Vazhkkaiyin Thadaigalai Thaandungal
By Udayadeepan
()
About this ebook
“வாழ்க்கையின் தடைகளைத் தாண்டுங்கள்” என்ற இந்த நூலில், மனிதன் தனக்கு தடைகளாக இருக்கும் அனைத்து சக்திகளையும், தாண்டிச் செல்ல, அதற்கு நிறைய வழிகளை தந்திருக்கிறார், ஆசிரியர் உதயதீபன்.
32 பற்களுக்கு இடையில், ஒரு நாக்கு, கடிபடாமல் செயல்படுவது போல, மனினைச் சுற்றி தடைகள் தான், வாழ்க்கையாக உள்ளன என்கிறார். எனவே தடைகளை எதிர்த்து நிற்க, குரல் கொடுக்கிறார். தடைகளை நீக்கும் வரைக்கும், முயற்சியை விடாது, தொடரச் சொல்கிறார்.
நமது ஆசைகளால் நமக்கு வாழ்க்கையில் தடைகள் ஏற்படுகின்றன. அதேபோல் வாழ்க்கையின் வீழ்ச்சிகளில், வாழ்க்கையின் இருட்டு நேரங்களில், தடைகளை விலக்க, தீவிரமாக போராடும் குணத்தை, நாம் பெறவேண்டும் என்கிறார்.
ஏழ்மையோ, அழகற்றிருப்பதோ, வாழ்க்கையில் தடைகளாக இல்லை என்பதும், மனிதனின் வெறுப்பு, தான் என்ற உணர்வும், எடுத்ததுக்கெல்லாம் பதில் பேசுவதும், எதையும் தாமதப்படுத்துவதும், வாழ்க்கையின் தடைகளாகின்றன என்பதும், அரிய கருத்துக்களே.
பிறரை குற்றம் கூறாமல், பிறரிடத்தில் அதிகம் எதிர்பார்க்காமல், சகிப்புத்தனத்தாலும், 'முடியும்' என்று நினைப்பதாலும், நமது எத்தகைய திடமான தடைகளையும், நாமே வெற்றி கொள்ள முடியும் என்கிறார்.
எதையும் சரியாக எடைபோட்டு, பிறரையும் மதித்து, அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து, தன்னைச் சுற்றி, அன்பு விதைகளை விதைத்தால், வாழ்க்கையின் தடைகள் தூளாகிவிடும், என்பது ஆசிரியரின் ஒரு புதிய அணுகுமுறை. இனி, இன்நூலைப் படித்து பயணடையுங்கள்.
Read more from Udayadeepan
Sakthiyulla Udalai Adaiyungal Rating: 5 out of 5 stars5/5Manithanukkulley Athisaya Sakthikal Rating: 0 out of 5 stars0 ratingsZen Thathuva Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManithanai Kadavulakkum 6 Maha Sakkarangal Rating: 0 out of 5 stars0 ratingsSiththarkalin Arpudha Sithukkal Rating: 1 out of 5 stars1/5Endrum Sakthiyudan Irukka Vazhikal Rating: 1 out of 5 stars1/5Arasar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Tharum Dhyanam Rating: 1 out of 5 stars1/5Sakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Neethi Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsTenali Raman Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Thiyanathaal Ulakai Vellungal Rating: 0 out of 5 stars0 ratingsParamarthaguru Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsArivoottum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Siruvar Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Sakthiyudan Irukka Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAanmika Aatralgalal Athisiya Sakthikalai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsVeeramum Vivekamum Niraindha Vikramaadithyan Kathaikal Rating: 5 out of 5 stars5/5Akbar Birbal Stories Rating: 5 out of 5 stars5/5Thannambikkai Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiyai Thoondum Arivu Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsAndraada Vazhkaiyil Vetri Pera Vazhikal Rating: 0 out of 5 stars0 ratingsUshadeepan Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsKundalini Sakthiyaal Ulakai Aalungal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vazhkkaiyin Thadaigalai Thaandungal
