Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinnappa Kalivenba
Vinnappa Kalivenba
Vinnappa Kalivenba
Ebook127 pages26 minutes

Vinnappa Kalivenba

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இரக்கமும் நானும் வேறல்ல” எனத் தம்மை அறிவித்த வள்ளல் பெருமானார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா இறை சக்தியிடம் விண்ணப்பம் செய்யும் கலிவெண்பா வடிவம், 274 சிவத்தலங்களின் பெருமைக்கும் நம்மை சிந்தனை யாத்திரை செய்யவைத்து ஒரு படலமாக பயணம் அழைத்துச் செல்கிறார்; அதன் பின்னே தமது குறைகளை விவரிக்க ஆரம்பிக்கிறார்.

அருட்பிரகாச வள்ளலார் தம்மிடம் குறை உள்ளதுபோல நின்று எழுதியமை, மேலாம் சிவத்திடம் அருள் நாட்டமில்லாத மானிடர்களுக்கான நம் மீது பரிவுடன் மேலாம் முத்திக்காக வழக்கினை சிவத்திடம் எடுத்துரைக்கும் வக்கீல் தன்மையாகும் என்று தவத்திரு. அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் எடுத்து இயம்பினார்.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580161009734
Vinnappa Kalivenba

Read more from P. Sathiyamohan

Related to Vinnappa Kalivenba

Related ebooks

Reviews for Vinnappa Kalivenba

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinnappa Kalivenba - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருட்பிரகாச வள்ளலார் அருளிய

    விண்ணப்பக் கலிவெண்பா

    (புதுக்கவிதை வடிவில் அருள் கல்கண்டு)

    Vinnappa Kalivenba

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அன்பு காணிக்கை

    அன்னதான சிவம்

    தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்

    மேட்டுக்குப்பம்

    ஓம்

    விண்ணப்பக் கலிவெண்பா
    அருள் தரும் கல்கண்டு

    ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும், வணக்கம்.

    "அல்லல் பிறவி அறுப்பானே அரனே ஓ! என்று

    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்

    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர்

    சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்

    பல்லோரும் ஏத்தப் பணிந்து"

    என்ற மாணிக்கவாசகப் பெருமான் நைந்து உருகியதற்கு தொடர்ச்சியாய் விண்ணப்பக் கலிவெண்பாவின் வரிகள் நம்மை நைந்து உருக்குகின்றன. இவ்வுலகில் மிக மிக எளிதானது பிறர்குறை காணல். மிக மிகக் கடினமானது தன்குற்றம், குறை அறிந்து அதனைச் சரிசெய்து கொள்தல். நாம் ஏன் இறைவனின் இரக்கமாகிய அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்? எவ்வளவோ வேலைகள் எனக்கு இருக்கிறதே?

    ஏதோ பிறந்தோம் இருந்தோம் விருத்தி செய்தோம் இறந்தோம் என இருக்கக்கூடாதா? எனக்கெதற்கு அருள்? என சிலர் வினவக்கூடும். நினைவில் வைப்போம். அதனை ஐந்தறிவு பிராணிகளும் செய்துகொண்டுதான் இருக்கின்றன. எனவேதான் திருவள்ளுவர் இதனை உறுதியான குரலில், அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று இரத்தினச் சுருக்கமாக அறிவுறுத்தினார். மானிடத்திற்கான அழுத்தமான ஆழமான அறிவிப்பு அது.

    இரக்கமும் நானும் வேறல்ல எனத் தம்மை அறிவித்த வள்ளல் பெருமானார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா இறை சக்தியிடம் விண்ணப்பம் செய்யும் கலிவெண்பா வடிவம், 274 சிவத்தலங்களின் பெருமைக்கும் நம்மை சிந்தனை யாத்திரை செய்யவைத்து ஒரு படலமாக பயணம் அழைத்துச் செல்கிறார்; அதன் பின்னே தமது குறைகளை விவரிக்க ஆரம்பிக்கிறார்.

    அருட்பிரகாச வள்ளலார் தம்மிடம் குறை உள்ளதுபோல நின்று எழுதியமை, மேலாம் சிவத்திடம் அருள் நாட்டமில்லாத மானிடர்களுக்கான நம் மீது பரிவுடன் மேலாம் முத்திக்காக வழக்கினை சிவத்திடம் எடுத்துரைக்கும் வக்கீல் தன்மையாகும் என்று தவத்திரு. அன்னதான சிவம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் எடுத்து இயம்பினார்.

    "நோன்பு கொண்டு உன்னை அடைய முயன்ற

    திருமாலுக்கும் எட்டாத

    தாமரை போன்ற திருவடி உடையவனே

    நீ என்னை எமனுக்குக் காட்டிக் கொடுக்காதே"

    என்று இறைஞ்சும் வள்ளல் பெருமான் வேண்டிக் குறிப்பிடுவது தமக்காக அல்ல! நமக்காகத்தான். சிவபுண்ணியம் தேடாமல் அவமாய் வாழ்நாள் கழிகின்றது என்றும் புலன்கள் வழியே நாம் சீரழியும் கொடுமை குறித்தும் விரிவாகவும் சுருக்கமாகவும் அருளிய ஞானவரிகள் விண்ணப்பமாகி இறுதியில் இவ்வாறு வேண்டப்படுகின்றது. தன் குறைகளை நினைக்க நினைக்க வருந்த வருந்த மனிதன் மேலானவன் ஆகிறான் என்ற மகத்தான பாதையை வள்ளல் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்.

    "உன் மேல் அன்பு இல்லை எனினும்

    அன்பன் என ஒப்பாரியேனும் உடையேன் கண்டாய்

    தப்பாய்ந்த மட்டு விடேன்

    உன் தாள் மறக்கினும் திருநீற்று நெறி விட்டுவிடேன்

    நீ என் தனைக் கை விட்டு விடேல் நீ தயவு சூழ்ந்திடுக

    எனை உன் தொண்டருடன் சேர்த்தருள்க

    வாழ்க நின் பாத மலர்"

    இந்நூல் வெளிவரத் துணைநின்ற மூலநூல், மாசிலாமணி வைத்தியலிங்கன் ஐயா எழுதிய உரை நூல் ஆகும். இவர்களை எந்நாளும் போற்றட்டும் நன்றியுடன்.

    அகத்துணையாக இலக்கிய குருநாதர் பேரா. சத்தியசீலன் இச்சன்மார்க்க நூல் வெளிவர பெரிதும் விரும்பினார். அவர் சிவபதம் அடைந்த நிலையில் இந்நூல் வெளிவருகின்றது.

    63 நாயன்மார்களின் வாழ்வில் நாம் பெறவேண்டிய நீதியை, 63 உச்சகட்ட சோதனைகள் 63 உச்சகட்ட சாதனைகள் என 2011-ல் வெளியிட்டேன். அதன்பின் இந்நூலும் சிவம் சார்ந்தே வெளிவருவது பரம்பொருளின் தயவு என்று தோன்றுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் விண்ணப்பக் கலிவெண்பா (புதுக்கவிதை வடிவில்) மனைவி லாவண்யாவுக்கு நன்றி கூறுதல், இமைக்கு கண் நன்றி கூறுவது போலாகும்.

    எனது பெற்றோர் தெய்வத்திரு சு. பார்த்தசாரதி – திருமதி பா. லலிதாம்பாள் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அருமை மகன் பொறியாளர் ச. அருண்சித்தார்த், (இயந்திரவியல்), அருமை

    Enjoying the preview?
    Page 1 of 1