Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Neethana!?
Kaadhal Neethana!?
Kaadhal Neethana!?
Ebook89 pages31 minutes

Kaadhal Neethana!?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"காதல் நீதானா!", வாழ்க்கையில் காதல் எவ்வளவு அவசியம், காதலுடன் ஈடுபடும் ஒவ்வொரு விஷயங்களும் எவ்வாறு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது என்பதனை குறள் நெறிகளோடு சுவாரஸ்யமாய் உங்களுக்குத் தருகிறது.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580161709509
Kaadhal Neethana!?

Read more from Bheeshma

Related to Kaadhal Neethana!?

Related ebooks

Reviews for Kaadhal Neethana!?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Neethana!? - Bheeshma

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    காதல் நீதானா!?

    சிறுகதைகள்

    Kaadhal Neethana!?

    Sirukadhaigal

    Author:

    பீஷ்மா

    Bheeshma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bheeshma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதல் நீதானா!... காதல் நீதானா!...

    உன்னைக் காணத்தான்...

    கண்கள் கொண்டேனா!.

    தெரிந்ததே உன் முகம்!...

    மறந்ததே என் முகம்! - 1

    "மறந்ததே என் முகம்...! - 2

    வடை நேசம்... வந்த பாசம்...

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்

    காதல் தேசம்!...

    காதல் நீதானா!.... - 1

    காதல் நீதானா!.... - 2

    அன்பெனும் ஆயுதம்!

    மேகம் கருக்காதா!?...

    வாழ நினைத்தால் வாழலாம்!

    விடுதலை மோகம்!

    வழியாயில்லை பூமியில்!

    இட்டார்க்கு இட்டபடி!

    ஆறாம் அறிவு!

    காதல் நீதானா!... பாகம் - 1

    காதல் நீதானா!... காதல் நீதானா!...

    வாசலில் சிற்றுந்து வந்து நின்றது. இறங்கிய அத்தையை, வாங்க அத்தை என்று வரவேற்றாள் சுந்தரி...

    குரல் கேட்டு வெளியில் வந்த சுந்தரியின் கணவன் குமரன்,

    அத்தை, வண்டிக்கு நான் பணம் தருகிறேன் என்று வண்டி காசைக் கொடுத்து அத்தையின் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்...

    என்ன சுந்தரி, கல்யாணத்ல பார்த்தது. எப்படி இருக்கே?

    நல்லா இருக்கேன் அத்தே

    குமரன் அலுவலகம் கிளம்பி, அத்தை, மத்தியானம் லஞ்ச்சுக்கு வந்து உங்ககிட்ட பேசறேன். இப்ப அலுவலுக்கு நேரமாச்சு என்று கிளம்பினான்...

    குமரன் அலுவலகம் கிளம்பிய பின்பு எல்லா சுற்று வேலைகளையும் முடித்தபின் அத்தை சுந்தரியிடம்...

    ஏம்மா சுந்தரி, எப்பேர்ப்பட்ட வரன் எல்லாம் உன்னக் கல்யாணம் பண்ணிக்க வந்தது... எல்லாரையும் விட்டுட்டு வரதட்சணை வேணாம், கல்யாண செலவுல பாதி ஏத்துக்கறேன்னு.. சொன்னதனால இந்த மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணி இப்படிச் சின்ன வீட்ல உட்கார்ந்து அவஸ்தைப் படறியே!.. சொந்த வீடு.. மத்த சௌகரியங்கள் எல்லாம் இருக்கற மாப்பிள்ளைங்கள விட்டுட்டு இப்படி சௌகர்யமே இல்லாத வீட்ல உட்கார்ந்து கஷ்டப்படறியே

    அத்தே, அவரப் பத்திக் குறை சொல்லிக்கிட்டு என் வீட்டுக்கு வர்றதா இருந்தா, இனிமே இங்க வராதே சற்றே கடுமையாகவும், கண்டிப்பாகவும் சொன்னாள் சுந்தரி...

    தோளில் வெடுக் கென்று இடித்து மௌனமானாள் அத்தைக்காரி...

    மதியம் குமரனிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு ...

    கண்ணு.. என்னால மத்தியானம் மதிய உணவுக்கு வர முடியாதபடி வேலை இருக்கும்மா.. நான் இங்கயே ஏதாவது சாப்டுக்கறேன்

    இல்லீங்க.. நீங்க வெளில எதுவும் சாப்பிட வேணாம்.. நான் செஞ்ச சாப்பாட்டைக் கட்டி எடுத்துக் கிட்டு நானே உங்க அலுவலகத்துக்கு வர்றேன்

    அப்ப சரிம்மா.. நான் வாசல்ல வந்து வாங்கிக்கறேன்

    சாப்பாட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு, அத்தையையும் கூட்டிக்கொண்டு குமரன் அலுவலகம் சென்றாள் சுந்தரி...

    குமரன் அலுவலகம் செல்லும் வழியில் அலுவலகம் முன் ஒரு சின்ன திருப்பம் உண்டு. அந்த திருப்பம் திரும்பினால் குமரன் அலுவலகம்...

    அந்தத் திருப்பத்தில் திரும்பும் முன் குமரன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது...

    ஏம்ப்பா குமரா, இப்படி ஒரு இளிச்சவாயனா கல்யாணம் பண்ணி யிருக்கியே?! வரதட்சணைப் பணம் வாங்கி, பொருட்கள் வாங்கி சீர் செனத்தியோட சௌகர்யமான வாழ்க்கைய அமைச்சுக்காம கல்யாண செலவுலயும் பாதி ஏத்துக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்!?

    "அண்ணே, என்னோட சொந்த உழைப்புல வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னுதான் கல்யாணச் செலவ முழுசா நான் ஏத்துக்கறேன்னு சொல்லியும் என் மாமா ஒத்துக்காததனால பாதி செலவும், வரதட்சணை வேண்டாம் என்ற நிபந்தனையும் போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

    என் மனைவியை என் உழைப்பில் சௌகரியமாய் என்னால வச்சுக்க முடியும்.. தயவு செஞ்சு இந்த மாதிரி என் கிட்ட இனிமே பேசாதீங்க"

    கோபம் கலந்த கண்டிப்புடன் குமரன் சொன்னதை திருப்பத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி, அத்தையை அர்த்தபுஷ்டியுடன் பார்க்க.. அத்தையின் தலை தானாகக் கவிழ்ந்தது...

    ***

    திருக்குறள் அதிகாரம் 05

    குறள் 48....

    "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல் வாழ்க்கை

    நோற்பாரின் நோன்மை உடைத்து"

    மற்றவரை அற நெறியில் ஒழுகச் செய்து தானும் அறம்

    Enjoying the preview?
    Page 1 of 1