Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhagavan (Yogi Ramsuratkumar)
Bhagavan (Yogi Ramsuratkumar)
Bhagavan (Yogi Ramsuratkumar)
Ebook108 pages51 minutes

Bhagavan (Yogi Ramsuratkumar)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பகவானைப் பற்றிய இந்த நூலில் அவரது வாழ்க்கை வரலாற்றை நாம் பார்க்கப் போவதில்லை. பகவானுடன் அவரது பக்தர்களுக்கு ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்களை மட்டுமே பார்க்கப் போகிறோம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138306246
Bhagavan (Yogi Ramsuratkumar)

Read more from P. Swaminathan

Related to Bhagavan (Yogi Ramsuratkumar)

Related ebooks

Reviews for Bhagavan (Yogi Ramsuratkumar)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhagavan (Yogi Ramsuratkumar) - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    பகவான் (யோகி ராம்சுரத்குமார்)

    Bhagavan (Yogi Ramsuratkumar)

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தெய்வங்களும் மகான்களும்

    2. பகவான்

    3. நிர்மூலமான மூல வியாதி

    4. பரம அனுக்ரஹம்

    5. பிச்சைக்காரனின் வேண்டுகோள்

    6. கேட்கக்கூடாத கேள்வி

    7. பாடகரின் வலி

    8. இதோ, ஓர் அந்தர்முகி

    9. தபோவனத்தில் யோகியார்

    10. 'கபீர்தாஸரைப் பார்க்கணுமா?'

    11. நம்பிக்கையும் குருபக்தியும்

    12. ஆழ்வாரின் அனுபவம்

    13. அருள் மழை

    14. காத்தது குருவருள்

    15. தெய்வத்தின் குரல்

    16. ஏற்றுக் கொள்வாரா?

    17. யோகியாரின் சிகிச்சை

    பகவான் (யோகிராம்சுரத்குமார்)

    பகவான் யோகி ராம்சுரத்குமாருடனான பக்தர்களின் அனுபவங்கள்

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    அனைவருக்கும் பணிவான நமஸ்காரம்.

    என்னை இந்த உலகுக்கு அளித்த என் பெற்றோர் - ஸ்ரீ பிச்சை ஐயர் - ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி அம்மையாருக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கும், என்னை வழி நடத்திச் சென்று கொண்டிருக்கும் நடமாடும் தெய்வம் ஸ்ரீகாஞ்சி மகா பெரியவா திருவடிகளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரம்.

    நான் எழுதிய 'பகவான்' நூல் இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. எனது எழுத்துலகப் பயணத்தில் இது ஒரு புது வரவு. இந்த எழுத்துகள் 'தின மலர்' நாளிதழில் தொடராக வெளி வந்தவை. இந்த எழுத்து மலர்வதற்குக் காரணமான 'தின மலர்' ஆசிரியர் திரு. கோபால்ஜி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மற்றும் தின மலர் நண்பர் திரு. பார்த்திபன் மற்றும் இரா. குமார் ஆகியோருக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.

    காஞ்சி மகா பெரியவா, ஷீர்டி சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரர் மற்றும் 'திருவடி சரணம்' என்கிற தலைப்பில் இரண்டு பாகங்களில் எண்ணற்ற மகான்களைப் பற்றி எழுதியதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மகான் பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பற்றி எழுதக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது, அந்த மகானின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஒரே ஒரு முறை இந்த மகானை நேருக்கு நேராக தரிசித்ததன் பலனோ என்னவோ... அந்த மகான் எனக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பை வழங்கி இருக்கிறார். வாழ்வில் மறக்க முடியாத ஆனந்தத்தை வழங்கி உள்ளார்.