Related ebooks
Agavarigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsMuyarchiyinai Payirchi Sei Rating: 0 out of 5 stars0 ratingsVazhkaiyil Vetri Pera 38 Padigal Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5More + Rasam = Munnetram Rating: 0 out of 5 stars0 ratingsNokkathai Nokki Rating: 0 out of 5 stars0 ratingsYaar Indha Sundaravalli? Rating: 0 out of 5 stars0 ratingsThedal Rating: 3 out of 5 stars3/5Konjam Yosikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsVetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Enna Thozha Rating: 1 out of 5 stars1/5Sarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Vetrikana Mugavari Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsMeesai Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Vetri Rating: 0 out of 5 stars0 ratingsMadamaiyai Koluthuvom Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsUyarntha Sinthanaiye Vallamai! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda Periyavargal Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsSaga Manithargalai Sariyaga Anugum Murai! Rating: 0 out of 5 stars0 ratingsNallavai Naarpathu Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsKaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vazhkkaiyin Thadaigalai Thaandungal
0 ratings0 reviews
Book preview
Vazhkkaiyin Thadaigalai Thaandungal - Udayadeepan
http://www.pustaka.co.in
வாழ்க்கையின் தடைகளை தாண்டுங்கள்
Vazhkkaiyin Thadaigalai Thaandungal
Author:
உதயதீபன்
Udayadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/udayadeepan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பதிப்பகத்தார் உரை
வாழ்க்கையின் தடைகளைத் தாண்டுங்கள்
என்ற இந்த நூலில், மனிதன் தனக்கு தடைகளாக இருக்கும் அனைத்து சக்திகளையும், தாண்டிச் செல்ல, அதற்கு நிறைய வழிகளை தந்திருக்கிறார், ஆசிரியர் உதயதீபன்.
32 பற்களுக்கு இடையில், ஒரு நாக்கு, கடிபடாமல் செயல்படுவது போல, மனினைச் சுற்றி தடைகள் தான், வாழ்க்கையாக உள்ளன என்கிறார். எனவே தடைகளை எதிர்த்து நிற்க, குரல் கொடுக்கிறார். தடைகளை நீக்கும் வரைக்கும், முயற்சியை விடாது, தொடரச் சொல்கிறார்.
நமது ஆசைகளால் நமக்கு வாழ்க்கையில் தடைகள் ஏற்படுகின்றன. அதேபோல் வாழ்க்கையின் வீழ்ச்சிகளில், வாழ்க்கையின் இருட்டு நேரங்களில், தடைகளை விலக்க, தீவிரமாக போராடும் குணத்தை, நாம் பெறவேண்டும் என்கிறார்.
ஏழ்மையோ, அழகற்றிருப்பதோ, வாழ்க்கையில் தடைகளாக இல்லை என்பதும், மனிதனின் வெறுப்பு, தான் என்ற உணர்வும், எடுத்ததுக்கெல்லாம் பதில் பேசுவதும், எதையும் தாமதப்படுத்துவதும், வாழ்க்கையின் தடைகளாகின்றன என்பதும், அரிய கருத்துக்களே.
பிறரை குற்றம் கூறாமல், பிறரிடத்தில் அதிகம் எதிர்பார்க்காமல், சகிப்புத்தனத்தாலும், 'முடியும்' என்று நினைப்பதாலும், நமது எத்தகைய திடமான தடைகளையும், நாமே வெற்றி கொள்ள முடியும் என்கிறார்.
எதையும் சரியாக எடைபோட்டு, பிறரையும் மதித்து, அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து, தன்னைச் சுற்றி, அன்பு விதைகளை விதைத்தால், வாழ்க்கையின் தடைகள் தூளாகிவிடும், என்பது ஆசிரியரின் ஒரு புதிய அணுகுமுறை. இனி, இன்நூலைப் படித்து பயணடையுங்கள்.
பதிப்பகத்தார்
பொருளடக்கம்
1. தடைகளை தாண்டுவது ஏன்?
