Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?
Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?
Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?
Ebook122 pages46 minutes

Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற இந்த நூலில் 25-க்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. அவை எனது 2 பிளாக்குகளில் பத்தாண்டுக் காலத்தில் வெளியான கட்டுரைகள் ஆகும். இந்துக்கள் எல்லோரும் மரங்களையும், துளசி முதலான செடிகளையும் அருகம் புல், தர்ப்பை முதலான புல்களையும் வணங்கினாலும் தமிழர்கள் ஏனைய இந்துக்களை மிஞ்சிவிடுகின்றனர். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல மரம் உள்ளது. காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, உத்தரகோசமங்கை முதலிய ஸ்தலங்களில் மிகவும் பழைய மரங்கள் இருக்கின்றன. ஆகம ரீதியிலான கோவில்களில் இத்தகைய மரங்களும், குளங்களும் இருப்பது தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு.

முஸ்லீம்கள், கிறிஸ்தவர் போன்ற அந்நியர் படை எடுப்புகளில் இருந்து அதிக அளவில் பாதிக்கப்படாத புண்ய பூமி தமிழ் பூமி. பனை மரக்கொடி பற்றி தொல்காப்பியத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய நூல்களில் இல்லாத ஏராளமான விஷயங்கள் இந்த நூலில் இடம்பெறுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580153508752
Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?

Read more from London Swaminathan

Related to Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?

Related ebooks

Reviews for Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilargal Marangalai Vazhipaduvathu Yen? - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்?

    (ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு)

    Tamilargal Marangalai Vazhipaduvathu Yen?

    (Aaraichi Katturaigalin Thoguppu)

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    முன்னுரை

    1.இறவாப் பனை மரம்! பிறவாப் புளிய மரம்!-தமிழ் அதிசயம்!

    2.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

    3.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்?

    4.கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி

    5. ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே

    6. உடம்பைக் கடம்பால் அடி

    7. வேதத்தில் மரங்களின் கதை

    8.சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -1

    9. சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2

    10.‘குஷ்ட’ என்னும் அற்புத மூலிகை; வேதம் சொல்லும் அதிசயத் தகவல்

    11. பனை மரங்கள் வாழ்க!

    12. பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள்

    13.மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல்

    14.பூவாதே காய்க்கும் மரமும் உள!

    15.வேப்ப மரம் பற்றி சுவையான செய்திகள்

    16.தென்னை மரம் பற்றிய சுவையான கதை!

    17.பெண்களும் மரங்களும்: உதைத்தால், சிரித்தால்……….

    18.பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு

    19.தமிழா! மரம் நடு! குளம் தொடு!!

    20.அசோகன் மனைவி செய்த அக்கிரமம்! மகாவம்சம் தரும் தகவல்

    21.வியப்பூட்டும் அதிசய மரங்கள்

    22.சென்னை அருங்காட்சியக வளாகத்தில் அரிய மரங்கள்

    23. கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும்

    24.இந்திய அதிசயம்: ஆலமரம்

    25.அனைவரும் போற்றும் 500 வயது மரம்!

    26.அசோக மரக் கதை தெரியுமா?

    27.ஆலண்டி க்ஷேத்ரத்தில் ஒரு அற்புத மரம்

    28.தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு!!

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது , லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 15 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM) , மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார் .

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    1.இதழியல்

    2. வினவுங்கள் விடைதருவோம் (பி.பி.சி.தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    3.தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    4.வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    5.தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    6.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    7.முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    8.கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    9.யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    10.ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    11.பெண்கள் வாழ்க

    12.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    13.(தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? ( 28 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    14. (வரலாற்று விநோதங்கள்: 27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

    முன்னுரை

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற இந்த நூலில் 25-க்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. அவை எனது 2 பிளாக்குகளில் பத்தாண்டுக் காலத்தில் வெளியான கட்டுரைகள் ஆகும். இந்துக்கள் எல்லோரும் மரங்களையும், துளசி முதலான செடிகளையும் அருகம் புல், தர்ப்பை முதலான புல்களையும் வணங்கினாலும் தமிழர்கள் ஏனைய இந்துக்களை மிஞ்சிவிடுகின்றனர். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல மரம் உள்ளது. காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, உத்தரகோச மங்கை முதலிய ஸ்தலங்களில் மிகவும் பழைய மரங்கள் இருக்கின்றன. ஆகம ரீதியிலான கோவில்களில் இத்தகைய மரங்களும், குளங்களும் இருப்பது தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு. முஸ்லீம்கள், கிறிஸ்தவர் போன்ற அந்நியர் படை எடுப்புகளில் இருந்து அதிக அளவில் பாதிக்கப்படாத புண்ய பூமி தமிழ் பூமி. பனை மரக்கொடி பற்றி தொல்காப்பியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

    ஏனைய நூல்களில் இல்லாத ஏராளமான விஷயங்கள் இந்த நூலில் இடம்பெறுள்ளன. அவை வெளியான தேதிகளும் பிளாக்கில் உள்ள கட்டுரை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும். இதுதான் முழுமையான தகவல் என்று நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு கட்டுரை எழுதிய பின்னரும் பல புதிய தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆயினும் முன்னர் எழுதிய வடிவத்தில் அப்படியே இங்கே சேர்த்துள்ளேன். படித்து மகிழும் படியும், மரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும்படியும், கோவில்களைச் சுற்றி கடைகளுக்குப் பதில் நந்தவனங்களையும், நிழல்தரும் மரங்களையும் வளர்க்கும்படியும் அன்புடன் வேண்டுகிறேன்.

    உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எழுதவும் .

    அன்புள்ள

    லண்டன் சுவாமிநாதன்

    ஜூன் 2022

    1.இறவாப் பனை மரம்! பிறவாப் புளிய மரம்!-தமிழ் அதிசயம்!

    தமிழ் நாட்டின் புகழ் பெற்ற புனித மரங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1