Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal
Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal
Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal
Ebook140 pages1 hour

Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதப் பிறப்பு என்பது, அவனது ஆசைகளால் உருவாக்கப்பட்டு, மனிதன் இப்பூமிக்கு வந்து, தன் ஆசைகளை நிறை வேற்றிக்கொள்ள, மனித நிலையிலிருந்து, மாறி மிருகப் பாதைக்குச் சென்று, எல்லா பாவங்களையும், தான் ஆசைப்பட்டதை அடைய செய்து, கடைசியில் நோய்களில் விழுந்து, வயோதிகத்தில் வாடி, இயலாமையில் விழுந்து, கடைசியில் மரணத்தில் மறைந்து போகின்றான்.

மனிதனை, அவனது மனித நிலையிலிருந்து மாறி, மிருக நிலைக்கு, அவனை செல்லா விடாமல் தடுக்கும், அதிசய 6 மகா சக்கரங்கள் நமக்குள்ளே, நம் தண்டுவடம் முழுக்க, இறைவன் சிவன் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.

நமது உறுப்புக்கள், செல்கள், நாளமில்லா சுரப்பிகள், நாடிகள் எல்லாமே, இந்த 6 சக்கரங்களின் கண்காணிப்பில்தான் இயங்குகின்றன. இந்த சக்கரங்களில் தியானம் செய்து, இவற்றில் இருக்கும் சக்திகளை, விழிக்க வைத்து விட்டால், அதனால் மனிதனாகப் பிறந்தவன், தெய்வத்துக்கு இணையான சித்தனாக உருமாற முடியும்! சக்திகளையும் பெறுவது நடக்கும்.

மரணமற்ற வாழ்க்கையையும், நோயில்லா நிலையையும், வயோதிகம் வராத நிலையையும் அடைவதோடு, பஞ்சபூதங்களை வெல்வதும், அட்டமா சித்திகளை அடைவதும் செய்து, தன் காலம் முழுக்க இளமையுடன், நினைத்ததை நினைத்தபடி பெறும், சக்தியை மனிதனுக்கு அளிக்கும், 6 மகா சக்கரங்களை, மனிதன் தன் வசியப்படுத்தும் வழி முறைகளை, ஆசிரியர் உதயதீபன், மிக ஆழமாகவும், நுணுக்கமாகவும், இந்நூலில் கொடுத்திருக்கிறார்.

இனி, மனிதப் பிறவியில், தெய்வமாக வாழ, அவரது சக்கர வசிய முறைகளை, இந்த நூலில் படித்து, அதன் பயனைப் பெறுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580110804423
Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal

Read more from Udayadeepan

Related to Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal

Related ebooks

Reviews for Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    மனிதனை கடவுளாக்கும் 6 மகா சக்கரங்கள்

    Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. 6 வகை, சூக்கும சக்கரங்கள்

    2. மனிதனுக்குள்ளே பிரம்ம சக்திகள்

    3. ஜோதி மரமான தண்டுவட சக்தி

    4. மலர்களைப் போன்று மலர்ந்துள்ள, 6 சூக்கும சக்கரங்கள்

    5. அறுவகை சக்கரங்களுக்கு உரிய தெய்வங்கள்

    6. 6 சக்கரங்களில் பிராணாயாமம் செய்கையில் உச்சரிக்க வேண்டிய ஸ்ருதி

    7. ஆறுவகை சக்கரங்களும் பிரணாயாம சக்தியால் தூண்டப்படுகின்றன

    8. விந்துசக்தியை, குரு நாடியில் ஏற்றினால், அதில் அறுவகை சக்கரங்கள் விழித்துக் கொள்ளும்

    9. 6 சக்கரங்களை, இயக்குவதில் மந்திரங்களின் பங்கு

    10. ஸ்வரயோகம் என்பது, மகா சக்கரங்களை இயக்கி, நமக்கு வாழ்க்கையில், வெற்றி கொண்டுவர பயன்படக்கூடியது.

