Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innum Konjam Manithargal...
Innum Konjam Manithargal...
Innum Konjam Manithargal...
Ebook103 pages38 minutes

Innum Konjam Manithargal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் பார்வைகள் படாமல், கவனங்கள் ஈர்க்க மாட்டாமல் இன்னும் கொஞ்சம் மனிதர்கள் சமூகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வதாகவும் சொல்ல முடியாது; செத்ததாகவும் சொல்ல முடியாது. கவலைக்குரிய, அவஸ்தைக்குரிய, கேலிக்குரிய வாழ்க்கை முறை அவர்களுடையது.
இந்தத் தொகுதி அந்தவித மனிதர்களின் வாழ்க்கையை அலசுகிறது. ஒரு மாடு மேய்ப்பவர், 'எருமட்டை' தட்டி விற்பவர், அடியாள், மீன் விற்பவள், தந்கைத்காக வாழ்வைத் தொலைக்கும் முதிர்க்கன்னி, இரவுக் காவலர், பிச்சைக்காரர், சாலையோர இட்லி கடைக்காரி, குப்பை சுத்தம் செய்பவர், தப்படிப்பவர், பேரீச்சம்பழ வியாபாரி - இப்படிப்பட்டவர்களே இச்சிறுகதைத் தொகுதியின் கதை மாந்தர்கள்.
இவர்கள் வாழ்க்கையில்தான் எத்தனை புயல், பூகம்பம், சுனாமிகள்....!
வாழ்க்கை என்பது வசந்தமாக அமைய வேண்டுமென எண்ணுகிறோம். எத்தனை பேர்களுக்கு அப்படி அமைகிறது?
சமூகத்தின் கடை மட்டத்தில் கிடந்துழலும் இவர்களை நான் தெரிந்து கொண்டது போலவே நீங்களும் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி.
மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்பதால் இந்தத் தொகுதியில் அடிமட்ட மக்களின் அபிலாஷைகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
வித்தியாசமான தொகுதி மட்டுமன்று; விவரமான தொகுதியும் கூட.. சொல்லத் தவறியதை சுட்டிக்காட்டுவீர்.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130904961
Innum Konjam Manithargal...

Read more from Mk.Subramanian

Related to Innum Konjam Manithargal...

Related ebooks

Reviews for Innum Konjam Manithargal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innum Konjam Manithargal... - MK.Subramanian

    http://www.pustaka.co.in

    இன்னும் கொஞ்சம் மனிதர்கள்…

    Innum Konjam Manithargal…

    Author:

    எம்.கே. சுப்பிரமணியன்

    M.K.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பலி

    2. மாடுகளும் சில மனிதர்களும்

    3. எல்லாமே கெட்டுப்போச்சு

    4. ஒரு சேவலின் பொழுது

    5. இன்னும் கொஞ்சம் மனிதர்கள்

    6. தனி கவனிப்பு

    7. இட்லி கடைக்காரி

    8. உயிரின் போராட்டம்

    9. என்று தணியும்?

    10. வசதி வாய்ப்பு

    11. காக்கா கடி

    12. குப்பைக்காரன்

    13. தப்புக்கணக்கு

    14. எடை

    15. மீன்காரி

    புகழுரை

    இனிய நண்பர், யதார்த்த கவிஞர், கதையாசிரியர், கட்டுரையாசிரியர், நாடக ஆசிரியர், பேச்சாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட நல்ல மனிதரிடமிருந்து மீண்டும் ஓர் அறிவார்ந்த பிரசவம். அதுவும் சிறுகதை வடிவாய். படிக்க... படிக்க... எனதுள்ளம் மகிழ்ச்சியுற்றது. இவரால் மட்டும் எப்படி சாத்தியமென உள்ளம் வியப்புற்றது.

    இந்த சிறுகதைத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அத்தனையுமே அவருக்கு சமூகத்தின் மீது உள்ள அக்கறையை நன்கு பறைசாற்றுகின்றன. கதை எழுத வேண்டும் என்பதற்காக... பிறரிடமிருந்து தனிமைப்பட்டு....

    நானும் யோசிக்கிறேன் என்ற எந்தவித பகீரதப்பிரயத்னமும் இல்லாமல், தன்னைப் போலவே இயல்பாய், எளிமையாய்... பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதைகளுக்கு உயிரூட்டும் விதம் பாராட்டுக்குரியது.

    கதைக்களமாக.... காதலையும் மோதலையும் மட்டும் கையாள்வோர் மத்தியில்... இவர் சற்றே விலகி, தான் சார்ந்த சமூகத்தில் விரவிக் கிடக்கும் மனித மனங்களின் ஏக்கத்தை... இயலாமையை.... மகிழ்ச்சியை.... மரியாதையை... அழுகையை... அவலத்தை.... பாசத்தை... பண்பாட்டை ... கதைக் களமாகக் கொண்டு தினம் தினம் காணும் சக மனிதர்களையே கதாப்பாத்திரங்களாகப் படைத்திருப்பது இவருக்கு சமூகத்தின் மீது கொண்ட தீராத காதலை வெளிப்படுத்துகின்றது.

