Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paruvathin Vasaliley
Paruvathin Vasaliley
Paruvathin Vasaliley
Ebook166 pages58 minutes

Paruvathin Vasaliley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் மிக இயல்பாகவும், இன்பம் பயப்பனவாகவும், நல்ல முறையிலும் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இளைய சமுதாயம் மட்டுமல்ல, ஒவ்வொரு வளரும் பருவத்தினரும், பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அறிய செய்திகளாகும். கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்களை ஆச்சிரியப்பட வைக்கும். ஆனந்தப்படவும் வைக்கும். என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580147710574
Paruvathin Vasaliley

Read more from Thanjai Ezhilan

Related to Paruvathin Vasaliley

Related ebooks

Reviews for Paruvathin Vasaliley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paruvathin Vasaliley - Thanjai Ezhilan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பருவத்தின் வாசலிலே

    Paruvathin Vasaliley

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan

    பொருளடக்கம்

    என்னுரை

    1. பருவமடைதல்

    2. ஊக்கிகள் (Harmones)

    3. உணர்வுகள்

    4. மூளை வளர்ச்சி

    5. ஏன் கோபம் வருகின்றது?

    6. ஒரே குடும்பம்

    7. நண்பர்கள் வட்டத்தில்

    8. உறவுகள்

    9. கொடுமைப்படுத்துதல்

    10. நான் யார்?

    11. ஆன்லைன் வாழ்க்கை

    12. உடல் மாற்றங்கள்

    13. எங்கும் முடி

    14. புதிய குரல்

    15. புள்ளிகள் (முகப்பரு)

    16. ஆண்களின் துண்டுகள்

    17. பாலியல் தூண்டுதல்

    18. பெண்கள் பற்றி?

    19. பெண்களின் துண்டுகள் (Girl’s Bits)

    20. செக்ஸ் (பாலுறவு)

    21. கர்ப்பம்

    22. கருத்தடை

    23. அதைச் செய்ய வேண்டுமா?

    24. சுத்தமாக வைத்திருத்தல்

    25. மருந்துகள் பற்றி

    26. அழுத்தத்தின் பிடியில்

    27. உடல்

    28. மன அழுத்தம் (Stress)

    29. தூங்க வேண்டுமா?

    30. என்ன நடக்கிறது?

    31. இருத்தல் (Being me)

    32. எவ்வாறு ஓய்வெடுக்க முடியும்?

    33. புணர்ச்சியின் அறிவியல்

    34. இதய துடிப்பின் அறிவியல்

    35. கவர்ச்சியின் அறிவியல்

    36. காதல் அறிவியல்

    37. ஆண்களுக்கு அதிகமுடி இருப்பது ஏன்?

    38. தூங்குவதை நிறுத்திவிட்டால்...?

    காணிக்கை

    வளரிளம் பருவத்தினருக்கு

    என்னுரை

    பருவமடைதல் என்பது, வளரிளம் பருவத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாய் விளங்குகின்றது. ஆம்! பருவம் எய்தியபின்தான் ஒருவனோ ஒருத்தியோ, குழந்தைத் தன்மையிலிருந்து முன்னேறி மனிதத்தன்மையை, அதாவது வளரிளம் பருவத்தை அடைகின்றனர். இந்தப் பருவம், மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது. இயற்கையானதும் கூட... இதை யாராலும் கட்டுபடுத்தவோ, நிறுத்திவைக்கவோ முடியாது என்பதுதான் உண்மை.

    இச்செயல் உலகம் முழுவதிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்றைய உலகம் வேகமான உலகம். அறிவியலின் தாக்கம் மனிதவர்க்கத்தை ஆட்கொண்டு இருக்கின்றது. ஆதலால் நேற்றைய தோற்றங்கள் இன்றைய மாற்றங்களாகின்றன. அந்த மாற்றங்களில் எல்லாம் மறைந்து விடாமல், மாய்ந்து விடாமல் இயற்கையாகவே நடைபெறும் ஒன்றுதான் இந்த பருவமடைதல் என்னும் மாற்றம். இது மனித இனத்திற்கு இயற்கை அளித்திருக்கும் பெரும் கொடையாகும்.

