Sakthiyulla Udalai Adaiyungal
By Udayadeepan
5/5
()
About this ebook
சுவர் இன்றி சித்திரம் இல்லை. உடலின் வளம் இன்றி, மனித வாழ்க்கையில் சுகம் இல்லை. நாம் எல்லா காரியத்திற்கும், நம் உடலை இயக்கியே, நம் வாழ்க்கையின் தேவைகளை, நிறைவேற்றிக் கொள்கிறோம். எனவே, மனித உடல் சக்தியுடன் இருப்பதும், திடகாத்திரமாக, சக்தி குன்றாமல், கட்டமைப்புடன் இருந்தால்தான், மனித வாழ்க்கை சுகமாக நகரும். இந்த நூலில், மனித உடலை திடப்படுத்திக் கொள்ள, அநேக வழிகள் தரப்பட்டிருக்கின்றன.
மனித வாழ்வுக்கு, உடல் சக்தியுடன் இருப்பது ஒரு கண்டிப்பான அவசியம். உடலை அன்றாடம் கவனித்தால், அதன் மூலம், நோய் களை தடுத்துக்கொள்ளலாம். முதுமையை தடுத்துக்கொள்ளலாம். இளமை கட்டமைப்புடன், உடலை என்றும் வைத்துக் கொள்ள முடியும்.
ஆசிரியர் உதயதீபன் அவர்களின் உடலுக்கு வலுவேற்றும் வழிகளை பயன்படுத்தி, இனி வாழ்க்கையை சுகமாக நடத்த இந்நூலின் துணை கொண்டு முயலுங்கள். அதில் நிச்சய வெற்றிகள்கிட்டும்.
Read more from Udayadeepan
Manitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Manithanai Kadavulakkum 6 Maha Sakkarangal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Neethi Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManithanukkulley Athisaya Sakthikal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Tharum Dhyanam Rating: 1 out of 5 stars1/5Sakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsArasar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsSiththarkalin Arpudha Sithukkal Rating: 1 out of 5 stars1/5Endrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Arivoottum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsTenali Raman Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmika Aatralgalal Athisiya Sakthikalai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsParamarthaguru Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Sakthiyudan Irukka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsZen Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsKundalini Sakthiyaal Ulakai Aalungal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkaiyin Thadaigalai Thaandungal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsPillaikalai Adakka Vazhikal Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsUshadeepan Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Arivu Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsAndraada Vazhkaiyil Vetri Pera Vazhikal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsThannambikkai Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sakthiyulla Udalai Adaiyungal
Related ebooks
Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Aasarakovai Rating: 5 out of 5 stars5/5Siddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Neengalum Vallalar Aaga... Rating: 4 out of 5 stars4/5Verena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Manathodu Oru Sitting Rating: 4 out of 5 stars4/5Nalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsThiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsArokiya Vazhvirkku Muthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Arul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsNamathu Mooligaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி Rating: 4 out of 5 stars4/5Chanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5
Reviews for Sakthiyulla Udalai Adaiyungal
1 rating0 reviews
Book preview
Sakthiyulla Udalai Adaiyungal - Udayadeepan
http://www.pustaka.co.in
சக்தியுள்ள உடலை அடையுங்கள்
Sakthiyulla Udalai Adaiyungal
Author:
உதயதீபன்
Udayadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/udayadeepan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. மனித உடலில் இருக்கும் சக்திகள்
2. உடலை பலஹீனப்படுத்தும் செயல்கள்
3. உடலை வலுப்படுத்தும், அணு சக்தி உபயோகம்
4. கெட்ட எண்ணங்கள், உடலை சீரழிக்கும்
5. பழக்கங்களில், உடலை கெடுத்துக் கொள்ளுதல், தேவையற்றது
6. உடலுக்குள், சக்திகளை பெற பெண்களுக்கு, உள்ள வழி முறைகள்
7. கடவுள் வழிபாடு, நோய்களை தீர்க்கும்
8. மன, அழுத்தத்தை குறைத்து, உடலை வலுப்படுத்துங்கள்
9. ஒருவருக்கொருவர் பதில் கூறி எமனாக வேண்டாம்
10. எண்ணங்களை குறையுங்கள், உடல் வலுவாக இருக்கும்
11. உடற்பயிற்சியின் இன்றியமையாமை
12. சக்தி உள்ள உடலை பெற வழிகள்
13. உள் உலகில், மனதை உலவ விடுங்கள்
14. வயதான உடல் செல்களை நீக்கினால், உடல் அதிக வாழ் நாட்களை பெறும்
15. உடல் பாகங்களில், சக்கரங்களின், கட்டுப்பாடு
16. நமது உடம்பில், உள்ள உடல், அடுக்குகள் ஐந்து
17. சூக்கும உடல்களின் பராமரிப்பும் மனிதனின் ஆயுள்களும்
18. உடல் குறைகளை நீக்க, சக்தி ஏற்றும் முறை...
