Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai Neri Koorum Subhashithangal!
Vazhkkai Neri Koorum Subhashithangal!
Vazhkkai Neri Koorum Subhashithangal!
Ebook91 pages28 minutes

Vazhkkai Neri Koorum Subhashithangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள்” என்ற இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன். மனித வாழ்க்கை வளம் பெறவும் நலம் பெறவும் தேவையான அறிவுரைகள் மற்றும் இரகசியங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறுவது சம்ஸ்கிருத சுபாஷிதங்கள். அத்துடன் புதிர்கள், தர்மார்த்த காமம் பற்றிய காட்சிகள் ஆகியவற்றைத் தரும் சுபாஷிதங்களும் உண்டு. இவை பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இந்த நூலில் சுமார் நூறு சுபாஷிதங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்து வரும் பாகங்களில் இன்னும் பலவற்றைக் காணலாம்.

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580151010065
Vazhkkai Neri Koorum Subhashithangal!

Read more from S. Nagarajan

Related to Vazhkkai Neri Koorum Subhashithangal!

Related ebooks

Reviews for Vazhkkai Neri Koorum Subhashithangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai Neri Koorum Subhashithangal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள்!

    Vazhkkai Neri Koorum Subhashithangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. செயலும் செய்பவனும்!

    2. கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

    3. புத்திமதி மூன்று வகைப்படும்!

    4. விடக் கூடாத மூன்று விஷயங்கள்!

    5. ஐந்து வகை உபசாரம், ஐந்து வகை வழிபாடு, ஐந்து வகை கர்மம்!

    6. உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்?

    7. வாயு பகவானின் மூன்று அவதாரங்கள்!

    8. நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!

    9. 31 அப்ஸரஸ்கள்

    10. வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி ரத்னங்களாலும் பெற முடியாது!

    11. கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் - கிருஷ்ண பஞ்சமி!

    12. சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து!

    13. சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்?

    14. பிரார்த்தனை புரிபவனுக்குப் பாவம் இல்லை!

    15. ரஸனைக்குரியவை ஆறு!

    16. புண்ணியமான பெயர்கள்!

    17. நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் - ‘சுமதி’, ‘குமதி!

    18. யமனின் 14 பெயர்கள்!

    19. ஹரியும் சிவனும் ஒண்ணு!

    20. இளமையும் கவிதையும்!

    21. எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்!

    22. எது கொடியது? எது இனியது?

    23. வெற்றி தரும் விஜய யோகம்!

    ஸ்லோக முதல் குறிப்பு விவரணம் (அத்தியாயங்களின் படி)

    சுபாஷித நூல்கள்

    முன்னுரை

    சம்ஸ்கிருத இலக்கியக் கடலில் ஒரு சில துளிகளை சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் - பாகம் 2 (132 நியாயங்கள் பற்றிய விளக்கம்), 12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க் கவிதைகளும், அறிவுரைகளும், சம்ஸ்கிருத சுபாஷிதம் 200! (தமிழ் அர்த்தத்துடன்) ஆகிய நூல்களில் தந்துள்ளேன். ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் உள்ள சுவையான பகுதிகளை விளக்கும் புத்தகங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளேன்.

    இவற்றிற்கு அன்பர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எனக்கு அளவற்ற உற்சாகத்தைத் தந்துள்ளது.

    ஆகவே, வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள் என்ற இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    மனித வாழ்க்கை வளம் பெறவும் நலம் பெறவும் தேவையான அறிவுரைகள் மற்றும் இரகசியங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறுவது சம்ஸ்கிருத சுபாஷிதங்கள். அத்துடன் புதிர்கள், தர்மார்த்த காமம் பற்றிய காட்சிகள் ஆகியவற்றைத் தரும் சுபாஷிதங்களும் உண்டு.

    இவை பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இந்த நூலில் சுமார் நூறு சுபாஷிதங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்து வரும் பாகங்களில் இன்னும் பலவற்றைக் காணலாம்.

    இந்தக் கட்டுரைகள் வெளிவந்த போது பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி.

    இந்த நூலை வெளியிடும் PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூர்

    19-7-2023

    மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com

    1. செயலும் செய்பவனும்!

    செயலில்லாத அறிவால் என்ன பயன்?

    செயலில்லாத அறிவு ஒரு நொண்டியின் இயக்கம் போலத்தான். அவனால் எங்கும் செல்லவும் முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவே அறிந்தவன் அறிந்ததை நல்ல செயலில் காட்ட வேண்டும்.

    கர்மணா ரஹிதம் ஞானம் பட்குணா சத்ருஷம் பவேத் |

    ந தேன ப்ராப்யதே கிஞ்சித் ந ச கிஞ்சித்ப்ரசாத்யதே ||

    ஞானமானது கர்மம் – செயல் இல்லாமல் இருக்கக் கூடாது. அறிந்ததை நல்லவிதமாக செயலில் காட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1