Manitha Vazhkkai
()
About this ebook
இந்நூல் பல துறைகளையும் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறிவியல், இலக்கியம், விவசாயம், சுயமுன்னேற்றம் என மனித வாழ்வுக்கு இன்றியமையாத முக்கியமான கட்டுரைகள் இவை. இவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் இன்றைய வேகமான உலகில் மக்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள நிச்சயம் உதவும். படிப்பவர்களுக்கப் பயன்தரும் நூல் இது.
Related to Manitha Vazhkkai
Related ebooks
Paruvathin Vasaliley Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Happy Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsMadamaiyai Koluthuvom Rating: 0 out of 5 stars0 ratingsMuthumozhi Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsSelva Kalanjiyame - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsTamil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Arockkiyam - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsMeesai Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsThathuvagnani Vedhathri Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratingsKaatru Vaanga Ponen Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsபடுக்கையில் குதிரையைப் போல் சவாரி செய்வது எப்படி? படுக்கையில் சிறந்த வீரராகவும் வீரராகவும் இருப்பது எப்படி Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga! Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Eppothum Santhosam! Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Yethu Aanmai? Rating: 5 out of 5 stars5/5Vazhkai Nalam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Vayathu Vaazha Nooru Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manitha Vazhkkai
0 ratings0 reviews
Book preview
Manitha Vazhkkai - AR. Arulselvan
https://www.pustaka.co.in
மனித வாழ்க்கை
(மனித குல நலனுக்கான கட்டுரைகள்)
Manitha Vazhkkai
Author:
அரு. அருள்செல்வன்
AR. Arulselvan
For more books
https://www.pustaka.co.in/home/author/arulselvan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அறிவியல் இறையியல் தன்மைகள்
2. பாலியல் அறிவின் அவசியங்கள்
3. போதையை மாற்றும் பாதைகள்
4. உடல்நல ஆலோசனைகள்
5. வேலை உரிமைப் போராட்டங்கள்
6. மின்சக்தி, அணுசக்தி பயன்பாடுகள்
7. கம்ப்யூட்டரால் உருவாகும் விளைவுகள்
8. சாணக்கியரிடம் தோன்றிய சிந்தனைகள்
9. இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்புகள்
10. கலை இலக்கியக் கூறுகள்
11. தமிழுக்கு ஐரோப்பியர் தொண்டுகள்
12. வெற்றி பெற யோசனைகள்
13. விவசாயம் மேம்பட வழிமுறைகள்
1. அறிவியல் இறையியல் தன்மைகள்
இருபதாம் நூற்றாண்டானது அறிவியல் நூற்றாண்டு என போற்றப்படுகிறது. இந்நாளில் அறிவியலானது எல்லாத்துறைகளிலும் பரவி ஊடுருவி வருகிறது.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியானது, கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்குரிய பண்பாட்டைத் தூளாக்கும் விதத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது
என்று அறிஞர் பெட்ரான்ட் ரஸ்ஸல் தனது சைன்டிஃபிக் அவுட்லுக் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் சொல்வதைப்போல அறிவியல் என்பது மிக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒரே ஒரு செல்லை வைத்துக்கொண்டு க்ளோனிங் முறையில் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
பூகோள ஆய்வுத்துறை (Geology) இதற்கு முன்பெல்லாம் ஆயிரம் என்ற அளவில் பேசப்பட்டு வந்தவனவற்றை நூறாயிரம் கோடி என்றெல்லாம் பேசும்படி செய்துவிட்டது. பெளதிகம் மிகச்சிறிய அணுவில் மிகப்பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
உடலியல் துறை ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள எல்லையற்ற மறைபொருள் நுட்பத்தினை ஆராய்கிறது. மனித இயல்துறை சந்தேகத்திற்கு இடமில்லாமல் மனிதனின் பழமையைப் பற்றிப் புதிதாக வலியுறுத்துகிறது. தொல்பொருள் இயல்துறை புதையுண்ட நகரங்களையும் உயிரனங்களையும் அகழ்ந்து எடுத்து திகைக்க வைக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையையும் போரையும் சிக்கலாக்குகின்றன. பொருளியல் கொள்கைகள் ஆட்சிகளைக் கவிழ்த்து உலகத்தையே நிலை கலங்கச் செய்கின்றன. இப்படி மனித அறிவானது இன்று பெருகி வளர்ந்திருக்கின்றது.
