Tolkappiya Athisayangal
()
About this ebook
தொல்காப்பியம் தமிழ் மொழியில் உள்ள பழைய நூல் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அதில் ஏராளமான புதிர்கள் உள்ளன. பொருளதிகாரம் எனப்படும் மூன்றாவது அதிகாரம் பிற்சேர்க்கை என்பதே மொழியியல் ஆராய்சசியாளர்களின் கூற்று. ஆனால் சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றிலும் அதிகாரம் என்னும் சொல் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழ் நாட்டில் சமணர்கள் ஆட்சி, களப்பிரர் ஆட்சி முடிவடையும் பொழுது எழுத்து வடிவு பெற்றன இந்த மூன்று நூல்களும் என்பதே என் கருத்து. இதற்கான ஆதாரங்கள் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் உள்ளன.
Read more from London Swaminathan
Manaivi Oru Marunthu Rating: 0 out of 5 stars0 ratingsTamil - English Bilingual Hindu 'Quiz' Rating: 0 out of 5 stars0 ratingsTamilargal Marangalai Vazhipaduvathu Yen? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyorai Azhikka Kalki Varugiraar! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5
Related to Tolkappiya Athisayangal
Related ebooks
Ulagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanathil Naam Ethir Parkkatha Athisaya Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Oru Kadal! Muthu Kulippom Varungal! Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaga Thean! Thirumanthira Juice!! Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsSumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratingsSemmozhi Kalam Rating: 0 out of 5 stars0 ratingsMu. Varatharasanar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pothumarai - Oru Oppaivu Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Maanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Dravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Mamannan Karikaal Chozhan Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsMultifaceted Bhakthi Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5Silambu Olikkum Sinthanaigal Rating: 2 out of 5 stars2/5Akanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMaran Manamum Maranthu Pona Puratchiyum Rating: 0 out of 5 stars0 ratingsAthvaidham Rating: 0 out of 5 stars0 ratingsNanmanikkatigai Rating: 0 out of 5 stars0 ratingsTamil Mozhi Athisaya Mozhiye! Idho Saandrugal! Rating: 0 out of 5 stars0 ratingsManuneethi Noolil Athisaya Seithigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsSollil Uyarvu Tamil Solley Rating: 0 out of 5 stars0 ratingsDeivakavi Sekkilhar Aruliya Periyapuranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Kanda Puratchi Thuravi Ramanusa Maamuni Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Tolkappiya Athisayangal
0 ratings0 reviews
Book preview
Tolkappiya Athisayangal - London Swaminathan
https://www.pustaka.co.in
தொல்காப்பிய அதிசயங்கள்
Tolkappiya Athisayangal
Author:
லண்டன் சுவாமிநாதன்
London Swaminathan
For more books
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியரைப் பற்றி
முன்னுரை
1. தொல்காப்பிய அதிசயங்கள்
2. தொல்காப்பிய அதிசயங்கள்-2
3. தொல்காப்பியர் காலம் தவறு-1
4. தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2
5. தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 3
6. தொல்காப்பியர் காலம் தவறு--4
7. தொல்காப்பியர் காலம் தவறு-5
8. மீசை வைத்த பிராஹ்மணன் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? எழுதினாரா?
9. தொல்காப்பியன் புகழ்
10. தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா
11. தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!
12. தொல்காப்பிய - பாணினீய 3 ஒற்றுமைகள்
13. தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’!
14. பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?
15. தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை!
16. தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?
17. ‘ச’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?
18. தொல்காப்பியத்தில் வருணன்
19. தொல்காப்பியத்தில் இந்திரன்
20. தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!
21. பலராமனின் பனைக்கொடி
22. தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1
23.தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன்?—2
24. தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள்
25. தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை!
26. ‘எல்லா உயிர்க்கும் இன்பம்’- என்று தொல்காப்பியர் எப்படி செப்பினார்?
27. குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும்
28. தொல்காப்பியத்தில் Biology உயிரியல் விஞ்ஞானம்!
29. தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள்
30. தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை
31. தொல்காப்பியம் பற்றிய 2 வினோத புஸ்தகங்கள்
32. இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை?
ஆசிரியரைப் பற்றி
லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.
தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 25 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார் .
லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
LONDON MOBILE NUMBER – 07951 370697
Two Blogs:-
tamilandvedas.com
swamiindology.blogspot.com
முன்னுரை
தொல்காப்பியம் தமிழ் மொழியில் உள்ள பழைய நூல் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அதில் ஏராளமான புதிர்கள் உள்ளன. பொருளதிகாரம் எனப்படும் மூன்றாவது அதிகாரம் பிற்சேர்க்கை என்பதே மொழியியல் ஆராய்சசியாளர்களின் கூற்று. ஆனால் சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றிலும் அதிகாரம் என்னும் சொல் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழ் நாட்டில் சமணர்கள் ஆட்சி, களப்பிரர் ஆட்சி முடிவடையும் பொழுது எழுத்து வடிவு பெற்றன இந்த மூன்று நூல்களும் என்பதே என் கருத்து. இதற்கான ஆதாரங்கள் என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் உள.
மேலும் சிவன் பற்றிய குறிப்பு எங்குமே இல்லாததும், இந்திரன், வருணன் என்ற வேத காலக் கடவுளரை தமிழர்கள் வணங்கும் கடவுளாகச் சொல்லுவதும் பலருடைய சிந்தனையைத் தூண்டுகிறது .என்ப, என்மனார், மொழிப என்ற வினைச் சொற்களைக் காண்கையில் தொல்காப்பியரோ அல்லது அவரது பெயரில் வேறு ஒருவரோ பழைய இலக்கண விதிகளைத் தொகுத்தாரோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. நான் கூறிய மூன்று நூல்களையும் எழுதியோர் சமண மதத்தினர் என்று பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறியது வாதப் பிரதிவாதங்களை எழுப்பியது.
மிகவும் வினோதமான விஷயம் என்னவென்றால் சிந்து சமவெளி எழுத்துக்கள் பற்றி ஏராளமானோர் உளறிக்கொட்டியது போல தொல்காப்பியர் காலம் பற்றிப் பலரும் பிதற்றி இருப்பது ரசித்துப் படிக்கவேண்டிய ஒன்று. எந்த ஒரு நூலிலும் ஒரே காலத்தைக் காண முடியாது. பரிதாபத்துக்குரிய பலர், தமக்குப் பிடிக்காததை எல்லாம் இடைச் செருகல் (Interpolation) என்று சொல்லுவது நல்ல நகைச் சுவை அம்சங்களையும் தருகிறது. தொல்காப்பியருக்கு ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தது, நான் மறைகளைப் பயின்ற அதங்கோட்டு ஆச்சாரியார் என்று பனம்பாரனார் பாயிரம் கூறியபோதிலும், தொல்காப்பியரை த்ருண தூமாக்கினி என்னும் பார்ப்பனர் என்று ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ செப்பிய பின்னரும், அவருக்கு மீசை வைத்து அவரது ஓவியங்களை வெளியிடும் தமிழ ர்களைப் பார்க்கையில் வெடிச் சிரிப்பு வருகிறது. வள்ளுவரின் பூணூலை மறைக்க மேல் துண்டு போட்டு, அவரது பழைய படங்களில் இருந்த பொட்டு, விபூதியை அழித்து கூத்தடித்த கோமாளிகளுக்கு இப்போதும் குறைவே இல்லை என்பதைத் தொல்காப்பியர் ஓவியம் காட்டுகிறது. தொல்காப்பியர் காலமும் பொய், ஓவியமும் பொய், தொல்காப்பியர் சொல்லும் இந்திரன் வருணனும் பொய், அதங்கோட்டு பிராமணனும் பொய், வடவேங்கடத்துக்கு அப்பால் தமிழ் இல்லை என்று பனம்பாரனார் பாயிரம் சொல்லுவதும் பொய், ஐயர் யாத்தனர் கரணம் என்பதிலுள்ள ஐயரும் பொய் என்று நிறைய பொய்யர் பட்டங்களை சூட்டும் தமிழர்களை நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று சொன்னால் மிகையாகாது . இவ்வளவு பொய்களுக்கும் இந்த நூலில் பதில்கள் உள்ளன. படித்து ரசியுங்கள். முடிந்தால் பதில் சொல்லுங்கள். 40 ஆண்டு ஆராய்ச்சியின் முடிபுகள் இவை மறுத்துரைப்பின் புதிய ஆதாரங்களைத் தருக.
என்னைத் தொடர்பு கொள்ள எனது ஈ மெயில் முகவரியையும் கட்டுரைகள் வெளியான பிளாக்குகளின் விவரங்களையும் கொடுத்துள்ளேன். எளிதில் தொடர்பு கொள்ளலாம். முதன்முதலில் என்னுடைய பிளாக்குகளில் இந்தக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட தேதிகளையும், கட்டுரையின் வரிசை எண்களையும் தந்துள்ளேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எங்களுக்கு எழுதுக.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
1. தொல்காப்பிய அதிசயங்கள்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.
‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.
1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)
2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.
3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்
தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்
இதையே பாரதியார்
நீலத்