Iniya Vazhvirku Irubathu Vazhigal
()
About this ebook
‘வாழ்க்கை வாழ்வதற்கே' என்னும் கருத்து சிறக்க, "இனிய வாழ்விற்கு இருபது வழிகள்” என்னும் கட்டுரை நூலை வார்த்துள்ளேன்.
நம்மைச் சுற்றி அனேக சம்பவங்கள் நடக்கின்றன. பல சம்பவங்களில் நாமும் சம்பந்தப்படுகிறோம். இவைகளில் நாம் தனி முத்திரை பதிப்பதுதான் எங்ஙனம்?
இதற்கு விடை கூறுவதே இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு செய்தி இழையோடும். அது இதமாய் - இங்கிதமாய் உங்கள் மனதை வருடுவது உறுதி.
"பிறந்தோம் – இறந்தோம்” என்பதல்ல வாழ்க்கை. “இடம் பிடித்தோம். தடம் பதித்தோம்" என்பதுவே வாழ்க்கை, நம் வாழ்வு சிக்கலில்லாமல் இருக்கவும், நாம் மகிழ்வுடன் இருந்து, மற்றவர்களையும் மகிழ்வுறச் செய்யவும் வேண்டும். அதற்கு இந்நூல் சிறிதளவேனும் உதவக் கூடும்.
எம்.கே.சுப்பிரமணியன்
Read more from Mk.Subramanian
Sila Mugangalin Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsVetrigalin Vilasangal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsNalla Kudumbam Amaya... Rating: 0 out of 5 stars0 ratingsMunnetram Adaya Muthana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMuruga Peruman Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRamapiran Kathai Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsVaanga Sirikkalam Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Sumaigal Rating: 0 out of 5 stars0 ratingsMagizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iniya Vazhvirku Irubathu Vazhigal
Related ebooks
Arul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAmaithiyana Vazhkaiku Aanmeega Vazhikatti Rating: 5 out of 5 stars5/5Vivekanandarin Aalumai Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsAgavarigal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Neri Koorum Subhashithangal! Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Nalam Rating: 0 out of 5 stars0 ratingsVindhai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Payanathiley Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsVaazhviyal Koorum Solavukal Nooru Rating: 0 out of 5 stars0 ratingsUndhi Ezhu Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Yosikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Vivekanandar 100 Rating: 0 out of 5 stars0 ratingsKaattrum Kathitavanum Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsKaakka Choru Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Iniya Vazhvirku Irubathu Vazhigal
0 ratings0 reviews
Book preview
Iniya Vazhvirku Irubathu Vazhigal - MK.Subramanian
http://www.pustaka.co.in
இனிய வாழ்விற்கு இருபது வழிகள்
Iniya Vazhvirku Irubathu Vazhigal
Author:
எம்.கே. சுப்பிரமணியன்
MK.Subramanian
For more books
http://www.pustaka.co.in/home/author/mk-subramanian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தேவை புன்னகை முகம்
2. பேச்சொழுக்கம்
3. பொறாமை என்னும் தீ
4. அதிகாரிகளிடத்தில்...
5. பேருந்தில் நாகரிகம்
6. தற்பெருமை வேண்டாம்!
7. கொஞ்சம் ஒதுங்கி இருப்போம்
8. நிறைகளை மட்டும்
9. சாத்வீகம் கொள்வோம்
10. சுயநலம் தவிர்த்தல்
11. கடன்
12. அக்கம் பக்கத்தவர்கள்
13. நேரம் சேமிப்போம்
14. சின்னச் சின்ன வேலைகள்
15. தன்னம்பிக்கை என்னும் இன்னொரு கை
16. பாராட்டுவதும் - குறை கூறுதலும்
17. விருந்தோம்பல்
18. உதவி
19. வார்த்தை வணிகர்கள்
20. கண்ணியம்
அணிந்துரை
முனைவர் அ. இராசேந்திரன்
தமிழாசிரியர், அரசினர் மேனிலைப்பள்ளி,
செய்யூர் - 603 302.
வாழ்க்கை வாழ்வதற்கே, தான் வாழுகிற காலத்தில் உலக நடைமுறைகளையும், வாழ்க்கையின் நீக்குப் போக்குகளையும் நன்கறிந்து அதற்குத்தக வாழ்பவனே இலட்சிய மனிதனாகக் கருதப்படுகிறான்.
"எவ்வெவ் உறைவ(து) உலகம் உலகத்தோடு
அவ்வவ் உறைவ தறிவு"
"உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"
என்றுரைக்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மனிதனை மனிதன் மதித்தல், விட்டுக் கொடுத்து வாழ்தல் பிறர்நிலை கண்டு வருந்துகிற மனப்பாங்கு, தனக்குள் மண்டிக்கிடக்கும் சின்னச் சின்னக் குறைகளைக் களைந்து நிறைவாக வாழும் முறைகளைக் கற்றல் முதலான வாழ்வியல் தகுதிகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இனிய வாழ்விற்கு இருபது வழிகள்
என்ற இந்நூல் அசுர வேகத்தில் விரைந்தோடும் மனித இயந்திரங்களைச் சற்றே நிறுத்திச் சிந்திக்கவும், படித்ததை வாழ்வில் பின்பற்றவும் வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியும் இருக்கிறது.
