Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalayam Arivom! Part - 2
Aalayam Arivom! Part - 2
Aalayam Arivom! Part - 2
Ebook153 pages56 minutes

Aalayam Arivom! Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆலயம் தொழுவது சாலவும் நன்று! இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவுசால் நம் பாரத மக்கள். பாரதத்தில் உள்ள ஆலயங்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சி வாரந்தோறும் ஒளிபரப்பியது. அதில் இடம் பெற்ற ஆலயங்கள் பற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல்.

முதல் பாகத்தில் 30 தலங்கள் பற்றிய விவரங்களைக் காணலாம். அடுத்து வெளிவரும் இந்த இரண்டாம் பாகத்தில் நவகிரக தலங்கள், சக்தி பீடங்கள், சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், ஆறு படை வீடுகள் உள்ளிட்ட 30 ஆலயங்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 5, 2022
ISBN6580151008674
Aalayam Arivom! Part - 2

Read more from S. Nagarajan

Related to Aalayam Arivom! Part - 2

Related ebooks

Reviews for Aalayam Arivom! Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalayam Arivom! Part - 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆலயம் அறிவோம்! பாகம் – 2

    Aalayam Arivom! Part – 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1.புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்

    2. சூரியனார் கோவில்

    3.திங்களூர்

    4.திருவெண்காடு

    5.திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி

    6.திருக்கஞ்சனூர்

    7.திருநள்ளாறு

    8.திருநாகேச்சரம்

    9.ஸ்ரீகாளஹஸ்தி

    10. ஸ்ரீ சைலம்

    11. தஞ்சை பிரஹதீஸ்வரர்

    12. சீர்காழி

    13. திருவிடைமருதூர்

    14. மயிலை கபாலீஸ்வரர்

    15. திருவையாறு

    16. சிருங்கேரி ஸ்ரீ சாரதா தேவி

    17. கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி!

    18. திருநின்றவூர்

    19. திருக்கருகாவூர்

    20. ஆஜ்மீர் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்திபீடம்

    21. கல்கத்தா காளி

    22. திருப்பரங்குன்றம்

    23. திருச்செந்தூர்

    24. பழநி

    25. திருத்தணி

    26. குக்கி சுப்ரமண்யர்

    27. திருமாலிருஞ்சோலை

    28. ஸ்ரீரங்கபட்டிணம்

    29. திருவள்ளூர்

    30. அஞ்சனா பர்வதம்

    என்னுரை

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

    கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!

    உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது - ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.

    இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.

    ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.

    இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.

    இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.

    கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

    அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.

    இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.

    நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.

    அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன். அவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    Facebook.com/gnanamayamமற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட் பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.

    முதல் பாகத்தில் 30 திருத்தலங்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் அடுத்த 30 தலங்களைப் பற்றிய வியத்தகும் செய்திகளைப் பார்க்கப் போகிறோம்.

    இதை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    வாருங்கள், திருத்தலங்களுக்குச் செல்வோம்..

    சான்பிரான்ஸிஸ்கோ

    ச.நாகராஜன்

    23-6-2022

    1.புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்

    ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

    வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்

    மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

    துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

    தப்பாமல் சார்வார் தமக்கு

    கணபதி சரணம்!

    ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது புதுச்சேரி என்றும், பாண்டிச்சேரி என்றும், இன்று அழைக்கப்படும் வேதபுரியில் எழுந்தருளியுள்ள மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயம் புதுச்சேரி நகரிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இது சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    மணல் குளத்தின் மீது அமைந்துள்ளதால் இந்த ஆலயத்திற்கு மணக்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் அமைந்தது.

    பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பேயே இந்த ஆலயம் இருந்து வந்திருக்கிறது. ஆகவே சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறைக் கொண்டுள்ள ஆலயம் இது.

    கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரின் முன்னிரு கரங்கள் அபயம் அளிக்கின்றன. பின்னால் உள்ள இரு கரங்கள் பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி உள்ளன.

