Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parvathamalai
Parvathamalai
Parvathamalai
Ebook77 pages30 minutes

Parvathamalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பர்வதமலை -
மிகக் குறுகிய நேரத்துக்குள் (அதிகபட்சம் இரண்டு மணி நேரம்) மலை ஏறி விடலாம். மலையின் உச்சியை அடைந்து விட்டால், கண்களுக்குத் தெரியும் இயற்கை அழகில் மயங்கிப் போய் விடுவோம். இந்த இயற்கை - இறைவன் தந்த கொடை.
இன்னமும் ஏராளமான சித்த புருஷர்கள் இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இல்லாவிட்டால், இத்தனை அற்புதங்களும் அதிசயங்களும் இங்கே அரங்கேறாது. எனவேதான், ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கையுடன் இந்த மலை ஏறுகிறார்கள். இறை தரிசனமும் பெறுகிறார்கள்.
இப்பேர்ப்பட்ட பர்வதமலையைப் பற்றி ‘திரிசக்தி’ இதழில் நான் எழுதிய தொடர் கட்டுரைகளே தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது.
பர்வதமலை யாத்திரை, அனைவருக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் தரும்.
இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306232
Parvathamalai

Read more from P. Swaminathan

Related to Parvathamalai

Related ebooks

Reviews for Parvathamalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parvathamalai - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    பர்வதமலை

    Parvathamalai

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இயற்கையின் கொடை

    2. பர்வதமலையைத் தரிசிக்கலாமா?

    3. பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை

    4. யார் அந்த ஜான்பாஷா?

    5. கடப்பாரை நெட்டு

    6. பூண்டி மகானும் பர்வதமலையும்

    7. காபி, டீ கொடுத்தது யார்?

    8. ஷிவராமுக்குக் கிடைத்த ஆசி

    9. மண்டபம் கட்டிய மகா அன்பர்

    10. அகத்தியர் நட்ட திரிசூலம்

    11. ஒற்றை விறகில் முழு சமையல்

    என்னுரை

    எந்த ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ, என் வாழ்க்கையில் ஏராளமான ஆலயங்களையும், ஜீவ சமாதிகளையும், புனித மலைகளையும் தரிசிக்கின்ற பேறு பெற்றேன். என்னைப் படைத்த ஆண்டவனுக்கும், என்னைப் பண்படுத்திய காஞ்சி மகா பெரியவாளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இமயமலை, சதுரகிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற புனிதமான பல மலைகளைத் தரிசித்துள்ளேன். தெய்வ தரிசனம் பெற்றுள்ளேன்.

    பழங்காலத்தில் வாழ்ந்த மகரிஷிகளும் முனிவர்களும் அமைதி வேண்டியும், இறை தரிசனம் பெற வேண்டியும் மலைகளுக்குச் சென்று தவம் இருந்தார்கள். தங்களின் தவத்துக்கு அங்கே இடையூறு ஏதும் இருக்காது என்று அவரவர்கள் வசிப்பதற்கான குடில்களையும், ஆசிரமங்களையும் கானகத்திலேயே அமைத்துக் கொண்டார்கள். அத்தகைய தவ சீலர்களின் அருளாசியும், அருளாட்சியும் இன்னமும் பல மலைகளில் இருந்து வருகிறது.

    புனிதமான இந்த மலைகளுக்குச் செல்லும்போது ஒரு புதிய உலகத்துள் நுழைந்த ஆனந்தம் ஏற்படுகிறது. வானுயர்ந்த மலைகள். நவநாகரிக வசதிகள் இல்லை. வேறு எந்த சிந்தனையும் இல்லை. இதனால்தான், இன்றைக்கும் அவ்வப்போது மலைகளுக்குப் பயணித்து நம்மை ‘ரெஃப்ரஷ்’ செய்து கொள்கிறோம். பெற முடியாத ஆனந்தத்தையும் அமைதியையும் பெறுகிறோம்.

    பர்வதமலை -

    மிகக் குறுகிய நேரத்துக்குள் (அதிகபட்சம் இரண்டு மணி நேரம்) மலை ஏறி விடலாம். மலையின் உச்சியை அடைந்து விட்டால், கண்களுக்குத் தெரியும் இயற்கை அழகில் மயங்கிப் போய் விடுவோம். இந்த இயற்கை - இறைவன் தந்த கொடை.

    இன்னமும் ஏராளமான சித்த புருஷர்கள் இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இல்லாவிட்டால், இத்தனை அற்புதங்களும் அதிசயங்களும் இங்கே அரங்கேறாது. எனவேதான், ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கையுடன் இந்த மலை ஏறுகிறார்கள். இறை தரிசனமும் பெறுகிறார்கள்.

    இப்பேர்ப்பட்ட பர்வதமலையைப் பற்றி ‘திரிசக்தி’ இதழில் நான் எழுதிய தொடர் கட்டுரைகளே தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது.

    பர்வதமலை யாத்திரை, அனைவருக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் தரும்.

    இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. இயற்கையின் கொடை

    இயற்கையின் படைப்புகள் எல்லாமே ரசிக்கத்தக்கவை. இயற்கை அருளிய மாபெரும் கொடைகளுள் ஒன்று - மலை!

    உயர்ந்தோங்கி - விண்ணை முட்டுகின்ற நிலையில் காணப்படும் மலையைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பும் வியப்பும் ஏற்படும். பஞ்சுப் பொதி போன்ற வெண்மையான - திரட்சியான மேகக் கூட்டங்கள், மலை முகட்டைத் தொட்டபடி பயணித்துச் செல்கின்ற அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

    எத்தனையோ தாவரங்கள், மூலிகைகள் மலைகளில் தானாக வளர்கின்றன. எங்கிருந்தோ பெருக்கெடுத்து ஓடி வரும் ஒரு சுனை, இந்தத் தாவரத்தை வாழ வைக்கிறது. இப்படி வளர்கின்ற தாவரங்களில் உயிரைக் கொடுக்கும் வகையும் உண்டு; உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய நச்சு வகையும் உண்டு.

    மலைகளில் மட்டும்தான் இன்றைக்கு மாசு இல்லை. மனிதன் நுழைய ஆரம்பித்தால்தானே மாசு வருகிறது?

    மலையைச் சுற்றியும் பாதை உண்டு; மலைக்கு மேலேயும் பாதை உண்டு; மலைக்குள் ஊருடுவியும் பாதை உண்டு. விஞ்ஞானம் வளர வளர, நவீன யுக்திகளைக் கொண்டு மலையைத் தன் வசிப்பிடம் ஆக்கிக் கொள்ள மனிதன் விரும்புகிறான்.

    Enjoying the preview?
    Page 1 of 1