Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilaiyattra Oviyam
Nilaiyattra Oviyam
Nilaiyattra Oviyam
Ebook66 pages25 minutes

Nilaiyattra Oviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனக்கு இப்படி ஒரு கருவை வைத்து கதை எழுத தோன்றிய காரணம் சமூகத்தில் பல பெண்கள் இப்படி ஒரு பிரச்சனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கேலிக்கும், கிண்டலுக்கும் அவர்கள் ஆளாகும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேட்டறிந்து கொண்ட நான் இந்தக் கதையை எழுத முன்வந்துள்ளேன்.

என்னங்க அப்படிப்பட்ட முக்கியமான கரு யோசிக்கறீங்களா...? அதைச் சொல்லாமல் விடுவேனா என்ன...? இரட்டை நாடி (குண்டாக) இருக்கும் பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதையும் பற்றிதான் இந்த கதையில் கொடுக்க வந்துள்ளேன். வாங்க கதைக்குள் பயணிக்கலாம்...

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580164610129
Nilaiyattra Oviyam

Read more from Kanchana Senthil

Related to Nilaiyattra Oviyam

Related ebooks

Reviews for Nilaiyattra Oviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilaiyattra Oviyam - Kanchana Senthil

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலையற்ற ஓவியம்

    Nilaiyattra Oviyam

    Author:

    காஞ்சனா செந்தில்

    Kanchana Senthil

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-senthil

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓவியம் - 1

    ஓவியம் - 2

    ஓவியம் - 3

    ஓவியம் - 4

    ஓவியம் - 5

    ஓவியம் - 6

    ஓவியம் - 7

    ஹாய் சகோஸ்,

    நிலையற்ற ஓவியம் இக்கதை சங்கமம் போட்டிக்கான என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதையான நுகரா அனிச்ச மலரே கதைக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    எனக்கு இப்படி ஒரு கருவை வைத்து கதை எழுத தோன்றிய காரணம் சமூகத்தில் பல பெண்கள் இப்படி ஒரு பிரச்சனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கேலிக்கும், கிண்டலுக்கும் அவர்கள் ஆளாகும்போது அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேட்டறிந்து கொண்ட நான் இந்தக் கதையை எழுத முன்வந்துள்ளேன்.

    என்னங்க அப்படிப்பட்ட முக்கியமான கரு யோசிக்கறீங்களா...? அதைச் சொல்லாமல் விடுவேனா என்ன...?

    இரட்டை நாடி (குண்டாக) இருக்கும் பெண்கள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதையும் பற்றிதான் இந்த கதையில் கொடுக்க வந்துள்ளேன்.

    வாங்க கதைக்குள் பயணிக்கலாம்...

    ஓவியம் - 1

    மாங்கல்யம் தந்துனானே, மம ஜீவன ஹேதுனா என்ற புரோகிதர் மந்திரம் ஓத கண்ணன் தான் பெண் பார்க்கும் படலத்திற்கு பின் உயிருக்கு உயிராய் காதலித்த உயிரானவளின் கழுத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களின் மற்றும் பெரியோர்களின் ஆசியுடன் மங்கள நாணை பூட்டினான்.

    காயத்ரி கண்ணனின் மனைவியாக பதவியேற்றவள், அழகோ அழகு கண்களைப் பறிக்கும் அவ்வளவு அழகுக்கு உரிமையானவள்... கண்ணனோ இவளின் அழகுக்கு ஏற்றபடி அம்சமானவன்.

    திருமணமே வேண்டாம் என்று மறுத்த கண்ணன் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் கடமையே என்று காயத்ரியை பெண் பார்க்க சென்றிருந்தான். அங்கே பெண்ணவளை பார்த்தவன் தன்னையே மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    காயத்ரி மெலிந்த உடல்வாகுடன் பொன்வண்ண நிறத்தில் மின்னுவாள் காரிகையவள்...

    அவளைப் பார்த்த அந்த நொடியே கண்ணனுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது.

    அதிலிருந்து அவனின் இதயம் எனும் சிம்மாசனத்தில் அழகாக வந்தமர்ந்தாள் காயத்ரி.

    காயத்ரிக்கோ மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. அளவுக்கு அதிகமான அழகும், வசதியும் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

    அதிகப்படியான அழகு வேண்டாம் என்று இருந்தவளுக்கு ஆண்களே விரும்பி பார்க்கும் அளவுக்கு அழகாக இருக்கும் கண்ணன் கணவனாய் அமைந்தது... அந்த இறைவன் கொடுத்த வரம் தானோ...?

    பெண் பார்த்துவிட்டு பெண்ணை பிடித்துவிட்டதாக கண்ணன் சொன்ன அடுத்த நொடியிலிருந்து காயத்ரியும் கண்ணனை விரும்ப ஆரம்பித்திருந்தாள்.

    கண்ணனும் அளவுக்கு அதிகமான அழகை எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெண் படித்திருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தான்.

    இருவருமே தனக்கு அமையப்போகும் துணை அளவுக்கு அதிகமான பருமனாக இல்லாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர் அதுவும் நடந்தது.

    திருமணம் நிச்சயம் முடிந்து இவர்கள் இருவரும் போனில்

    Enjoying the preview?
    Page 1 of 1