Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!
Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!
Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!
Ebook189 pages1 hour

Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் மனைவி உறவின் நிலை இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிக்கல்கள் நிறைந்த, இக்கட்டான நிலைக்கு மாறியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உளவியல் அடிப்படையிலான சிக்கல்கள் என்பதால் ஆண்களும் பெண்களும் அவற்றை புரிந்து கொள்ள முடியாமலும், தீர்க்க முடியாமலும் திணறுகின்றனர். கணவன் மனைவி உறவுக்கான அடித்தளம் எங்கே இருக்கிறது எனத் தெரியாமல், அதன் மையப்புள்ளி எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் தம்பதியினருக்கு உதவும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

அறிவியல் / உளவியல் கோணத்தில், ஆராய்ச்சிப்பூர்வ முடிவுகளை அடிப்படையாக வைத்தே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை படித்து நீங்கள் உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் - நிச்சயம் உங்களின் தாம்பத்திய வாழ்க்கை சுவையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறும் என்பதில் துளிகூட சந்தேகமில்லை.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580155810906
Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!

Read more from P. Lingeswaran

Related to Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!

Related ebooks

Reviews for Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga! - P. Lingeswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணவன் - மனைவி தாம்பத்தியம் இன்ப மயமாக!

    Kanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga!

    Author:

    ப. லிங்கேஸ்வரன்

    P. Lingeswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-lingeswaran

    பொருளடக்கம்

    நூலின் நோக்கம்

    1. கணவன் மனைவி உறவு - இன்றைய நிலை சொர்க்கமா? நரகமா?

    2. ஏன் திருமணம் செய்து கொள்கிறோம்?

    3. கணவன் மனைவி இருவரும் நண்பர்களா? காதலர்களா?

    4. பாலுறவில், மனக்காயங்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன?

    5. பெண்கள் எனும் புதிர்: ஆண்களுக்கு மட்டும்

    6. ஆண்கள் எனும் தியாகிகள்: பெண்களே உங்களுக்காக

    7. பெண்ணின் பாலுணர்வு & ஆணின் பாலுணர்வு - இரண்டிற்குமுள்ள வித்தியாசம்

    8. அன்பு உருவாக பாலுறவு எவ்வாறு காரணமாக அமைகிறது?

    9. ஒரு ஆண் பாலுறவில் எப்படி செயல்பட வேண்டும்?

    10. ஒரு பெண் பாலுறவில் எப்படி செயல்பட வேண்டும்?

    11. தாம்பத்தியத்தில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியவத்துவம்

    12. பாலுறவில் ஆற்றல் மேம்படுவதற்கான சில பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள்

    13. தாம்பத்தியத்தையும் தாண்டி!

    14. சோஷியல் மீடியாக்கள் எவ்வாறு கணவன் மனைவி உறவை சீர்குலைக்கின்றன & ஆபாசப் படங்களின் கொடிய விளைவுகள்

    15. மாமியார் மருமகள் சண்டைக்கான தீர்வு

    References

    * கணவன் மனைவிக்கிடையில் அன்பு, அந்நியோன்யம், நெருக்கம், பாசம், ஒற்றுமை போன்றவை அதிகரிப்பதற்கான தாம்பத்திய மற்றும் உளவியல் வழிகாட்டுதல்கள்

    * குடும்பத்தில் அமைதி நிலவ, குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பதற்கான ஆழ்ந்த புரிதல்களை பெற்றோரிடத்தில் உருவாக்கும் நூல்

    நூலின் நோக்கம்

    இந்த நூல் இரண்டு நோக்கங்களுக்காக எழுதப்பட்டுள்ளது.

    ஒன்று, தம்பதியினருக்காக மற்றும் திருமணம் ஆகாத, திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண் பெண்கள் இருவருக்காகவும்.

    தற்செயலாக ஒருநாளில் இந்தப் புத்தகத்தை எழுதத் துவங்கினேன். ஆனால், இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துக்கள் அதற்கு முன்பே, பல நாட்களாக, பல மாதங்களாக - சிறிது சிறிதாக என் மனதில் உருவேறிக் கொண்டே இருந்தவை தாம்.

