Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sila Mugangalin Mugavarigal
Sila Mugangalin Mugavarigal
Sila Mugangalin Mugavarigal
Ebook104 pages1 hour

Sila Mugangalin Mugavarigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆயிற்று. இதுவரை 450க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியாயிற்று. 18 நூல்கள் வெளிவந்து விட்டன.
எனது சிறுகதைகளை வெளியிட்டுப் பெருமைபடுத்திய இதழ்களையும், எனது கதைகளை தொகுத்து வெளியிடும் பதிப்பகங்களையும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
என் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நானாகவும், என் நண்பர்களாகவுமே இருப்பர். ஒரு குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் சங்கோஜமில்லாமல் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வினூடே எழுதுகிறேன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130904964
Sila Mugangalin Mugavarigal

Read more from Mk.Subramanian

Related to Sila Mugangalin Mugavarigal

Related ebooks

Reviews for Sila Mugangalin Mugavarigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sila Mugangalin Mugavarigal - MK.Subramanian

    http://www.pustaka.co.in

    சில முகங்களின் முகவரிகள்

    சிறுகதைகள்

    Sila Mugangalin Mugavarigal

    Sirukathaigal

    Author:

    எம்.கே. சுப்பிரமணியன்

    M.K.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மீன் குழம்பு சோறு

    2. வஞ்சனை செய்வாரடி கிளியே...!

    3. ஓடி ஓடி உழைக்கணும்

    4. யாத்திரிகர்கள் இலவசம்

    5. இரண்டாவது கை

    6. வயிற்றுப் பாடு

    7. நேரம்

    8. ஓசி டீ

    9. சில நியாயங்களுக்கான தண்டனை

    10. மந்திரமல்ல, தந்திரம்!

    11. திலகா வந்த நேரம்...

    12. சில முகங்களின் முகவரிகள்

    13. நம்பிக்கைகள்

    14. உடனடித் தேவைகள்!

    15. பெரிசு...

    அணிந்துரை

    என் இனிய நண்பர் எம்.கே. சுப்பிரமணியன் சிறுகதைத் துறையில் கொடி கட்டிப் பறப்பவர் என்றே இயம்புதல் வேண்டும். மளமளவென்று எழுதிக் குவித்துவிட்டார். நிறைய எழுதுதலை விட, நிறைவாய் எழுத வேண்டுவது அதி அவசியம். நண்பர் நிறையவும், நிறைவாகவும் எழுதி வருகிறார்.

    'சில முகங்களின் முகவரிகள்' என்னும் இக்கதைத் தொகுதி அருமையும், பெருமையும் உடைய 15 சிறுகதைகளை உள்ளடக்கியது. இதன்கண் நண்பர் தனது திட்பத்தையும், நுட்பத்தையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

    'மீன் குழம்பு சோறு' என்னும் சிறுகதை ஒரு அடிமட்ட மனிதனின் சாதாரண ஆசையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் சாதாரண ஆசைகள் கூட சிலருக்கு 'எட்டா நிலவு’ போல் இருப்பது இக்கதையில் தெரியவருகிறது.

    'எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்' என்று பலர் முழங்கினாலும், இந்நாட்டு ஏழைகளுக்கு எங்கே எல்லாமும் சரளமாய் கிடைக்கிறது?

    நண்பர் இக்கதையில் நம்மை நன்கு சிந்திக்க வைக்கிறார். பாராட்டுக்கள்.

    'வஞ்சனை செய்வாரடி கிளியே' கதை இக்கால இளைஞர்களில் சிலர் பொய் வேஷம் புனைந்து, இளம் பெண்களையும், சமூகத்தையும் ஏமாற்றுவதை சுட்டும் கதை.

    நாசூக்காக ஏமாற்றத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நண்பர் அடையாளம் காட்டுகிறார். இதில் எழுத்தாளரின் சமூகப் பிரக்ஞை நன்கு புலனாகிறது.

    ஓடி ஓடி உழைக்கணும்' என்னும் கதை மனிதர்கள் உழைக்க வேண்டும்" என்பதைச் சொல்லும் கதை.