19. அறுசுவை உணவு உடலின் ஆரோக்கியத்துக்கு, மிகவும் முக்கியம்
20. சிலசத்துக்கள், உண்ணும் உணவில், கண்டிப்பாக இருப்பது அவசியம்
21. ஆதார சக்கரங்களில், சக்தி பாய்ச்சும் முறைகள்
22. நினைவுகளையும், எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தினால், உடல் அதில் பலப்படும்
23. உடலில் வண்ண சிகிச்சை முறைகள்
24. நோய்களைத் தீர்க்கும் உணவுகள்
25. நோய்களை தீர்க்கும் முத்திரைகள்
26. உடலின் நோய்களை பஞ்ச சக்திகளை பாய்ச்சி குணப்படுத்துதல்
27. உடலை வலுப்படுத்தும் காய கல்ப மூலிகைகள்
1
மனித உடலில் இருக்கும் சக்திகள்
உடல் என்பதில், அமானுஷ்ய சக்திகள் இயல்பாகவே, நிறைய இருக்கின்றன. உணவு செரிக்க உதவும் திரவம், நெருக்கடி காலங்களில் கை கொடுக்க உதவும், நாளமில்லா சுரப்பிகள், மற்றும் கண்களை பாதுகாக்க, இமைகள்.
இப்படி இதயத்தைக் காக்க...
எலும்புக் கவசம். மூளையைக் காக்க கபால எலும்புகள், ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், உடலுக்குள் உணவுச்சத்தை, ஆக்சிஜனை செல்களுக்கு கொடுக்க சிவப்பணுக்கள், உடலுக்குள் நுழையும் கிருமிகளை, எதிர்த்துப் போராட வெள்ளை அணுக்கள்.
இன்னும் உடலைச் சுற்றிக் கவசம்...
போல் 'ஆரா' என்னும் ஒளி. இதுவும் ஒரு உடல் பாதுகாப்புக் கவசம்தான். உடல் முழுக்க 3 அங்குலம் முதல் 16 அங்குலம் வரை, உடலைப் போர்த்தி இருக்கும் இந்த ஆரா, என்னும் ஒளிக் கவசம், உடலில் நோய்கள் உள்ள இடத்தில், இது உடைந்து காணப்படும்.
ஞானிகள், மகான்கள் இவர்கள், இந்த...
ஆராவின் வண்ணத்தை, மனித உடம்பின், மேல் உள்ள நிறத்தைக் கொண்டே, மனிதனுக்கு இன்ன நோயுண்டு என்று, கூறிவிடுவார்கள்.
உடம்பில் பித்த நாடி, வாத நாடி...
கப நாடி, என்ற மூன்றையும் பிரித்துப் பார்த்தே வைத்தியர், நம் உடலில் உள்ள பிணிகளைக் இன்னது என்ற கூறிவிடுவார். இன்னும், நம் கைகளிலேயே புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு, இனிப்பு என்று முதல் மூன்று சத்துக்களையும் இடது கையிலும் அடுத்த மூன்று சத்துக்களை, நமது வலது கையிலும் நாடி பிடித்துப் பார்த்து, ஒரு மனிதனுக்கு சர்க்கரை நோய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வருவதைக்கூட, நாடி பார்க்கும் நிமிடத்திலேயே, கூறிவிட முடியும்.
இதே போல, மனிதனுக்கு...
மரணம் வருவதையும், அது இத்தனை வருடம், இத்தனை மாதம்...கழித்து, வருவதையும்கூட, மனித உடலில் இருக்கும், சில அறிகுறிகளை, வைத்துக் கூறிவிட முடியும்.
மனிதன் குண்டாகவோ, நெட்டையாகவோ...
இல்லை, அதிக சதைப் போடுவதோ, ஹார்மோன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரப்பதால், ஏற்படும் சரியற்ற மாற்றங்களாகவே, இருக்கின்றன.
மனித உடலில் 9 துவாரங்கள்...
கண் 2, காது 2, மூக்கு 2, வாய் 1, குறி 1, குதம் 1, என்று உள்ள துவாரங்கள், உடலில் இருந்தும், இழுக்கும் மூச்சு, துவாரங்கள் மூலம் ஒடிவிடாமல், மூச்சு அடுத்தடுத்து, மனித உடலில் நிகழ்கிறது.
கப்பலுக்குள்ஓட்டைகள்விழுந்து, அதில் நீர் புகுந்தால்,..
கப்பல் மிதப்பது, மூழ்கிவிடும். ஆனால் 9 ஓட்டைகள், மனித உடலுக்குள் இருந்தும், காற்றை இழுத்து திரும்பத் திரும்ப, மனிதன் மூச்சுவிட்டுக் கொண்டி ருக்கிறான். இது ஒரு இயற்கையின் அதிசயம்.
