Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 10
Maha Periyavaa - Part 10
Maha Periyavaa - Part 10
Ebook333 pages2 hours

Maha Periyavaa - Part 10

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மகா பெரியவா - ஒரு நடமாடும் தெய்வம். இன்றைக்கும் நம்மிடையே இருந்து வருகிறார். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரை இறுகப் பற்றிக் கொண்டால், சரணாகதி அடைந்தால், அனைத்து விதமான வளங்களையும் பெறலாம் என்பதற்கு அவரது அத்யந்த பக்தர்களே சாட்சி!
மகான் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு பிரச்னை என்றாலும், அவரது திருச்சந்நிதி தேடிப் போனார்கள். நோயா, திருமணத் தடையா, குழந்தைப் பேறு இல்லாமையா, வேலையின்மையா, குடும்பத்தில் குழப்பமா, கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடா... இப்படி எதுவாக இருந்தாலும் அந்த மகானின் திருச்சந்நிதிக்குச் சென்று அவரது திருமுகத்தைப் பார்த்தார்கள். கருணை பொங்கும் மகானின் திருமுகம் ஒரு கணம் சம்பந்தப்பட்டவரைக் கவனித்து விட்டாலே போதும்... அத்தனையும் பறந்து விடும்.
மகா பெரியவாளை நெருங்கிப் பேச வேண்டும்... நம் துயரை அவரிடம் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நமக்கும் மேலே இருக்கிற பரம்பொருளுக்கு நாம் யார் என்பது தெரியும். எதற்காக வந்திருக்கிறோம் என்பதும் புரியும். தெய்வத்திடம் குறைகளைச் சொன்னால்தான் தீர்வு என்றில்லை. மனமுருகி தெய்வத் திருவடிவைக் கண் கலங்க தரிசித்துக் கொண்டிருந்தாலே போதும். தெய்வம் புரிந்து கொண்டு எதைத் தேடி வந்திருக்கிறோமோ, அதை அருளி விடும். அதுபோல்தான் நடமாடும் தெய்வம் மகா பெரியவா.
இவரது சந்நிதிக்குப் போன பலர், தங்களின் குறைகளைச் சொல்லாமலே அடுத்த ஒரு சில தினங்களுக்குள் அவை அகலப் பெற்றிருக்கிறார்கள். உண்மையான குரு பக்திக்கு இதை விட என்ன சொல்ல முடியும்!
நம் கண்களுக்குத் தெரியாத ரூபத்தில் மகான்கள் இன்றைக்கும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் பக்தர்களின் துயர்களை அவர்கள் துடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அசைக்க முடியாத பக்திதான் அனைத்தையும் பெற்றுத் தரும். அத்தகைய பக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும்.
சூரியன், சந்திரன் உள்ளவரை மகா பெரியவா இருந்து கொண்டிருப்பார். குறையா? குழப்பமா? அவரது திருவுருவுக்கு முன்னால் நின்று கொண்டு மனமாரப் பிரார்த்தனை செய்தாலே போதும்... எல்லாப் பிரச்னையும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இது அனுபவப்பட்ட பக்தர்களின் ஸ்டேட்மெண்ட்.
மகா பெரியவா பற்றிப் பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் பலரும் தங்களது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் சொல்லக் கூடிய நிகழ்வுகள், கிடைத்தற்கரிய பழைய பேப்பர் கட்டிங்குகள் - இப்படித்தான் சம்பவங்கள் எழுத்தாக உருப் பெற்றன. மகான் குறித்தான அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட எத்தனையோ நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
உலகின் எந்த ஒரு மூலைக்குப் பயணித்தாலும், மகா பெரியவாளைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அங்கே சில குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி என்றால், அந்த மகானது அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான பக்தகோடிகள் உலகம் முழுக்கப் பரவி வாழ்ந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
காஞ்சி மகானது கருணையும், கடைக்கண் பார்வையும் அனைவர் மீதும் பதிந்து, வளம் பல பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
மகா பெரியவா சரணம்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306223
Maha Periyavaa - Part 10

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 10

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 10

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 10 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 10

    Maha Periyavaa - Part 10

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அடையாறு தம்பதியால் கிடைத்த ஆனந்தம்

    2. முன்னாடியே கிடைத்த கண்ணாடி தரிசனம்

    3. 'உன்னோட வாசிப்புக்கு இந்த தோடா, தோடாதான்!'

