Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruvasaga Thean! Thirumanthira Juice!!
Thiruvasaga Thean! Thirumanthira Juice!!
Thiruvasaga Thean! Thirumanthira Juice!!
Ebook159 pages54 minutes

Thiruvasaga Thean! Thirumanthira Juice!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவாசகம் பற்றியும் திருமந்திரம் பற்றியும் நான் புத்தாண்டுக் காலத்தில் எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கியது இந்த திருவாசகத் தேன்! திருமந்திர ஜுஸ்!! (30 ஆராய்ச்சிக் கட்டுரைகள்) என்னும் நூல். திருவாசகத்தைப் பல முறை படித்துவிட்டேன். திருவாசகத் தேன் என்று பலரும் வருணிப்பது உண்மையே.

திருவாசகத்தின் காலம் அல்லது மாணிக்க வாசகரின் காலம் என்ன? அவருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் என்ன? இது தொடர்பாக எனது முடிவுகளை இந்தப் புஸ்தகத்தில் காணலாம். திருவாசகத்தில் அர்த்தம் புரியாத புதிர்கள் மேலும் உள்ளன. பலருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும் ஆராய வேண்டும். திருமூலரின் திருமந்திரத்திற்கும் நிறைய பேர் விளக்கம் எழுதியுள்ளனர். நான் அவருடைய பாடல்களை வேறு சில அறிஞருடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். அவர் கணிதம் முதல் யோக சாத்திரம், ஆசனம், மூச்சுப் பயிற்சி வரை ஏராளமான விஷயங்களைக் காட்டுகின்றார். இந்த நூலில் அவருடைய கருத்துக்களை, உலகின் பழைய நூலான ரிக் வேதம் முதல் சாக்ரடீஸ், வள்ளுவர், கம்பன் வரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580153508753
Thiruvasaga Thean! Thirumanthira Juice!!

Read more from London Swaminathan

Related to Thiruvasaga Thean! Thirumanthira Juice!!

Related ebooks

Reviews for Thiruvasaga Thean! Thirumanthira Juice!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruvasaga Thean! Thirumanthira Juice!! - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருவாசகத் தேன்! திருமந்திர ஜுஸ்!!

    Thiruvasaga Thean! Thirumanthira Juice!!

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1. மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

    2. மாணிக்கவாசகரின் காலம்—2

    3. மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன?

    4. திருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்!

    5. நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை

    6. இரண்டு கதைகள் : ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’

    7. நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர்

    8. திருவாசகத்தில் ரிக் வேதம்!

    9. பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்!

    10. அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்கவாசகர்

    11. அழுதால் அவனைப் பெறலாமே: ராமகிருஷ்ண பரமஹம்சர்

    12. மண்டோதரி பற்றி இரண்டு விசித்திரக் கதைகள்

    13. நமசிவாய படகில் போகலாம்-- மாணிக்கவாசகர்

    14. நாடகமே உலகம்: அமீ யந்த்ரம், துமீ யந்த்ரீ

    15. திருவாசகப் பொன்மொழிகள் 42

    16. மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள்

    17. திருமூலர் சொன்ன யானைக் கதை: தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்!

    18. திருமந்திரத்தில் உபநிஷத் உவமை

    19. ஐந்து ஜோதிகளும், நான்கு விளக்குகளும்: திருமூலர், அப்பர் தரும் அரிய தகவல்

    20. கம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து

    21. யார் நல்ல ஆசிரியர்?

    22. ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை

    23. தமிழர்கள் கணித மேதைகள்

    24. சிவ பூஜைக்குரிய மலர்

    25. கடையனையும் கடைத்தேற்றும் அதிசய மந்திரம்!

    26. உள்ளம் பெருங் கோயில்–‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’

    27. தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

    28. எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

    29. திருமந்திரத்தில் ரிக்வேத வரிகள் !