    11. ஆறுவகை மர்ம சக்கரங்களில், மூலாதாரம்

    12. ஸ்வாதிஷ்டான சக்கரம்

    13. மணிப்பூரக சக்கரம்

    14. அனாகத, இதயச் சக்கரம்

    15. விசுக்தி சக்கரம்

    16. ஆக்கினை சக்கரம்

    17. சகஸ்ராரச் சக்கரம்

    18. அறுவகைச் சக்கரங்கள், ஒன்றில் ஒன்று, அடங்குதல்

    19. சூக்கும சக்கரங்களும் அவற்றை உயிர்ப்பிக்கும் முறைகளும்

    20. மனித குண்டலினி சுரப்பியை சுரக்க வைக்கும், காயகல்ப மூலிகைகள்

    21. ஆறுவகை சக்கரங்களுடன் இணைந்த, மூன்று முக்கிய நாடிகள்

    22. 6 வகை சக்கரங்களை திறக்கும், கைவிரல்கள், தியானம்

    23. நம் செயல்கள், அதில் 6 சக்கரங்களின் பங்குகள்

    24. நினைத்ததை தரும் தந்திர பயிற்சிகள்

    25. அட்டமாசித்திகளை அளிக்கும், ஆறு வகை சக்கரங்கள்

    26. தூங்காமல் தூங்கும் சுகம்

    27. அறுவகை சக்கரங்களில், ஊடாடும் குண்டலினி சக்தி

    28. 6 வகை சக்கரங்களின் பண்புகள்

    29. சக்கரங்களில் மந்திரங்களை உச்சரித்து நல் உடல், நலனை பெறுங்கள்

    30. சக்கரங்களைக் கடந்து, பிரபஞ்ச சக்தியாகும் மனிதனின், விசித்திர நிலைகள்

    பதிப்பகத்தார் உரை

    மனிதப் பிறப்பு என்பது, அவனது ஆசைகளால் உருவாக்கப்பட்டு, மனிதன் இப்பூமிக்கு வந்து, தன் ஆசைகளை நிறை வேற்றிக்கொள்ள, மனித நிலையிலிருந்து, மாறி மிருகப் பாதைக்குச் சென்று, எல்லா பாவங்களையும், தான் ஆசைப்பட்டதை அடைய செய்து, கடைசியில் நோய்களில் விழுந்து, வயோதிகத்தில் வாடி, இயலாமையில் விழுந்து, கடைசியில் மரணத்தில் மறைந்து போகின்றான்.

    மனிதனை, அவனது மனித நிலையிலிருந்து மாறி, மிருக நிலைக்கு, அவனை செல்லா விடாமல் தடுக்கும், அதிசய 6 மகா சக்கரங்கள் நமக்குள்ளே, நம் தண்டுவடம் முழுக்க, இறைவன் சிவன் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.

    நமது உறுப்புக்கள், செல்கள், நாளமில்லா சுரப்பிகள், நாடிகள் எல்லாமே, இந்த 6 சக்கரங்களின் கண்காணிப்பில்தான் இயங்குகின்றன. இந்த சக்கரங்களில் தியானம் செய்து, இவற்றில் இருக்கும் சக்திகளை, விழிக்க வைத்து விட்டால், அதனால் மனிதனாகப் பிறந்தவன், தெய்வத்துக்கு இணையான சித்தனாக உருமாற முடியும்! சக்திகளையும் பெறுவது நடக்கும்.

    மரணமற்ற வாழ்க்கையையும், நோயில்லா நிலையையும், வயோதிகம் வராத நிலையையும் அடைவதோடு, பஞ்சபூதங்களை வெல்வதும், அட்டமா சித்திகளை அடைவதும் செய்து, தன் காலம் முழுக்க இளமையுடன், நினைத்ததை நினைத்தபடி பெறும், சக்தியை மனிதனுக்கு அளிக்கும், 6 மகா சக்கரங்களை, மனிதன் தன் வசியப்படுத்தும் வழி முறைகளை, ஆசிரியர் உதயதீபன், மிக ஆழமாகவும், நுணுக்கமாகவும், இந்நூலில் கொடுத்திருக்கிறார்.

