Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2
Ebook129 pages39 minutes

Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்றான கொங்கு மண்டலத்தின் அற்புதமான வரலாறை .கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகம் நூறு பாக்களில் தருகிறது.

இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.

தலையில் குட்டிக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் வழிபாடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கொல்லிப்பாவை உள்ளிட்ட பல சுவை மிகு வரலாறுகளை இதில் படிக்கலாம். அத்துடன் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வியத்தகு அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இதில் காணலாம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல் கொங்குமண்டல சதகம்.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580151008964
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2

Read more from S. Nagarajan

Related to Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2

Related ebooks

Reviews for Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள்!! பாகம் – 2

    Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    முதல் பகுதி - கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!

    1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

    2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!

    3.மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

    4. கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!

    5. பயறு மிளகானது: சிவபிரான் திருவிளையாடல்!

    6. முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!

    இரண்டாம் பகுதி - கொங்குமண்டல சதகம் தரும் அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள்

    7. செங்குன்றூர் கிழார் பாடிய திருவள்ளுவ மாலை வெண்பா!

    8. வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

    9. யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

    10. பெரும் புகழ் படைத்த முத்தரையர் ஆண்ட இடம் எது?

    11. கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!

    12. தம்பிக்குத் தலை கொடுக்க முன் வந்த அண்ணன்!

    13. சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும் திருவாவடுதுறை மட வரலாறும்!

    14. ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!

    15. பூந்துறை குப்பிச்சி!

    16. சுரிகை ஆயுதப்போரில் வல்ல தித்தன் என்னும் அகளங்க சோழன்!

    17. ஆணுக்கு அறிவு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

    18. தமிழுக்காகத் தாலியை ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

    19. தொண்டைமான் வரலாறு!

    20. மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!

    21. புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டி!

    22. வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

    23. பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

    24. காவிரியைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு வந்த அல்லாளன் இளையான்!

    25. புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!

    26. பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!

    27. கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

    28. விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!

    29. வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!

    30. பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்!

    31. தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!

    32. வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்!

    33. புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

    34. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!

    பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

    என்னுரை

    தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

    தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல நூறு வரலாறுகளைக் கொண்டது. இதை இயற்றியவர் கார்மேகக் கவிஞர் என்பவர்.

    கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

    கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

    இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

    இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

    இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.

    இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    3-8-2022

    ச.நாகராஜன்

    முதல் பகுதி - கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!

    1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

    தலையிலே குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடுவது ஏன்?

    இதற்கான சுவையான வரலாறு ஒன்று உண்டு.

    அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை

    Enjoying the preview?
    Page 1 of 1