    4. அனுமதி இல்லாமல் எடுத்த புகைப்படங்கள்

    5. 'உன் பக்கத்திலேயே எப்போதும் இருப்பேன்!'

    6. தேடி வந்து தந்த தரிசனம்

    7. பட்டது பார்வை... அகன்றது ஆபரேஷன்!

    8. 'இவ்ளோதான் சின்முத்திரை... இத விளக்க கஷ்டப்பட்டியே...!'

    9. வேத பண்டிதரை ஏன் திருப்பி அனுப்பினார்?

    10. இதய நோயை விரட்டினார்... இனிய ஆசி வழங்கினார்!

    11. கன்யா குழந்தைக்கு நடந்த திருமணம்

    12. 'உன்னால ஒரு உபகாரம்... எனக்காக செய்வியா?'

    13. கார்வாருடன் நடத்திய கலகல விளையாட்டு

    14. பெரியவாளுக்குப் பிடித்த பிரதோஷம் மாமா

    15. அழியாப் புகழ் கொண்ட அன்னதான சிவன்

    16. 'தீபாவளிக்குக் காரணம் பூமாதேவியின் பொறுமை!'

    17. தூக்கத்தைக் கெடுத்த கொசுவும் எறும்பும்

    18. ஏன் சிந்தனை போனது கொசுவிடமும் எறும்பிடமும்?

    19. மகான் நிகழ்த்திய மாம்பழ அற்புதம்

    20. கேட்டு வாங்கிக் கொண்ட காணிக்கைக் கடுக்கன்

    21. கிணற்றுக்குள் விழுந்தது கிடைத்த அதிசயம்

    22. பார்த்தசாரதியைக் காப்பாற்றிய பரமேஸ்வர சொரூபம்

    23. பெரியவா பரிவும் குறவர்கள் குஷியும்

    24. சக்கரம் வைத்த வண்டியில் ஏறாமல் வாழ்ந்த மகான்

    25. கோபப்பட வைத்த வரதட்சணை விவகாரம்

    26. 'மாசம் இருவது ரூவா மணியார்டர் அனுப்பு'

    27. எங்கே கற்றுக் கொண்டார் புகைப்படக் கலையை?

    மகா பெரியவா - தொகுதி 10

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வாசக அன்பர்களுக்கு,

    அன்பான வணக்கம்.

    'என்னுரை' வாயிலாக அவ்வப்போது உங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    விளையாட்டுப் போக்கில் 'மகா பெரியவா' பிரமாண்டமான நூல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. மகா பெரியவா அனுபவங்களைப் பற்றி அடியேன் எழுதிய முதல் நூல் அதுதான். அப்போது அந்த நூலின் அட்டையில் 'முதல் தொகுதி' என்றெல்லாம் சேர்க்கவில்லை. காரணம், இத்தனை தொகுதிகள் அடுத்தடுத்து வரப் போகின்றன என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

    ஆனாலும், 'மகா பெரியவா மகிமை' என்ற தலைப்பில் பல ஆன்மிக மேடைகளில் தொடர்ந்து அவர் குறித்தான அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். தமிழகம் மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் சொற்பொழிவாற்றினேன். பல இடங்களில் இருந்து இதற்கான தகவல்களைத் திரட்டினேன். மகானின் கருணையுடன் அவரது பக்தர்கள் பலரையும் சந்தித்து, அனுபவங்களைக் கேட்டுச் சொற்பொழிவுகளில் பேசி வந்தேன்.

    இந்த வேளையில் பல இதழ்களிலும் 'மகா பெரியவா' பற்றித் தொடர் எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள். பலரிடமும் திரட்டிய அனுபவங்கள், இது காலம் வரை அடியேன் சேகரித்த தகவல்கள் அனைத்தும் எழுத்தாக்கம் பெற்றன. இதழ்களில் அடுத்தடுத்து வெளி வரத் துவங்கின.

    அடுத்து வந்த சில மாதங்களில் 'மகா பெரியவா தொகுதி இரண்டு' வெளியானது. பிரமிப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அடுத்த சில காலத்துக்குள் மூன்றாம் தொகுதி.... இப்படிக் காலம் ஓடுவதே தெரியாமல் பேசியும், எழுதியும் வந்தேன். நான்கு, ஐந்து என்று அடுத்தடுத்து வெளியாகி இதோ, 'மகா பெரியவா தொகுதி பத்து' உங்கள் கையில் தற்போது தவழ்ந்து கொண்டிருக்கிறது.

