Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1
Ebook187 pages1 hour

Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனு நீதி நூலில் உள்ள விதிகளை யாரும் இப்போது பின்பற்றுவதில்லை. இந்திய அரசியல் நிர்ணய சபை இயற்றிய அரசியல் சட்டத்தையே நாம் பின்பற்றுகிறோம். அதையும் கூட அவ்வப்போது பார்லிமெண்ட் மூலம் திருத்தி வருகிறோம். இதை மனுவும் அந்தக் காலத்திலேயே சொல்லிவிட்டார். சட்ட விதிகள், காலத்துக்கு காலம் மாறும். வேத விதிகளுக்குப் புறம்பாக எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இருப்பது போலத் தோன்றினால், அந்தக் கால பெரியோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்பது மனுவின் பொன்மொழி.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580153509488
Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1

Read more from London Swaminathan

Related to Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1 - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனுநீதி நூலில் அதிசயச் செய்திகள் - பாகம் 1

    Manuneethi Noolil Athisaya Seithigal - Part 1

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! - Part 1

    2.வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!!

    3.மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் - பகுதி 3

    4.பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி

    5. பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

    6.மாபாரதத்தில் 250 மநு நீதிப் பாடல்கள்! - டாக்டர் இராதாகிருஷ்ணன்

    7.மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை

    8.மநுவும் ஹமுராபியும் - யார் முதல்வர்?

    9.மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே!

    10.மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்?

    11.கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து!

    12.ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!!

    13.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!

    14.பிலிப்பைன்ஸ் நாட்டில் மநுவின் சிலை

    15.நூறு வயதானவர்களின் மகிமை!

    16.திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்!

    17.நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!

    18.மனு நீதி நூல் - உலகின் முதல் சட்டப் புத்தகம் - Part 1

    19.சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு; மனு நீதி நூல் – பகுதி 2

    20.கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு மனு நீதி நூல் - பகுதி 3

    21.மனு தர்மத்தில் விலங்கியல் தாவரவியல் விஞ்ஞானம் மனு நீதி நூல் - 4

    22.காலக் கணக்கு: 30 முகூர்த்தம்= ஒரு நாள், மநு நீதி நூல் - 5

    23.கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல் - 6

    24.பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல் - 7

    25.தர்மத்தின் நான்கு அடையாளங்கள்; மநு நீதி நூல் - 8

    26.கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்!

    27.பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயரிடும் முறை

    28.எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்!

    29.காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும் - மநு அடித்துச் சொல்கிறார்!

    30.வேதம் பிராஹ்மணனிடம் என்ன

    முன்னுரை

    மனு நீதி நூலில் உள்ள விதிகளை யாரும் இப்போது பின்பற்றுவதில்லை. இந்திய அரசியல் நிர்ணய சபை இயற்றிய அரசியல் சட்டத்தையே நாம் பின்பற்றுகிறோம். அதையும் கூட அவ்வப்போது பார்லிமெண்ட் மூலம் திருத்தி வருகிறோம். இதை மனுவும் அந்தக் காலத்திலேயே சொல்லிவிட்டார். சட்ட விதிகள், காலத்துக்கு காலம் மாறும். வேத விதிகளுக்குப் புறம்பாக எதுவும் இருக்கக்கூடாது. அப்படி இருப்பது போலத் தோன்றினால், அந்தக் கால பெரியோர்களைக் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்பது மனுவின் பொன்மொழி. ஆயினும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே - ஹமுராபிக்கும் முன்னரே:-வியத்தகு அஸ்த்திவாரத்தைப் போட்டு, சட்ட நூல் என்றால் என்ன? என்ற இலக்கணத்தை வகுத்ததால் அவரது நூலை உலக அறிஞர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.

