Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Geethai Vazhi!
Geethai Vazhi!
Geethai Vazhi!
Ebook114 pages42 minutes

Geethai Vazhi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை. இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம். கீதையின் ஒரு ஸ்லோகத்தின் ஒரு சொல்லுக்கான அர்த்தத்தை ஷீர்டி சாயிபாபா விளக்குவது, முதல் ஸ்லோகத்தின் முதல் சில வார்த்த்தைகளிலேயே முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்ட மஹாராணி உள்ளிட்ட சுவையான விவரங்களுடன் ஏராளமான தத்துவ விளக்கங்களும் குட்டிக் கதைகளையும் நூலில் காணலாம். படிக்கப் படிக்க பரவசமூட்டும் கீதை பற்றிய இந்த நூல் 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580151008957
Geethai Vazhi!

Read more from S. Nagarajan

Related to Geethai Vazhi!

Related ebooks

Reviews for Geethai Vazhi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Geethai Vazhi! - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    கீதை வழி!

    Geethai Vazhi!

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பகவத்கீதையின் ஒரு பதம்!

    2. கீதையின் முதல் நான்கு வார்த்தைகளில் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மஹாராணி!

    3. கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

    4. கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

    5. நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

    6. எளிமை, பிரஸ்னம், சேவை: கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

    7. மஹாத்மா போற்றிய பகவத் கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்!

    8. காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி!

    9. கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்!!

    10. கீதை: மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! - கீதையின் முதல் கட்டளை!

    11. கீதையின் இரண்டாவது கட்டளை!

    12. கீதையின் மூன்றாவது கட்டளை!

    13. கீதையின் நான்காவது கட்டளை!

    14. கீதையின் ஐந்தாவது கட்டளை!

    15. கீதையின் ஆறாவது கட்டளை!

    17. கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை!

    18. ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

    19. கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!

    20. ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

    21. உத்தர கீதை - 1

    22. உத்தர கீதை - 2

    23. பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை!

    24. கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!

    முன்னுரை

    மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை.

    இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம்.

    கீதை வழியை உணரலாம்; காணலாம்; அதன் வழி செல்லலாம்!

    இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஞான ஆலயம் மாத இதழிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது வெளி வந்தவை.

    இவற்றை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் www.tamilandvedas.com ப்ளாக் திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    நன்றி.

    சான்பிரான்ஸிஸ்கோ

    30-7-2022

    ச.நாகராஜன்

    1. பகவத்கீதையின் ஒரு பதம்!

    பாபாவின் கேள்வி!

    ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி. சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர்.

    பாபா அவரிடம் கேட்டார்: நானா! என்ன முனகுகிறாய்?

    நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்

    பாபா: என்ன ஸ்லோகம்?

    நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்

    பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு

    ஒரே ஒரு ஸ்லோகமும் அதன் உண்மையான விளக்கமும்

    நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை உரக்கக் கூறினார்.

    "தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா I

    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந:II"

    பாபா: நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?

    நானா: புரிகிறது

    பாபா: அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.

    சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து ஞானம் என்பதைக் கற்றுக் கொள். பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம் அறிந்த ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள் என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூறினார்.

    பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம், வேற்றுமை, காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,

    பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே விரிவாக விளக்கினார்.

    பாபா: ப்ரணிபாதம் என்றால் என்ன?

    நானா: நமஸ்காரம் செய்வது!

    பாபா: பாதம் என்றால் என்ன?

    நானா: அதே அர்த்தம் தான்!

    பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர் அனாவசியமாக தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?

    நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!

    பாபா: சரி, ப்ரஸ்ன என்றால் என்ன?

    நானா: கேள்வி கேட்பது

    பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?

    நானா: அதே அர்த்தம் தான்!

    பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால் வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?

    நானா: எனக்கு என்னவோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!

    பாபா: சரி சேவா என்றால் என்ன?

    நானா: சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!

    பாபா: இதை விட வேறு ஒன்றும் இல்லையா?

    நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!

    அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் –

    ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன் இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1