Meesai Enbathu...
()
About this ebook
மீசை என்பது...’ என்கின்ற எனது இந்த நூல் பல்சுவைக் கட்டுரைகள் நிரம்பியது அனைத்து கட்டுரைகளும் நல்ல மொழி நடையில் எழுதப்பட்ட நூல் ஆகும் இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கட்டுரைகள் The Origin of (almost) Everything என்ற நூலிலிருந்து எழுதப்பட்டவை. இந்த நூல் நான் UK சென்றிருந்தபோது வாங்கி வந்தது. இது போன்ற இன்னும் பல கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இந்த உலகில் கிணறு பயன்படுத்துகின்ற ஆச்சரியப்படுகின்ற அனைத்தும் எப்போது எப்படி தோற்றம் கொண்டது என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளனர் நூலாசிரியர்கள் தொடர்ந்து விதைக்கின்ற என்னுடைய நூல்களில் அவற்றைக் காணலாம்.
Read more from Thanjai Ezhilan
Mamannan Karikaal Chozhan Rating: 0 out of 5 stars0 ratingsParuvathin Vasaliley Rating: 0 out of 5 stars0 ratingsTamil Mozhi Ilakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsMadamaiyai Koluthuvom Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Payanathiley Rating: 0 out of 5 stars0 ratingsUlagathin Uchiyiley Rating: 0 out of 5 stars0 ratingsTamil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsChirithu Chirithai... Perithu Perithai... Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Ezhilan Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Meesai Enbathu...
Related ebooks
Kaatchikku Appal Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsBuddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsUyirottam Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pothumarai - Oru Oppaivu Rating: 0 out of 5 stars0 ratingsThiruneri! Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsAgavarigal Rating: 0 out of 5 stars0 ratingsPaarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Nagal Rating: 0 out of 5 stars0 ratingsநோக்கம்: உங்கள் ஆத்மாவின் உணர்ச்சிவயப்பட்ட பயணம். வாழ்க்கையை வேறுவித விழியாடியால் எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கற்றல் Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda Periyavargal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Enna Seyyum? Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsThirukkuralum Vettriyalarkalum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Meesai Enbathu...
0 ratings0 reviews
Book preview
Meesai Enbathu... - Thanjai Ezhilan
https://www.pustaka.co.in
மீசை என்பது...
Meesai Enbathu...
Author:
தஞ்சை எழிலன்
Thanjai Ezhilan
For more books
https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
ஒரு சொல்
‘மீசை என்பது...’ என்கின்ற எனது இந்த நூல் பல்சுவைக் கட்டுரைகள் நிரம்பியது அனைத்து கட்டுரைகளும் நல்ல மொழி நடையில் எழுதப்பட்ட நூல் ஆகும் இதில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கட்டுரைகள் The Origin of (almost) Everything என்ற நூலிலிருந்து எழுதப்பட்டவை. இந்த நூல் நான் UK சென்றிருந்தபோது வாங்கி வந்தது. இது போன்ற இன்னும் பல கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இந்த உலகில் கிணறு பயன்படுத்துகின்ற ஆச்சரியப்படுகின்ற அனைத்தும் எப்போது எப்படி தோற்றம் கொண்டது என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளனர் நூலாசிரியர்கள் தொடர்ந்து விதைக்கின்ற என்னுடைய நூல்களில் அவற்றைக் காணலாம்.
மேலும் பல நல்ல தகவல்கள் அடங்கிய சில கட்டுரைகள் இந்நூலில் உள்ளன பலரும் அறிந்த பொருள் நிறைந்தவை என்றாலும் என்னுடைய பார்வையும் எழுத்து வடிவமும் வித்தியாசமானவை கதை கவிதை எழுதுவதைவிட கட்டுரை எழுதுவது கொஞ்சம் மாறுபட்டது தான் கதை கவிதைகளின் நமது கற்பனைக் குதிரைகளை அவற்றில் மேய விடலாம் ஆனால் கட்டுரைகளில் அப்படிப்பட்ட குதிரைகள் அங்கே மேய முடியாது கட்டுரை என்பது உள்ளதை உள்ளபடியே எழுதுவது அங்கே கற்பனைக்கு இடம் இல்லை மொழி நடைதான் முக்கியம் அந்த வகையில் இந்த கட்டுரை நூல் உங்களுக்கு நல்ல அறிவுச் செல்வத்தை அள்ளி வழங்கும் என உறுதியளிக்கிறேன் எனது மற்ற நூல்களை ஆதரித்த தமிழ்மக்கள் இந்த நூலையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தஞ்சை எழிலன்.
