப்பில் மூன்று பாகங்களாக லண்டன் திருமதி நிர்மலா ராஜு அவர்கள் நிலா பப்ளிஷர்ஸ் சார்பாக டிஜிடல் பதிப்பாக வெளியிட்டார். அவருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மாயாலோகம் மூன்று பாகங்களையும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாக்யா இதழில் வெளி வந்த அதே தொடர் வரிசையில் இந்த அத்தியாயங்கள் இந்த மறுபதிப்பில் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது என்பதை வாசகப் பெருமக்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    தக்க ஆதரவை எனகுத் தொடர்ந்து நல்கி வரும் அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    ச. நாகராஜன்

    பங்களூரு

    31-3-2024

    1. காஸினி வெளிப்படுத்தும் விந்தைகள்!

    எத்தனை கோடி விந்தைகள் வைத்தாய் எங்கள் இறைவா என்று கூவும் அளவு மாய லோகத்தில் விந்தைகள் குவிந்துள்ளன!

    ஒவ்வொன்றும் ஆச்சரியத்தையும் பரவசத்தையும் அள்ளித் தருகிறது.

    பூமியிலிருந்து 1997ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி விண்ணில் ஏவப்பட்ட காஸினி விண்கலம் ஏழு ஆண்டுகள் 220 கோடி மைல்கள் பயணித்து சனி கிரகத்தின் சந்திரன்களில் ஒன்றான டைடனை அடைந்த போது உலகமே பரபரப்புக்குள்ளானது.

    சனியின் 33 சந்திரன்களில் ஒன்றான டைடனில் பூமியைப் போலவே கார்பன் மானாக்ஸைடும் கார்பன் டை ஆக்ஸைடும் காணப்படுகின்றன. ஆகவே அதில் நீராவி இருப்பது உறுதியாகிறது.

    பூமியைப் போலவே உள்ளது என்பதால் டைடனுக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து வருகிறோம்.

    நமக்கு கிடைத்த தகவல்கள் ஒரு அதிசயமான பிரமிப்பூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறது. டைடனில் திரவ ஏரிகள் ஏராளம் உள்ளன.

    லண்டன் மற்றும் கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்லன் ஸ்டோபன் இவை நீர் நிரம்பிய ஏரிகள் அல்ல என்றாலும் கூட மீதேன் திரவத்தால் நிரம்பியுள்ள ஏரிகள் என்று அதிசயித்துக் கூறுகிறார்!பூமியில் உள்ளது போலவே வாயுக்களும் இங்கு உள்ளனவாம்!

    நீர் போலவே உள்ள மீதேன் திரவம் தெளிவான ஒளி ஊடுருவக் கூடிய ஒன்றாகும்!

    ஆகவே மீதேன் ஏரியில் நின்று உள்ளே பார்த்தால் பளிங்கு நீருக்கடியில் கூழாங்கற்களைப் பார்ப்பது போல அனைத்தையும் பார்க்கலாம்.

    பூமியின் ஆரம்ப கால நிலை போலவே இதிலும் மீதேன் மற்றும் நைட்ரஜன் மேகங்கள் உள்ளன.

    ஆகவே தான் இதை ஆராய்வதன் மூலம் பூமி தோன்றிய போது இருந்த நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் துடிக்கின்றனர்.

    காஸினி விண்கலம் 75 ஏரிகளை இப்படிக் கண்டு பிடித்துள்ளது! நூறு கிலோமீட்டர் நீளமுள்ள இவற்றில் சில ஆறுகள் போலவும் உள்ளனவாம்!

    இத்தொடு மட்டுமின்றி சனி கிரகத்தின் வளையங்கள் மர்ம வளையங்களாகவே இன்றளவும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. இதையும் காஸினி விண்கலம் ஆராய ஆரம்பித்து விட்டது.

    சனியின் வெளிப்புறமுள்ள வளையத்தில் உப்பு இருப்பதாக அது கண்டுபிடித்துள்ள தகவல் பரபரப்பூட்டும் தகவல்! அதாவது வெளிப்புற வளையத்தின் மேற்பரப்புக்குக் கீழே ஒரு பெரிய கடல் இருப்பதாக இதற்கு அர்த்தம்! கடல் என்றால் உப்பு நீர்!

    இதை எண்ணும் போதே ஆனந்தம் மேலிடுகிறது. கோடானு கோடி கிரகங்களில் பூமியைப் போலவே வெகு சில கிரகங்கள் இருந்தாலும் அங்கு பூமியில் உள்ளது போல உயிர் வாழ இன்றியமையாததான நீர் இல்லை!

    இந்த நிலையில் சனி வளையத்தில் கடல் நீரே உள்ளது என்றால் எவ்வளவு பெரிய செய்தி அது!

    2005ல் காஸினி சனியின் சந்திரன்களில் ஒன்றான என்செலடஸில் ஐஸ் துகள்களும் ஆவியும் இருப்பதைக் கண்டுபிடித்தது. இங்கு நீர் இருந்தே ஆக வேண்டும் என்று ஆனந்தமாக விஞ்ஞானிகள் கூவுகின்றனர்!

    சனி வளையத்தையும் அங்குள்ள மின் காந்த மண்டலங்களையும் ஆராய அனுப்பப்பட்ட காஸினி தனது பணியைத் திறம்படச் செய்து விட்டது!

    காஸினியை விண்ணில் ஏவ ஆன செலவு 16000 கோடி ரூபாய்!

    இந்தப் பணத்தை விட அரிய மதிப்பு வாய்ந்த தகவலை அது அனுப்பி விட்டு பூலோக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது!

    2. கோழிக் குஞ்சிலிருந்து டைனோஸர்!

    கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மக் கில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்பவர் ஹான்ஸ் லார்ஸன்.

    அவரது ஆராய்ச்சி புதுமையானது. சற்று வித்தியாசமானதும் கூட!

    கோழிக்குஞ்சு கருவிலிருந்து டைனோஸரை உருவாக்க முடியும் என்கிறார் அவர்!

    டைனோஸர் என்றால் கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான ராக்ஷஸ அளவிலான பிராணி என்பதை ஜுராஸிக் பார்க் பார்த்த அனைவரும் அறிவர்.

    173000 கிலோ எடை இருக்கக்கூடிய பிரம்மாண்ட பிராணி இது. 100 அடி நீளம் வரை இது இருக்கும். 1047 விதமான டைனோஸர் இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    டைனோஸர் என்றாலே பறவை என்று ஒரு பொருள் உண்டு.

    டைனோஸர் இனமே அழிந்து பல லட்சம் ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த நிலையில் பறவை இனங்களில் டைனோஸர் இன அமைப்பு இருந்ததை நிருபிக்கத் திட்டமிடுகிறார் ஹான்ஸ்.

    இவரது ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. வரலாற்று காலத்திற்கு முன்னர் வாழ்ந்த ஏராளமான மிருகங்களை அப்படியே உயிரோடு உருவாக்க முடியும் என்பது இவர் நம்பிக்கை.

    டைனோசரை உருவாக்க முடியும் என்றாலும் கூட மனித நெறிகளை மனதில் கொண்டு அதை உடனடியாகத் திட்டமிடவில்லை என்கிறார் அவர்.

    பரிணாமத்தின் வளர்ச்சியைக் காண்பிக்க இது தான்

    Enjoying the preview?
    Page 1 of 1