Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 4
Maha Periyavaa - Part 4
Maha Periyavaa - Part 4
Ebook204 pages1 hour

Maha Periyavaa - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்.
‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.
காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.
ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வத்துக்கு இடம்.
ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்’ என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!’ என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.
‘ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்’ என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580138306191
Maha Periyavaa - Part 4

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 4

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 4 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 4

    Maha Periyavaa - Part 4

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. 'இந்த மாருதி ஸ்வாமி யார் தெரியுமா?'

    2. ஒற்றை பார்சல் மறைந்த மர்மம்

    3. நிதர்சனாவுக்கு கொடுத்த திராட்சை பிரசாதம்

    4. 'அவசரம்னு சொல்லி ஆத்துக்கு அனுப்பு'

    5. தஞ்சாவூர் வந்த காஞ்சி பிரசாதம்

    6. கற்பகாம்பாளும் காசு மாலையும்

    7. நடராஜனின் பசிக்கு ஸ்பெஷல் உப்புமா

    8. 'ஊர்ல எல்லாரும் ஒத்துமையா இருக்காளா?'

    9. மூங்கில் தட்டு முழுக்கப் பணம்

    10. சேவை மாணவர்களுக்கு சிறப்பு விருந்து

    11. இன்றைக்கும் நடக்குது எதிர்பாரா அதிசயம்

    12. குருமூர்த்தியின் குறையை போக்கி அருளிய குரு

    13. 'இன்னும் ஒரே ஒரு நமஸ்காரம் பண்ணிடேன்.'

    மகா பெரியவா - தொகுதி 4

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்.

    'அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.

    காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.

    ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வத்துக்கு இடம்.

    ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.

    தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், 'இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்' என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.

    அப்படி இல்லாமல், 'இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!' என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.

    நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!

    பரிபூரண சரணாகதிதான் பக்தி.

    நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.

    'ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்' என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

    ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.

    'மகா பெரியவா தொகுதி IV' இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்குக் காரணம் - 'மாலை மலர்' நாளிதழ். இந்த அனுபவங்கள் அனைத்தும் 'மகா பெரியவர்' என்ற தலைப்பில் அதில் வெளிவந்தன. இத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

    இந்தத் தொடரின் வெற்றிக்கு உழைத்த என் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளை மிக்கப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    https://www.youtube.com/channel/UCVPS6VyvZW2oJVB3zkzh7Ng

    1. 'இந்த மாருதி ஸ்வாமி யார் தெரியுமா?'

    இந்த சம்பவம் நடந்து சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்.

    மகா பெரியவா அப்போது சென்னைக்கு விஜயம் செய்திருந்தார். சென்னைக்கு எப்போது வந்தாலும் மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் அவரது பிரதான முகாம் இருக்கும். அங்கு இருந்தபடி வெளியே பல இடங்களுக்கு (சென்னைக்குள்) யாத்திரை சென்று வருவார்.

    இப்படி மயிலாப்பூரைத் தாண்டிச் செல்லக் கூடிய யாத்திரை பல நேரங்களில் ஒரு சில நாட்களைத் தாண்டியும் அமைவதுண்டு.

    அதுபோன்ற ஒரு யாத்திரை அப்போது அமைந்தது. திருவல்லிக்கேணி பகுதியில் யாத்திரை செய்த மகா பெரியவா அங்கே ஒரு சில நாட்கள் தங்கப் போவதாக அறிவித்தார். திருவல்லிக்கேணிவாசிகளின் சந்தோஷத்துக்குக் கேட்பானேன்! எல்லோருக்கும் ஆனந்தம் தாங்க முடியவில்லை. 'ஆஹா... பெரியவா நடத்துற பூஜையை தினமும் பார்க்கலாம்; பெரியவா கையால தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கலாம்' என்று பெருமிதப்பட்டுக் கொண்டார்கள்.

    திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் மகா பெரியவா தங்கி, பூஜைகளை நடத்துவதாகவும், பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

    இதை அடுத்து மளமளவென்று வேலைகள் நடந்தன. மகா பெரியவா ஸ்நானத்துக்கு, பூஜைக்கு, சிப்பந்திகள் தங்குவதற்கு, பக்தர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதற்கு, சமையலுக்கு என்று எல்லா ஏற்பாடுகளும் கனகச்சிதமாக நடந்து முடிந்தன.

    வசந்த மண்டபத்தில் முதல் நாள் தரிசனம் துவங்கியது.