- தஞ்சை எழிலன்.
உள்ளடக்கம்
வாழ்க்கையின் வசந்தம்
வாழ்க்கை எப்போது தொடங்கியது?
முதல் சொற்கள் எவை?
நாம் எப்போது எழுத ஆரம்பித்தோம்?
முத்தமிழ்ச் செல்வம்
இலக்கியத்தில் பாடு பொருள்கள்
இலக்கிய(த்தில்) பொங்கல்
தமிழ் இலக்கியத்தில் எண் ஐந்தின் சிறப்பு!
மகளிர் வாழ்க!
கல்லணை - தொழில் நுட்பம்
தமிழறிஞர் ந.மு.வே. நாட்டார்
மறைமலை அடிகளும் இந்தி எதிர்ப்பும்
யுக கவிஞன் பாரதி
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஆண்டன் செகாவ்
கடிதங்கள்
கிரீன்விச்
நேரத்தைச் செலவழிப்போம்
தன்னம்பிக்கையைக் கைக்கொள்ளுங்கள்
நாம் ஏன் தூங்குகிறோம்?
மீசை
இந்நூலாசிரியரின் மற்ற நூல்கள்.
1. வாழ்க்கைப் பயணத்திலே
2. தமிழ்த் திருமணம்
3. மாமன்னன் கரிகால் சோழன்
4. தமிழ்... மொழி இலக்கியம்... ஒருபார்வை
5. மடமையைக் கொளுத்துவோம்
6. உலகத்தின் உச்சியிலே
7. தஞ்சை எழிலன் கவிதைகள்
8. சிறிது சிறிதா... பெரிது பெரிதாய்...
வாழ்க்கையின் வசந்தம்
வாழ்க்கையின் மிகப் பெரிய இடர்ப்பாடுகள் எவையெனில் அனைத்தையும் மாற்ற விரும்புவதுதான். அல்லது எதையுமே மாற்ற விரும்பாததுதான். மக்களின் இரு பிரிவினருமே, ‘மையப்படுத்தும் மனக்குவிப்பு’ ‘என்ற ஒன்றின் மூலமாகவே செயல்படுகின்றனர். நம்மால் மாற்றவியலாதவற்றை ஒப்புக்கொள்வதும் இயன்றவற்றை மாற்ற முயலாததும். இவற்றிலுள்ள வேறுபட்டைப் புரிந்து அறிந்துகொள்வதும்தான். இம்மாதிரிச் சிக்கல்கள் சில நேரங்களில் தோன்றலாம். சிக்கல்கள் என்பது செய்திகளாகும். அச்செய்திகள் மூலம் நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். அப்படிக் கற்றுக்கொள்ள முயலும்போது தடைகள் ஏற்படலாம். அத்தடைகள் கற்றுக்கொள்வதற்காக அளிக்கப்பட்டக் கொடைகள் என்று உணரவேண்டும். வாழ்க்கையில் சூறாவளிகள் தோன்றலாம், சுனாமிகள் தோன்றலாம், அவற்றை அச்சம் தவிர்த்து முறியடித்து வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் வாழ்வில் அமைதி என்பதனை நம்மால் காண முடியும். அமைதி என்பது ஒரு கொடை, அது நம் எல்லோருக்கும் இருக்கக்கூடியதுதான். ஆகவே வாழ்க்கையை அமைதியுடன், உணர்ச்சிகளின் உந்துதலுடன் வாழக் கற்றுக்கொள்வோமேயானால் பின்னர் தொடர்ந்து அப்படி வாழாமல் இருக்க நம்மால் முடியாது. வாழ்க்கை என்பது மிக்க மதிப்புடையது என்பதால் அது மிக விரைவிலேயே நம்மைவிட்டு நகர்ந்து விடுகின்றது. அது சில நேரங்களில் மறைந்து போக, நம்மை அழைப்பதாகவும் இருக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே உறுதியானதல்ல, இறப்பைத்தவிர.
நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் அதன் பகுதிகளாக உள்ளன. வாழ்வின் கொடைகளாக சிரிப்பு என்பதும், சீற்றம் என்பதும் கொள்ளப்படுகின்றன. இவை இரண்டும் மனித இனத்திற்கே உரியனவாகும். சீற்றம் என்பது ஓர் எளிமையான உணர்வு அன்று. ஆனால் சிக்கல் என்பது சில நேரம் சீற்றத்தினால் உருவாகின்றது. அப்படிப்பட்டதானது சிக்கலே அல்ல. அச்சீற்றத்தோடு நாம் என்ன செய்கின்றோம் என்பதுதான் சிக்கல். வாழ்க்கையில் ஏற்படும் இது போன்ற சின்ன சின்ன தடைகள் விலகிச் செல்ல நாம்தான் வழிவிட வேண்டும். வாழ்வில் ஏற்படும் தடைகள் பெரும்பாலும் தனிப்பட்டத் தாக்குதல்கள்தான். அவை மனிதனின் உடல் வலிமையைக் கூட்டத்தக்கவை. முடிவிலிருந்து தொடங்குவதுதான் ஒரு நல்ல தொடக்கம். அதுபோல வாழ்க்கையையும் தொடங்க வேண்டும். இதுதானே உலக நியதி? எதையுமே அச்சமின்றித் துவங்கவேண்டும் அச்சம் நமக்கு ஒரேயொரு வழியைக் காட்டும். துணிவு என்பது வாழ்வதற்கான புதிய புதிய வாய்ப்புகளையும் வழிகளையும் திறந்து விடும். நமது வாழ்விலிருந்து நாம் எதை தவற விட்டுக்கொண்டிருக்கின்றோம் என்று எண்ணும்போது நாம் நம்மையே இழந்தவர்களாகின்றோம். பின்னர் தேடிக் கண்டுபிடித்து அது தான் தான் என்பதை கண்டுகொள்ளமுடியும். நமது வாழ்வில் விதிப்படிதான் எல்லாமும் நடக்கின்றன என்பதைவிட சில செயல்கள் அப்படித்தான் நடந்துவிடுகின்றன. கடலில் அலைகள் தோன்றுகின்றன. அவ்வலைகள் மேலேயும், கீழேயும், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றன. ஆனால் கடல் எப்போதும் போல அமைதியாகவே இருக்கின்றது. அப்படித்தான் நமது வாழ்க்கையும். நமது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளையும், சில நேரங்களில் எற்படும் மனப்புண்களையும் காலம் ஒன்றே ஆற்றவல்லதாக உள்ளது.
நமது வாழ்வில் ஏற்படும் உணர்வு அழிவு பெறுவதில்லை. அது சில நேரங்களில் நிலவறைக்குள் சென்று பதட்டம் நிறைந்த குகைகளை உருவாக்குகின்றது. நாம் அதற்கு நன்றி செலுத்த வேண்டும். நமக்கு நாமே நம்பிக்கைக் கொள்வதும் கனவு கான்பதும் உண்மைக்கான மறுப்பாகாது. அவற்றை வண்ணங்களாலும் வானவிற்களாலும் அழகு படுத்துவனவாகவே உள்ளன. நம்முடைய வளர்ச்சியும் தோற்றமும், நாம் மூச்சு விடுவதும் உண்பதும் போன்று ஆகிவிடுகின்றன. மனித இனத்தின் எல்லாமும் பகுதியாகவும், இயல்பாகவும், நெருக்கமாகவும் உள்ளவைதானே? நம்மிடம் உள்ள முரண்பாடு என்பது தவிர்க்க இயலாதுதான். ஆனால் அது கண்டடைவதின் ஒரு பகுதியாகவே உள்ளது, ஆகையால் எவ்வளவு அலை அடித்தாலும், மழை பெய்தாலும், புயல் சீற்றம் கொண்டாலும், தண்ணீர் கடலுக்குள்தான் திரும்பிச் செல்ல வேண்டுமே தவிர, கரையில் நின்று விடாது. அதுபோல உன்னிடத்திலேயே நீயும் திரும்பிச் சென்றுவிடவேண்டியதாகவே உள்ளது. ‘நம்மிடமிருந்து மூழ்கடிக்கப்பட்ட உணர்வு திடீர் வியப்பாக இருப்பதில்லை. ஆனால் அதனைக்கண்டு மலைப்புக்கொள்வதுதான் திடுக்கீடாக உள்ளது’ என்று அன்னி வில்சன் ஷெஹிப் என்பவர் கூறுகின்றார்.
சில நேரங்களில் நாம் குழந்தைகளாகவே நடந்துகொண்டு விடுகின்றோமல்லவா? ஆனால் குழந்தையோ விடைலையோ நமக்குள் இருப்பதில்லை. நமது வளர்ந்த மனமும் குழந்தை மனமாக மாறுவதில்லை. ஆனால் நம்முன்னே தொடர்ந்து வளர்ந்து வருகின்ற குழந்தையும் விடைலையும்தான் இருக்கின்றன. முதுமை அடைந்து விட்டோம் என்பதால் கடந்து வந்த பாதையில் உள்ள அனைத்துப் பருவங்களையும் இழந்து விடுவதில்லை. இதுதான் முதுமை அடைவது என்பதில் உள்ள பெரிய பொருளாகும்.