இது எல்லாவற்றையும் விட...
மனிதன் தூங்குவது, ஒரு அமானுஷ்யம், இரவில் படுக்கும் மனிதன், தூக்கத்தில் எல்லாவற்றையும் மறந்து, தூங்குகின்றான்.
ஆனால் மரக்கட்டை போன்று அடித்து...
போட்டார் போன்று, தூங்கும் மனிதனுக்குள், அவன் காலையில் எழுந்ததும், தான் யார் என்னும் நினைவு வந்து விடுகின்றது. தனது பழைய வாழ்க்கை, அவனுக்குள் விழித்துக் கொண்டு, அவனை இயக்கத் தொடங்கி விடுகின்றது.
காலையில் விழித்ததும், மறதியில்...
இரவில் விழித்திருந்த நினைவுகள், மறுபடியும் விழித்துக் கொள்வது, ஒரு அதிசயம் தான். இதுதான் இறைக் கருணை என்பது.
அதே போல், இரவில்...
மனிதன் கனவு காணுகையில், அவனுக்குள் கருப்பு வெள்ளையில், உருவங்கள் ஒளி வெள்ளத்தில், தோன்றுகின்றன. உருவங்கள் பேசுவதை, சிரிக்கிறதை, மனிதன் தன்னுள் கேட்கின்றான். பார்க்கின்றான். ரசிக்கின்றான். கொடிய கனவுகளில், தன்னை மறந்து அலறியும் கத்துகின்றான்.
ஆனால் அவன் தன் கண்களில்...
இந்த உருவங்களை பார்ப்பதில்லை. தூக்கத்தில் அவனின் கண்கள் இமைகளை மூடி தூக்கத்தில், அவைகள் இருக்கின்றன. வாய் உதடுகள், மூடி, அவை பேசாமல் இருக்கின்றன. மனிதன் கனவில் ஓடுகிறான். கைகளால், பந்து ஒன்றை பற்றுகின்றான். ஆனால் அவனின் கால்கள், கைகள் தூக்கத்தில், கட்டுண்டுக் கிடக்கின்றன.
கனவில் மனிதன் ஓடுவது...
நடப்பது, பார்ப்பது, பேசுவது, கேட்பது எல்லாம் செய்கின்றானே, அது எப்படி? அதுதான் உடலுக்குள் உள்ள ஒரு அமானுஷ்ய சக்தியில், நடக்கும் ஒரு செயல் ஆகின்றது.
அந்த அமானுஷ்ய சக்திக்குள்...
எல்லா சக்திகளும் உள்ளன. கனவை ஒருவரின் ஆன்ம ஒளியே, நடத்திக் காட்டுகிறது. மனிதனின் மேதா நாடி மூலம் இது நிகழ்த்திக்காட்டப்படுகிறது. மனிதன் கனவில் செய்யும் பேசுவது, நடப்பது, சிரிப்பது, பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, பயப்படுவது, சுகமாக உணர்வது அனைத்தும், இந்த ஆன்மா ஒன்மேன் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ
ஆக இருந்து, அனைத்து வேலை களையும் செய்து, காட்டுகின்றது.
மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யமான, ஆச்சர்யமான, கடவுளுக்கு இணையான சக்திகள் மனித உடலுக்குள் இருக்கின்றன.
இந்த, மனித உடலில், சக்திகளை அடிமைப்படுத்தி...
மனிதன் செல்லும் பாதை என்பது, அனுபவிப்பது, சுகமடைந்து, வசதிகளில் வாழ்வது, பிறகு தான், ஆட்டமாடியதில், உடல் தளர்ந்து, அவன் தலை நரைத்து, பூத்து, தோல் சுருங்கி, பல் உதிர்ந்து, கண் பஞ்சடைந்து, கை கால் நடுங்கி, நினைவிழந்து பின்பு மரணத்திற்குள் மூழ்குவதுதான், இந்த உடலை வைத்துக் கொண்டு நடக்கும், இயல்பான மனிதனின் செயல்களாக இருக்கின்றன. இது ஒரு மனிதனின் ஒரு கையாலாகாதத்தனம். அமானுஷ்ய சக்திகளை நிறைய உடலில், முழுக்க வைத்துக்கொண்டு, இப்படி தள்ளாடி, திண்டாடி, சக்தி குறைந்து, நோயிலும் வேதனையிலும், பின்னர் மரணத்திலும், மனிதன் விழும் நிலை என்பது, முழுக்க முழுக்க அவனது, சிந்தனையற்ற நிலையையே குறிக்கின்றது.
நோய்களை, எதிர்க்கும் உடலை...