    நூல்கள் என்பவை நாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்பது என் கருத்து. மனதில் சுழன்று கொண்டிருந்த எண்ணங்களை கோர்வையாக்கி, ஒழுங்குபடுத்தி, வகைப்படுத்தி, எளிமைப்படுத்தி இந்நூலை எழுதியுள்ளேன்.

    சிறு வயதிலிருந்து யோகாவிலும், பின்பு வேதாத்திரி மகரிஷி அவரது தத்துவங்களின் அறிமுகத்திற்கு பிறகு, ஆன்மீகத்திலும் பரிச்சயமும் தெளிவும் கிடைத்தது. பல வருடங்களாக யோகா கற்றுத் தந்து வருகிறேன். அவ்வப்போது உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன். அவ்வாறு என்னிடம் யோகா கற்றுக் கொள்ள வருபவர்களிடமும், உளவியல் ஆலோசனை பெற வருபவர்களிடமும் ஒரு முக்கியமான விஷயத்தை என்னால் கிரகிக்க முடிந்தது.

    பொதுவாக, ஏதோ ஒரு உடல் நலக் கோளாறுக்கோ, மனதில் உள்ள சிக்கலுக்கோ வருவார்கள். இருந்தாலும், வருகின்ற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும், ஆழ்மனதில் ஒருவிதமான மன அழுத்தமும், விரக்தியும், மனச்சோர்வும் புதைந்திருந்ததை என்னால் கூர்ந்து கவனிக்க முடிந்தது.

    பல வருடங்கள் இதைப் பற்றி சிந்தித்தும், ஆய்வும் செய்து வந்தேன். தங்கள் ஆழ்மனதில் மன அழுத்தமும், விரக்தியும் இருப்பதை பெரும்பாலோர் உணர முடியாமல் தான் இருந்தார்கள். தங்களுக்கு வெளிப்படையாக என்ன உடல் / மனப் பிரச்சனை தொந்தரவு செய்கிறாதோ, அதை மட்டும் கூறுவார்கள். இருந்த போதிலும், மனோதத்துவத்தில் நன்கு அனுபவம் பெற்ற எனக்கு, அவர்களின் அடிமனத்தில் என்னென்ன காரணங்களால் அழுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை.

    கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சனை தான் அது. கணவன் மனைவி உறவுக்கான அடித்தளம் எங்கே இருக்கிறது எனத் தெரியாமல், கணவன் மனைவி உறவின் மையப்புள்ளி எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் தம்பதியினருக்கு உதவும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

    நான் பார்த்த வரையில், தம்பதியர் இருவரில், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் மிகக் கடுமையாக ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடித்தால் கூட வெளியில் தெரிந்து விடும். ஆனால், வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் புண்படுத்துவதும், உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதும் யார் கண்ணுக்கும் தெரியாது. இவ்வாறு கணவன் மனைவி இருவரும் அவர்களையும் அறியாமல் ஆழ்மன அளவில் நடந்து கொள்கிறார்கள்.

    திருமணம் ஆவதற்கு முன்னர், தன் எதிர்கால வாழ்க்கைத் துணைவரைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் - ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ எத்தனை எத்தனை கற்பனைகள், இன்ப நினைவுகள் மனதில் இறக்கை கட்டி பறக்கின்றன. இருவர் காதலிக்கும் போது, எத்தனை எத்தனை சுவாரசியங்கள். திருமணத்திற்கு பிறகோ, அத்தனை கற்பனைகளும் சுக்கு நூறாக நொறுங்கிப் போகின்றன. இது எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது?