    மகா பெரியவாளின் சென்னை வருகை பற்றி முன்பே அறிந்திருந்த ஏராளமான பக்தகோடிகள் திருவல்லிக்கேணிக்குத் திரண்டு வந்தனர்.

    சந்திரமௌளீஸ்வரருக்கு மிக விஸ்தாரமாக பூஜை நடந்து, வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கினார்.

    மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பக்தகோடிகள் மத்தியில் பெரியவா அருளுரை வழங்கினார்.

    இதைத் தவிர பிரபலமான பாகவதர்களின் நாமசங்கீர்த்தனங்கள், பிரபலமான சொற்பொழிவாளர்களின் உபன்யாசங்கள் என்று திருவல்லிக்கேணியே திமிலோகப்பட்டது.

    மகா பெரியவாளைத் தரிசிக்க பெரும் பணக்காரர்கள் அதிகம் வந்திருந்தனர் திருவல்லிக்கேணிக்கு. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு பாரம்பரிய உடையில் - அதாவது பஞ்சகச்சம் - மடிசார் போன்றவற்றை அணிந்து வந்திருந்தனர்.

    மகா பெரியவா முகாம் இருந்த வசந்த மண்டபம் பகுதிக்குள் இத்தகைய பணக்காரர்களின் வாகனங்கள் நுழைந்ததுமே மடத்துச் சிப்பந்திகள் ஒரு சிலர் வலிய ஓடிப் போய் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். இவர்களை மிகவும் மரியாதையுடன் - கீழே கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கக் கூடிய பக்தர்களைக் கொஞ்சம் விலகச் சொல்லிக் குரல் கொடுத்தபடியே - மகா பெரியவா அமர்ந்திருக்கின்ற இடம் நோக்கி அழைத்துச் சென்றனர். பெரியவாளுக்கு அருகே தோதான ஓரிடத்தில் இவர்களை அமர வைத்தனர்.

    பணக்காரர்கள் மீது மடத்துச் சிப்பந்திகள் ஒரு சிலர் காட்டும் இப்படிப்பட்ட கரிசனம் சாதாரணமான நிலையில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைத்தது.

    'நாமும் மகா பெரியவாளைத் தரிசிக்கத்தானே வந்திருக்கிறோம். கையில் நிறைய காசு இருந்து கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா டிரஸ் பண்ணிண்டு, நிறைய நகை நட்டுகளைப் போட்டுண்டு வந்துட்டா அவர்கள் எல்லோரும் மகா பெரியவா பக்தர்கள் ஆகி விட முடியுமா? மகானை ஆத்மார்த்தமாகத் தரிசிக்கக் கூடிய உள்ளம் எங்களுக்கு அல்லவா இருக்கிறது?!' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

    இவர்களின் பொருமலும் ஒரு வகையில் நியாயமானதே! பெரும்பாலான பணக்காரர்கள் எதை எதிர்பார்த்து மகா பெரியவாளிடம் வந்திருப்பார்கள்?

    தங்களது வியாபாரமும் தொழிலும் நன்றாக நடக்க வேண்டும்... லாபம் நன்றாகக் கொட்ட வேண்டும் என்பதற்காக மகா பெரியவாளிடம் ஆசி வேண்டி வந்திருக்கலாம்.

    ஆனால், ஒன்றுக்குமே வழி இல்லாத ஏழைகள் எதற்காக வந்திருப்பார்கள்?

    பொருளாசை அவர்களுக்கு இருக்காது. இருக்கின்ற பொருளாதார நிலைமையைத் தக்க வைப்பதே அவர்களுக்குப் பெரும் சவால்.

    அன்றன்றைய தேவையைப் பூர்த்தி செய்து விட்டால், அதுவே அவர்களுக்குப் போதும். பணம் மற்றும் பொருளைச் சேமித்து வைக்கின்ற எண்ணமோ, ஆசையோ அவர்களுக்கு இல்லை. அதற்கான வழியே இல்லை.

    அப்படி என்றால், எதை எதிர்பார்த்து வருகிறார்கள்?

    அந்த மகானின் கருணை பொங்கும் விழியைப் பார்ப்பார்கள். அதிலேயே அவர்களுக்கு ஒரு பரவசம் கிடைத்து விடும்.

    அந்த மகான் தங்களை அழைத்து 'எந்த ஊர்? வெவசாயமா? ஸ்கூல் உத்தியோகமா? பால் வியாபாரமா?' என்று அனுசரணையுடன் கேட்கிற ஒரு சில கேள்விகளிலேயே தங்களை இழந்து விடுவார்கள்.

