Nee Pathi... Naan Pathi...!
By S.K. Murugan
4/5
()
About this ebook
மனிதன் ஒருவன்தான் இன்பத்தின் திறவுகோல் கையில் இருந்தாலும், அதை அனுபவிக்காமல் வேறு எதையோ தேடித்தேடி அலைந்துகொண்டு இருக்கிறான். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கும் அற்புத புதையல். ஆனால், அந்தப் புதையலை செலவழித்து சந்தோஷமாக இருக்கத் தெரியாமல், அதை காவல் காப்பதில் சக்தியை செலவழித்து வருத்தப்படுகிறான்.
நீ பாதி... நான் பாதி...! ஆக வாழலாமா....
Read more from S.K. Murugan
Gnanaguru Magizhchi Rating: 0 out of 5 stars0 ratingsAathma Logam Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - January 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Yakkai - Panguni 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Yakkai - Chithirai 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - April 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness December 2023 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Yakkai - Maasi 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - November 2023 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Happiness - March 2024 Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Tamil Leader - April 2024 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Happy Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nee Pathi... Naan Pathi...!
Related ebooks
Prachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratingsKanavan - Manaivi Thambathiyam Inba Mayamaga! Rating: 0 out of 5 stars0 ratingsManapenne Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Saathikkalam Rating: 0 out of 5 stars0 ratingsThathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsJeyippatharkku Mattumey Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsAcham Thavir Ucham Thodu Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsKaithalam Patriya Kadavulargal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Mannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsManamey Nee Magizhnthidu Rating: 0 out of 5 stars0 ratingsSariyaga Seivathu Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsPuthuputhu Anubavangal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Vazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsYethu Aanmai? Rating: 5 out of 5 stars5/5Avan Rating: 3 out of 5 stars3/5Chocolate Saavigal Rating: 0 out of 5 stars0 ratingsGowri Kalyanam Vaibogame Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsValam Tharum Virathangal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Neri Koorum Subhashithangal! Rating: 0 out of 5 stars0 ratingsKaatru Vaanga Ponen Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannottathil... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Pathi... Naan Pathi...!
1 rating0 reviews
Book preview
Nee Pathi... Naan Pathi...! - S.K. Murugan
https://www.pustaka.co.in
நீ பாதி... நான் பாதி...!
(கணவன் - மனைவி காதலுக்கு வழிகாட்டி)
Nee Pathi... Naan Pathi...!
(Kanavan - Manaivi Kaadhalukku Vazhikaatti)
Author:
எஸ். கே. முருகன்
S.K. Murugan
For more books
https://www.pustaka.co.in/home/author/sk-murugan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இன்று முதல் புதுவாழ்வு...
2. ஆசைகளை கட்டிப்போடுங்கள்...
3. மனமிருந்தால் மலையை புரட்டலாம்!
4. மந்திரத்தில் மாங்காய் விழுவதில்லை...
5. நேரத்திற்கு எஜமானாக இருங்கள்...
6. இந்த கணத்தில் வாழுங்கள்...
7. அதிகமாகவே பாராட்டுங்கள்...
8. தொட்டுத்தொட்டு பேசுங்கள்
9. தொட்டுத்தொட்டு பேசுங்கள்
10. உன்னை நீ அறிவாய்...
11. பொறுப்பு என்பது சுமையல்ல, அன்பு
12. இரண்டு சம்பளம் இன்பமானதுதான்...
13. அதிக சுதந்திரம் ஆபத்தானது...
14. தவமிருந்து வரம் பெறுங்கள்...
15. இதயத்தில் வீடு கட்டுங்கள்...
16. உறவுகள் சந்தோஷ வழிகாட்டிகள்...
17. வீடு வரை நட்பு...
18. கவர்ச்சியை கைவிடாதீர்கள்...
19. கொண்டாடுவதற்கு காரணம் தேடுங்கள்...
20. சந்தேகம் என்றால் சாத்தான்...
21. தாம்பத்யம் அந்தரங்கமானது... அரங்கேற்றாதீர்கள்!
22. விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை...
23. பிறரை பொறாமைப்பட வையுங்கள்...
24. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்...
25. ஊடலும் நல்லதே...
26. இறுதி வரை போராடுங்கள்... ஆனால்?
ஆசிரியர் உரை
இனி, நீங்கதான் சந்தோஷ தம்பதி!
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் வாழ்வியல் ஆதாரம் தேடி இத்தனை கஷ்டப்படுவது இல்லை. அந்த உயிரினங்கள் பிறக்கின்றன, பருவம் அடைகின்றன, சந்ததியை விருத்தி செய்கின்றன, மறைந்தும் போகின்றன. எதையாவது சாதிக்க வேண்டும் என்று வீணே சிந்திப்பதும் இல்லை, அதற்காக கஷ்டப்படுவதும் இல்லை.