    மகா பெரியவாளுடன் பக்தர்களுக்கு உண்டான அனுபவங்களை மாலை மலர், ராணி, தினமலர், கோபுர தரிசனம் உள்ளிட்ட இதழ்களில் தொடராக எழுதும் பேறு கிடைத்தது. அவ்வப்போது தினத் தந்தி, மங்கையர் மலர் போன்ற சில இதழ்களில் திடீரென்று கட்டுரை கேட்டு எழுதியதும் இந்தத் தொகுப்புகளில் சேர்ந்துள்ளன. என்னை எழுதத் தூண்டி உற்சாகப்படுத்திய இந்த இதழ்களுக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இவர்கள் இந்த அளவுக்கு என்னை ஊக்கப்படுத்தி இருக்காவிட்டால், பத்து தொகுதிகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எனவே, என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்த அனைத்துப் பத்திரிகை சகோதர - சகோதரிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    தற்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிற இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கட்டுரைகள் அனைத்தும் ராணி, தின மலர் இதழ்களில் தொடராக வெளி வந்தவை. இன்னமும் இந்த இரண்டு இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆக, விரைவிலேயே மகா பெரியவாளின் பரம கருணையோடு பதினொன்றாம் தொகுதியை எதிர்பாருங்கள்!

    மகா பெரியவா - ஒரு நடமாடும் தெய்வம். இன்றைக்கும் நம்மிடையே இருந்து வருகிறார். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரை இறுகப் பற்றிக் கொண்டால், சரணாகதி அடைந்தால், அனைத்து விதமான வளங்களையும் பெறலாம் என்பதற்கு அவரது அத்யந்த பக்தர்களே சாட்சி!

    மகான் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு பிரச்னை என்றாலும், அவரது திருச்சந்நிதி தேடிப் போனார்கள். நோயா, திருமணத் தடையா, குழந்தைப் பேறு இல்லாமையா, வேலையின்மையா, குடும்பத்தில் குழப்பமா, கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடா... இப்படி எதுவாக இருந்தாலும் அந்த மகானின் திருச்சந்நிதிக்குச் சென்று அவரது திருமுகத்தைப் பார்த்தார்கள். கருணை பொங்கும் மகானின் திருமுகம் ஒரு கணம் சம்பந்தப்பட்டவரைக் கவனித்து விட்டாலே போதும்... அத்தனையும் பறந்து விடும்.

    மகா பெரியவாளை நெருங்கிப் பேச வேண்டும்... நம் துயரை அவரிடம் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நமக்கும் மேலே இருக்கிற பரம்பொருளுக்கு நாம் யார் என்பது தெரியும். எதற்காக வந்திருக்கிறோம் என்பதும் புரியும். தெய்வத்திடம் குறைகளைச் சொன்னால்தான் தீர்வு என்றில்லை. மனமுருகி தெய்வத் திருவடிவைக் கண் கலங்க தரிசித்துக் கொண்டிருந்தாலே போதும். தெய்வம் புரிந்து கொண்டு எதைத் தேடி வந்திருக்கிறோமோ, அதை அருளி விடும். அதுபோல்தான் நடமாடும் தெய்வம் மகா பெரியவா.

    இவரது சந்நிதிக்குப் போன பலர், தங்களின் குறைகளைச் சொல்லாமலே அடுத்த ஒரு சில தினங்களுக்குள் அவை அகலப் பெற்றிருக்கிறார்கள். உண்மையான குரு பக்திக்கு இதை விட என்ன சொல்ல முடியும்!

    நம் கண்களுக்குத் தெரியாத ரூபத்தில் மகான்கள் இன்றைக்கும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் பக்தர்களின் துயர்களை அவர்கள் துடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அசைக்க முடியாத பக்திதான் அனைத்தையும் பெற்றுத் தரும். அத்தகைய பக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும்.

    சூரியன், சந்திரன் உள்ளவரை மகா பெரியவா இருந்து கொண்டிருப்பார். குறையா? குழப்பமா? அவரது திருவுருவுக்கு முன்னால் நின்று கொண்டு மனமாரப் பிரார்த்தனை செய்தாலே போதும்... எல்லாப் பிரச்னையும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இது அனுபவப்பட்ட பக்தர்களின் ஸ்டேட்மெண்ட்.