    நான் லண்டனில் (UK) தங்கியிருந்தபோது, அங்கு, உலகின் தலைசிறந்த நூலகமான பிரிட்டன் நூல் நிலையம் (BRITISH LIBRARY) சென்றிருந்தேன். அங்கு இந்த பருவமடைதல் சம்மந்தமான ஒரு நூலை படிக்க நேர்ந்தது. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் என்னைக் கவர்ந்ததால், இருமுறை அந்நூலைப் படித்து அக்கருத்துக்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டேன். நமது நாட்டிற்குத் திரும்பிய பின், அந்நூலைப் போல ஒரு நூல் எழுதினால் என்ன என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. என் நெஞ்சில் நிறைந்திருந்த அந்த கருத்துக்களையெல்லாம் மீண்டும் அசைபோட்டு, ஒரு சிறு நூலாக, இப்போது உங்களுக்குத் தந்துள்ளேன்.

    சில ஐயப்பாடுகள் எனக்குத் தோன்றிய நேரங்களில் நான் பல இணைய தளங்களை நாடி சிலவற்றை கைக்கொண்டேன். இந்த நூல் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய சிறந்த நூலாகும். குறிப்பாக பெற்றோர்கள் இந்நூலில் உள்ள கருத்துக்களைப் புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டலாம். அனைவரும் இந்நூலை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தஞ்சை எழிலன்

    1. பருவமடைதல்

    பருவமடைதல் பற்றி பலவிதமான கருத்துக்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, தங்களுக்கு ஏற்றபடி, காலத்துக்கு ஏற்றபடி, தாம் வாழுகின்ற நாட்டின் நிலைமைக்கு ஏற்ற படி, அவ்வப்போது நிலவும் சூழலுக்கு ஏற்றபடி, கருத்துக்களை தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றனர். இந்த மாதிரியான எல்லா கருத்துக்களும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் பொதுவான முக்கியமான சிலவற்றை நாம் இந்த நூலில் தொடர்ந்து பார்க்கலாம்.

    பருவமடைதல் என்றால் என்ன?

    பருவமடைதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றமாகும். இதை வளரும் இளம்பருவத்தினருக்கான முதற்படி என்றும் கூறலாம். இது, ஒருவர் பிறந்த காலத்தைவிட வேகமான நிலையில் உடலாலும் மனதாலும் வளர் நிலையை அடைவதேயாகும்.

    அது எப்போது ஏன் நடைபெறுகின்றது?

    பருவமடைதல் என்பது திடீரென்று ஓர் இரவிலோ ஓர் பகலிலோ நிகழ்வதல்ல. மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரே நேரத்தில் நிகழ்வதுமல்ல. ஆனால் ஒவ்வொருவரும் இந்த பருவத்தை கடந்தே தீரவேண்டும். ஒரு விளையாட்டு வீரரோ, இசைஞசானியோ, எழுத்தாளரோ எல்லோருமே இந்நிலையைக் கடந்துதான் வளர்ந்து வரவேண்டும். ஏன், நமது பெற்றோர்களோ, ஆசிரியர்களோ நாம் போற்றுகின்ற தலைவர்களோ யாருமே இப்பருவத்தை எதிர்கொள்ளாமல் வளர்ந்து வந்திருக்க முடியாது. ஆக, நமது உடலில் வளர்ச்சி மாற்றம் என்பது அநேகமாக, இருபது வயது வரை, மாற்றம் அடைந்து கொண்டுதான் இருக்கும். அந்த மாதிரி நாட்கள் கடினமானதாகக்கூட சில நேரங்களில் இருக்கக்கூடும். ஆனால், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்பதைப்போல வளர்ச்சியை உணரமுடியும். ஆனால் அந்த மாதிரியான தருணத்தில் மன ஓட்டம் மிக அதிகமாக இருப்பதாக தோன்றும். தன் இளமையான எண்ணங்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்க நேரிடும். இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற குழப்பமான மனநிலை எல்லோருக்கும் ஏற்படும். உங்கள் நண்பர்களுக்கும் இப்படிப்பட்ட நிலை மனதளவில் ஏற்படும். அப்போது உங்கள் ஆதரவு அவர்களுக்கும் அவர்களது ஆதரவு உங்களுக்கும் தேவைப்படும்.

    நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் பிறந்து வளர்கின்றோம். ஆதலால் பருவமடைதல் என்பது அதன் போக்கில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். சிலருக்கு ஆரம்பப் பள்ளி நாட்களின் இறுதியிலோ, இடைநிலையிலோ, இடைநிலைப்பள்ளி நாட்களின் ஆரம்பத்திலோ தொடங்கலாம். இது அவரவர்கள் வளரும் சூழல், வளர்க்கப்படும் சூழல், உண்டி உட்கொள்ளும் நிலை போன்றவற்றால் கால மாறுபாடு நிகழலாம். ஆனால் பருவமடைதல் என்பது நடந்தே தீரும். இது நடந்தால்தான், நடந்து முடிந்தால்தான், ஒருவனோ ஒருத்தியோ குழந்தைப் பருவத்திலிருந்து விடுபட்டு, குழந்தைப் பெறுவதற்காக, இளமைப்பருவத்தை அடைவதாகக் கருதமுடியும்.

