Maha Periyavaa - Part 8
()
About this ebook
ஆம்! காஞ்சி மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்த பக்தர்கள் அனைவரும் சாட்சாத் சர்வேஸ்வரனையே கண்களுக்கு நேராகத் தரிசித்தவர்கள். அப்படி என்றால், மகா பெரியவாளை நேரில் தரிசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது! அந்த மகானை இன்றைக்கு நினைத்தாலும், மறைமுகமாக வந்து அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நாம் அனைவருமே பாக்கியசாலிகள்தான்.
அந்த வகையில் நானும் பாக்கியசாலிதான்.
ஆம்! என் நினைவுக்குத் தெரிந்து மகா பெரியவாளைத் தரிசித்ததில்லை.
முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ, என்னவோ... இன்று அவரைப் பற்றிப் பேசவும் எழுதவும் பேறு கிடைத்திருக்கிறது.
கலியுக தெய்வம், நடமாடும் தெய்வம், கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் இன்றைக்குப் பக்தர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுபவர் காஞ்சி மகா பெரியவா.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய வரிசையில் முதலிடத்திலும் (மாதா), மூன்றாம் இடத்திலும் (குரு) இருக்கிறவர்கள் கொட்டிக் கொடுக்கிறவர்கள்.
ஒரு குழந்தை தன் தாயிடம் என்ன கேட்டாலும், அன்பின் மிகுதியால் கொடுத்தே விடுவாள். கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாலும், தன் குழந்தை மேல் இருக்கிற வாஞ்சையும் கருணையும் கொடுக்க வைத்து விடும்.
அதுபோல்தான் நாம் வணங்குகிற குருவும். ஒரு குரு மகானின் சந்நிதிக்குச் சென்று அவரிடம் எதை வேண்டிப் பிரார்த்தித்தாலும், தகுதிக்கு உட்பட்டது என்றால், நிச்சயம் தந்து அருளி விடுவார் அவர்.
எனவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடிய குரு பக்தியானது உயர்ந்த பக்தியாகப் போற்றப்படுகிறது.
அப்படி நாம் அனைவரும் கேட்டனவற்றை, வேண்டியவற்றை, பிரார்த்தித்தவற்றை உடனுக்குடன் அருளக் கூடிய - ஒப்பற்ற குருவாக இன்றைக்கும் விளங்கி வருகிறவர் காஞ்சி மகா பெரியவா.
தன்னை நம்பி வந்து, தனது திருப்பாதங்களில் சரண் புகுகிற பக்தனை எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியதில்லை மகா பெரியவா. ஒருவேளை பக்தன் கேட்டது உடனுக்குடன் கிடைக்கவில்லை என்றால், அவனது பக்தியில் போதிய வலிமை இல்லை என்று பொருள்.
ஷீர்டி பாபா, புட்டபர்த்தி சத்யபாபா போன்ற மகான்களின் வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் உலகெங்கும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
எண்ணற்ற யாத்திரைகள் செய்து, பக்தர்களுக்கு நல்வழிகளை உபதேசிப்பதுதான் சந்நியாச தர்மம். அதன்படி பாரத தேசத்தின் பெரும்பாலான ஊர்களில் யாத்திரை செய்து அவர்களுக்கெல்லாம் தன் இன்னருளை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா.
காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலோ, அல்லது தான் தங்கி இருக்கிற முகாமிலோ நித்தமும் ஸ்ரீசந்திரமவுளீஸ்வர பூஜையை நடத்துவார் மகா பெரியவா.
காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீசந்திரமவுளீஸ்வரர்.
ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.
இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமவுளீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.
மனதுக்குள் மகானைப் பரிபூரணமாகக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான்.
‘மகா பெரியவா சரணம்’ என்றோ, ‘ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர’ என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!
