Rishigal Bhoomi!
By S. Nagarajan
()
About this ebook
பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி. இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி. எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
அறிவியல் இப்போது ரிஷிகள் கூறிய பல கொள்கைகளையும், பல விதிகளையும் தங்களது ஆய்வு மூலம் உறுதிப்படுத்துகிறது.
ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது: “ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.”
ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.
Read more from S. Nagarajan
Samskirutha Subhashitham 200! Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Paarkkum Mun Therinthu Kollungal! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsPsychic Wonders And Pathway To Success Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsNoi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam! Rating: 0 out of 5 stars0 ratingsSethu Dharisanam! Rating: 0 out of 5 stars0 ratingsSelvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal! Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsArivukkum Appaal! Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsGeethai Vazhi! Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsMaha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kaattu! Rating: 0 out of 5 stars0 ratingsSeppu Mozhi Ainooru + Rating: 0 out of 5 stars0 ratingsVakkirkku Arunagiri! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsZen Kaattum Vazhkai Neri Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Rishigal Bhoomi!
Related ebooks
Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsVainavam Valartha Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Thiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsThondai Naattu Divya Desangal Rating: 0 out of 5 stars0 ratingsSuvaiyana Samaskriutha Subashithangal! Rating: 0 out of 5 stars0 ratingsPandi Naattu Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Mahabharatha Marmam! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSethu Dharisanam! Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 1 - Kattrin Kural Rating: 1 out of 5 stars1/5Sirappana Vazhuvu Tharum Siva Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsThirunaangur Divya Desangal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Athvaidham Rating: 0 out of 5 stars0 ratingsMahaangal – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Manangal Rating: 0 out of 5 stars0 ratingsSirappana Vazhvu Tharum Vainava Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Mahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeviyar Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsVendiyana Arulum Thiruthalangal Rating: 0 out of 5 stars0 ratingsSrimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPuranangal Pottrum Penmanigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Rishigal Bhoomi!
0 ratings0 reviews
Book preview
Rishigal Bhoomi! - S. Nagarajan
https://www.pustaka.co.in
ரிஷிகள் பூமி!
Rishigal Bhoomi!
Author:
ச. நாகராஜன்
S. Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/s-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
1. ரிஷிகள் பூமி!
2. மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல்
3. மஹரிஷி அத்ரி!
4. மஹரிஷி அங்கிரஸ்!
5. மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)
6. மஹரிஷி ஆபஸ்தம்பர்!
7. மஹரிஷி அரிஷ்டநேமி - சாவுக்குப் பயமில்லை!
8. மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!
9. மஹரிஷி ஆபவர்! நஷ்டம் ஏற்படாமலிருக்க கார்த்தவீர்யார்ஜுனன் நாமம்!!
10. மஹரிஷி ஜாபாலி!
11. மஹரிஷி சரபங்கர்!
12. மஹரிஷி அக்னிபர் - ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!
13. மஹரிஷி சூளி!
14. மஹரிஷி உதங்கர்!
15. மஹரிஷி கபிலர்! - கங்கை பூமிக்கு வந்த வரலாறு!
16. மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!
17. மஹரிஷி கார்க்கியர்
18. மஹரிஷி சமீகர்! - மஹாபாரதம் சம்பந்தமாக சந்தேகங்களைத் தீர்த்த பக்ஷிகள்!
19. மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!
20. மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் - திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு!
21. மஹரிஷி காமண்டகர்!
22. சூரியனோடு சுற்றும் ரிஷி - சூரிய ரகசியம்!
23. மஹரிஷி அஸிதர்!
24. மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்!
25. மஹரிஷி காத்யாயனர்!
26. மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!
27. மஹரிஷி தனுஸாக்ஷர்!
28. மஹரிஷி தமனர்!
29. மஹரிஷி சதானந்தர்!
30. மஹரிஷி க்ரது!