    30. திருமந்திரம் , திருமூலர் பொன்மொழிகள்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது , லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 25 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM) , மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    Two Blogs:-

    tamilandvedas.com

    swamiindology.blogspot.com

    Published Works

    Over 7000 articles in English and Tamil and 25 Tamil and English Books

    முன்னுரை

    திருவாசகம் பற்றியும் திரு மந்திரம் பற்றியும் நான் புத்தாண்டுக் காலத்தில் எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கியது இந்த ‘திருவாசகத் தேன்! திருமந்திர ஜுஸ்!! (30 ஆராய்ச்சிக் கட்டுரைகள்) என்னும் நூல். திருவாசகத்தைப் பல முறை படித்துவிட்டேன். திருவாசகத் தேன் என்று பலரும் வருணிப்பது உண்மையே. இப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருவாசக வகுப்புகளை ஸ்கைப் (SKYPE) மூலம் நடத்தி வருகிறேன். ஒரு முறை லண்டன் ஹைகேட் முருகன் கோவிலில், திருவாசக விழாவில் பேசவும் அழைத்தனர். மிகவும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டேன். இத்தனைக்கும் பின்னரும், ஒரு புதிருக்கு விடை கிடைக்கவில்லை. திருவாசகத்தின் காலம் அல்லது மாணிக்க வாசகரின் காலம் என்ன? அவருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் என்ன? இது தொடர்பாக எனது முடிவுகளை இந்தப் புஸ்தகத்தில் காணலாம். திருவாசகத்தில் அர்த்தம் புரியாத புதிர்கள் மேலும் உள்ளன. பலருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும் ஆராய வேண்டும்.

    திருமூலரின் திருமந்திரத்திற்கும் நிறைய பேர் விளக்கம் எழுதியுள்ளனர். நான் அவருடைய பாடல்களை வேறு சில அறிஞருடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன் . அவர் கணிதம் முதல் யோக சாத்திரம், ஆசனம், மூச்சுப் பயிற்சி வரை ஏராளமான விஷயங்களைக் காட்டுகின்றார் . ஆராய்ச்சிக்கு முடிவே இல்லாத வரை 3000 பாடல்களுக்கும் விளக்கங்கள் வரும். 3000 பாடல்களையும் படித்து மார்ஜினல் நோட்ஸ் (MARGINAL NOTES (குறிப்புகள்) எழுதி வைத்துள்ளேன் . நேரம் கிடைக்கையில் கட்டுரைகளாக வரைவேன். இந்த நூலில் அவருடைய கருத்துக்களை, உலகின் பழைய நூலான ரிக் வேதம் முதல் சாக்ரடீஸ், வள்ளுவர் , கம்பன் வரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.

    கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் , அந்த மாதத்துக்கான காலண்டரை வெளியிட்டு, அதில் இந்து மதப் பொன்மொழிகளை வெளியிட்டு வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் என்னுடைய பிளாக்குகளில் 6000 பொன்மொழிகளும் , பழமொழிகளும் உள்ளன. அவையும் தனி நூலாக விரைவில் வெளி வரும். புஸ்தகத்தின் இறுதியில் மாணிக்கவாசகரும், திருமூலரும் வழங்கிய பொன்மொழிகள் உள்ளன.

    கூறியது கூறல் என்ற குற்றத்தைத் தவிர்ப்பதற்காக 60 வினாடி பேட்டிகள் அடங்கிய புஸ்தகத்தில் இருக்கும் திருமூலர், மாணிக்கவாசகர் ஆகியோரின் 60 வினாடி பேட்டிகளைச் சேர்க்கவில்லை. . என்னுடைய பிளாக்கிலோ முந்தைய நூலிலோ படித்து மகிழுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

    ஒவ்வொரு கட்டுரையும் எனது பிளாக்குகளில் முன்னர் வெளியான தேதி, மற்றும் வரிசை எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ளது உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து என்னுடைய ஈ மெயில் முகவரிகளையும், பிளாக் (BLOG) இணைப்புகளையும் சேர்த்துள்ளேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்,

    ஜூலை 2022, லண்டன்

    1. மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

    Q. மாணிக்கவாசகரின் காலம் என்ன?

    A. மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது

    ***

    Q. அவருடைய உண்மைப் பெயர் என்ன?.

    A. அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்.

    ***

    அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள். தமிழகத்தைக் காப்பாற்றிய காவலர்கள். நாத்திகம் பேசி நாத்தழும்பி ஏறியவர்களைப் பாதாளப் படுகுழியில் தள்ளிய சமய வீரர்கள். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானிகள். 30,000 தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டிய புனிதர்கள். வேத ஆகம நெறியை வேரூன்ற வைத்த வித்தகர்கள், சத்திய சீலர்கள். இந்த நால்வரும்

    Enjoying the preview?
    Page 1 of 1