    ராஜகோபால் என்கிற நடுத்தர வயது மனிதர் பஸ் ஸ்டாண்டில் தட்டில் சமோசாவை சுமந்து விற்கும் பாத்திரமாக வருகிறார். அவர் நினைத்தால் மகன் வீட்டில் சென்று, தங்கி சுகமாய் இருந்து கொள்ள முடியும். ஆனால், அவர் அதை முற்றிலும் விரும்பவில்லை. 'உழைத்தால் மனம் லேசாகிறது’ என்பது அவர் வாதம்! எத்தனை பெரிய உண்மை.

    'யாத்திரிகர்கள் இலவசம்' சிறுகதை உதவி செய்து வாழ வேண்டுவதன் தேவையை வலியுறுத்தும் சிறுகதை.

    ராமானுஜம் தான் நன்றாக வாழ்வதோடு, தன்னைச் சார்ந்தவர்களையும் நன்றாக வாழச் - செய்ய, தன்னால் இயன்றதை செய்கிறார். உதவி செய்யப் புகுந்து உபத்திரவம் வந்து சேருகிறது. மனம் சளைக்கவில்லை ராமானுஜம்.

    உதவி செய்து வாழ்வது எத்தனை உயர்ந்த வாழ்க்கை நெறி...!

    மகத்தான கதை, மனித நேயத்தை வலியுறுத்தும் கதை.

    'இரண்டாவது கை' என்னும் கதை ஒரு இளைஞன் செய்யும் புரட்சியை வலியுறுத்துகிறது.

    நாட்டில் புரட்சிகள் வேண்டும். புதுமைக் கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

    கதை நாயகன் குமார் சீர்திருத்த மனப்பக்குவம் கொண்டவன். ஆனால் சக ஊழியர்கள் பரிகாசம் செய்கின்றனர். கதையின் இறுதியில் குமார் சரியான பதிலடி கொடுக்கிறான். சமூகத்திற்கு குமார் மாதிரி இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். கதையின் நாயகரையும், எழுதிய எழுத்தாளரையும் வெகுவாக பாராட்டியாக வேண்டும். மகத்தான கதை.

    'வயிற்றுப்பாடு' என்னும் கதை, சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாக இருந்தாலும், குறுக்கு வழியில் செல்லலாகாது என்கிற நீதியையுடைய கதை.

    உலகத்தில் நீதிதான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கதையாசிரியர் இக்கதை வழி போராடுகிறார். நேர்த்தியான கதை.

    இப்படி நூல் முழுவதும் ஒவ்வொரு கதையும் ஒரு வலுவான கருத்துடன் கொண்ட நீதியைப் பெற்று விளங்குகிறது.

    கதைத் தன்மையும் கெடாமல், வருணனைகள் அதிகம் இல்லாமல், படிப்பினை என்கிற மெஸேஜோடு, விறுவிறுப்பும் குன்றாது, நல்ல நடையையும் அமைத்து எம்.கே. சுப்பிரமணியன் 15 கதைகளையும் படைத்துள்ளார். அத்தனையும் முத்தான கதைகள். எல்லோரும் படித்து, பயன்பெற்று, பாதுகாப்பு செய்ய வேண்டிய நூல்.

    ஆசிரியரின் முயற்சியையும், கை வண்ணத்தையும் மிகவும் போற்றுகிறேன்! வாழ்த்துகிறேன்!

    இலக்கியவீதி

    இனியவன்.

    என்னுரை

    ஆயிற்று. இதுவரை 450க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியாயிற்று. 18 நூல்கள் வெளிவந்து விட்டன.

    எனது சிறுகதைகளை வெளியிட்டுப் பெருமைபடுத்திய இதழ்களையும், எனது கதைகளை தொகுத்து வெளியிடும் பதிப்பகங்களையும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.

    என் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நானாகவும், என் நண்பர்களாகவுமே இருப்பர். ஒரு குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் சங்கோஜமில்லாமல் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வினூடே எழுதுகிறேன்.

    என்றும் அன்புடன்

    எம்.கே. சுப்பிரமணியன்.

    1. மீன் குழம்பு சோறு

    கூனிக் குறுகி மனைவி அஞ்சலையிடம் கொடிமுத்து பதமாக ஆரம்பித்தான்.

    நாக்கு செத்துப்போச்சிம்மே. தெனமும் உரப்பு - சாப்பு இல்லாம சாப்பிட்டு... சாப்பிட்டு...! மீன் குழம்பு வெச்சு ஒரு உருண்டை போடேன்

    Enjoying the preview?
    Page 1 of 1