என்னுரை
பாரத பூமி ரிஷிகள் பூமி; ஆன்மீக பூமி.
இமயம் முதல் குமரி வரை ரிஷிகளின் பாதங்கள் பட்ட பூமி.
எடுத்துக்காட்டிற்காக முதல் அத்தியாயத்திலேயே தமிழகத்தில் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
இதே போல பாரத தேசமெங்கும் ரிஷிகளுடன் தொடர்பு கொண்ட தலங்கள், நகர்கள் ஏராளம் உள்ளன.
ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்க உரைகளில் 1893 செப்டம்பர் 19ஆம் தேதி ஆற்றிய உரையில் ரிஷிகள் பற்றிக் கூறியது பொருள் பொதிந்த ஒன்றாகும். அவர் கூறியது:-
"ஆன்மாவிற்கு ஆன்மாவிற்கு உள்ள தொடர்பு, தனிப்பட்டவர்களுக்கும் அவர்களைப் படைத்தவருக்கும் உள்ள தொடர்பு ஆகியவை பற்றிய விதிகளைக் கண்டு பிடித்தவர்கள் ரிஷிகள்; அவர்கள் கூறியவை எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.
அவர்கள் கூறிய விதிகளும் கொள்கைகளும் சரிதான் என்பதை அறிய நிரூபணம் இந்த விதிகளைச் சரிபார்த்தலே. அவர்கள் உலகிற்கு அளிக்கும் சவால் சரி பாருங்கள் என்பது தான்!"
அறிவியல் இப்போது ரிஷிகள் கூறிய பல கொள்கைகளையும், பல விதிகளையும் தங்களது ஆய்வு மூலம் உறுதிப் படுத்துகிறது.
ஸ்வாமி விவேகானந்தர் இன்னொரு சமயம் கூறியது : ரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள்; அவர்கள் கூறுவதை உலகம் அறிய நெடுங்காலமாகும்.
ஆக இப்படிப்பட்ட ரிஷிகளைப் பற்றிய ஒரு அறிமுக நூலே இது.
இந்த ஆரம்பத்தைத் தொடர்ந்து அவர்களை முற்றிலுமாக அறிந்து அவர்கள் கூறிய ரகசியங்களை அறிய ஒரு ஆவலைத் தூண்டுவதே இந்த நூலின் நோக்கமாகும்.
அறிவியல் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீன் யுகத்தில் ஆர்வமுள்ளோர் அனைவரும் ரிஷிகள் கூறியதை உணர்ந்து உலகிற்கு அளிக்க முன் வந்தால் அதுவே இந்த நூலின் வெற்றியாகும்.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!
இதைப் படிக்கும் அனைவர் வாழ்விலும் சர்வ மங்களத்தை அனைத்து ரிஷிகளும் அருளட்டும் என்ற பிரார்த்தனையுடன் நன்றி கூறி ரிஷிகளைப் பற்றி அறிய உள்ளே வாருங்கள் என உங்களை அழைக்கிறேன்.
14-1-22
ச.நாகராஜன்
பங்களூர்
1. ரிஷிகள் பூமி!
ரிஷி என்றால் சுயநலமின்றி தெளிவான திருஷ்டியுடன் உள்ளதை உள்ளபடி காண்பவர் என்று பொருள். த்ரஷ்டா என்று அவர்களைக் கூறுவது வழக்கம். சூஷ்ம திருஷ்டி மூலம் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்பதும், அந்தர்திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து அவரது நடத்தையின் ஆதிகாரணத்தை அறிவதும், திவ்யதிருஷ்டி மூலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்தை அறிவதும் ரிஷிகளின் இயல்பு. மந்த்ர திருஷ்டா என்றால் என்றுமுள்ள மந்திரங்களைத் தங்கள் தவத்தால் கண்டு உலக நன்மைக்காகத் தருபவர் என்று பொருள்.