    இந்தத் தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளுமே தரமானவை. அங்கம் பழுதில்லாதவை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு கதையுமே... ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு எதிர்பார்ப்போடு நகர்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் கதைப் பாத்திரம் உணரும் அதே வலியை.... மகிழ்ச்சியை... கோபத்தை... நிச்சயம் படிப்பவர் மனத்திலும் ஏற்படுத்தும் என்பது அசைக்க முடியாத உண்மை.

    சமூக அக்கறையோடு... தான் பயணிக்கும் திசையில் எவ்விதத் தடுமாற்றமும் இன்றி குற்றால அருவியென கதை புனையும் திறனைப் பார்க்கையில்... இவரை "சிறுகதைச் சித்தர்' என்று என்று அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் என்ற நான் கருதுகிறேன்.

    தான் பயணிக்கும் திசையில் என்றும் வெற்றி நடைபோட... இன்னும் பல அறிவார்ந்தப் பிரசவங்களை கட்டுப்பாடின்றி பிரசவிக்க... நல்ல வாசகனாய்… வேண்டியும் விரும்பியும்... வாழ்த்த வயதின்றி, வணங்கி வரவேற்றிட தமிழ்ச் சமூகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    -தங்க. தமிழ்ப்பிரியன்

    மதுராந்தகம்

    மகிழ்வுரை

    வள்ளுவர் வாய்மொழியை அடியொற்றி, திருவள்ளுவர் தமிழ்ப்பட்டறை என்னும் இலக்கிய அமைப்பை திறம்பட நடத்திக்கொண்டு, சப்தம் இல்லாமல் 500க்கும் மேற்பட்ட முத்தான சிறுகதைகளை எழுதிக் குவித்த அன்பர் எம்.கே. சுப்பிரமணியன் அவர்களை பெரிதும் போற்றுகிறேன்.

    சிறிய கிராமத்துக்காரர். கல்வியறிவு குறைந்த குடும்ப சூழல் உடையவர். திறம்பட்ட சிந்தனாவாதி. யதார்த்த நடை எழுத்தாளர். வாழ்க்கையின் கீழ்மட்ட மக்கள் பிரச்சினைகளை இந்தத் தொகுப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். கதைகள் ஒவ்வொன்றும் அபாரம்.

    பொழுது போக்கிற்காக எழுதும் போக்கை மாற்றி, சமுதாய முன்னேற்றத்திற்கான மார்க்கங்களை கண்டறிந்து, எழுதியுள்ளார்.

    ஒவ்வொரு கதையும் ஒரு பாடம். படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இது.

    இவர் பணி இப்படியே தொடர வேண்டும். இவரது முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    போ. நடராசன்

    நெகிழ்வுரை

    நம் பார்வைகள் படாமல், கவனங்கள் ஈர்க்க மாட்டாமல் இன்னும் கொஞ்சம் மனிதர்கள் சமூகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள் வாழ்வதாகவும் சொல்ல முடியாது; செத்ததாகவும் சொல்ல முடியாது. கவலைக்குரிய, அவஸ்தைக்குரிய, கேலிக்குரிய வாழ்க்கை முறை அவர்களுடையது.

    இந்தத் தொகுதி அந்தவித மனிதர்களின் வாழ்க்கையை அலசுகிறது. ஒரு மாடு மேய்ப்பவர், 'எருமட்டை' தட்டி விற்பவர், அடியாள், மீன் விற்பவள், தந்கைத்காக வாழ்வைத் தொலைக்கும் முதிர்க்கன்னி, இரவுக் காவலர், பிச்சைக்காரர், சாலையோர இட்லி கடைக்காரி, குப்பை சுத்தம் செய்பவர், தப்படிப்பவர், பேரீச்சம்பழ வியாபாரி - இப்படிப்பட்டவர்களே இச்சிறுகதைத் தொகுதியின் கதை மாந்தர்கள்.

    இவர்கள் வாழ்க்கையில்தான் எத்தனை புயல், பூகம்பம், சுனாமிகள்....!

    வாழ்க்கை என்பது வசந்தமாக அமைய வேண்டுமென எண்ணுகிறோம். எத்தனை பேர்களுக்கு அப்படி அமைகிறது?

    சமூகத்தின் கடை மட்டத்தில் கிடந்துழலும் இவர்களை நான் தெரிந்து கொண்டது போலவே நீங்களும் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி.

    மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்பதால் இந்தத் தொகுதியில் அடிமட்ட மக்களின் அபிலாஷைகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன்.

    வித்தியாசமான தொகுதி மட்டுமன்று; விவரமான தொகுதியும் கூட.. சொல்லத் தவறியதை சுட்டிக்காட்டுவீர்.

    என்றும் அன்புடன்

    எம். கே. சுப்பிரமணியன்.

    1. பலி

    செல்லம்மா இடிந்து போனாள். மனசு சுக்கு நூறாய் உடைந்து கொண்டிருந்தது.

    அப்பாவின் அப்பாவித்தனமான முடிவு அவளை என்னென்னவோ நினைக்க வைத்தது.

    "வயசான காலத்தில்... தனக்கு தனியாளாக துணை

    Enjoying the preview?
    Page 1 of 1