ஆனால், மனிதன் ஒருவன்தான் இன்பத்தின் திறவுகோல் கையில் இருந்தாலும், அதை அனுபவிக்காமல் வேறு எதையோ தேடித்தேடி அலைந்துகொண்டு இருக்கிறான். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கும் அற்புத புதையல். ஆனால், அந்தப் புதையலை செலவழித்து சந்தோஷமாக இருக்கத் தெரியாமல், அதை காவல் காப்பதில் சக்தியை செலவழித்து வருத்தப்படுகிறான்.
‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்பார்கள். அப்படித் திருமணமான பெரும்பாலான தம்பதியர்கள் இஷ்டப்பட்டு சேர்ந்து வாழ்பவர்கள் அல்ல. வேறு வழியின்றி கஷ்டப்பட்டு பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். கணவனுக்கு ஒரு வேலைக்காரி தேவை என்பதால் அங்கே மனைவி அவசியமாகிறாள். அதுபோல் பணம் சம்பாதித்துக் கொடுக்க ஒரு ஆண் தேவை என்பதால், கணவன் அவசியமாகிறான்.
திருமண ஜோடிகள், ஒருவர் மனதை ஒருவர் படித்து முடிப்பதற்கு முன்னர் குழந்தை பெற்று விடுகிறார்கள். அதற்குப்பின் மனைவிக்கு குழந்தையை கவனிப்பதுதான் முக்கியமாகிறது. அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை முன்னிட்டு பணம் சம்பாதிப்பது, சேமித்து வைப்பது, நல்ல பள்ளியை தேர்வு செய்வதும் கணவனுக்கு முக்கியமாகிறது.
திருமண வாழ்வை ஆணும், பெண்ணும் சிறப்புற அனுபவித்து வாழவேண்டும் என்பதற்காக, ‘காமசூத்திரம்’ வகுத்த நாடு நமது இந்தியா. திருமணத்திற்கென ஏராளமான மந்திரங்கள், வாழ்வதற்கென சாஸ்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரம் இருந்தாலும், பெரும்பாலான தம்பதிகள் கையில் இருக்கும் இன்பத்தை தொலைத்துவிட்டு வெளியே தேடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இதுபற்றி ஒரு மருத்துவ நண்பரிடம் ஆலோசித்தபோது, சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான தம்பதியர்கள் இன்று நோய் இல்லாமலே, நோய் அறிகுறிகள் இருப்பதாக நினைத்து வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆண், பெண் இருவரும் மனம்விட்டுப் பேசுவது இல்லை, சிரிப்பது இல்லை, வாழ்க்கையை அனுபவிப்பது இல்லை, இயந்திரம் போல் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார்கள்
என்றார். அவர் சொல்வதை நிரூபிப்பது போன்று விவாகரத்து வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தாம்பத்ய வாழ்வில் ஒவ்வொருவரும் வெற்றி இலக்கைத் தொடவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே இந்தப் புத்தகம். மனிதன் எதையும் சாதிக்க நினைக்கும் முன்னர், முதலில் தாம்பத்யத்தில் வெற்றியடைய வேண்டியது அவசியம். அதனால் முதலில் ஜோடிப் புறாவைப் போன்று எளிமையாக, இனிமையாக வாழப் பழகுங்கள். அதற்கு எளிய வழியை சொல்லித் தருகிறது இந்த புத்தகம். தாம்பத்யத்தை வென்று விட்டால், அதற்குப்பின் உங்களால் உலகில் எதையும் வென்றுவிட முடியும்.
அதோ... அந்தப் பறவை போல வாழுங்கள்...
அன்புடன்,
எஸ்.கே.முருகன்.
C:\Users\INTEL\3D Objects\001.JPGஇந்நூல் கண்ணுக்குள் என்னை வைத்திருக்கும் என் இனிய தோழியும் மனைவியுமான ஜோதிக்கு...
1
இன்று முதல் புதுவாழ்வு...