நாம் யார் என்பதை நாம் நமது நெஞ்சார நம்புவதே போதுமானது. இதுவே கூடுதலான மன நிறைவுடன் கூடிய சமன்பாட்டை உடைய வாழ்க்கையின் ஒரு திறவுகோலாகும். போதும் என்ற எண்ணத்துடன் இருப்பது என்ற உணர்வுடன் நாம் அமர்ந்து இன்று நம்முடன் தங்கியிருக்க நாம் கட்டாயமாக ஒப்புக்கொள்ளவேண்டும். ‘நீ வாழ்வில் எதைத் தேடுகின்றாயோ? அது உனக்குள்ளேயே இருக்கின்றது. அதை நீதான் தேடிக் கண்டடைய வேண்டும். அது நீயேதான்’ நம் வாழ்வில் செய்யத் தகுந்த எதையும் விரைவாக செய்வதே உகந்த செயலாகும். ஒரு மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்து நின்றாலும் அதிலிருந்து உதிர்ந்து விழுகின்ற இலைகளும், காய், கனிகளும் மண்ணில் விழுந்துதானே மடிகின்றன, அப்படித்தான் மனித வாழ்வும். மக்கள் எப்போதுமே மாற்றத்தை விரும்புவார்கள். ஆனால் அதை ஒருவர் மற்றவரிடம் சொல்வதற்கு மறந்துவிடுகின்றனர். நாம் அப்படிப்பட்ட மாற்றத்தைச் செய்ய முயலும்போதும் சில நேரங்களில், இயலாமையால் செய்யாமலிருக்கும்போதும் உண்மையாகவே அது செய்ய முடியாததாகிவிடுகின்றது.
வாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் ஒரு அழகிய பயணம். அதில் ஆசையுடன் பயணிக்க வேண்டும். நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பாதை பழசுதான், ஆனால் அதில் நமது பயணம் புதிதாக தொடங்க வேண்டும். நாம் பிறக்கும்போது தொடங்குகின்ற பயணம் ‘நான்’ என்பதில் தொடங்கி ‘நாம்’ என்பதில் முற்றுப்பெறவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கைப் பயணம்தான் இன்பம் நிறைந்த இனிய பயணமாக அமையக் கூடும்.
வாழ்க்கை எப்போது தொடங்கியது?
நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடையத் தொடங்குகிறது. இது விண்கற்களால் குண்டு வீசப்பட்ட ஒரு வன்முறை இடமாகும், இது எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டு ஒரு நச்சு வளிமண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. ஆனால் விரோத நிலைமைகள் இருந்தபோதிலும் அசாதாரணமான ஒன்று நடக்கிறது.
ஒரு மூலக்கூறு, அல்லது ஒருவேளை தன்னைத்தானே பிரதிபலிக்கும் திறன் கொண்ட மூலக்கூறுகளின் தொகுப்பு எழுகிறது. நமது இளம் கிரகம் ஏற்கனவே கண்ட அனைத்து அற்புதமான நிகழ்வுகளுக்கும், இது எல்லாவற்றிலும் மிக ஆச்சரியமாக இருக்கிறது.
பிரதிகள் தோன்றியவுடன், இயற்கையான தேர்வு தொடங்குகிறது. எந்தவொரு சந்ததியினருக்கும் மாறுபாடுகளுடன் சாதகமாக இருக்கும் அவை தங்களை பிரதிபலிப்பதில் சிறந்தவை. விரைவில், முதல் எளிய செல்கள் தோன்றும் வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது.
அது எப்படி நடந்தது என்பதைப் பற்றி முதலில் ஊகித்தவர்களில் டார்வின் ஒருவராக இருந்தார். எல்லா வகையான அம்மோனியா மற்றும் பாஸ்போரிக் உப்புகள், விளக்குகள், வெப்பம், மின்சாரம் போன்றவற்றைக் கொண்ட ஒரு ‘சூடான சிறிய குளத்தை அவர் உருவாக்க நினைத்தார்.’
சூடான குளங்கள் இனி வாழ்க்கையின் சாத்தியமான தொட்டிலாகக் காணப்படுவதில்லை. ஆனால், திறந்த கடல், ஆழ்கடல் துவாரங்கள், கதிரியக்கச் செயலில் உள்ள கிளைகள் மற்றும் களிமண்ணின் கட்டிகள் உள்ளிட்டவை