    மகா பெரியவா பற்றிப் பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் பலரும் தங்களது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் சொல்லக் கூடிய நிகழ்வுகள், கிடைத்தற்கரிய பழைய பேப்பர் கட்டிங்குகள் - இப்படித்தான் சம்பவங்கள் எழுத்தாக உருப் பெற்றன. மகான் குறித்தான அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட எத்தனையோ நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

    உலகின் எந்த ஒரு மூலைக்குப் பயணித்தாலும், மகா பெரியவாளைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அங்கே சில குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி என்றால், அந்த மகானது அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான பக்தகோடிகள் உலகம் முழுக்கப் பரவி வாழ்ந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    காஞ்சி மகானது கருணையும், கடைக்கண் பார்வையும் அனைவர் மீதும் பதிந்து, வளம் பல பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி.சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. அடையாறு தம்பதியால் கிடைத்த ஆனந்தம்

    மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் நாராயணசாமி. அவருடைய மனைவி லட்சுமி அம்மாள். இருவருக்கும் குருவருளும் தெய்வ அருளும் நிரம்பவே கூடி இருந்தது.

    ஆனால், பொருளாதாரத்தில் அத்தனை கூடவில்லை. அதனால், இருவரும் எந்த ஒரு காலத்திலும் வருத்தப்பட்டதே இல்லை. 'என்ன கிடைக்கிறதோ, அதைக் கொண்டு வாழ வேண்டும்' என்பதில் இருவருமே ஒரே கருத்தோடு காணப்பட்டார்கள்.

    லட்சுமி அம்மாளுக்கு ஒரு கலை அற்புதமாக வாய்த்திருந்தது. என்ன கலை தெரியுமா?

    வண்ண வண்ணப் பொடிகளைக் கொண்டு இவர் வரையக் கூடிய கோலங்கள், காண்பவர்கள் மனதை அப்படியே கவர்ந்து விடும். பெரும்பாலும் இவர் போடுகிற கோலங்கள் அனைத்தும் தெய்வத் திருவுருவங்களாகவே இருக்கும்.

    ஆதி சங்கரர், விநாயகர் மற்றும் எண்ணற்ற தெய்வ உருவங்களை அப்படியே கண்களுக்கு முன்னால் தரையில் வண்ணத்துடன் கொண்டு வந்து விடுவார். பார்த்தவுடனே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று தோன்றும்.

    ஏதேனும் விசேஷங்கள், திருவிழாக்கள் போன்றவை நடக்கின்ற இடங்களில் லட்சுமி அம்மாளின் கோலம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.

    மகா பெரியவாளைப் பல முறை நேரில் தரிசித்து, இது போன்ற கோலங்களை அவருக்கு முன்னாலேயே போட்டுக் காண்பிப்பார். தத்ரூபமாக இருக்கும் அந்தத் திருவுருவங்களைப் பார்த்து ரசித்துப் புன்னகையுடன் ஆசிர்வதிப்பார் மகான்.

    ஆன்மிக யாத்திரை செல்வதற்கு சந்தர்ப்பம் அமைவது என்பது எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் வாய்த்து விடாது.

    பணம் இருக்கும்; வசதிகள் இருக்கும். ஆனால் காசி, ராமேஸ்வரம் பக்கம் எட்டிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    அப்படி ஒரு ஆன்மிக யாத்திரை செல்லக் கூடிய வாய்ப்பு நாராயணசாமி - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு வாய்த்தது. இவர்களுடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து காசி, ராமேஸ்வரம் செல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி இருந்தார்கள்.

    அந்த உறவினர்கள் லட்சுமி அம்மாளிடம் கேட்டார்கள் - 'நீங்களும் வருகிறீர்களா?' என்று.

    கணவருடன் செல்ல வேண்டும் என்று லட்சுமி அம்மாளுக்கு ஆசை. ஆனால், பணம் வேண்டுமே... ரயில் டிக்கெட், தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, மேலும் மற்ற தேவைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

    ஒரு ஆன்மிக யாத்திரை நல்லபடியாக அமைய வேண்டுமானால், அதற்கு குருவருள் கூடி வர வேண்டும். அத்தகைய அருள் லட்சுமி அம்மாளுக்குக் கூடி வந்தது. அருள் வந்து என்ன பண்ண... பொருள் இல்லையே?!