    லண்டனில் உலகப்புகழ்பெற்ற செயின்ட் பால் கதீட்ரலில் வில்லியம் ஜோன்ஸ் கையில் மனு நீதி நூல் வைத்திருக்கும் சிலை உள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் மனுவின் சிலை, ராஜஸ்தான் ஹைகோர்ட்டில், பிலிப்பைன்ஸ் நாட்டில் என்று உலகெங்கும் அவருக்கு சிலை வைத்ததன் காரணம். உலகின் முதல் சட்ட நூலை எழுதியதால்தான். எனது கட்டுரைகளில் அவர் சொன்ன அதிசய விஷயங்களை எடுத்துரைத்துள்ளேன். யாரேனும் 2600 பாடல்களில் 40 பாடல்களைக் காட்டி - இது சூத்திரனுக்கு எதிரான நூல் - என்று சொல்லி அதை எரித்தால் அவர்கள் எல்லோரும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்று அறிக!! அவை அனைத்தும் இடைக்காலத்தில் வந்த இடைச் செருகல்கள். இந்து விரோதிகள் நுழைத்த பாடல்கள்.

    இந்திய இலக்கியங்கள் முழுதும் அவ்வப்போது அப்டேட் Update செய்யப்பட்டவை; இதை இடைச் செருகல் (interpolations) என்று சொல்லி ஒவ்வொரு நூலுக்கும் புதிய தேதியை எழுதிய வெளி நாட்டார், மனு நீதி நூலில் மட்டும் இடைச் செருகல் பற்றி பேசவே இல்லை. அதாவது திருடனுக்குத் தேள் கொட்டிய கதை. இதை இடையில் நுழைத்ததே அவர்கள்தான்.

    ஒரு எச்சரிக்கை: நான் மனு நீதியை ஆதரித்து இதை எழுதவில்லை. அதிலுள்ள 100 ஸ்லோகங்களை அகற்றிவிட்டால் இப்படியும் ஒருவர் விதிகள் இயற்ற முடியுமா என்று அதிசயிப்பார்கள். ஹமுராபி சட்டத்தைப் படித்துவிட்டு, பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய பின்னர், இதை நான் எழுதுகிறேன்.இந்தியாவிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் மனு நீதியைப் புகழ்கின்றன. கம்பன் போன்ற கவிகள் புகழ்கின்றனர். திருவாரூரில் மனு நீதிச் சோழனுக்கு நாமும் சிலை வைத்துள்ளோம்.இதற்குக்காரணம் உலகம் விதிப்படி இயங்க வேண்டும் என்பதே; விதிகள் மாறலாம்; அஸ்திவாரம் மாற முடியாது.

    நீங்களே 60 கட்டுரைகளையும் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள். மனு சொன்ன ஸ்லோகங்களின் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வெப்சைட்டில் கிடைக்கிறது. தமிழில் வேண்டுவோர் என் பிளாக்குகளில் உள்ள போட்டோகாப்பி நகல்களைப் பார்க்கலாம். இந்த நூல் அதற்கான அறிமுகமேயன்றி மனு நூல் ஒரிஜினலைக் கொடுக்கவில்லை. இது முதல் பகுதி. இரண்டாம் பகுதியையும் படிக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஜனவரி 2023

    1.மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! - Part 1

    உலகின் முதல் சட்டப் புத்தகம் மனு ஸ்மிருதி! இதில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன. இவர் பல அதிசய விஷயங்களை ச் சொல்லுகிறார். இது சம்ஸ்கிருத மொழியில் இருந்தாலும் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றது. 1794 ஆம் ஆண்டிலேயே இதை வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிட்டார். தமிழ் இலக்கியமு ம், கல்வெட்டுகளும் மனு ஸ்மிருதியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. தேரில் மகனை முறை செய்த சோழனுக்கு மனு நீதிச் சோழன் என்று பெயர்! அவ்வளவு புகழ் வாய்ந்த மனு நீதியைப் படிக்காமல், இடைச் செருகலாகச் சொல்லப்பட்ட சில பாக்களைக் கொண்டு, சிலர் அவதூறு கற்பிக்கின்றனர். தமிழில் இதை முழுதும் வாசித்தால் இதன் அருமை பெருமைகள் புரியும்!

    9 பேர் இதற்கு விளக்க உரைகள் எழுதியுள்ளனர் என்றால் இதன் பெருமையையும், ஆழ்ந்த பொருளையும் கூறலும் வேண்டுமோ!

    அதிசயம் 1 Woman’s mouth is unpolluted!