    திருமண உறவில் ஓர் ஆண் ஒரு பெண்ணிடமும், ஒரு பெண் ஓர் ஆணிடமிமும் தங்கள் வாழ்க்கை முழுவதுக்குமான உதவியை நாடி நிற்கிறார்கள். திருமண உறவு என்பது ஒரு சபிக்கப்பட்ட உறவல்ல. கணவன் மனைவி உறவில், ஒருவருக்கொருவர் சட்டம் பேசிக் கொண்டே இருப்பதும், வசைபாடிக் கொண்டே இருப்பதும், தர்க்கங்கள் புரிந்து கொண்டே இருப்பதும் - அந்த உறவின் தெய்வீகத் தன்மையை குறைப்பதாகும். சட்டம் பேசி வாதாடுதல், வசை பாடுதல், தர்க்கங்கள் போன்றவற்றிற்கான இடம் குடும்பம் அல்ல.

    துரதிருஷ்டவசமான இந்த நிலை மாற வேண்டும். கல்வி அறிவிலும், தொழில்நுட்பங்களிலும் எவ்வளவோ முன்னேறியுள்ள நம் சமூகத்தில் மனிதர்களின் இந்த அடிப்படை பிரச்சனை, இன்னும் ஒரு சரியான தீர்வை நோக்கி எட்டப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது ஆகும்.

    கணவன் மனைவி உறவில் நிம்மதி இல்லாமல் இருப்பது, ஏதோ இரண்டு மனிதர்களின் பிரச்சனையல்ல. குழந்தைகளை பாதிக்கக் கூடியது, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. குடும்பங்கள் பல சேர்ந்ததே சமூகம். எனவே சமூகத்திலும், பணியிடங்களிலும், தேசத்திலும் - இந்த சிறிய பிரச்சனையின் துவக்கம் சங்கிலித் தொடர் போன்று, கண்ணுக்குத் தெரியாத அளவில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கக்கூடியது. ஒரு தீப்பொறி காட்டையே அழித்து விடும் அல்லவா?

    கணவன் மனைவி உறவிலும், அவர்களின் தாம்பத்திய உறவிலும் நிலவும் அடிப்படை பிரச்சனைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் - பல்வேறு கோணங்களில் விளக்கி, தீர்வுகளைத் தர முயன்றுள்ளேன். முடிந்த வரை, அறிவியல் / உளவியல் கோணத்தில், ஆராய்ச்சிப்பூர்வ முடிவுகளை அடிப்படையாக வைத்தே இந்நூலை எழுதியுள்ளேன்.

    இரண்டாவது நோக்கம்:- உலகமயமாக்கலுக்கு பிறகு நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது. தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே ஒன்றாகி விட்டதைப் போல தோற்றமளிக்கிறது. நம் சமூகம் எல்லாப் பிரிவுகளிலும் அபார வளர்ச்சி அடைந்துள்ளது.

    எனினும், இன்றளவும் காம உணர்வை குறித்த சரியான அறிதலும், புரிதலும் பெரும்பாலான மக்களிடையே இல்லை. காம உணர்வைக் குறித்த கண்ணோட்டம் (healthy and right perception) ஆரோக்கியமானதாக இல்லை. காமம் என்றாலே நெளிகிறார்கள், சங்கடப்படுகிறார்கள். அசிங்கமாகவும், அருவருப்பாகவும் கூட பார்க்கிறார்கள். ஆனால், மனித குலமே அங்கேதான் துவங்குகிறது இல்லையா?

    ஆரோக்கியமான கண்ணோட்டம் என்றால் அது ஆரோக்கியமான மனநிலையே ஆகும். மனநிலை நலமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது தவறுகள் நடக்க வாய்ப்பில்லை.

    எந்த விஷயத்தைப் பற்றிய சரியான புரிதலும், கண்ணோட்டமும் நமக்கு இல்லையோ, அதை நம்மால் திறம்பட கையாள முடியாது என்ற உண்மை உங்களுக்கே தெரிந்திருக்கும். திறம்பட கையாள முடியாது என்பதைத் தவிர - அவ்விஷயத்தை அபாயகரமான வழிகளில் பயன்படுத்தி விடக் கூடும் என்ற சாத்தியக்கூறும் அதில் உள்ளது. பாலியல் ரீதியாக குலை நடுங்க வைக்கும் சம்பவங்கள் கூட, சமூகத்தில் நடப்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

    உறவுகளிலுள்ள, சமூகத்தில் நிலவும் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம் - பாலுறவு, காமம் என்ற சொற்களின் உண்மையான அர்த்தம் புரிவதில்லை. அதைப் பற்றிய புரிதல், அறிதல், கண்ணோட்டம் ஆகியவை தவறாக இருக்கின்றன.

