Maha Periyavaa - Part 6
()
About this ebook
‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே அல்லது ஒரு மகானின் திருச்சந்நிதிக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.
காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.
ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வம்.
ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்’ என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!’ என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.
‘ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்’ என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் மகா பெரியவா ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.
Read more from P. Swaminathan
Vainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsSathuragiri Rating: 3 out of 5 stars3/5Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsPandaripurathu Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan (Yogi Ramsuratkumar) Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Rating: 0 out of 5 stars0 ratingsParvathamalai Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Dharisanam Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Saathikkalam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 8 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maha Periyavaa - Part 6
Related ebooks
Maha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thottu Vidum Thooram Thaan Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Gnaniyarin Kutti Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Oru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsThiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Sakthi Rating: 5 out of 5 stars5/5Manthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsEnge En Kannan Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Athisayam! Rating: 5 out of 5 stars5/5Vaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Gnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsAarambaththil Appadiththaan Rating: 5 out of 5 stars5/5Puyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsKaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Sorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maha Periyavaa - Part 6
0 ratings0 reviews
Book preview
Maha Periyavaa - Part 6 - P. Swaminathan
http://www.pustaka.co.in
மகா பெரியவா – தொகுதி 6
Maha Periyavaa - Part 6
Author:
பி. சுவாமிநாதன்
P. Swaminathan
For more books
http://www.pustaka.co.in/home/author/p-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. 'இந்த லெட்டரை நீ படிச்சுடாத...'
2. பக்கவாதத்தைப் பார்வையால் விரட்டினார்
3. திருமணத்துக்கு அருளிய திருமாங்கல்யம்
4. தேடி வந்த திருப்பாதுகைகள்
5. கல்கத்தா பால்காரருக்கு அனுக்ரஹம்
6. 'எனக்காக ஸ்வாமிகிட்ட வேண்டினியோ?!'
7. ஒரு ரூபாய் சாதித்த அதிசயம்
8. 'ஒரு மூட்டை அரிசி தருவியா?'
9. அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல்
10. 'லலிதாவை லல்லின்னு கூப்பிடாதே...'
11. 'எனக்கு ஒரு குதிரை வேணும்...'
12. கேட்டு வாங்கிய சொர்ண பிட்சை
13. விஷ்ணு சஹஸ்ரநாம விசேஷம்
14. குறையைப் போக்கிய குருபார்வை
15. 'ஆவி'யால் வந்த அவஸ்தை
16. மடத்து சமையலுக்கு முருங்கையா?
மகா பெரியவா - தொகுதி 6
'செந்தமிழ்க் கலாநிதி'
'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'
பி. சுவாமிநாதன்
என்னுரை
பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்.
'அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே அல்லது ஒரு மகானின் திருச்சந்நிதிக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.
காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.
ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வம்.
ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், 'இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்' என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், 'இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!' என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.
'ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்' என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் மகா பெரியவா ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.
'மகா பெரியவா தொகுதி VI' இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்குக் காரணம் - 'மாலை மலர்' நாளிதழ். இந்த அனுபவங்கள் அனைத்தும் 'மகா பெரியவர்' என்ற தலைப்பில் அதில் வெளிவந்தன. இத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன் (இந்தத் தொடர் தற்போதும் வெளி வந்து கொண்டிருக்கிறது).
இந்தத் தொடரின் வெற்றிக்கு உழைத்த என் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளை மிக்கப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
98401 42031
email: swami1964@gmail.com
https://www.facebook.com/swami1964
http://pswaminathan.in
1. 'இந்த லெட்டரை நீ படிச்சுடாத...'
காஞ்சி மகா பெரியவா பிறந்தது விழுப்புரம் நகரத்தில். 1894-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி விழுப்புரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அவதரித்தார்.
மகா பெரியவா பிறந்த அந்த இல்லம், இன்றைக்கு ஒரு திருக்கோயிலாக விளங்கி வருகிறது. பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய புனிதமான இடம்.
இதே விழுப்புரத்தில் மகா பெரியவா சிறுவனாக இருந்தபோது அவருடன் பழகிய நண்பர்கள் அதிகம். அப்படிப்பட்ட நண்பர்களுள் தியாகி எஸ். சிதம்பரம் ஐயரும் ஒருவர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ-வும்கூட.
சிறு வயதில் மகா பெரியவாளும் சிதம்பரம் ஐயரும் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள்.
இதெல்லாம் தங்கள் குடும்பத்துக்கு எப்பேர்ப்பட்ட பேறு என்று சிதம்பரம் ஐயரின் குடும்பத்தினர் இன்றைக்கும் நினைத்து நினைத்து ஆனந்தப்படுகின்றனர்.
தன்னை தரிசிக்க சிதம்பரம் ஐயர் எப்போது வந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் அமர்ந்து பேசி பழைய நாட்களை மகா பெரியவா நினைவு கூர்வாராம்.
சிதம்பரம் ஐயரின் மகன் வீரராகவ ஐயர். இவர் வக்கீல் தொழிலில் இருந்தார். ருக்மணி இவருக்கு மனைவியாக அமைந்தார். இவர்களுடைய மகன் விழுப்புரம் ரவி பாகவதர் என்கிற சூரியநாராயணன் (இனி இவரை சூரி என்றே பார்ப்போம்).