    பெயருக்கேற்றபடி விநாயகர் குளத்தின் மீது இருப்பதால் நீர் சுரக்கும் ஆலயமாக இது உள்ளது. விநாயகருக்கு அருகில் ஒரு குழி உள்ளது. இதன் ஆழத்தை யாராலும் காணமுடியவில்லை. தொடர்ந்து நீர் மட்டும் இங்கு வற்றிடாமல் சுரக்கிறது.

    விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக இங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

    பெரிய ராஜகோபுரம் முழுவதுமே தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. இந்தப் பிள்ளையாருக்கு ஏழரை கிலோ தங்கத்தால் ஆன தங்க ரதமும் உண்டு; வெள்ளி ரதமும் உண்டு. தங்கத்தினால் அமைந்த கோபுரமும், தங்கத் தேரும் கொண்டுள்ள விநாயகர் ஆலயம் பாரதத்திலேயே இது ஒன்று தான்.

    இந்த ஆலயத்தில் பள்ளியறை ஒன்று உள்ளது. பள்ளியறையில் இரவு பூஜை முடிந்தவுடன் விநாயகரின் பாதம் மட்டுமே உள்ள உற்சவ விக்ரஹம் பள்ளியறைக்குள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது. பள்ளியறையின் உள்ளே விநாயகரின் தாயார் சக்தி தேவியார் எழுந்தருளி இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பையும் கொண்ட கோவில் இது ஒன்று தான்.

    மேலும் விநாயகரின் மனைவிகளாக சித்தி, புத்தி ஆகிய இருவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவமும் இங்கு உண்டு.

    பிரெஞ்சுக்காரர்கள் ஆயிரத்தி அறுநூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இங்கு வந்தனர். அவர்களில் ஆளும் சில பிரபுக்களுக்கு விநாயகர் கோவில் அங்கு இருப்பது பிடிக்கவில்லை.

    கோட்டை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்ட அவர்கள் கோவிலை அகற்ற முனைந்தனர். உடனடியாக அங்கு வாழ்ந்து வந்த பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள அங்கிருந்து செல்லப் போவதாக அறிவித்தனர். இதனால் அரண்டு போன பிரெஞ்சு தலைமை அந்த எண்ணத்தைக் கைவிட்டது.

    இருந்த போதும் ஆட்சியாளர்கள் இந்தப் பிள்ளையாரை அருகிலுள்ள கடலில் தூக்கிப் போடுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    அப்படியே அவர்களும் நள்ளிரவில் பிள்ளையாரைக் கடலில் தூக்கிப் போட்டனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் தனது வழக்கமான இருப்பிடத்தில், ஆலயத்தில் அமர்ந்து, காட்சி அளித்தார் மணக்குளத்து விநாயகர்.

    திடுக்கிட்ட ஆட்சியாளர்கள் விநாயகரின் மஹிமையை உணர்ந்து அவரைச் சரணமடைந்தனர்!;

    பாண்டிச்சேரியின் பிரபலமான, கவர்னர் ஜெனராலான, டூப்ளே விநாயகரின் பெரும் பக்தரானார். அவர் உள்ளிட்ட பல வெள்ளையருக்கும் அருள் பாலித்ததால் வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரையும் மணக்குள விநாயகர் பெற்றார்.

    மாபெரும் சித்தர்கள் இங்கு வந்து வணங்குவது வழக்கம். அவர்களில் தொள்ளைக்காது சித்தர் என்பவரும் ஒருவர். விநாயகரின் பேரருளுக்குப் பாத்திரமான அவர், தான் சமாதி அடையும் சமயம் அங்கேயே இருக்க விரும்பியதால் அவரது சமாதி, ஆலயத்தின் அருகிலேயே பக்தர்களால அமைக்கப்பட்டது.

    மஹரிஷி அரவிந்தர், மஹாகவி பாரதியார் உள்ளிட்ட பல பெரியார்கள் வணங்கிய பிள்ளையார் மணக்குளத்துப் பிள்ளையார்.

    பாரதியார் இவர் மீது விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை இயற்றினார். அற்புதமான நாற்பது பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலில் தான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற தன் அமர வரிகளை வடித்தார் அவர். புதுவை விநாயகனே என்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1