    கிளம்பும்போது அவர் தருகிற பிரசாதம் - அது விபூதியாக இருந்தாலும் சரி... ஆனந்தம்!

    மகா பெரியவா இந்த வசந்த மண்டபத்துக்கு வந்து இன்றைக்கு மூன்றாவது நாள்.

    முதல் தினத்தை விட பக்தர்கள் வரத்து இன்றைக்கு அதிகமாகவே காணப்பட்டது.

    பணக்காரர்கள் அதிகம் கூடி இருக்கின்ற இந்த முகாமில் வசதி இல்லாத - சாதாரண வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் எளிய உடைகளோடு, எளிய காணிக்கைப் பொருட்களைக் கைகளில் வைத்துக் கொண்டு ஆங்காங்கே காணப்பட்டனர். 'இவற்றை எப்படியாவது மகானிடம் சேர்ப்பித்து விட வேண்டும்' என்கிற ஏக்கம் அவர்கள் முகத்தில் தென்பட்டது.

    ஏழைகளால் மெள்ள முன்னேறிச் சென்று, மகா பெரியவாளின் அருகே அன்றைய தினம் அந்த வேளையில் செல்ல முடியவில்லை.

    ஒரு சிலர் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே தரிசித்து விட்டுப் புறப்பட்டனர். 'மகானை எங்கிருந்து தரிசித்தால் என்ன? நாம் அவரைப் பார்ப்பதை விட அவரது பார்வை நம்மேல் விழுந்தாலே போதும்' என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

    தவிர, அன்றைக்கு வேறு ஏதோ ஒரு விசேஷமும்கூட. அதனால், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    இதற்கு முந்தைய நாட்களைப் போலவே - மகா பெரியவாளுக்கு முன்னால் இருந்த இடத்தைப் பணக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு, பெரியவாளைப் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் காணப்பட்டனர்.

    மகா பெரியவா தனக்கு உரிய ஆசனத்தில் சிவ சொரூபமாக அமர்ந்திருந்தார்.

    இன்னும் பூஜை துவங்கவில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறது. இதைத் தரிசிக்கத்தான் இத்தனை கூட்டமும்!

    தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பக்தகோடிகளை இப்படியும் அப்படியும் தன் கருணைப் பார்வையால் ஸ்கேன் செய்தார். மிகவும் நிதானமாக பக்தகோடிகளைப் பார்த்துக் கொண்டே வந்தார். மகா பெரியவா பார்வை எங்கோ ஓரிடத்தில் தள்ளி நிலைகுத்தி நின்றது.

    ஆகா! மகா பெரியவாளின் பார்வை பட்ட பக்தருக்கு அடித்தது யோகம்!

    தன் அருகில் இருந்த ஒரு சிப்பந்தியை கைவிரல் சொடுக்கில் அழைத்தார் மகா பெரியவா. மகான் தரப் போகும் உத்தரவை நிறைவேற்றுவதற்காகக் குடுகுடுவென்று ஓடி வந்து பவ்யமாக நின்றார் அந்த சிப்பந்தி.

    பூஜை முடிகின்ற மதிய வேளை வரை மகா பெரியவா மவுனம் என்பதால், ஒரு பேப்பரையும் பேனாவையும் கொண்டு வரும்படி அந்த சிப்பந்திக்கு சைகை மூலம் தெரிவித்தார்.

    அந்த சிப்பந்தி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பேப்பரும் பேனாவுமாகப் பெரியவாளிடம் திரும்பினார்.

    அந்த பேப்பரை வாங்கிய மகா பெரியவா, அதில் 'மாருதி ஸ்வாமி - சாரதா தம்பதியர்' என்று எழுதி, அவர்களை உடனே இங்கே கூட்டிண்டு வா என்பதற்கான ஒரு உத்தரவை சைகையால் பிறப்பித்தார்.

    பெரியவா பெயர் எழுதிக் கொடுத்த பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு, அந்தக் கூட்டத்தின் மையப் பகுதிக்கு வந்த சிப்பந்தி, ''எல்லாரும் அமைதியா இருங்கோ. இன்னும் சித்த நேரத்துல மகா பெரியவா பூஜையை ஆரம்பிக்கப் போறா. ஆனந்தமா அவா அவா இருக்கிற இடத்துல இருந்து தரிசனம் பண்ணுங்கோ'' என்று பொத்தாம்பொதுவாகப் பேசி விட்டு அதன் பின், ''இங்கே வந்திருக்கிற பக்தாள்ல மாருதி ஸ்வாமி, சாரதா

    Enjoying the preview?
    Page 1 of 1