அறிவியல் துறைகள் வளர்வதைக் கண்ட சிலர் அறிவியலும் இறையியலும் எதிர் எதிரானவை என்ற ரீதியில் நினைக்கவும் பேசவும் செய்கின்றனர்.
அறிவியல் என்பது ஐம்புலன்களுக்குள் அகப்படும் புறப்பொருட்களையும், பருப்பொருட்களையும் ஆராய்கிறது. இறையியல் ஐம்புலன்களுக்கு எட்டாமல் இருக்கும் அகப்பொருட்களையும் நுண்பொருட்களையும் ஆராய்கிறது.
உண்மையில் எங்கே அறிவியல் செயலிழந்து நிற்கிறதோ அங்கிருந்து இறையியல் தொடங்குகிறது எனலாம்.
அறிவியல் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அது இன்னும் குழந்தைப் பிராயத்தில்தான் இருக்கிறது. ஏனென்றால் அறிவியலால் புரிந்துகொள்ளப்பட முடியாத இரகசியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.
அறிவியல் அறிவு சார்ந்தது என்றால் இறையியல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலரது அனுபவங்களை உள்ளடக்கியது. இறையியல் கலக்காத அறிவியல் மூடத்தனமானது. அறிவியல் கலக்காத இறையியல் குருட்டுத்தன்மை வாய்ந்தது, என்கிறார் அறிஞர் ஐன்ஸ்டீன்.
எனவே அறிவியலும் இறையியலும் ஒன்றையொன்று சார்ந்திருத்தலே உலகிற்கு பயன்தரும்.
2. பாலியல் அறிவின் அவசியங்கள்
பாலுணர்வில்லாத எந்த மனிதனும் இல்லை. ஏனெனில் மனிதனின் பிறப்பே பாலுணர்வின் உந்துதலால் விளைந்ததுதான். எனவேதான் எல்லோர்க்கும் பாலுணர்வு பிடித்திருக்கிறது. மனிதனுக்குள் எழும் உணர்வுகளில் பாலுணர்வு மட்டும் வித்தியாசமானது. வேகமானது. இது மட்டும்தான் மழலைப் பருவத்திலேயே தோன்றாமல் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அதாவது வயது தெரிந்தபிறகு தோன்றுகிறது. அதனால்தான் இது முக்கியமானதாக இருக்கிறது.
பெரும்பாலும் சுவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குப் புலப்படும். பாலுணர்வு தோன்றும் பருவத்திலிருந்துதான் எந்த ஒரு மனிதனுக்கும் சுயப்பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. பிள்ளைகள் பாலுணர்வு தோன்றுவதற்கு முன் வரை பெற்றோர் ஆலோசனைப்படி நடக்கிறார்கள். ஆனால் பாலுணர்வு தோன்றியபின் குழந்தைகளின் வாழ்வில் மாற்றமும் அறிவுத் தெளிவும் ஏற்படுகிறது. அத்துடன் பாலுணர்வால் மனநிலைகூட மாற்றமடைகிறது. அது அளவுக்கு அதிகமானால் அல்லது வரைமுறையைத் தாண்டிவிட்டால் செயற்கையாகிறது. அதுவே மனிதனை தாழ்த்தியும்விடுகிறது. மேலும் சமூகத்தில் பாலியலால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகமாக இருக்கின்றன. எனவே பாலியலை யாராலும், எந்த மருத்துவத்தாலும் அலட்சியப்படுத்த முடியாது.
இயற்கையான முறையில் எழும் பாலுணர்வு மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது. இயற்கைக்கு எதிரான வழியில் எழுப்படும் பாலுணர்வு நிம்மதியைக் கெடுக்கிறது. பாலியலில் எது இயற்கை? எது செயற்கை? எது ஆரோக்கியம்? எது நோய்? எதைக் கைவிட வேண்டும்? எதைக் கடைப்பிடிக்க வேண்டும்?
முதல் விஷயம், பெரும்பாலும் குழந்தைகள் பருவமடையும் 14 வயதிலிருந்து அவர்களிடம் பெற்றோர்கள் அன்பைக் காட்ட வேண்டும். அவர்களை நண்பர்கள்போல் கருதவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்குச் சொந்தமில்லை.