2. அதிகமான ஆசைகளால், தடைகள் அதிகமாக, உருவாகின்றன
3. ஏழ்மை என்பது, ஒரு தடையல்ல
4. சகிப்புத் தன்மையால், தடைகளை தகர்த்து விடுங்கள்
5. வாழ்க்கையின் இருட்டுக்களை கடப்பது, தடைகளை அகற்றுவது தான்
6. வீழ்ச்சிகள் என்பது தடைகள் அல்ல
7. அழகற்று இருப்பது ஒரு தடையல்ல
8. 'முடியாது' என்று நினைப்பதே, ஒரு தடைக்கல் தான்
9. மாற்றங்களை புகுத்தினால், தடைகள் அகலும்
10. மனிதனின் கையருகே இருக்கும் மிக மோசமான வெற்றிகள்
11. நம் வெறுப்பே நமக்கு தடைகளை உருவாக்குகிறது
12. தான் என்ற உணர்வே, நாம் வாழ, தடைக்கல்லாகிறது
13. வாழ்வின், ஒவ்வொரு வினாடியிலும், தடைகள் தான்
14. ஒருவரின் சுதந்திரமான தோரணையும், போக்கும், பிறருக்கு, ஒரு தடைதான்
15. கனவுகள் கண்டு, தடைகளை தகர்த்து, வெற்றிகளை அடையுங்கள்
16. பதில் பேசிப் பேசி, வாழ்க்கையில், தடைகளை, ஏற்படுத்தாதீர்கள்
17. தாமதத்தால் தடைகளை, உருவாக்காதீர்கள்
18. மனித அலட்சியம், முன்னேற்றத்திற்கான தடைகளை விதிக்கும்
19. தடைகள் நமக்கு வரும் காரணங்கள்
20. பிறரை குற்றம் கூறுவதிலும், நாம் நம் முன்னேற்றத்திற்கு, உள் தடைகளை, ஏற்படுத்துகிறோம்
21. பிறருக்கு நல்லது, செய்து விடுவது, எல்லா தடைகளையும் தகர்த்துவிடும்
22. தடைகளை உடைத்து அருளும், விக்னேஷ்வர்
23. முதலிரவில் நீ காதலித்தாயா என்ற கேள்வி, ஒரு வாழ்வுத் தடையாகிவிடும்
24. எதையும் சரியாக, எடை போட்டு விட்டால், தடைகளை எளிதில் கடக்கமுடியும்!
25. இயற்கை திரைகளை, தடைகளை, அகற்றுங்கள், வாழ்க்கையில் ஒளி வீசமுடியும்
1
தடைகளை தாண்டுவது ஏன்?
மனிதன் நினைப்பதற்கும், அவனுக்கு... நடப்பதற்கும் இடையில், ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி, மனிதன் ஒன்று நினைக்க, அவனுக்கு நடப்பது, வேறு மாதிரியாக இருக்கிறது. அது, அவன் நினைத்து பார்க்க முடியாததாகவும் இருக்கிறது! அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இப்படி, மனிதன் நினைப்பது நடக்காமல்... போவது, மனித வாழ்க்கையில் 70 சதவீதம். நமக்கு வரும், 30 சதவீத வெற்றிகளை, நம் மனதில் வைத்துக் கொண்டு, நாம் இன்னும் வெற்றிகளை பெறுவோம் என்று, மனப்பால் குடிக்கிறோம். ஆயினும் நமக்கு வரும் வெற்றிகள், நாம் நினைப்பதுபோல் அல்லாமல், நமக்கு அளந்து தான், தரப்படுகின்றன.
வெற்றியின் கற்பனையில், நம் வாழ்க்கை... முழுக்க, நம்பிக்கையுடன் நடக்கிறோம். ஆனால் வெற்றி என்பதைக் குதிரைக் கொம்பு என்று, புகழ்வார்கள். குதிரைக்கு எப்படி கொம்பு இல்லையோ, அப்படி வெற்றியும் மனிதன் நினைப்பது போன்று, இல்லை என்பதை வைத்தே, வெற்றி என்பது குதிரைக் கொம்பு என்று, சொல்லும் வழக்கம் இருக்கிறது.
அது சரி மனிதனுக்கும், வெற்றிக்கும்... நடுவில், மனிதனை வெற்றியை அடையவிடாமல் தடுக்கும் தடைகள் ஏராளம்! அவை ஒன்றோ, இரண்டோ அல்ல. அவை நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஒன்று மாற்றி ஒன்று, அவனின் கால்களை இறுக்குகின்றன. அவன் எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியிலும், முதலில் தென்படுவது, தடைகள் தான்.