    யாத்திரைக்குப் புறப்பட குருவருள் கிடைக்குமா என்று காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கப் புறப்பட்டார்கள் இருவரும்.

    கோலம் போடற மாமியா? என்று மகான் குறிப்பாக அடையாளம் கண்டு கொண்டு விசாரித்தார்.

    காசி, ராமேஸ்வரம் யாத்திரைக்கான வாய்ப்பு பற்றி லட்சுமி அம்மாள் சொன்னார்.

    பெரியவா என்ன அனுக்ரஹம் பண்ணுவார் என்று தெரிந்து கொள்வதற்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி அம்மாள்.

    தம்பதி சமேதரா நன்னா போயிட்டு வாங்கோ என்று வாய் நிறைய சொல்லி, இரு திருக்கரங்களையும் உயர்த்தி ஆசி வழங்கினார் பெரியவா.

    காஞ்சி மகான் அப்படி ஆசி வழங்கியதே, காசி - ராமேஸ்வரத்தைத் தரிசித்த ஒரு திருப்தி கிடைத்து விட்டது போல் இருவரும் உணர்ந்தார்கள்.

    பெரியவாளிடம் விடை பெற்றுக் கொண்டு கணவனும் மனைவியும் ஊருக்கு வந்தார்கள்.

    மகானுடைய அருள் பரிபூரணமாகக் கிடைத்தும், எதிர்பார்த்தபடி பொருள் வரவில்லை.

    அதாவது, யாத்திரை செல்வதற்குத் தேவைப்படும் பணம் கிடைக்கவில்லை.

    காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்வதற்கு உண்டான வாய்ப்பு தனக்கும் தன் கணவர் நாராயணசாமிக்கும் அமையாமல் போய் விடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தார் லட்சுமி அம்மாள்.

    மகா பெரியவாளின் ஆசி கிடைத்தபோது ஏகத்துக்கும் மகிழ்ந்து போனார். யாத்திரை கூடி விடும் என்று நெகிழ்ந்தார்.

    ஆனால், யாத்திரை செல்வதற்கு உண்டான பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரவில்லையே என்று விரக்தியானார்.

    ஆனால், காசி யாத்திரைக்குத் தன் ஆசியை வழங்கிய மகான், லட்சுமி அம்மாளை அப்படியே தவிக்க விட்டு விடுவாரா என்ன?

    யாத்திரையில் கலந்து கொள்கிறேனா, இல்லையா என்பது பற்றி உறவினர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாளும் நெருங்கியது.

    'யாத்திரைக்கு நீங்கள் இருவரும் வரவில்லையா?' என்று கேட்டால், என்ன பதில் சொல்வது? போக வேண்டும் என்று மனம் முழுக்க ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு உண்டான பணம் கிடைக்கவில்லை.

    ஏதேனும் ஒரு விதத்தில் மகா பெரியவாளே இந்தப் பண விஷயத்திலும் தனக்கு அருள மாட்டாரா என்கிற ஆசையும் லட்சுமி அம்மாள் மனதில் இருந்தது.

    அன்றைய தினம் பகல் வேளையில் லட்சுமி அம்மாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது - சென்னை அடையாறில் வசிக்கக் கூடிய ஒருவரிடம் இருந்து.

    'யாராக இருக்கும்?' என்று கடிதத்தைப் பிரித்துப் படித்தால் - ஆச்சரியத்திலும் பிரமிப்பிலும் கண்கள் குளமாகின. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளைப் படித்து விட்டு, மீண்டும் மீண்டும் படித்து உறுதி செய்து கொண்டார்.

    கடிதத்தில் இருந்த விஷயத்தின் சாரம் இதுதான் -

    'தாங்களும் தங்கள் கணவரும் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்வதற்கு உண்டான பொருளுதவிகளை நாங்கள் செய்கிறோம். பயணத்துக்கு, தங்குவதற்கு மற்றும் அனைத்து செலவினங்களுக்கும் என்ன தொகை என்று கணக்கிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு வரவும். வருகிறபோது மறக்காமல் இந்தக் கடிதத்தையும் கொண்டு வரவும். தொகையைப் பெற்றுச் செல்லவும்' என்று மிகவும் தன்மையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    'எப்படி? இது எப்படி சாத்தியம்? முன் பின் தெரியாத ஒருவர், நமக்குக் கடிதம் எழுதி, உங்கள் யாத்திரைக்குத் தேவையான மொத்த பணத்தையும் கொடுக்கிறேன்... வந்து பெற்றுக் கொள்ளவும் என்று எப்படி எழுதுவார்கள்?' - இப்படி சிந்தித்து ஏகத்துக்கும் நெகிழ்ந்து போய் விட்டார் லட்சுமி அம்மாள்.