    இனி, மனிதப் பிறவியில், தெய்வமாக வாழ, அவரது சக்கர வசிய முறைகளை, இந்த நூலில் படித்து, அதன் பயனைப் பெறுங்கள்.

    *****

    1. 6 வகை, சூக்கும சக்கரங்கள்

    சூக்குமம் என்பது அருவம். அதாவது...

    வடிவம் அற்றது, என்னும் பொருளில் வரும் சொல் ஆகும், இது.

    உலகின் பிரம்மாண்டமான வடிவங்களான...

    சூரியன், நிலா, நட்சத்திரங்கள், நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் ஒன்பது நவகிரகங்கள் இவைகள், அருவமான வெட்ட வெளியில், இருந்தே தோன்றியவை.

    'பிக் பேங்க்' அதாவது பெரு வெடிப்பு...

    என்பது, 460 கோடி வருடங்களுக்கு முன்னர், நடைபெற்ற ஒரு நிகழ்வு, அதில் ஒரு பெரிய உஷ்ணமுள்ள எரி பந்திலிருந்து, அதன் வெடிப்பில் இருந்தே, இந்த பூமி மற்றும் அதனைச் சார்ந்த, ஒன்பது கிரகங்களும் உருவகித்தன.

    இந்த பெருவெடிப்பிற்குப் பிறகு, வானில் உள்ள...

    தூசிகள் எல்லாம், ஒன்று சேர்ந்து சேர்ந்து, பல, ஆயிரம் கிலோ மீட்டர் அடர்த்தியில், மேகங்கள் சுமந்து நின்றன.

    இந்த மேகங்களின் மீது குளிர்ந்த காற்று...

    முதன் முதலாக வீசிற்று. இப்பிரபஞ்சத்தில் முதல் மழைத்துளி அரும்பிற்று. பிறகு குளிர்ந்த காற்று, பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் அடர்த்தி கொண்டிருந்த, மேகக் கூட்டங்களின் வழியே, வீசியது.

    மேகக் கூட்டங்கள், அதில் கருதரித்து, சூல்...

    கொண்டு, உருதிரண்டு சேர்ந்து கொண்டு, மழைத் துளிகள் கொட்டத் தொடங்கின. ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. பல வாரங்கள், பல மாதங்கள், வருடங்கள் அல்ல. 60 ஆயிரம் வருடங்கள், தொடர் மழை கொட்டி, அதில் இந்த பூமியில், நீர்பரப்பு ஏற்பட்டு, பின்பு பூமி குளிர்ந்து கொண்டு வந்து, அதன் மேல் பரப்பு இறுகி, அது கெட்டிப்பட்டு, நாம் வசிக்கும் பூமி ஆனது.

    இந்த பெரும், நெருப்புக் கோளம்...

    அதன் ஆக்கலுக்கு முன்பு, அது உருவாகும் முன்னர், இந்த உலகத்தில், ஆதியில் இருந்தது, வெறும் இருட்டு மட்டும்தான்!

    இந்த, பல கோடி ஆண்டுகள், உருவம்...

    இல்லாத கருப்பு சக்தியாக, உருண்டு திரண்டு, அதில் பின்னர், ரசாயன மாற்றம் ஏற்பட்டு, இந்த இருட்டில் அணுக்கள், முதன் முதலாக இயக்க சக்திகளாக தோன்றி, சுற்ற ஆரம்பித்தன.

    அணுக்கள், சக்தி என்னும்...

    அவை, கண்ணுக்கு புலப்படும் வடிவம் கொண்டவை அல்ல. அவை கண்களுக்குப் புலப்படாத, அருவ அணுக்கள். இந்த எண்ணத் தொலையாத, கோடி கோடி அணுக்களின் அசைவுகளில், அந்த அசைவுகள் ஒன்று சேர்ந்து கொண்ட, அதிர்வுகளில் இருந்து, ஒரு சப்தப் பிரம்மம் தோன்றி,

    Enjoying the preview?
    Page 1 of 1