    வயதில் மூத்தவர்கள், வாழ்க்கை அனுபவம் பெற்ற பெரியவர்கள், அறிஞர்கள் ஆகியோர் மேற்கண்ட சூழ்நிலைகளின் அத்தியாவசியத்தை புரிந்து கொண்டு - வருங்கால சமுதாயத்தை, இளைஞர்கள் சமுதாயத்தை சரியான வழியில், வழிநடத்த வேண்டிய அவசியத்திலும் கட்டாயத்திலும் இருக்கிறோம். அது நம் கடமையும் கூட.

    ஆகையால், மேற்கண்ட இரண்டு நோக்கங்களும் பூர்த்தியாகும் வகையில் - கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ள கசப்புணர்வு, வெறுப்பு, சண்டை சச்சரவுகள், வாக்கு வாதங்கள் நீங்கி - இருவரும் ஒற்றுமையாக, நிம்மதியாக குடும்பம் நடத்தவும் - இருவருக்குமிடையில் அன்பு, பாசம், நேசம் போன்றவற்றை நிலவச் செய்யவும் தேவையான தகவல்களை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை படித்து நீங்கள் உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் - நிச்சயம் உங்களின் தாம்பத்திய வாழ்க்கை சுவையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

    அதன் மூலம் குடும்ப அமைதி மட்டுமல்ல - உங்கள் குழந்தைகளின் எதிர்காலமும், சமூகத்தின் அமைதியும் சிறப்புறும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகமில்லை.

    மேலும், தாம்பத்யத்தைப் (பாலுணர்வைப் பற்றி) பற்றி ஒருவர் பெறும் சரியான கண்ணோட்டம் என்பது- அவர் தேவையில்லாமல் தன் வாழ்வில் சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்கச் செய்வதோடு, பழி பாவங்களில் ஈடுபட விடாமல் தடுக்கும்.

    கணவன் மனைவியர், இளைஞர்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என இருபாலரும் இந்நூலை பொறுமையாக படித்து - நூலின் மையக்கருத்தை (understanding the central idea) புரிந்து, உள்வாங்கிக் கொண்டு பலன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நூல் நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். படிக்க இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

    அன்புடன்,

    ப.லிங்கேஸ்வரன்

    இடம்: திண்டுக்கல்

    அலைபேசி: 9597665196

    சமர்ப்பணம்

    என்னுடைய நண்பர்கள்

    அருண், பாரதி, Dr. சரவணகுமார், கமல் ராஜ், தாமோதரன், மாரியப்பன், சதீஷ், கார்த்திகேயன், முருகானந்த், கணேஷ், ஜமுனா, தீப்பு, பார்த்திபன், Adv.சுரேஷ் பாஸ்கர், அனிஷ் ஜாப் குரியன், கதிரேசன், SM சுரேஷ் பார்த்தசாரதி

    ஆகியோருக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்

    முக்கியமான குறிப்பு

    இந்த நூலில் கணவன் மனைவி உறவில் நிலவும் சிக்கல்களும், அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களும் அவற்றிற்கான சில தீர்வுகளும், இயன்றவரை, பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. சட்டத்தின் படியும், சமூக அங்கீகரிப்பின் மூலமும் நிகழும் முறையான திருமண வாழ்க்கை மற்றும் தாம்பத்தியம் குறித்த பல தகவல்கள் இந்நூலில் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் பல விஷயங்கள் உளவியல் மற்றும் அறிவியல் அடிப்படையிலானவை. இருந்த போதிலும், சில நேரங்களில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இந்த நூலின் எல்லையை (beyond the scope of this

    Enjoying the preview?
    Page 1 of 1