Read more from P. Swaminathan
Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsSathuragiri Rating: 3 out of 5 stars3/5Pandaripurathu Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan (Yogi Ramsuratkumar) Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Saathikkalam Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsParvathamalai Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Dharisanam Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maha Periyavaa - Part 8
Related ebooks
Maha Periyavaa - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsKerala Koyilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Dharisanam Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Tips Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsPalan Tharum Eliya Parigarangal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPira Maanila Apoorva Koyilgal! Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Thantha Nava Tirupathiyum, Nava Kailasamum Rating: 0 out of 5 stars0 ratingsKoyil Ula Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsManangavar Paadalgal 108 – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanchi Thalaivan Karunai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsMaharashtra Maanilathin 108 Punitha Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsValam Tharum Virathangal Rating: 0 out of 5 stars0 ratingsPalan Tharum Parigara Koyilgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnugraham Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMoorthi – Thalam – Theertham Rating: 0 out of 5 stars0 ratingsSiddhargalin Sorga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSri Varahi Malai Rating: 0 out of 5 stars0 ratingsMagale Unakkaga Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maha Periyavaa - Part 8
0 ratings0 reviews
Book preview
Maha Periyavaa - Part 8 - P. Swaminathan
http://www.pustaka.co.in
மகா பெரியவா – தொகுதி 8
Maha Periyavaa - Part 8
Author:
பி. சுவாமிநாதன்
P. Swaminathan
For more books
http://www.pustaka.co.in/home/author/p-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. மகா பெரியவாளும் தேனுபுரீஸ்வரரும்
2. அள்ளி அள்ளித் தந்த குங்குமம்
3. பசுக்கள் மீது பரிவு
4. 'இக்கட ரா... இக்கட ரா...'
5. இத்தாலி மாளிகையில் பெரியவா
6. நெல்பொரிக்குக் கிடைத்த யோகம்
7. வியாதி தீர்த்த வில்வ மாலை
8. நோயாளிகளைத் தேடி பிரசாதம்
9. மயிலை கற்பகாம்பாள் மகிமை
10. பெரியவாளுக்குப் புது கார்
11. எல்.ஐ.சி-யில் எத்தனை மாடி?
12. 'நல்லெண்ணெய் தேச்சுக் குளி'
13. பெண்மையைப் போற்றும் மகா பெரியவா
14. எங்கே இருக்கிறது ஆனந்தம்?
மகா பெரியவா - தொகுதி 8
'செந்தமிழ்க் கலாநிதி'
'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'
பி. சுவாமிநாதன்
என்னுரை
இந்தக் கலியுகத்தில் தெய்வத்தை நேருக்கு நேர் தரிசிக்கக் கூடிய பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?
என்று காஞ்சி மகா பெரியவாளை நேரில் தரிசித்த பக்தர்களிடம் கேட்டால், ஆமாம்... அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மகா பெரியவா திருவடிவத்தில் தெய்வத்தைத் தரிசித்திருக்கிறோம்
என்பார்கள், உணர்ச்சிவசப்பட்டு.
ஆம்! காஞ்சி மகா பெரியவாளை நேருக்கு நேர் தரிசித்த பக்தர்கள் அனைவரும் சாட்சாத் சர்வேஸ்வரனையே கண்களுக்கு நேராகத் தரிசித்தவர்கள். அப்படி என்றால், மகா பெரியவாளை நேரில் தரிசிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று பொருள் கொள்ளக் கூடாது! அந்த மகானை இன்றைக்கு நினைத்தாலும், மறைமுகமாக வந்து அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நாம் அனைவருமே பாக்கியசாலிகள்தான்.
அந்த வகையில் நானும் பாக்கியசாலிதான்.
ஆம்! என் நினைவுக்குத் தெரிந்து மகா பெரியவாளைத் தரிசித்ததில்லை.
முன்ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேனோ, என்னவோ... இன்று அவரைப் பற்றிப் பேசவும் எழுதவும் பேறு கிடைத்திருக்கிறது.
கலியுக தெய்வம், நடமாடும் தெய்வம், கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் இன்றைக்குப் பக்தர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுபவர் காஞ்சி மகா பெரியவா.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லப்படக் கூடிய வரிசையில் முதலிடத்திலும் (மாதா), மூன்றாம் இடத்திலும் (குரு) இருக்கிறவர்கள் கொட்டிக் கொடுக்கிறவர்கள்.
ஒரு குழந்தை தன் தாயிடம் என்ன கேட்டாலும், அன்பின் மிகுதியால் கொடுத்தே விடுவாள். கொடுக்க வேண்டாம் என்று அவள் நினைத்தாலும், தன் குழந்தை மேல் இருக்கிற வாஞ்சையும் கருணையும் கொடுக்க வைத்து விடும்.
