Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!
Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!
Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!
Ebook144 pages54 minutes

Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகம் முழுதும் பாம்பு வழிபாடு! என்ற தலைப்பிலுள்ள இந்த நூலில் பாம்பு வழிபாடு தவிர, வேறு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாணக்கியன் சொல்லும் அதிசய விஷயங்கள்,சம்ஸ்க்ருத மறுமலர்ச்சி, தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாற்று விநோதங்களை அறியும்போது எல்லோருக்கும் வரலாற்றின் மீது ஆர்வம் பிறக்கும். ஆகையால் சுவையான சம்பவங்களைத் தொகுத்துத் தந்துள்ளேன்; எனது கருத்துக்களையும் ஆங்காங்கே கொடுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580153508634
Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!

Read more from London Swaminathan

Related to Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!

Related ebooks

Reviews for Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagam Muzhuthum Paambu Vazhipaadu! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

    Ulagam Muzhuthum Paambu Vazhipaadu!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    முன்னுரை

    1. கொலைகார மஹாராணிகள் பற்றி சாணக்கியன் திடுக்கிடும் தகவல் - PART 1

    2. கொலைகார மஹாராணிகள் - சாணக்கியன் திடுக்கிடும் தகவல் - PART 2

    3. கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு

    4. கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன்

    5. சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டனை! சாணக்கிய நீதி

    6. திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?

    7. டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள்

    8. நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி!

    9. மகளுக்கு அக்பர் பாதுஷா கற்பித்த ‘செக்ஸ்’ பாடம்!

    10. அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும்

    11. இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள்

    12. இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை!

    13. உலகின் முதல் சத்யாக்ரஹி

    14. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்!

    15. உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு!

    16. கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள்

    17. கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம்

    18. கடலை விரட்டிய தமிழ் மன்னன்; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள்; சம்பந்தர் செய்த அற்புதம்

    19. திராவிடர்களின் மூட நம்பிக்கைகள்

    20. திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!!

    21. திராவிடர்கள் யார்?

    22. ‘திராவிடர்கள்’ பிராமணர்களா? கேள்வி - பதில்

    23. தமிழன் காதுல பூ!!!

    24. நீலகிரி மலையில் படகர்கள்

    25. விநோத பழக்கவழக்கங்கள்

    26. முதல் திராவிட ராணி: கி.மு 1320

    27. ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்!

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்.சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப்-எடிட்டராக (SENIOR SUB-EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 14 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின்வருமாறு:

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697.

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    இதழியல்

    வினவுங்கள் விடை தருவோம் (பி.பி.சி. தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    பெண்கள் வாழ்க

    ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? (28 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    வரலாற்று விநோதங்கள்: உலகம் முழுதும் பாம்பு வழிபாடு (27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    முன்னுரை

    உலகம் முழுதும் பாம்பு வழிபாடு! என்ற தலைப்பிலுள்ள இந்த நூலில் பாம்பு வழிபாடு தவிர, வேறு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. சாணக்கியன் சொல்லும் அதிசய விஷயங்கள், சம்ஸ்க்ருத மறுமலர்ச்சி, தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாற்று விநோதங்களை அறியும்போது எல்லோருக்கும் வரலாற்றின் மீது ஆர்வம் பிறக்கும். ஆகையால் சுவையான சம்பவங்களைத் தொகுத்துத் தந்துள்ளேன்; எனது கருத்துக்களையும் ஆங்காங்கே கொடுத்துள்ளேன்.

    பத்தாண்டுக்கும் மேலாக எனது இரண்டு பிளாக்குகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆதலால் தொடர்ச்சியை எதிர்பார்க்கக்கூடாது ஒவ்வொரு கட்டுரையையும் தனியாகவும் படிக்கலாம். இந்திய வரலாற்றை, நம்மை ஆண்ட, வெள்ளைக்காரர்கள் எழுதியதால் நம்மைப்பற்றிய முக்கிய விஷயங்கள் விடுபட்டுப்போயின. அவ்வப்போது எழுதும் கட்டுரைகளால் இவை சீராகுமென்ற நம்பிக்கை உள்ளது; இப்பொழுது வரலாற்று விஷயங்களில் பலருக்கும் உற்சாகம் ஏற்பட்டுள்ளதால் பழங்கால வரலாற்றை சரியானபடி திருத்தி வரையும் பணி நமக்கு ஏற்பட்டுள்ளது என்னுடைய கட்டுரைத் தொடர்கள் புது வரலாறு எழுத உதவும் என்று நம்புகின்றேன். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் அது பிளாக்கில் வெளியிடப்பட்ட நாளும் கட்டுரையின் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

    படித்து மகிழ்க; உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரியப்படுத்த எனது ஈ மெயில் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் அச்சுப் பிரதிகள் வேண்டும் என்றால் எழுதவும். அச்சடித்து அனுப்புகிறோம்.

    லண்டன் சுவாமிநாதன்

    ஜூன் 2022

    1. கொலைகார மஹாராணிகள் பற்றி சாணக்கியன் திடுக்கிடும் தகவல் - PART 1

    உலகின் முதல் பொருளாதார நூல் அர்த்த சாஸ்திரம். இது பொருளாதாரம் அரசியல் பற்றி மிக விரிவாக விவாதிக்கும் நூல். இதை எழுதியவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு: சாணக்கியன், கௌடில்யன். அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அர்த்த சாஸ்திரத்துக்கு அடுத்தபடியாகப் புகழ்படைத்தது சாணக்கிய நீதி.

    ஒரு மன்னன் தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியன் விரிவாக கூறுகிறான். விஷம் வைப்பதிலிருந்து, படுக்கை அறைத் தாக்குதல் வரையுள்ள பல ஆபத்துகளை விரிவாக உரைக்கிறான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பல சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அதில் திடுக்கிடும் பல கொலைகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பெண்கள், பேய்களாகவும் – கொலைகாரப் பேய்களாகவும் மாற முடியும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். காளிதாசன் ரகு வம்சத்தின் முதல் அத்தியாயத்தில் வருணிக்கும் அற்புதமான குணங்களுக்கு நேர் மாறுபட்டது இது. அதாவது கிருதயுகத்துக்கும் கலியுகத்துக்கும் உள்ள வித்தியாசம்.

    குறிப்பாக வெளிநாட்டினரும், க்ஷத்ரிய ஜாதி அல்லாதாரும் ஆட்சியைப் பிடித்தவுடன் இவை எல்லாம் நடந்தன என்று சொன்னால் தவறாகாது…

    அரசர்கள் இன்பம் அனுபவிக்கலாம். ஆனால் தார்மீக நெறிக்கோ, பொருளாதாரத்துக்கோ பாதிக்காத வகையில் இதைச் செய்தல் வேண்டும். 16 வயது வரை பிரம்மசர்யம்

    Enjoying the preview?
    Page 1 of 1