    பெண்களின் வாய் எப்போது சுத்தமாக இருக்கும் என்கிறார் மனு! ஒரு பறவை, பழத்தைக் கொத்திக் கீழே போட்டால் அது எச்சில் இல்லை; பாலைக் கன்றுக்குட்டி வாய் வைத்துக் குடித்தாலும் அங்கே சுரக்கும் பால் அசுத்தம் இல்லை; ஒரு நாய், தனது வாயை வைத்துக் கடிக்கும் வேட்டை மிருகங்களும் அசுத்தம் இல்லை; அது போல ஒரு பெண்ணின் வாய் எப்போதும் அசுத்தம் அடைவது இல்லை (மனு 5 - 130)

    அதிசயம் 2 Men lived for 400 years!

    கிருத யுகத்தில் மனிதன் 400 வயது வரை வாழ்ந்தான். பின்னர் ஒவ்வொரு யுகத்திலும் ஆயுள் ஒவ்வொரு கால் பகுதியை இழந்தது (அதாவது நூறு, நூறு ஆண்டுகளாகக் குறைந்து வந்தது (1 - 83)

    வேறு பல இடங்களில் கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 100 என்று மனு பகர்வார்.

    திருக்கோவிலூர் ஞானானந்தா, காசி பூதலிங்க சுவாமிகள் முதலானோர் நமது காலத்திலேயே 150 முதல் 300 ஆண்டுகள் வரை வாழ்ந்த அற்புதங்களையும் நினைவு கூறுதல் சாலப் பொருந்தும்.

    அதிசயம் 3 Manu lived when Saraswati River flowing for 1000 mile!

    ஒரு மனிதனுக்கு பிரம்மஹத்தி விலக (பிராமணனைக் கொன்ற பாவம் விலக), அவன் சரஸ்வதி நதிக் கரையில் நடந்து கொண்டே வேதம் சொல்ல வேண்டும் என்பார் மனு. இதற்கு முன் அவன் 1000 மைல் நடக்க வேண்டும் என்று ஒரு பாட்டில் பகர்வார். ஆக மனு என்பவர் வேத காலத்தில், சரஸ்வதி நதி ஓடிய காலத்தில் இருந்தவர். வேதத்தின் ஒரு சாகை முழுவதையும் மூன்று முறை சொல்லிக் கொண்டு விரத உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் இயம்புகிறார்.!(11 - 78)

    ஆங்கிலம் மட்டும் படித்த அரைவேக்காடுகள் மனுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்று செப்புவர். ஆனால் மனு இக்ஷ்வாகுவுக்கும் முந்தியவர் என்று கண்ணன் பகவத் கீதையில் செப்பியதையும் நினைவு கூறுதல் பொருத்தம்!

    அதுமட்டுமல்ல பூமிக்கு சர்க்கரையைக் கொண்டு வந்தவர் இக்ஷ்வாகு என்பதையும் சர்க்கரை சிந்து சமவெளியில் கண்டு பிடிக்கப்பட்டதையும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறுவியுள்ளேன்.

    உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் பல மனுக்களின் பெயர்கள் இருப்பதை வேறு ஒரு ஆய்வுக் கட்டுரையில் கூறினேன்.

    ஆக மனு என்பவர் மிக, மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்று புலனாகும்.

    மங்கட் என்பவர் இவரை கி.மு.5700க்கு முன்னதாக வைக்கிறார்.

    சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயெ வறண்டு போயிருந்ததை மஹாபாரதம் மற்றும் பிராமணங்கள் வாயிலாக நாம் அறிவோம்.

    இந்திய அரசியல் சானத்துக்கு பார்லிமெண்ட் நேற்று கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தை வைத்து இந்திய அரசியல் சட்டம் நேற்று தோன்றியது என்று சொன்னால் நம்மை எல்லோரும் இகழ்வாரன்றோ; இதுபோல மனு பற்றி வெளிநாட்டினர் தத்துப் பித்து என்று உளறி இருக்கின்றனர். உண்மையில் மனுவும் சரஸ்வதி நதியும்

    Enjoying the preview?
    Page 1 of 1