Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirappana Vazhuvu Tharum Siva Thalangal
Sirappana Vazhuvu Tharum Siva Thalangal
Sirappana Vazhuvu Tharum Siva Thalangal
Ebook133 pages35 minutes

Sirappana Vazhuvu Tharum Siva Thalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். “சிறப்பான வாழ்வு தரும் சிவத்தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 சிவத்தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் தினகரன் ஆன்மிகப் பலன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்ற பயனுள்ள பல ஆன்மிக நூல்கள் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807168
Sirappana Vazhuvu Tharum Siva Thalangal

Read more from R.V.Pathy

Related to Sirappana Vazhuvu Tharum Siva Thalangal

Related ebooks

Reviews for Sirappana Vazhuvu Tharum Siva Thalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirappana Vazhuvu Tharum Siva Thalangal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    சிறப்பான வாழ்வு தரும் சிவத்தலங்கள்

    Sirappana Vazhuvu Tharum Siva Thalangal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குறைகளைப் போக்கும் ஸ்ரீ குணம் தந்த நாதர்

    எலும்பு நோய்கள் அகல ஸ்ரீ திருமாகறலீஸ்வரர்

    தீராத நோய்களைத் தீர்க்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர்

    கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ அதிதீஸ்வரர்

    ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ அருணாதீஸ்வரர்

    வாணிபம் செழித்து விளங்க ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர்

    சகல செல்வங்களையும் பெற ஸ்ரீ பால்வண்ணநாதர்

    கிரக தோஷங்கள் நீங்க ஸ்ரீ பாசுபதேஸ்வரர்

    அமைதியான வாழ்வருளும் ஸ்ரீ ருத்ரேஸ்வரர்

    அற்புத வாழ்வளிக்கும் ஸ்ரீ அகத்தீஸ்வரமுடையார்

    செல்வச் செழிப்பு தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்

    நிம்மதி அருளும் ஸ்ரீ கைலாசநாதர்

    நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்

    வளமான வாழ்வு பெற ஸ்ரீ தீர்த்தகிரிஸ்வரர்

    சர்ப்ப தோஷம் நீங்க ஸ்ரீ அனந்தீஸ்வரர்

    அனைத்தும் அருளும் ஸ்ரீ பக்தவத்சலேசுவரர்

    பலமும் செல்வமும் அருளும் ஸ்ரீ திருவாலீஸ்வரர்

    அமைதி அருளும் ஸ்ரீ கர்ணேஸ்வர் நடராஜர்

    வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்

    நீடித்த ஆயுளுக்கு ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

    சிறப்பான வாழ்வு தரும் சிவத்தலங்கள்
    ஆர்.வி.பதி

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    திருக்கழுக்குன்றம் வட்டம்

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    என்னுரை

    வணக்கம். சிறப்பான வாழ்வு தரும் சிவத்தலங்கள் என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 சிவத்தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் தினகரன் ஆன்மிகப் பலன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்ற பயனுள்ள பல ஆன்மிக நூல்கள் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    ஜீன் 2021

    ஒரக்காட்டுப்பேட்டை

    குறைகளைப் போக்கும் ஸ்ரீ குணம் தந்த நாதர்

    கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் அமைந்த நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு தமிழ்நாட்டில் வாயலூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டில் பாலாற்றின் கரையில் பலப்பல அற்புதமான சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவ்வாறாக பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒரு திருத்தலமே ஒரகாட்டுப்பேட்டை குணம் தந்த நாதர் திருக்கோயிலாகும். சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்தலம்.

    ஸ்தல வரலாறு

    C:\Users\PATHY\Downloads\Gunamthanthanathar entrance.jpg

    சிவபெருமானும் பார்வதிதேவியும் கையிலாய மலையில் உரையாடிக் கொண்டிருக்கையில் பார்வதிதேவி சிவபெருமானிடம் ஈசனே. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாங்கள் ஞானத்தை அளித்து மேன்மை அடையச் செய்கிறீர்கள். மானிடரைப் போல எனக்கும் தாங்கள் ஞானத்தை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். அதற்கு சிவபெருமான் பார்வதிதேவியிடம் மண்ணுலகில் பிரனேஷ்வனத்திற்குச் சென்று தவமியற்றினால் நாமே அங்கு வந்து ஞானத்தை போதிப்பதாகக் கூற பார்வதிதேவியும் பிரனேஷ்வனத்திற்கு வந்து தவமியற்றினார்.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள பிரனேஷ்வனத்தின் வழியே தங்கள் வணிகத்தின் பொருட்டு வணிகர்கள் செல்லும் வேளையில் அப்பகுதியில் கள்வர்கள் சிலர் அவர்களை வழிமறித்து அவர்களின் செல்வங்களை அபகரிக்கத் தொடங்கினார்கள். இந்த பிரனேஷ்வனத்தில் சிவபெருமான் ஒரு வில்வமரமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் வணிகர் ஒருவர் இப்பகுதியைக் கடந்து செல்கையில் கள்வர்கள் அவருடைய செல்வத்தையும் பொருளையும் கொள்ளையடித்தனர். தன் செல்வம் அனைத்தையும் இழந்த அந்த வணிகர் வில்வமரத்தடியில் அமர்ந்து ஈசனே என் செல்வத்தைக் கொள்ளையடித்த கள்வர்களுக்கு நீ நற்குணத்தை அருளி அக்கள்வர்களே என்னைத் தேடி வந்து எனது செல்வங்களை என்னிடம் திருப்பிதரச் செய்ய வேண்டும். அதுவரை உன் திருவடிகளாய் விளங்கும் இந்த இடத்தைவிட்டு அகலமாட்டேன் என்று மனமுருகி வேண்டினார். வணிகரின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் ஒரு வேடனாய் உருவெடுத்து அவர்களைத் தாக்கினார். அச்சமயத்தில் அக்கள்வர்கள் அப்பகுதியில் இருந்த மாகாளிதேவியை வழிபட்டு தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றார்கள். மாகாளியும் வேடனை அழிக்க ஆக்ரோஷ உருவெடுத்து வேடனைத் தேடி வந்தாள். கள்வர்களைக் காணாத வேடன் கோபத்தில் வில்வமரத்தடியில் நடனமாடிக் கொண்டிருந்தார். மாகாளி அந்த வேடனை எதிர்த்து நடனமாடி பின்னர் தோற்றாள். சிவபெருமானின் உபதேசத்தினால் ஞானம் பெற்ற மாகாளிதேவி சிவபெருமானிடம் கள்வர்களைக் காத்தருளும்படி வேண்டிக் கொள்ள அக்கள்வர்களும் மனம் திருந்தி தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை வணிகரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கோரி நின்றார்கள். பின் அவர்கள் அந்த வில்வமரத்தை லிங்கமாய் வழிபட்டார்கள். இவ்வாறு கள்வர்களைத் திருத்தி குணம்

    Enjoying the preview?
    Page 1 of 1