    ஆனால், இப்படிப்பட்ட ஒரு கடிதம் தன் முகவரி தேடி வருவதற்குக் காரணம் - காஞ்சி மகா பெரியவாதான் என்பது அடையாறில் இருக்கிற அந்த இல்லத்துக்குப் போன பின்தான் லட்சுமி அம்மாளுக்குத் தெரிந்தது.

    லட்சுமி அம்மாள் குறிப்பிட்ட முழுப் பணத்தையும் இவர்களிடம் கொடுத்த பின் அடையாற்றில் இருக்கக் கூடிய தம்பதியர் சொன்னார்கள்: 'நாங்கள் மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிக்குப் போயிருந்தோம். அப்போது அவர்தான் உங்களைப் பற்றிச் சொல்லி இந்த வாய்ப்பையும் எங்களுக்கு வழங்கி இருந்தார். இத்தகைய நல்ல சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும், இதற்குக் காரணமாக அமைந்த மகா பெரியவாளுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். தங்களது காசி, ராமேஸ்வரம் யாத்திரை மகா பெரியவா கிருபையால் சிறப்பாக அமையும். நல்லபடியாகப் போய் வாருங்கள்.'

    - அடையாறு தம்பதியர் இப்படிப் பரவசத்துடன் சொன்னபோது அவர்களை வாழ்த்துவதா, வணங்குவதா என்பது லட்சுமி அம்மாளுக்கும், அவரது கணவர் நாராயணசாமிக்கும் புரியவில்லை.

    ஒரு மஞ்சள் பையில் போட்டு அவர்கள் தந்த பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

    இரு கரங்களையும் கூப்பி கண்ணீருடன் விடை பெற்றனர். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

    எல்லோரிடமும் பொருள் இருப்பதில்லை. அதே சமயம் பொருள் வைத்திருக்கின்ற எல்லோருக்கும் 'கொடுக்க வேண்டும்' என்கிற மனம் இருப்பதில்லை.

    ஆனால், பொருளும் மனமும் சேர்ந்து இருக்கின்ற அடையாறு தம்பதியர் போன்ற நல்ல உள்ளங்களுக்கு மகா பெரியவா ஒரு வாய்ப்பு வழங்கி, அதை இல்லாதவர்களுக்கு அவர்களின் கையாலே சேர்க்க வைத்திருக்கிறார்.

    அத்தகைய அனுபவங்களில் இது ஒரு சாம்பிள்தான்!

    2. முன்னாடியே கிடைத்த கண்ணாடி தரிசனம்

    அவர் ஒரு வழக்கறிஞர். பெயர் - ராஜகோபாலன்.

    பக்தியிலும், வழிபாடுகளிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். எல்லாவற்றையும் தாண்டி காஞ்சி மகா பெரியவாளிடம் அதீத பக்தி.

    நித்தமும் பூஜை செய்த பிறகுதான், நீதிமன்றத்துக்குப் புறப்படுவார். அதுவும் புறப்படுகிறபோது பிரத்யேகமாக பூஜையறைக்குச் சென்று மகா பெரியவா திருவுருவப் படத்தைத் தொட்டுப் பிரார்த்தித்த பின்தான் கிளம்புவார்.

    ஒரு பவுர்ணமி தினத்தன்று இரவு தன் இல்லத்தில் அம்பாளை வணங்கும் விதமாக 'பவுர்ணமி பூஜை' நடத்தினார் வக்கீல் ராஜகோபாலன்.

    எந்த ஒரு பூஜை நடத்தினாலும், அதில் மகா பெரியவாளுக்கும் ஒரு பிரதான இடம் கொடுப்பது வக்கீலின் வழக்கம். அதன்படி அவரது உருவப் படமும் பூஜையில் காணப்படும். பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சிப்பது போல், மகா பெரியவா திருவுருவப் படத்துக்கும் அர்ச்சிப்பார்.