காதலின் சுகத்தை இதுவரை எந்த கவிஞனும் முழுமையாக சொன்னதே இல்லை. இன்றும், என்றும் காதலின் சின்னமாக தாஜ்மஹால் இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், அது காதலிக்காக எழுப்பப்பட்ட மாளிகை அல்ல. மனைவியின் அன்புக்காக கட்டப்பட்ட காதல் கோட்டை. ஆம், காதல் என்பது திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில்தான் முழுமை அடைகிறது. திருமணத்துக்கு முந்தைய காதலில் ஹார்மோன் சேட்டை, வயசுக் கோளாறு, ஆர்வம், அழகு, ஆசை, அவசரம், காமம் என்று எத்தனையோ இருக்கலாம். ஆனால், திருமணத்துக்குப் பிறகான காதலில் அன்பு மட்டும்தான் பிரதானம். திருமணத்துக்குப் பிறகான காதல்தான், ஆணையும் பெண்ணையும் லட்சிய தம்பதியராக மாற்றுகிறது.
இரண்டுடன் இரண்டு சேர்ந்தால் நான்கு என்பது கணிதத்தில் எத்தனை சத்தியமோ, அத்தனை உண்மையாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் லட்சிய தம்பதியாக வாழமுடியும். அதற்கு மிகச்சரியான வழிகாட்டியாக இந்த புத்தகத்தை தேர்வு செய்திருப்பதே உங்களுக்கு முதல் வெற்றிதான்.
நீங்கள் திருமண பந்தத்தில் இனிமேல்தான் நுழைய இருக்கிறீர்களா? நல்லது.
சமீபத்தில் திருமணமாகி தலைகால் புரியாமல் விழிக்கிறீர்களா? மிகவும் நல்லது. திருமணமாகி பல வருடங்களாகியும் கணவன் & மனைவி அலைவரிசை ஒத்துவரவில்லையா? பிரிந்துவிட்டீர்களா? சந்தோஷமாக சேர்ந்து வாழ்கிறீர்களா? எப்படியிருந்தாலும் அது நல்லது தான். ஏனென்றால் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் விடை சொல்லப்போகிறது இந்த புத்தகம். சந்தோஷமாக இருப்பவர்கள் இனி நிரந்தரமாக சந்தோஷமாக இருக்க முடியும். குழப்பத்துடன் இருப்பவர்கள் வாழ்வில் தெளிவடைய முடியும்.
தாம்பத்யம் என்பது மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. இத்தனை காலம் மனிதகுலம் தழைத்து பெருகி வாழ்வதற்கு காரணமே தாம்பத்யத்தில் கிடைத்த சந்தோஷமும் நிம்மதியும்தான். உலகமெல்லாம் சுற்றினாலும், வீட்டு படுக்கையறையில் கிடைக்கும் நிம்மதி எங்கும் எவருக்கும் கிடைக்காது. ஆனால், இந்த நிம்மதி இன்று அருகிவருகிறது, தாம்பத்ய சிக்கல் பெருகி வருகிறது.
கடந்த நூற்றாண்டைவிட சமீபத்திய முப்பது வருடங்களில் விஞ்ஞானம் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். உடல் உழைப்பு பெரும்பாலும் குறைந்தே விட்டது. வீட்டு வேலைகளை செய்வதற்கு மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று ஏராளமான உபகரணங்கள் வந்துவிட்டன. பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால், இருவருக்குமான வர்க்கபேதங்கள் குறைந்துவிட்டது. தனித்தனியே பார்க்கும் பொழுது ஆணும் பெண்ணும் அவசரம் அவசரமாக காலில் சக்கரம் மாட்டாத குறையாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், தம்பதியராக பார்க்கும் போது அவர்களது முன்னேற்றமே, முட்டுக்கட்டையாக இருக்கிறது. குடும்பம் என்ற பந்தத்துக்குள் இருவரும் சேர்ந்து கைகோத்து நடக்க முடியாமல் நெளிகிறார்கள். சகித்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இருவருக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைத்திருப்பதால், தனிமனித சுதந்திரத்தை நோக்கி நடைபோடத் தொடங்குகிறார்கள்.
ஆனால், இது முன்னேற்றமில்லை என்பதை மிகவும் காலதாமதமாகத்தான் ஆண், பெண் இருவரும் உணர்கிறார்கள். நிம்மதி, சந்தோஷம், திருப்தி போன்றவை குடும்ப வாழ்வில் இருந்து தாம்பத்யத்தை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரமுடியும். குடும்ப வாழ்விலிருந்து வெளியே வந்தவர்கள் மனம் புழுங்கி வேதனைப்படுகிறார்கள் அல்லது வேறு திசைகளில் மனதைச் செலுத்திட நினைத்து தவறுகள் செய்து மனம் குமுறுகிறார்கள்.
திருமண வாழ்வு என்பது ஒரு சாதாரண பந்தமல்ல. நட்பு, காதல், தாய்மை போன்ற எல்லாவற்றையும்விட உயர்ந்தது தாம்பத்யம். இது உண்மை என்பதை இந்தப் புத்தகம் படிக்கும்போதே நீங்கள் உணரத்தான் போகிறீர்கள்.