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலின்பால் பட்டன் றிருள்"
என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. சிரித்துப் பேசிப் பழகத் தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருட்டாகவே தோன்றும் என்ற அடிப்படைக் கருத்தினை வைத்துக் கொண்டு உண்மைச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அகங்காரச் சிரிப்பு, வெடிச்சிரிப்பு முதலான பல்வேறு சிரிப்புச் சிந்தனைகளைச் சித்தரித்துக் கூறுவதுடன், நம் சிரிப்பு நம்மை மட்டும் மகிழவைக்காமல் நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் சிரிப்பாக இருக்க வேண்டும். மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்
என்பதைத் தேவை புன்னகை முகம்
என்ற பகுதியில் விவரித்துக் கூறுகின்றார்.
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்"
என்னும் குறள்நெறி வாழும் இந்நூலாசிரியர், ஒவ்வொருவரும் தான் பேசுகிற பேச்சில் ஒழுங்கும் இனிய பண்புகளும் வெளிப்படவேண்டுமென்று பக்குவமாக எடுத்துரைக்கின்றார்.
பொறாமைத் தீயில் பொசுங்கிக் கருகும் மனத்தவர்களைக் கடைசிகரமான மனிதர்கள், இவர்களே பிரச்சினைக்குரியவர்கள். இத்தகைய மனம் படைத்தவர்களைச் சமுதாயத்தில் இனம் கண்டு எச்சரிக்கையுடன் வாழ வேண்டுமென அறிவுறுத்துகின்றார்.
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்"
என்ற வாழ்வியல் அறத்தைத் தக்க சான்றுகள் மூலம் வலியுறுத்துகின்றார்.
பணியாற்றும் நிறுவனங்களின் மேலதிகாரிகளிடம் அன்பாகவும், பண்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டால் அவர்களிடமிருந்து நாம் எதையும் சாதிக்கலாம். தமக்கு ஒதுக்கப்பட்ட பணியினைக் குறித்த நேரத்தில் திறமையோடும், புத்திசாலித்தனத்துடனும் செய்து முடிக்கின்ற வல்லமை படைத்த பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டுக்கும், நம்பிக்கைக்கும் உரிய மனிதர்களாக மதிக்கப்படுவது உறுதி என்ற நடைமுறை உண்மைக்கு வலிமை சேர்த்திருக்கின்றார்.
ஆசிரியப் பணியின் நிமித்தமாகத் தினமும் கருங்குழியிலிருந்து காஞ்சிபுரம் சென்று வருகின்ற இந்நூலாசிரியர் பேருந்துப் பயணத்தில் தான் கண்ட அனுபவங்கள், இளஞ்சோடிகளின் வரம்புமீறிய உரசல்கள், ஊனமுற்றவர்களை அவர்களுக்குரிய இருக்கையில் உட்கார வைக்காமல், மற்றவர்கள் அதை ஆக்கிரமித்தல், இளைஞர்களின் அட்டகாசங்கள், விதியின் மீறல்கள் முதலான சீர்கேடுகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு பயணித்த போதிலும் அநாகரிக ஆத்மாக்களை வார்த்தைகளால் அர்ச்சித்து அங்கலாய்த்துக் கொள்வது சமுதாயத்தின் மீது இவருக்குள்ள பொறுப்பையும், கடமையுணர்வையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.
‘கொஞ்சம் ஒதுங்கி நிற்போம்' என்னும் கட்டுரையில், சாதி சமயச் சடங்குகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். சமத்துவமும், சகோதரத்துவமும் மலர்ந்து சமதர்ம சமுதாயம் உருவாகக் கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டுமென்கிறார். சாதி வேறுபாடுகளைக் களைந்தெறிய ஒரே வழி 'கலப்புத் திருமணம்’ தான் என்கிற பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் நெறியில் சிந்தித்திருந்தாலும் தந்தை பெரியாருக்குப் பிறகு சாதிகளை ஒழிப்பதற்குரிய இயக்கங்களும், அவர் போன்ற தலைவர்களும் உருவாகவில்லை என்ற ஆசிரியரின் கருத்தினை ஏற்றுக் கொள்ள மனம் தயங்குகிறது. பெரியாரின் அரசியல் வாரிசுகளாக மதிக்கப்படுகிற பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணி போன்றவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சாதி ஒழிப்புப் போராட்டங்களும், மாநாடுகளும் நடத்திப் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்திருக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் கொள்கைகளால் - கவர்ந்திழுக்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசனார் தனது இலக்கியப் படைப்புகளில் ‘கலப்புத் திருமணம்', ‘சாதி ஒழிப்பு', 'காதல் மணம்' ‘விதவைகள் மறுமணம்’ முதலான புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனையுடைய பாடல்களையும், காவியங்களையும் படைத்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,
மகாத்மாவின் அமைதி நெறியை, அகிம்சா தர்மத்தை நேசிக்கும் இவர் நாட்டில் நிலவிவரும் அமைதியற்ற சூழலைக்கண்டு வேதனை கொள்கிறார். சண்டை சச்சரவுகள், மதக்கலவரங்கள், தீவிரவாத இயக்கங்களின் வெறித்தனமாக நாச வேலைகள், வெடிகுண்டுக் கலாச்சாரத்தின் விபரீத விளைவுகள் இவைகளெல்லாம் நாட்டையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. எந்த நேரத்தில் எது நடக்குமோ? என்ற பீதியில் வாழுகின்ற நிம்மதியற்ற வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உலகத்தை நேசிக்கவும், மக்களிடம் அன்பு பாராட்டவும் நல்ல பல வழிகளை, சாத்வீகமான யோசனைகளாக வழங்கியுள்ளார்.
'அக்கம் பக்கத்தவர்கள்'