    அது போல் அன்றைய தினம் பவுர்ணமி வழிபாடுகளை முடித்தார். அன்றைக்கு ஏக மகிழ்ச்சி. மகா பெரியவாளின் குருவருள் பிரத்யேகமாகத் தனக்குக் கிடைத்தது போல் ஆனந்தப்பட்டார்.

    மகா பெரியவாளுக்கு பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பின் பிரசாதம் சாப்பிட்டார். உறங்கச் சென்றார்.

    எந்த சிந்தனையுடன் இரவு படுக்கச் செல்கிறோமோ, அத்தகைய சிந்தனைகளே நல்ல கனவுகளாக மாறும். எனவேதான் படுக்கப் போகும்போது நல்ல எண்ணங்களுடன் உறங்க வேண்டும். கவலைகளை அப்போது மனதில் சுமந்திருக்கக் கூடாது.

    மகா பெரியவாளை மனதார நினைத்துக் கொண்டு அவருக்கு நமஸ்காரம் செய்து படுத்தார் அல்லவா, வக்கீல் ராஜகோபாலன்?

    இதன் பலன் - இரவு கனவில் மகா பெரியவா வந்தார்.

    சாதாரணமாக வரவில்லை.

    சற்றே வித்தியாசமான தோற்றம்.

    தோற்றம் மட்டுமல்ல... அந்த சூழ்நிலையும் வித்தியாசமாகக் காணப்பட்டது.

    கனவில் கண்ட திருக்காட்சி ராஜகோபாலனின் மனதில் இருந்து அகலவே இல்லை. அந்தக் கனவில் - மகா பெரியவாளுடைய முகமும் தேகமும் ஒரு பூர்ண நிலவாக ஜொலித்தது. மகானிடமும் மகானைச் சுற்றிலும் அப்படி ஒரு ஒளி வெள்ளம்!

    பவுர்ணமி தினம் அல்லவா? முழு நிலவில் காணப்படுகிற பிரகாசமும் ஜ்வலிப்பும் மகா பெரியவா திருமுகத்தில் தென்பட்டதோ, என்னவோ!

    அந்தத் திருமுகத்தை ஆனந்தத்துடன் தரிசிக்கின்றபோது ராஜகோபாலனின் உடலும் உள்ளமும் பரவசத்தின் காரணமாக சிலிர்த்தது. தன்னை அறியாமல் இரு கரங்களையும் கூப்பி வணங்கினார்.

    வக்கீல் வணங்கிக் கொண்டிருக்கிறபோது மகா பெரியவாளின் பூர்ண சந்திர திருமுகத்தில் இருந்து ஒரு புன்னகை பிறந்தது.

    மகா பெரியவா... மகா பெரியவா... என்று ஆர்ப்பரித்து அவரது திருப்பாதங்களைப் பணிந்து நமஸ்கரித்தார்.

    பூலோக ஜீவன்களின் பாவங்களைப் போக்கக் கூடிய அந்த மகானின் திருப்பாத தரிசனம் இத்தனை அருகில் கிடைத்த மறுகணம் வக்கீலின் உடலில் ஒரு மின்சாரம் 'கிர்ர்'ரென்று பாய்வது போல் உணர்ந்தார். புது உத்வேகம் அவரைத் தொற்றிக் கொண்டது. அவரையும் அறியாமல், கண்களில் இருந்து கசிந்த நீர்த் துளிகள் தரையில் விழுந்தன.

    மகா பெரியவாளை நமஸ்கரித்த கோலத்தில் பரவசத்துடன் காணப்பட்டவர், தன் அருகே தென்படும் அந்த மகானின் திருப்பாதங்களை வெகு தீர்க்கமாக தரிசித்தார்.

    எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் இந்தத் தரிசனம் கிடைத்து விடுமா?

    பஞ்சின் மென்மையுடன் காணப்படும் அந்த பிஞ்சு வெள்ளைப் பாதங்களை இரு கைகளாலும் பற்றிக் கொள்ள வேண்டும் என்று ராஜகோபாலனின் கைகளும் மனமும் பரபரத்தது. ஆனால், மகான்களின் திருப்பாதங்களை மானுடர்கள் தொடக் கூடாது என்கிற நியதியின் காரணமாக அந்த எண்ணத்தை அறவே துறந்தார்.

    பெரியவாளின் திருப்பாத

    Enjoying the preview?
    Page 1 of 1