மனிதன், ஒரு தடையில் இடறி விழுந்து... அவன் மறுபடியும் எழுந்து, தன்னை நிமிர்த்திக் கொண்டு, அடுத்த வெற்றிக்கு, அவன் தயாராகும்போது, மறுபடியும் இன்னொரு தடை, அவனை விழ வைத்து விடுகிறது.
இதுதான், மனித வாழ்க்கையின்... இலக்கணம் மனித வாழ்க்கையின் கூறு, அடித்தளம், எல்லாம். இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை, சுட்டிக்காட்ட முடியும்.
அதுவும், நம் உடம்பிலேயே இருக்கும்... ஒரு அமைப்பு அது. ஆம் அது, நம் வாய் தான். அதற்குள் 32 பற்கள், அதன் நடுவில், ஒரே ஒரு நாக்கு மட்டுமே உள்ளது.
நம் வாயில் போட்டு, உணவை அரைக்கும்... போது, நாக்கு 32 பற்களில், உணவை மாற்றி மாற்றித் தள்ளிக் கொண்டிருந்தாலும், ஒரு முறைகூட, அது தன்னை சுற்றி நான்கு புறமும், அசுரர்களாக இருக்கும் பற்களால், துண்டிக்கப்படுவதில்லை!.
எனவே, 32 எதிரிகளை சமாளிக்கும்... வழியில், நம் நாக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மனித வாழ்க்கையின் எதார்த்தமும். மனிதனைச் சுற்றி, அவனது நாக்கைச் சுற்றிலும் எதிரிகள், அதாவது பற்கள் இருக்கிறது போன்று...
மனிதன் பார்க்கும் திக்கில், பழகும்... திக்கில், வீட்டில், வெளியில், அவனுக்கு முன்பு தடைகள் நிறைய இருந்தபடியே, இருக்கின்றன. முட்களின் நடுவில், பாதை போட்டு, போவது போன்று...
தடைகளின் நடுவில், நம் மனித... வாழ்க்கை, சிறுகச் சிறுக முன்னேறியபடியே இருக்கிறது. இது ஒரு முன்னேற்றமா என்று பார்த்தால், நாம் தினமும் முன்னேற்றம், எதையும் அடையாமல்...
ஒன்று, இருந்த நிலையில் இருந்து... இறங்குகிறோம் அல்லது விழுகின்றோம். இன்னும் பல நேரங்களில், நாம் கீழே விழுந்ததில் இருந்து, எழ முடியாமல், நமது தின வாழ்க்கை ஓடுகிறது, பல ஆண்டுகள்.
இந்தத் தடைகள், பிறரால் மட்டும்... நமக்குள் ஏற்படுத்தப் படுகிறதில்லை. நமது குணங்களும், கோபங்களும், பிடிவாதங்களும், வீம்பும், வீராப்பும், நமது மடத்தனங்களும், நம் வாழ்க்கையின் குறுக்கே, நிறைய தடைகளை தினமும், வீசிக் கொண்டிருக்கின்றன!
எனவே, தடைகள் வெளியில் இருந்தும்... வருகின்றன. நமக்குள் இருந்தும், நமது சரியற்ற குணங்களில், நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் தடைகள் செய்யப்பட்டு, அவை, நம் முன்னேறி செல்லும், கால்களின் நடுவில், முட்களாக, கண்ணாடி சில்லுகளாக, கற்களாக வீசப்பட்டு, மேலும் நம்மை முன்னேறாமல் இருக்க, வைக்க அது வழிவகை செய்கிறது.
வெளியில் இருந்து வருபவை,பிறமனிதனால்... வருபவை என்றாலும், அவைகளை ஒரு விபரமுள்ள, விவேகமுள்ள, தன் மனதில் குற்றம் குறை, இல்லாத ஒரு மனிதனால், வெகு சுலபமாக, அதைத் தாண்டிச் செல்லமுடியும்.
ஆனால், நம் மனதில், இருட்டுக்களும்... வெறுப்பும், பகைமையும், பிறரை மதிக்காத