வசிஷ்டர் விஸ்வாமித்திரர், யாக்ஞவல்க்யர் உள்ளிட்டோர் ப்ரம்ம ரிஷிகள், ஜனகர் போன்ற அபூர்வமான பிரம்மஞானம் உடைய ராஜாக்கள் ராஜ ரிஷிகள் என்ற வரிசையில் சேர்வர். நாரதர் போன்றோர் தேவரிஷிகளாவர்.
ரிஷிகள் எண்ணிலடங்கார். பாரத தேசம் முழுவதும் ரிஷிகளின் காலடித் தடம் படாத இடம் இல்லை எனலாம். அதிலும் தமிழகத்தை ரிஷிகளின் பூமி என்றே சொல்லலாம். இங்கு அடிக்கு அடி ஒரு ரிஷியின் அபூர்வமான அற்புதமோ அல்லது ரிஷி சம்பந்தப்பட்ட சம்பவமோ நடந்திருக்கிறது.
ஆதி காவ்யமான வால்மீகி முனிவரின் ஆசிரமம் இன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடில் உள்ள குறுங்காலீஸ்வரர் ஆலயம் இருந்த இடத்தில் பண்டைய காலத்தில் இருந்தது. அங்கு தான் சீதையும் லவ குசரும் வாழ்ந்தனர் என்பது எத்துணை அபூர்வமான செய்தி.
சென்னையில் உள்ள திருவான்மியூரில் வான்மீகி முனிவருக்கான சிறு ஆலயம் ஒன்று உள்ளது. மார்க்கண்டேய மஹரிஷியின் கட்டளையின் பேரில் வான்மீகர் இங்கு வந்து வழிபட்டமையால் வான்மியூர் என்ற திருநாமத்தைப் பெற்றது திருவான்மியூர்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற தலம். புரு என்னும் முனிவரின் யாகத்தின் பயனாகப் பிறந்த சாலிஹோத்ரர் என்னும் ரிஷி இங்கு தான் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு உணவு படைத்த பின்னரே தான் உண்ணும் பண்பைக் கொண்ட இந்த முனிவரிடம் பெருமாளே வயோதிகராக வந்து உணவு பெற்றார். பசி தீராமல் முனிவரின் பங்கையும் சேர்த்து உண்ட பெருமாள், படுக்க இடம் எது என்ற பொருளில்,’படுக்க எவ்வுள்’ என்று கேட்டதால் இந்த ஊரின் பெயர் எவ்வுள்ளூர் என்று ஆகி இப்போது திருவள்ளூர் ஆகி விட்டது.
அகத்திய முனிவருக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கத் தேவையே இல்லை.அகத்தியருடன் தொடர்பு கொண்ட திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!
மான் பூசித்த தலமான அகத்தியான் பள்ளியில் தான் அகத்தியர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். வேதாரண்யத்தில் ஈஸ்வரனின் கல்யாண கோலத்தைத் தரிசிக்க வந்த போது இங்கு இப்படி தங்கியதால் இந்த ஊருக்கு அகத்தியான் பள்ளி என்ற பெயர் ஏற்பட்டது.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் அகத்தியர் மற்றும் 49 சங்கப் புலவர்களின் திருவுருவங்கள் உள்ளன. அகத்தியர் பளிங்குத் துண்டு ஒன்றைக் கலைப்பீடமாக இங்கு வைத்தார் என்று திருவையாற்றுப் புராணம் கூறுகிறது.
அகத்தியருக்குக் கல்யாண கோலமாக, ஸ்வாமி தரிசனம் தந்த தலங்களாக அமைந்துள்ளவை: நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமலை, ருத்திர கங்கை, அம்பல், திருமறைக்காடு, இடும்பாவனம், பாபவிநாசம் ஆகியவவை.
மார்க்கண்டேய மஹரிஷியின் ருத்ராக்ஷம் அழுந்தியுள்ள தலம் திருக்கடையூர். சிவனைத் தழுவிக்