Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal
Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal
Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal
Ebook123 pages46 minutes

Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்வு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிரம்பியதாக அமைதல் வேண்டும். இவற்றை வழங்குவது நம் பண்பு நலன்களே ஆகும்.
நம்மைச் சுற்றியுள்ள நமது நெருங்கின மனிதர்களிடம் கூட சிலபேர்கள் இனிமையாய் பழகுவதில்லை. இந்நூல் வாழ்வியல் சிக்கல்களை அகற்ற வருகிறது.
நம்முகம் பொலிவுடன் விளங்கவும், நம் வாழ்வு சுகபோகமாக அமைந்திடவும் இந்நூலின் கட்டுரைகள் வழிகாட்ட வல்லன.
நமது இயல்பான அல்லது வழக்கமான நடைமுறைகளில் இருக்க வேண்டிய சில விழுமிய செயல்பாடுகளே இக்கட்டுரைத் தொகுதியில் சொல்லப்பட்டுள்ளன.
எளிய நடை, சரளமான தமிழ் என்கிற உத்திகளோடு, சுவை குறையாமல் கட்டுரைகள் சொல்லப்பட்டுள்ளன.
கல்விக் கலைமணி திரு. க.தங்கவேலு அவர்கள் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். அன்னார்க்கு நன்றி.
என் படைப்புகளின் தன்மைகள் பற்றி சுட்டிக் காட்ட விரும்பும் சுவைஞர்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130904962
Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal

Read more from Mk.Subramanian

Related to Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal

Related ebooks

Reviews for Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal - MK.Subramanian

    http://www.pustaka.co.in

    மகிழ்ச்சியான வாழ்விற்கு மகத்தான வழிகள்

    Magizhchiyana Vazhvirkku Mahathana Vazhigal

    Author:

    எம்.கே. சுப்பிரமணியன்

    M.K.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சிரித்து...

    2. கொடுத்து...

    3. விட்டுக் கொடுத்து...

    4. பேதம் விலக்கி...

    5. அன்பை விதைத்து...

    6. பண்பைப் பெருக்கி....

    7. பாசத்தைக் குழைத்து...

    8. இங்கிதமாக நடந்து....

    9. செயலில் ஈடுபட்டு...

    10. பெண்களைப் போற்றி....

    11. யதார்த்தமாக நடந்து...

    12. குழப்பம் தவிர்த்து...

    13. நேர்மைத் திறன் பெற்று....

    14. சிறுசிறு உதவிகள் செய்து...

    15. நா காத்து....

    16. நல்லவர்களுடன் சேர்ந்து...

    அணிந்துரை

    தமிழர்கள் எக்காலத்தும் எளிமையான, இனிமையான படைப்புகளை வரவேற்று, படித்து, நெஞ்சில் நிறுத்தி, தனியாக, குழுவாக, தன் சகாக்களுடன் படித்தவற்றை பரிமாறி இன்புறுவர்.

    500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய எம்.கே. சுப்பிரமணியன் இந்நூலில் மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகளை அலசுகிறார்.

    மகிழ்ச்சி, இறுக்கங்களை அகற்றும். துன்பங்களைத் துரத்தும். இந்நூலில் ஆசிரியர் மிகச் சிறப்பாக மகிழ்ச்சிவரும் காரணிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

    இன்றைய அவசரமான உலகில், சுருங்கிக் கொண்டிருக்கும் உலகில், மகிழ்ச்சிதரும் மார்க்கங்களை சுவைபட விளக்கியுள்ளார்.

    இவரது நடை நம்மை புத்தகத்தில் ஒன்றிவிடச் செய்கிறது. 'நமக்குத் தேவையானவற்றை தேடிப் பிடித்துச் சொல்லியிருக்கிறார் போலும்' என்றே எண்ணத் தோன்றுகிறது.

    தமிழ் புத்தக உலகில் இந்நூல் ஒரு மகுடம். சிரிக்க வேண்டும், கொடுக்க வேண்டும், அன்பு, பண்பு, பாசம் கடைப்பிடிக்கவேண்டும், செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவேண்டும், பேதம் விலக்கி, உதவிகள் செய்து வாழ வேண்டும், நேர்மையுடனும், நா காத்தும் நடந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்துக்களை ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறார்.

    தான் பெற்ற மகிழ்ச்சியை, பிறர்க்கு பெறச் சொல்வதிலிருந்தே இவரது சமூக உணர்வு வெளிப்படுவதை உணரலாம். இவரைப் போற்றுகிறேன்.

    அன்புடன்,

    க. தங்கவேலு

    என்னுரை

    வாழ்வு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிரம்பியதாக அமைதல் வேண்டும். இவற்றை வழங்குவது நம் பண்பு நலன்களே ஆகும்.

    நம்மைச் சுற்றியுள்ள நமது நெருங்கின மனிதர்களிடம் கூட சிலபேர்கள் இனிமையாய் பழகுவதில்லை. இந்நூல் வாழ்வியல் சிக்கல்களை அகற்ற வருகிறது.

    நம்முகம் பொலிவுடன் விளங்கவும், நம் வாழ்வு சுகபோகமாக அமைந்திடவும் இந்நூலின் கட்டுரைகள் வழிகாட்ட வல்லன.

    நமது இயல்பான அல்லது வழக்கமான நடைமுறைகளில் இருக்க வேண்டிய சில விழுமிய செயல்பாடுகளே இக்கட்டுரைத் தொகுதியில் சொல்லப்பட்டுள்ளன.

    எளிய நடை, சரளமான தமிழ் என்கிற உத்திகளோடு, சுவை குறையாமல் கட்டுரைகள் சொல்லப்பட்டுள்ளன.

