Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thevai Oru Snegithi
Thevai Oru Snegithi
Thevai Oru Snegithi
Ebook93 pages33 minutes

Thevai Oru Snegithi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையில் வரும் ஆறு சகோதரிகளுக்கு அண்ணன் பூமிநாதன். அவன் மனதைப் புரிந்துகொண்டு, இருபத்தைந்து வருடங்களாக தனக்கென்று எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் கணவனின் சுகதுக்கதிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் கல்பகம்... அண்ணன், அண்ணியை நன்கு புரிந்துகொண்டு வாழும் விஜி... தெளிந்த ஓடையாய் இருந்த கர்னல் கோபாலனின் குடும்பத்தில் அண்ணன் தம்பியிடத்தில் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை குடும்பத்தை எப்படிப் புரட்டிப் போட்டது? பாதிக்கப்பட்ட சகோதரனின் வாழ்க்கையை ஒரு பெண்ணால் எப்படி சீரமைக்க முடிந்தது? விளக்குகிறது அனும்மாவின் கதை.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580110009124
Thevai Oru Snegithi

Read more from Anuradha Ramanan

Related to Thevai Oru Snegithi

Related ebooks

Reviews for Thevai Oru Snegithi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thevai Oru Snegithi - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவை ஒரு சிநேகிதி

    Thevai Oru Snegithi

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனும்மாவின் கதைகளை அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான். வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதைகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

    அனும்மா கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே நடமாடும் சக மனிதர்கள், அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றைத் தன் எழுத்தில் பிரதிபலிப்பதே அனும்மாவின் வெற்றி ரகசியம்.

    பெண்ணால் சாதிக்க முடியும், பெண்ணால் சோதனைகளையும் சாதனையாக மாற்ற முடியும் என்று நம்பியது மட்டுமில்லாமல் அதற்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார், அனும்மா.

    தேவை ஒரு சிநேகிதி கதையில் வரும் ஆறு சகோதரிகளுக்கு அண்ணன் பூமிநாதன். அவன் மனதைப் புரிந்துகொண்டு, இருபத்தைந்து வருடங்களாக தனக்கென்று எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் கணவனின் சுகதுக்கதிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் கல்பகம்... அண்ணன், அண்ணியை நன்கு புரிந்துகொண்டு வாழும் விஜி...

    தெளிந்த ஓடையாய் இருந்த கர்னல் கோபாலனின் குடும்பத்தில் அண்ணன் தம்பியிடத்தில் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை குடும்பத்தை எப்படிப் புரட்டிப் போட்டது? பாதிக்கப்பட்ட சகோதரனின் வாழ்க்கையை ஒரு பெண்ணால் எப்படி சீரமைக்க முடிந்தது? விளக்குகிறது அனும்மாவின் கதை.

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்.

    1

    விஜிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாம் கல்பகம், இந்த சம்பந்தம் வேண்டாம்...

    பூமிநாதனின் இந்த வார்த்தைகளால் அந்த வீடே ரங்கராட்டினம் மாதிரி ஒருமுறை தலைகீழாக சுற்றுகிறது.

    முதலில் குரல் கொடுத்தவன் கிருபாகர்தான். பூமிநாதனின் சீமந்தபுத்திரன்.

    உங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்... சொந்தமா பிசினஸ்... இருக்கறதுக்கு வீடு... பார்க்கவும் லட்சணமா இருக்கார். இதைவிட உங்க தங்கைக்கு என்ன, பெரிய கோடீஸ்வரனைக் கொண்டுவரணும்னு எதிர்பார்க்கறீங்களா...

    நீ சும்மாயிருடா கிருபா...

    கல்பகம் மகனை சாடையாய் கண்டித்து, அடக்கப் பார்க்கிறாள்.

    பக்கத்திலேயே - அதோ - ஐந்தடித் தொலைவில் விஜி உட்கார்ந்திருக்கிறாள். மௌனமாய் தன்னெதிரே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிட்சை பேப்பர்களை திருத்தியபடி...

    அவளை வைத்துக்கொண்டு பேசுகிற பேச்சா இது...

    ஆத்திரம், அவசரம் என்று வந்தால் மனிதாபிமானம்கூட காற்றில் பறந்துவிடுகிறதே...

    அவள் கவலையோடு, கணவரைப் பார்க்கிறாள்...

    அவளுக்கும், கிருபாகருக்குத் தோன்றிய எண்ணம்தான் தோன்றுகிறது...

    ‘இவருக்கென்ன பைத்தியமா...’

    முந்தாநாள் பாக்கு வெற்றிலை மாற்றியாகிவிட்டது...

    நிச்சயதார்த்தம்னு தனியா ஊரைக்கூட்டி அது வேற செலவு வேண்டாம். இதையே உறுதியாக்கிடலாம். இந்தாங்க... வெத்தலைப் பாக்கு தட்டைப் பிடிங்க... முகூர்த்த தேதி பார்த்து சட்டுனு ஒரு சத்திரத்தை புக் செய்யுங்க...

    பிள்ளையைப் பெற்றவர் எத்தனை யதார்த்தமாய் சொன்னார்.

    இந்தக் காலத்தில் யார் அப்படி சொல்கிறார்கள்? ‘ஊருக்குப் போய் கடிதம் போடுவதாக...’ இல்லாவிட்டால், ‘என் அக்கா வந்து பார்க்க வேண்டும்’; ‘மாமா வந்து முடிவு செய்யணும்...’ இப்படி தட்டிக்கழிக்க எத்தனை சாக்குபோக்குகள் பிள்ளையைப் பெற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்...

    ‘எல்லாம் இவருக்குத் தெரியாததா...’

    ‘வேண்டியதை அனுபவிச்சிருக்காரே... அதெல்லாம் மறந்துபோச்சா...’

    கல்பகம், கணவனையே இமைக்காமல் பார்க்கிறாள்... அதில் தெரிந்த ஏக்கம், பூமிநாதனின் நெஞ்சையே பிளந்துவிடுவதாய்...

    அவர் மறுபடியும் தீர்மானமாய் சொல்கிறார்:

    ஆமா கல்பகம். முப்பத்தியொரு வயசு வரைக்கும் நம்மகூடவே இருந்துட்டா விஜி. இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நம்மகூட இருக்கறதுனால நமக்கொண்ணும் பாரமாயிடப் போறதில்லே... இந்த இடம் வேண்டாம்...

    கிருபாகர், ‘சட்’டெனத் திரும்பி மாடிப் படிக்கட்டைப் பார்க்கிறான்...

    அங்கே... இத்தனையையும் கேட்டுக்கொண்டு பிரதிபா...

    கிருபாகருக்கு அடுத்தவள்...

    ‘இந்த அப்பா மனசுக்குள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்...’

    பிரதிபாவின் முகத்தில் ஒரு நிமிடத்தில் நிகழ்ந்த மாறுதலை அவன் கவனிக்கத் தவறவில்லை.

    ‘ச்சே... வயசுப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு, அவளுக்கு கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்கிற சிந்தனையே இல்லாமல், இன்னமும், தன் தங்கை கல்யாணத்தையே முடிக்காமல், எருமை மாட்டை, குட்டையில் போட்டு விலை பேசுகிறாப்போல...’

    கிருபாகரனுக்கு தன் அப்பாவைப் பெற்ற தாய் தந்தையின் மீதுதான் அடக்கமாட்டாத கோபம் பற்றிக்கொண்டு வருகிறது...

    பூமிநாதனைப் பெற்றவர் அதற்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1