    பகவானின் திருவிளையாடல்கள் பற்றி ஏராளமான அனுபவங்களையும் அற்புதங்களையும் சொல்லி என்னை உற்சாகப்படுத்திய யோகியாரின் பக்தர்கள் பெயர்களை இங்கே பட்டியலிட நேர்ந்தால், அது மிகவும் நீளமாகப் போகும் என்பதால், அவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக இங்கே பட்டியலிடாமல், எனது இந்தப் பணிக்கு உதவிய அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் என் நன்றிகளை நமஸ்காரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகான்கள் என்றாலே, அவர்களைப் பார்த்து நாம் பெரிதும் வியப்பது ஞான திருஷ்டி - அதாவது தீர்க்க தரிசனத்தை. அப்பேர்ப்பட்ட தீர்க்க தரிசனம், மாபெரும் தவ வாழ்க்கையின் பலனாக மகான்கள் கிடைக்கப் பெற்றார்கள். இத்தகைய தீர்க்க தரிசனத்தால், பலரது பிணிகளையும் அகற்றினார்கள். இதனால், மகான்களைத் தேடிப் பலரும் படையெடுக்க ஆரம்பித்தார்கள். ஒருவரின் கர்மா இந்தக் குறிப்பிட்ட மகானின் அருளால் களையப்பட வேண்டும் என்று விதி இருந்தால், காலத்தின் கட்டாயத்தால் அந்த மகானின் தரிசனம் நிச்சயம் சம்பந்தப்பட்டவருக்குக் கிடைத்தே தீரும்.

    எப்படிக் கோயில்களுக்குப் போய் இறைவனை தரிசனம் செய்கிறீர்களோ, அதுபோல் நிறைய அதிஷ்டானங்களுக்கும் செல்லுங்கள். மகான்களை தரிசியுங்கள். என்னுடைய சொற்பொழிவில் நான் அதிகம் சொல்வதுண்டு - 'உங்கள் கர்மாவைப் போக்கும் ஆற்றல், மகான்களுக்கு அதிகம் உண்டு'.

    திருவடி தரிசனம் நமது பாவங்களைப் போக்கட்டும்.

    எனது இந்த 'பகவான்' நூலுக்கு ஒரு முகவுரை வழங்கிய யோகியாரின் அத்யந்த பக்தர் உயர்திரு ஜஸ்டிஸ் அருணாசலம் அவர்களுக்கும், இந்த நூல் வெளியாவதில் பெரும் அக்கறை செலுத்திய என் அன்பு நண்பர் திரு. பாலாஜி (ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்) அவர்களுக்கும், மிகவும் மனம் மகிழ்ந்து முகவுரை வழங்கிய திரு. முரளி அவர்கள் (மேனேஜிங் டைரக்டர், ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்) மற்றும் திரு அசோகன் (எக்ஸிகியூடிவ் டைரக்டர்) அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

    யோகி ராம்சுரத்குமார்

    யோகி ராம்சுரத்குமார்

    யோகி ராம்சுரத்குமார்

    ஜய குருராயா

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. தெய்வங்களும் மகான்களும்

    எத்தனையோ ஜீவன்கள் பிறக்கின்றன. வாழ்கின்றன. இறக்கின்றன. அந்த ஜீவன்களின் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள், துயரங்கள், போட்டிகள், பொறாமைகள்!

    புத்தம் புதுசாக ஜனிக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் இந்த பூவுலகில் இன்பத்தை அனுபவிக்குமா, துன்பத்தை அனுபவிக்குமா அல்லது இன்பம் - துன்பம் இரண்டையும் சேர்த்து அனுபவிக்குமா...? யாருக்குத் தெரியும்?!

    ஒரு ஜீவன் இந்த மண்ணுலகில் பிறப்பதற்கு முன், அது என்னவாகப் பிறக்கப் போகிறது, எங்கே பிறக்கப் போகிறது, எப்படிப் பிறக்கப் போகிறது என்பது படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

    படைக்கப்பட்ட பின் அந்த ஜீவனின் வாழ்க்கை முறை எப்படி அமையப் போகிறது என்பதும் அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்.

    ஆனால், இடைப்பட்ட இந்தக் காலத்தில், 'நான் யார் தெரியுமா?', 'என்கிட்டயே மோதிப் பாக்கறான்...', 'நான் நினைச்சேன்னா...' என்றெல்லாம் வீரதீர வசனங்கள் பேசி, தங்களைப் பற்றிக் கற்பனையாக என்னென்னவோ நினைத்துக் கொள்கிற சுய நலம் கொண்ட மனிதர்களைப் பார்த்தால் பரிதாபம்தான் மேலிடுகிறது.

    'பிறர்

    Enjoying the preview?
    Page 1 of 1