அதுபோல்தான் நாம் வணங்குகிற குருவும். ஒரு குரு மகானின் சந்நிதிக்குச் சென்று அவரிடம் எதை வேண்டிப் பிரார்த்தித்தாலும், தகுதிக்கு உட்பட்டது என்றால், நிச்சயம் தந்து அருளி விடுவார் அவர்.
எனவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கக் கூடிய குரு பக்தியானது உயர்ந்த பக்தியாகப் போற்றப்படுகிறது.
அப்படி நாம் அனைவரும் கேட்டனவற்றை, வேண்டியவற்றை, பிரார்த்தித்தவற்றை உடனுக்குடன் அருளக் கூடிய - ஒப்பற்ற குருவாக இன்றைக்கும் விளங்கி வருகிறவர் காஞ்சி மகா பெரியவா.
தன்னை நம்பி வந்து, தனது திருப்பாதங்களில் சரண் புகுகிற பக்தனை எந்த ஒரு காலத்திலும் ஏமாற்றியதில்லை மகா பெரியவா. ஒருவேளை பக்தன் கேட்டது உடனுக்குடன் கிடைக்கவில்லை என்றால், அவனது பக்தியில் போதிய வலிமை இல்லை என்று பொருள்.
ஷீர்டி பாபா, புட்டபர்த்தி சத்யபாபா போன்ற மகான்களின் வழிபாடு இன்றைக்கு உலகெங்கும் இருந்து வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் உலகெங்கும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
எண்ணற்ற யாத்திரைகள் செய்து, பக்தர்களுக்கு நல்வழிகளை உபதேசிப்பதுதான் சந்நியாச தர்மம். அதன்படி பாரத தேசத்தின் பெரும்பாலான ஊர்களில் யாத்திரை செய்து அவர்களுக்கெல்லாம் தன் இன்னருளை வழங்கி இருக்கிறார் மகா பெரியவா.
காஞ்சி ஸ்ரீசங்கர மடத்திலோ, அல்லது தான் தங்கி இருக்கிற முகாமிலோ நித்தமும் ஸ்ரீசந்திரமவுளீஸ்வர பூஜையை நடத்துவார் மகா பெரியவா.
காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆச்சார்யர்களாக இருக்கிற பீடாதிபதிகள் நித்தமும் இரு வேளைகளில் சிவ சொரூபமாக விளங்குகிற இந்த ஸ்படிக லிங்கத்துக்கு பூஜை நடத்த வேண்டும். ஆதி சங்கரர் கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஸ்படிக லிங்கங்களுள் ஒன்றுதான் இந்த ஸ்ரீசந்திரமவுளீஸ்வரர்.
ஆத்மார்த்தமாக இந்த சிவலிங்க பூஜையை மகா பெரியவா தினமும் நிகழ்த்தும்போது, சாட்சாத் சிவபெருமான் தனக்குத் தானே பூஜையை செய்து கொள்வது போல் இருக்கும் என்று அவரது பக்தகோடிகள் சொல்வார்கள்.
இன்றைக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு செல்கிற பக்தகோடிகள் உள்ளே நுழைந்ததும், அங்கிருக்கிற பிரமாண்டமான பூஜை மண்டபத்தில் இந்த சந்திரமவுளீஸ்வரரைத் தரிசிக்க முடியும்.
மனதுக்குள் மகானைப் பரிபூரணமாகக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், உங்கள் உதடுகள் அசைவதே ஒரு மந்திரம்தான்.
'மகா பெரியவா சரணம்' என்றோ, 'ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர' என்கிற நாமத்தையோ எவ்வளவு முடியுமோ சொல்லுங்கள்! குறைந்த பட்சம் 108 சொல்ல முயற்சியுங்கள்!
அவருக்கு நிவேதனமாக உங்களால் முடிந்ததை வீட்டு பூஜையறையில் சமர்ப்பியுங்கள். மலை வாழைப்பழம், விளாம்பழம், திரட்டுப் பால் (பால்கோவா), சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி, நாட்டுச் சர்க்கரை கலந்த அவல், நெல்பொரி - இவை எல்லாம் அந்த மகானுக்கு நிவேதனம் செய்ய உகந்தவை.
கண் கண்ட தெய்வமாக - கலியுக தெய்வமாக காலாகாலத்துக்கும் விளங்கி, தன்னை நம்பிச் சரண் புகுந்த பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து வருகிறார் மகா பெரியவா.
