Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sethu Dharisanam!
Sethu Dharisanam!
Sethu Dharisanam!
Ebook78 pages28 minutes

Sethu Dharisanam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹிந்து ராஷ்ட்ரத்தின் தனிப் பெரும் நாயகன் ராமன்! அவனின்றி ஹிந்து சரித்திரம் இல்லை; ஹிந்து வாழ்க்கை முறை இல்லை. தனது ஜீவிய சரித்திரம் மூலம் ஒரு ஹிந்து வாழ வேண்டிய முறையை வாழ்ந்து காண்பித்த அறத்தின் நாயகனை வணங்குவது ஹிந்து மக்களின் தனிப் பெரும் உரிமை! ராமர் வாழ்ந்தாரா இல்லையா, அவர் சேதுவைக் கட்டினாரா, அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்போருக்கு தகுந்த பதிலைத் தருவதன் மூலம் ஒன்றுபட்ட ஹிந்து சக்தியை மேலும் வலுவுள்ளதாக ஆக்க முடியும். அந்த எண்ணத்தில் எழுந்தது தான் இந்தச் சிறிய ஆராய்ச்சி நூல்! அறிவியல் ரீதியாக நாஸா ஆய்வு செய்து எடுத்த படம் உள்ளிட்ட செய்திகளை 15 அத்தியாயங்களில் தருகிறது இந்த நூல்.

நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள்: ராமரின் பாதம்பட்ட புண்ய ஸ்தலங்கள்!, ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!, பாவம் போக்கும் சேது!, புராணங்கள் போற்றும் சேது!, சேதுவைப் பற்றிய ஆய்வுகள்!, சேதுவின் வரலாறு, சித்ரகூட அகழ்வாராய்ச்சி, மகாத்மா காந்திஜியும் ராம நாமமும், ராம ரஹஸ்ய உபநிஷத்!, ராம நாம மகிமை!

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580151009548
Sethu Dharisanam!

Read more from S. Nagarajan

Related to Sethu Dharisanam!

Related ebooks

Reviews for Sethu Dharisanam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sethu Dharisanam! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சேது தரிசனம்!

    Sethu Dharisanam!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. ராமரின் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள்!

    2. ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!

    3. பாவம் போக்கும் சேது!

    4. புராணங்கள் போற்றும் சேது! - 1

    5. புராணங்கள் போற்றும் சேது! - 2

    6. சேதுவைப் பற்றிய ஆய்வுகள்!

    7. இந்திய அரசு அங்கீகரித்த சேது!

    8. சேதுவின் வரலாறு!

    9. ராமர் வாழ்ந்தது உண்மையா பொய்யா?

    10. சித்ரகூட அகழ்வாராய்ச்சி

    11. மகாத்மா காந்திஜியும் ராம நாமமும்

    12. மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?

    13. ராம ரஹஸ்ய உபநிஷத்!

    14. ராம நாம மகிமை!

    15. முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    2008ஆம் ஆண்டு. ஒரு நாள் காலை நேரம்.

    ஆதிபிரான் ஆசிரியர் திரு ஏ. சீனிவாசன் சென்னையில் எனது இல்லத்திற்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

    சேது பற்றிய உண்மையை மக்கள் அறியும் வண்ணம் ஒரு தொடரை எழுதப் பணித்தார்.

    அதன் விளைவாக எழுந்த நூல்தான் இது. முதலில் ஆதிப்பிரான் மாத இதழில் இது தொடராக வந்தது.

    அவருக்கு எனது முதல் நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    பின்னர் இது லண்டன் திருமதி. நிர்மலா ராஜு அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

    பல்வேறு உண்மைகளை அதிகாரபூர்வமாகத் தரும் இந்த நூலை வாசகர்கள் வரவேற்றனர்.

    இதை வரவேற்றுப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

    இதை டிஜிட்டல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறுபதிப்பாகக் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேது பாலம் பற்றிய அனைத்து உண்மைகளையும் விளக்கும் இந்த நூல் நமது பண்பாட்டின் ஒரு முக்கிய உண்மையை அறிவியல் ஆய்வுபூர்வமான உண்மையுடன் விளக்குகிறது.

    நமது பண்பாட்டுச் சின்னங்களைக் காப்பதில் அனைவரும் ஊக்கமுடன் ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து இந்த நூலை தமிழ் மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

    நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூர்

    6-2-2023

    1. ராமரின் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள்!

    பூமியில் மலைகளும் நதிகளும் எதுவரை உள்ளதோ அதுவரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்

    - ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34

    ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.

    அயோத்யா

    இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம்.

    வடக்கு ரயில்வேயின் வாரணாசி - லக்னௌ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னௌவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

    பக்ஸர்

    சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது. கிழக்கு ரயில்வேயின் பாட்னா - மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.

    அகல்யாசிரமம்

    கல்லாக

    Enjoying the preview?
    Page 1 of 1