உடலுக்கு வந்த நோயை குணப்படுத்துவதற்காக மருத்துவரிடம் சென்றால், வெறுமனே மருந்து, மாத்திரைகள் மட்டும் கொடுக்க மாட்டார். சாப்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், விலக்கவேண்டிய உணவுகள், ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என நிறைய ஆலோசனைகள் சொல்வார். அவரது ஆலோசனைகளை பின்பற்றினால்தான் நோய் தீரும். அதுபோலவே இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரங்களை வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கினால் உங்கள் வாழ்வு புதிய திசையில் இன்பத்துடன் பயணம் செய்யும் என்பது நிச்சயம். உங்கள் இல்வாழ்க்கையானது வள்ளுவன் சொன்னது போல, அன்பும் அறனும் உடையதாக மாறிவிடும்.
‘ஆயிரம் மைல் பயணமும் ஒரு அடியில்தான் துவங்க வேண்டும்’ என்பார்கள். அதுபோல, சந்தோஷமாக வாழ்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் வெகு சுலபமானது. அதாவது இதுவரை திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றி உங்கள் மனதில் என்னவெல்லாம் நினைத்திருக்கிறீர்களோ, அத்தனையையும் ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய ரப்பர் வைத்து அழித்து எறியுங்கள். குறிப்பாக பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் கொடுத்த ஆலோசனைகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்கள் நன்மைக்காக சிந்திப்பவர்கள், உங்களுக்காக மட்டுமே யோசிப்பவர்கள் என்பதால் அவர்கள் சொல்லும் வழிமுறைகளை கடைபிடித்தால் அது தராசு போன்று நிடுநிலையில் இருக்காது.
‘அதெப்படி, அவர்கள் நல்லபடியாக வாழ்ந்தவர்கள், நான் நன்றாக வாழவேண்டும் என்றுதானே விரும்புவார்கள்’ என நீங்கள் கேட்கலாம். அவர்கள் என்னதான் நடுநிலையில் இருந்து யோசிப்பதாகச் சொன்னாலும், மனதின் ஒரு ஓரத்திலாவது உங்கள் தனிப்பட்ட நலன் பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். மேலும் வயது முதிர்ந்தவர்கள் என்பதாலே, அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளும் சரியாக இருக்கும் என்று அர்த்தமாகாது. இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒரு குழந்தை வீட்டிற்குள் பந்து விளையாடும்போது கடிகாரத்தை உடைத்து விடுகிறது. அதைப் பார்த்த தந்தை தவறுக்கு தண்டனை தரவேண்டும் என்று பிரம்பு எடுத்து அடிக்கிறார். அதே விஷயத்தை கேள்விப்பட்ட தாய், குழந்தை தெரியாமல் செய்துவிட்டது என்று மன்னித்து விடுகிறார். இதில் யார் செய்தது சரி? இருவரிடமும் கேட்டுப் பாருங்கள், அவர்கள் செய்ததை மட்டுமே சரி என்று நியாயப்படுத்துவார்கள்.
சரி நீங்கள் யார் பக்கம்?
நீங்கள் தந்தை செயலை ஆதரித்திருந்தால் தவறு. ஏனென்றால் அது ஒரு விபத்துதானே தவிர, திட்டமிட்டு செய்யப்படவில்லை. அதனால் குழந்தையை கண்டித்தால் மட்டுமே போதுமானது. அதுபோல தாயின் செயலை நியாயமென நீங்கள் கருதியிருந்தால், அதுவும் தவறுதான். என்ன குற்றம் செய்தாலும் தண்டனை கிடைக்காது என்ற அபாயகரமான எண்ணத்திற்கே குழந்தை போய்விடலாம். அதனால் கண்டிக்க வேண்டியது மிகவும் அவசியம், தண்டிக்க வேண்டியது அநாவசியம்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் முதிர்ச்சியற்றுதான் இருக்கிறார்கள். அதுபோலவே முந்தைய தலைமுறை பெற்றோர்கள் ஒன்றாக வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்களே தவிர லட்சிய தம்பதியராக வாழ்ந்தவர்கள் மிகவும் சொற்பமே. ஆனாலும் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த கட்டாயத்தால் காலப்போக்கில் நல்ல கணவன் மனைவியாக மாறிக் கொண்டார்கள். முன்பு கணவனை பிரிந்து தனியாக வாழ்வது என்பது எங்கோ ஒரு மூலையில், அத்தி பூத்தாற்போல நிகழ்ந்தது. அன்று இருந்த வாழ்க்கை சூழலும்,