காஞ்சி மகானைப் பற்றி தற்போது க்ஷிமிமி மற்றும் க்ஷிமிமிமி ஆகிய இரு தொகுதிகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகின்றன.
'மாலை மலர்' நாளிதழில் வெளியானவையே இந்தத் தொகுப்பு. ஒரு சில கட்டுரைகள் 'ராணி', 'தினத் தந்தி' இதழ்களில் வெளியானவை. இத்தகைய நல்வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'பெண்மையைப் போற்றும் மகா பெரியவா' என்ற மினி தொடரை 'மங்கையர் மலர்' இதழில் எழுதினேன். அந்தக் கட்டுரைகளும் இந்த நூல்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மகா பெரியவா அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த மகானின் திருவடிகளைப் பணிகின்றேன்.
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
98401 42031
email: swami1964@gmail.com
https://www.facebook.com/swami1964
http://pswaminathan.in
1. மகா பெரியவாளும் தேனுபுரீஸ்வரரும்
சந்நியாசிகள் பெரும்பாலும் யாத்திரை செய்து கொண்டே இருப்பார்கள். ஓரிடத்தில் வெகு காலத்துக்குத் தங்க மாட்டார்கள். இப்படிப் பல இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆலயங்களைத் தரிசிப்பார்கள். ஊர் மக்களுக்கு பக்தியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பார்கள். குருவருளோடு திருவருளும் ஊர் ஜனங்களுக்குக் கிடைக்க மகான்கள் ஆசிர்வதிப்பார்கள்.
காஞ்சி மகா பெரியவா துறவறம் ஏற்ற காலத்தில் இருந்து தன் இறுதிக் காலம் வரை (கடைசி பத்து வருடங்கள் மட்டும் காஞ்சி ஸ்ரீமடத்திலேயே தங்கி இருந்தார்) பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு யாத்திரை சென்றார்.
சென்னை மாநகரத்துக்கு மகா பெரியவா பல முறை வந்திருக்கிறார். சென்னையின் பல ஊர்களில் சந்து பொந்து விடாமல் பெரியவா சுற்றிப் பார்த்த காலமும் உண்டு.
அப்படி சென்னையில் யாத்திரை செல்லும்போது சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள தொன்மையான ஆலயங்களின் சிறப்புகளைப் பற்றி உடன் வரும் உள்ளூர் அன்பர்களிடம் எடுத்துச் சொல்வார். 'இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆலயத்துக்கு உள்ளூர் மக்களான நீங்கள் அனைவரும் சேர்ந்து திருப்பணிகளை நடத்தி குடமுழுக்கும் செய்ய வேண்டும்' என்று விளக்கிச் சொல்வார்.
யாத்திரையின்போது மகா பெரியவா ஊர் மக்களுக்கு இப்படி எடுத்துச் சொல்கின்ற கோயில்கள் பன்னெடுங் காலத்துக்கு முன் வழிபாட்டில் இருந்து, சமீப காலத்தில் வழிபாடுகள் அறவே நின்று போன கோயிலாகவும் இருக்கலாம். அல்லது இப்படி ஒரு தெய்வம் நம்மூரில் குடி கொண்டிருக்கிறது என்கிற தகவலே அந்த ஊர் மக்களுக்குத் தெரியாத கோயிலாகவும் இருக்கலாம்.
முன்னொரு காலத்தில் வழிபாட்டில் இருந்த ஆலயங்களை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வருவது என்பதெல்லாம் மகான்களின் ஞான திருஷ்டியால் விளைவது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை திருநாராயணர் ஆலயத்தை ஸ்ரீமத் ராமானுஜர்தான் கண்டுபிடித்து வழிபாட்டுக் கொண்டு வந்தார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் திருப்போரூர் முருகப் பெருமான் ஆலயத்தை ஸ்ரீசிதம்பர சுவாமிகள் கண்டுபிடித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் மகா பெரியவா ஒரு முறை பக்தகோடிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் தென்பட்ட மலை ஒன்றை அண்ணாந்து பார்த்திருக்கிறார்.
கண்களை மூடி ஒரு சில விநாடிகளுக்கு அப்படியே நின்றிருக்கிறார். உடன் வந்த உள்ளூர் பக்தகோடிகளும் என்ன ஏதென்று புரியாமல் அந்த மலையையே பார்த்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களை நோக்கி, "இந்த