1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் சூரியின் தகப்பனார் வக்கீல் வீரராகவ ஐயர் சிவலோகப்ராப்தி அடைந்தார். 'ஏகாதசி மரணம்... துவாதசி தகனம்' என்பது விசேஷம். வக்கீல் வீரராகவ ஐயர், மகா பெரியவா பக்தியில் திளைத்துக் காலம் கழித்ததால், அவருக்கு இத்தகைய பாக்கியம் கடைசி காலத்தில் கிடைத்தது.
வீரராகவ ஐயருக்கு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் முறையாக செய்யப்பட்டன. தவிர, ஒரு வருடம் வரை மாதா மாதம் செய்ய வேண்டிய வைதீகக் காரியங்களும் செய்யப்பட்டன.
ஒரு வருடம் ஆனவுடன் வீரராகவ ஐயருக்கு வருஷாப்தீகமும் (தலை திவசம்) முடிந்தது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் விழுப்புரம் சூரியின் இல்லத்தில் பகல் வேளை... மகன் சூரியை அழைத்த ருக்மணி, ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். 'இதென்ன கடிதம்' என்று குழம்பியபடி தாயாரை சூரி பார்க்க... ருக்மணி விளக்கம் தரலானார். டேய் சூரி... நான் உங்கிட்ட குடுத்த இந்த லெட்டரை எடுத்துண்டு காஞ்சிபுரம் மடத்துக்குப் போ. அங்கே மகா பெரியவாகிட்ட இந்த லெட்டரை நான் குடுத்ததா சொல்லிக் குடு. அவர் இந்த லெட்டரைப் படிச்சுட்டு என்ன பதில் சொல்றாரோ, அதை அப்படியே என்கிட்ட வந்து சொல்லு
என்றார்.
ருக்மணி கூடுதலாக இட்ட ஒரு உத்தரவு - பஸ்ல போறப்ப இந்த லெட்டரை நீ பிரிச்சுப் படிச்சுடாத... அப்படியே பெரியவாகிட்ட கொண்டு போய்க் காமிக்கணும்.
சரிம்மா...
என்று சொல்லி, லெட்டருடன் காஞ்சிபுரம் கிளம்பி விட்டார். விழுப்புரத்தில் பஸ் ஏறினார்.
'விருந்து சாப்பிடும்போது மருந்தை நினைக்காதே... மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே' என்பார்கள். சாதாரணமாக நினைவு இருக்காது. ஆனால், சொன்ன பிறகு, அது நினைவுக்கு வந்து விடும்.
விருந்து சாப்பிடும்போது பயந்து கொண்டே மருந்தை நினைப்போம். மருந்து சாப்பிடும்போது குரங்கும் நினைவுக்கு வரும்.
ஒரு விஷயத்தைச் சொல்லி இதைச் செய்யாதே என்று சொன்னால், அதை செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை மனிதர்களுக்கு எழுவது வாடிக்கை.
விழுப்புரத்தில் பஸ் ஏறி, காஞ்சிபுரம் பயணித்துக் கொண்டிருந்தார் சூரி. ஒரு பையில் அம்மா தந்த லெட்டரை வைத்திருந்தார். 'ஏன் இதைப் படிக்கக் கூடாது என்று அம்மா சொன்னார்? அப்படி என்ன விஷயத்தை மகா பெரியவாளுக்கு எழுதி இருப்பார்?' என்றெல்லாம் சூரியின் மனம் யோசித்தபோது, 'பிரித்துதான் பார்த்து விடுவோமே' என்று முடிவெடுத்தார்.
பைக்குள் கை விட்டு லெட்டரை எடுத்தார். எடுக்கும்போது கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தது - 'தாயின் உத்தரவை மீறுகிறோமா?' என்று. ஆனால், அடுத்த விநாடியே 'இதில் தவறில்லை' என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். லெட்டரைப் படிக்க ஆரம்பித்தார்.
வேகமாகச் செல்லும்போது நல்ல சிலுசிலுவென்ற காற்று பஸ்ஸுக்குள் புகுந்து பயணிகளை குளுமைப்படுத்தினாலும் சூரிக்கு மட்டும் வியர்த்தது.
காரணம் - ருக்மணி எழுதிய கடிதத்தை படித்து முடித்து விட்டார்.
கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
ருக்மணி எழுதி இருந்ததன் சாரம் இதுதான் -
'எனது எஜமானர் (கணவர்) இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அவருக்கு உண்டான கர்மாக்களை நடத்த வேண்டும் என்பதற்காக நான் பொறுமையுடன் இருந்தேன். என் எஜமானர் என்னை விட்டுப் பிரிந்து சென்ற பின் நான் மட்டும் உயிர் வாழ்வது தேவை அல்ல. வாழவும் பிடிக்கவில்லை. எனவே, நடமாடும் தெய்வமாக விளங்கி வருகிற தாங்கள் காலாகாலத்தில் எனக்கு முக்தியைத் தந்து அருளுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். முக்தி எனக்குக் கிடைக்கும்வரை இடைப்பட்ட காலத்தை நான் எப்படிக் கழிக்க வேண்டும் என்பதையும் தாங்கள் சொல்லி அருள வேண்டும். நமஸ்காரங்களுடன் ருக்மணி.'
சூரியின் கண்கள் கலங்கி விட்டன. தந்தை இறந்த பின் அவரைத் தொடர்ந்து தானும் முக்தி அடைய வேண்டும் என்று கேட்டு எழுதி இருப்பது அவரது மனதை ரொம்பவே பிசைய ஆரம்பித்தது. 'ஏன் அப்பா இறந்து போனால்,