    கல்விக் கலைமணி திரு. க.தங்கவேலு அவர்கள் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். அன்னார்க்கு நன்றி.

    என் படைப்புகளின் தன்மைகள் பற்றி சுட்டிக் காட்ட விரும்பும் சுவைஞர்களுக்கும் நன்றி.

    என்றும் அன்புடன்

    எம். கே. சுப்பிரமணியன்.

    1. சிரித்து...

    சிரிப்பு என்பது மனத்தில் முளைவிடும் ஒரு மலர். மனம் பாறையாய் இருந்தாலும் கூட அம்மலர் அதிலும் துளிர்க்கும். இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்த மகத்தான கொடை அது. எனவே ஒவ்வொருவரும் சிரித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    மாடு அழுவதை பார்க்க முடியும். அதை விட பெரிய ஜீவனாகிய யானை அழுவதைக் கூட பார்க்க முடியும். ஆனால் மனிதனைத் தவிர மற்ற எந்த ஜீவராசியும் சிரிப்பதைப் பார்க்க இயலாது.

    சிரிப்பு பல வகைப்படும். சங்கீதமாய் அமைந்திருக்கும் ஒரு சிலரது சிரிப்பு. கேட்டுக் கொண்டே இருக்கலாம். நாராசமாய் அமைந்திருக்கும் சிலரது சிரிப்பு. எரிச்சல் எரிச்சலாய் வரும் அதைப் பார்க்க. அகம்பாவச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு என்றெல்லாம் கூட சிரிப்பு வகைப்படுவதுண்டு. அதை நாம் விலக்கி வைக்க வேண்டும். அவ்வகைச் சிரிப்புகள் எதிரில் இருப்பவரின் முகம் சுழிக்க வைக்கும். மற்றவர் மனங்களில் நம் தரத்தையும் குறைத்து வைக்கும்.

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் பேரறிஞர் அண்ணா. வசதி குறைந்தவர்கள் சிரிப்பிற்கென நம்மால் ஏதாவது செய்ய முடியுமென்றால் அது இறைவனுக்கு செய்யும் ஏற்பாடாகும்.

    நம் சிரிப்பு அடுத்தவரின் எரிச்சலுக்கு அடியுரமாக அமைதல் கூடாது. வாடிய முகத்தின் வாட்டத்தைப் போக்கி, மொட்டுக்களைப் போல் குவிந்து கிடக்கும் முகப்பொலிவை விரிவடையச் செய்ய வைக்க வேண்டும்.

    புன் முறுவலான முகம் ஒரு வகையான ஆபரணம். முகத்தின் இறுக்கத்தை, கடுப்பை எடுத்தெறியும். புன்னகை ஏந்தாத முகமுடையவர்கள் 'முண்டங்களுக்கு’ சமமானவர்கள். இம் மனித உணர்வுகளுள் நகைச் சுவை உணர்வு இன்றியமையாத ஒன்று.’

    'நகைச்சுவை உணர்வு உள்ளதால் தான் நான் இத்தனை வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன்' என்று தம் தள்ளாத வயதில் பொக்கைத் தாத்தா மகாத்மா காந்திஜி கூறியது நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

    குழந்தைகள் சிரிக்கும் போது பாருங்கள். சிரிப்பு எத்தனை உயர்வானது என்று புரிய வரும்.

    சிரிப்பு சாதிக்கும் ஆற்றல் படைத்தது. ஆம். சிரிப்பு முகத்தவர் நீட்டும் கோரிக்கைகளை மறுப்பதற்கு யாருக்குமே எளிதில் மனம் வராது.

    எதையாவது தொலைத்தவர்கள், எதையாவது இழந்தவர்கள் தான் சிரிப்பினின்று விலகி இருப்பர்.

    நன்றாக சிரிக்கத் தெரிந்தவர்கள் நன்றாக சிந்திப்பவர்களாகவும், நன்றாக செயல்படுபவர்களாகவும் இருப்பர்.

    தனக்குத் தானே சிரிப்பது, தனியே சிரிப்பது அபத்தமானதும், ஆபத்தானதும் ஆகும்.

    சிரிப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். சொத்தை பகிர்ந்தால் நம் பங்கு குறையலாம். சிரிப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

    நம் முகத்தைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்தும் சிரிப்பு. நமக்கு நண்பர்களைப் பெற்றுத் தரும் சிரிப்பு.

    மேலுக்கு சிரிப்பது ஒரு ரகம். அது ஒரு போலி நடைமுறை. அதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் பணம் படைத்தவர்களிடத்து பல் இளிப்பது, பதவியாளர்களிடத்து பல் இளிப்பது கேடு கெட்ட நடைமுறையாகும்.

    சிரிப்பு இயல்பானதாகவும், இங்கிதமானதாகவும் இருத்தல் வேண்டும்.

    'சிரித்தே கவிழ்த்து விட்டான்' என்று சொல்லுமளவிற்கு நம் சிரிப்பு தரம் தாழ்ந்ததாக இருத்தல் கூடாது.

    சிரித்து நட்பைப் பெருக்க வேண்டும். சிரித்து மனித நேயத்தைப் பெருக்க வேண்டும். சிரித்து உறவை பலப்படுத்த வேண்டும்.

    ஏளனச் சிரிப்பு என்று ஒரு சிரிப்பு உண்டு. அது அடுத்தவரின் வீழ்ச்சியின் போது, அடுத்தவரின் சறுக்கலின் போது, அடுத்தவர் அடையும் தோல்விகளின் போது எழுவது.

    இது

    Enjoying the preview?
    Page 1 of 1