பருவமடைந்ததும் பாலுணர்ச்சி அதிகமாகப் பெருக்கெடுத்து ஓடும். பெரும்பாலானவர்கள் பாலுணர்ச்சியை விட முக்கிய விஷயம் ஏதுமில்லை என்ற முடிவுக்குள் தள்ளப்படுகிறார்கள். அதனால் பாலுணர்வுக்கு வடிகாலாய் ஆரோக்கியமற்ற சில வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். அதில் முக்கியமானது சுய இன்பம்.
பல கெட்டப்பழக்கங்களை ஒரு நாள்விடமுடியும். ஆனால் சுய இன்பம் பழகிவிட்டால் அதை விட முடியாது. திருமணத்திற்குப் பிறகும்கூட அது தொடரும். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அன்பு குறையும். சுய இன்பப் பழக்கமுள்ளவர்கள் யதார்த்த நிலைகளை சந்திக்க இயலாதவர்களாக இருப்பதுடன் அவர்களுடைய உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. சுய இன்பத்தின்போது மூளையும் சிறுநீரகமும் நுரையீரலும் மட்டும் அதிகமாக சூடாகின்றன. அதனால் இம்மூன்று உறுப்புகளும் விரைவில் சோர்வடைகின்றன. மீதமுள்ள உறுப்புகளில் தேங்கியுள்ள பாலுணர்ச்சி சக்தி வடிக்கப்படாமல் அங்கேயே தேங்கி கெட்ட சக்தியாகிவிடுவதால் ஒவ்வொரு செல் அணுக்களும் பாதிக்கப்படுகின்றன.
எனவே இளவயதினர் பருவ வயதில் எண்ணங்களைத் திட்டமிட்டு நல்ல விஷயங்களில் திருப்பவேண்டும். திருமணத்திற்குப் பிறகு இன்பத்தை அனுபவிப்பவர்கள் வாழ்வில் வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.
இன்றைய தினம் உயர்நிலைப் பள்ளிகளில் செக்ஸ் கல்வி வழங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது பற்றிக்கூட இருவேறுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இக்கல்வி மாணவர்களைக் கெடுத்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிந்தித்துப் பார்க்கும்போது செக்ஸ் கல்வி தேவை என்றே தோன்றுகிறது. மாணவர்களுக்கு செக்ஸ் பற்றி தெரிந்தபிறகு ஏற்படும் பாதிப்புகளைவிடத் தெரியாத காரணத்தால் உண்டாகும் பாதிப்புதான் அதிகமாக இருக்கும்.
பள்ளிகளில் 10 வயதான மாணவிகளுக்கு பெண் ஆசிரியர் மூலம் பாலியல் கல்வியும், 15 வயதான மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர் மூலம் பாலியல் கல்வியும் கற்பிக்கப்பட வேண்டும்.
செக்ஸ் பற்றிய கருத்துக்களை கீழ்க்கண்டவாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
1. ஆண் பெண் உடல் உறுப்புகளின் வேறுபாடுகள்.
2. ஆணுக்கு உயிரணு (விந்து) வெளிப்படுதல் அவன் பருவமடைந்துவிட்டான் என்பதற்கு அறிகுறி.
3. பெண்ணின் பிறப்புருப்பில் கருப்பைக்கு வழி ஏற்படுதல், மாதவிடாய் வருதல் ஆகியவை அவள் பருவமடைந்ததற்கான அடையாளம்.
4. ஆணுக்கு பெண்மீதும் பெண்ணுக்கு ஆண்மீதும் ஏற்படும் இயற்கையான ஈர்ப்பு.
5. திருமண வயது - காரணங்கள்.
6. உடலுறவு - ஆண் பெண் இணைந்து இன்புறுதல்.
7. ஆணுடைய உயிரணு பெண்ணின் கருமுட்டையுடன் இணைவதால் குழத்தை உருவாகி கர்ப்பப்பையில் வளர்தல்.
8. ஆணின் உயிரணுவில் X, Y என்ற இரண்டு குரோமோசோம்கள் உள்ளன. பெண்ணின் கருமுட்டையில் X மட்டுமே உண்டு. ஆணுடைய X குரோமோசோம் உள்ள விந்தணு பெண்ணுடைய கருமுட்டையுடன் சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கிறது. Y குரோமோசோம்கள்