    நிகழும் காலம்

    ஆண்களைவிட பெண்கள் ஒரு வயது அல்லது அதற்கு மேற்பட்டோ குறைந்த காலத்தில் பருவமடைந்து விடுவார்கள். சான்றாக 11 வயது அல்லது 12 வயது ‘பெண்கள் அவசரப் புத்திப் படைத்தவர்கள் என்பது இதனால்தானோ?’ ஆனால் ஆண்கள் வயதிற்கும் அல்லது அதன் பிறகும்தான் பருவ நிலையை எய்துவார்கள். பருவமடைதல் என்பது ஒருவருக்குப் பல ஆண்டுகளாக நீடிப்பது போல தோன்றலாம்; ஆனால் இது ஒரு நல்ல செயல். உடலளவில் ஏற்படும் மாற்றங்களான விருப்பு, வெறுப்புகள், உணர்ச்சிகள், நடத்தைகள் மற்றும் எண்ணங்களின் மன ஓட்டம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான போதிய கால நேரத்தை அளிக்கிறது. நினைவில் கொள்ளவும், பருவ நிலையை அடைந்துவிட்டாலும், உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் இன்னும் நீங்கள்தான். ஆனால் அதிக திறமை, அனுபவம் மற்றும் அதிக பலமாகவும் உணருவீர்கள்.

    குழப்பமான சூழல்

    இந்தச் சூழலில் உங்களுக்கு ஒன்றும் புரியாமலும், அடுத்தவர்களிடம் மனம் திறந்து பேச முடியாத நிலையும் ஏற்படலாம். முதலிலேயே கூறியபடி, உங்களுக்கு அனுசரணையாக உள்ள நண்பர்களையோ மற்றவர்களையோ அணுகலாம். உங்கள் உடலிலும் மனதிலும் பலவிதமான மாற்றங்கள் நிகழலாம். அந்த மாற்றங்கள்:

    1. உடல். 2. மூளை. 3. நடத்தை. 4. மனம்.

    1. உடல்: ஹார்மோன்கள் என்கின்ற வேதியல் மாற்றங்கள் உங்கள் உடலிலும் மூளையிலும் ஏற்படும். உடல் மெதுவாக வளர்ச்சி அடையும்போது புதிதாக உற்பத்தியாகும் ஹார்மோன்களை ஏற்றுக்கொள்ளும் நிலை அமைகிறது. இந்த ஹார்மோன்கள் என்னென்னன பாடுபடுத்துகிறது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். அதன் ஆட்டத்தை அறிந்துகொள்ள முடியும்.

    2. மூளை: பருவ மாற்றம் நடைபெறும்போது, உங்கள் மூளை பெரும் மாற்றங்களைச் சந்திக்கிறது. புதிய வழிமுறைகளுக்கு இடம் கொடுப்பதற்காக கடுமையாக உழைக்கிறது. அப்போது புதிய சவால்களை சந்திக்க நீங்கள் தயாராவீர்கள். உங்கள் நினைவாற்றல் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. உங்களுக்கு, கோபம், பயம், உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படும். இம்மாதிரியான நேரங்களில் உங்கள் மூளைக்கு ஓய்வு தேவை. அதற்காக அதிக தூக்கமும் ஓய்வும் மூளைக்கும் உடலுக்கும் தேவைப்படுகின்றன.

    3. நடத்தை: இதுவரை உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களும், நண்பர்களும், மற்றும் உங்களிடம் அனுசரணையாக இருந்தவர்களும், உங்களது உறவினர்களும் அவர்கள் முன்பு இருந்ததைவிட, திடீரென்று மிக முக்கியமானவர்களாக இருப்பதைப் போன்று தோன்றலாம். அவர்களை உங்களால் உணரமுடியும். இப்போது நீங்கள் ஆழமாக, அமைதியாக சிந்தித்து உங்கள் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக இருப்பதே சிறந்தது. அவர்கள் எப்போதும் உங்களுக்கு அனுசரணையாகவே இருப்பார்கள். இந்த நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். மனத் தைரியத்தோடு உங்கள் போக்கில் நீங்கள் தொடர்ந்து நடைபோடலாம்.

    4. மனம்: இக்காலங்களில் நீங்கள் உங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1