Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaazhthal Inithu!
Vaazhthal Inithu!
Vaazhthal Inithu!
Ebook97 pages33 minutes

Vaazhthal Inithu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1985 காலகட்டங்களில் அபுதாபி சென்று திரும்பிய ஓர் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்.., அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்.., சவால்கள்!.., அமைந்த வாழ்க்கையை எப்படி இனிமையாக்கிக் கொள்கிறான் என்பதைக் காதலுடன் சொல்லும் "வாழ்தல் இனிது".

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580161709438
Vaazhthal Inithu!

Read more from Bheeshma

Related to Vaazhthal Inithu!

Related ebooks

Reviews for Vaazhthal Inithu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaazhthal Inithu! - Bheeshma

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வாழ்தல் இனிது!

    Vaazhthal Inithu!

    Author:

    பீஷ்மா

    Bheeshma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bheeshma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்தல் இனிது! - பாகம் 1

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02.

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    வாழ்தல் இனிது! - பாகம் 2

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08.

    அத்தியாயம் 09.

    அத்தியாயம் 10

    வாழ்தல் இனிது! - பாகம் 3

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02.

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    வாழ்தல் இனிது! - பாகம் 1

    அத்தியாயம் 01

    ஆயிற்று., இந்த டிசம்பர் வந்தால் ஏழு வருஷங்கள் முழுதாக முடியும் அவள் கணவன் ரவி அபுதாபி சென்று.,

    திருமணத்திற்கு முன்பே ரவி அபுதாபியில் தான் வேலை பார்த்து வந்தான். Foreign மாப்பிள்ளை என்று டிமாண்ட்டில் தான் அவர்கள் திருமணம் நடந்தது.,

    நடுவில் இரு முறை இரண்டு மாத விடுமுறையில் வந்து அவளுடன் வாழ்ந்த அந்தக் குறைந்த பட்ச வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை.,

    அந்தக் குடும்பத்திற்காக அவள் கணவன் வெளி நாட்டில் சம்பாதிக்க., அந்தக் குடும்பத்தில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவளும் உழைக்க.,

    அவள் அம்மா மட்டும், மாலதி, கணவனைப் பிரிந்து அவர் குடும்பத்தாரோடு வாழும் வாழ்க்கையில் நீ நிறைய compromise செய்து கொள்ள நேரிடும்.. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோம்மா என்று.,

    அறிவுரையோடு நிறைய பயத்தையும் மாலதிக்குள் ஏற்றி விட்டிருந்தாள்.,

    அவளுக்கும், அவள் பெண்ணுக்கும் எது தேவையென்றாலும் அவள் மாமனார், மாமியார் தயவில் அவர்கள் சம்மதித்தால் மட்டுமே கிடைக்கும்.,

    அவள் கணவனுடைய தம்பி, தங்கை, அக்கா, அக்காவின் குடும்பம் அனைவருக்கும் எது கேட்டாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கும் மாமனாரும், மாமியாரும்.,

    அவள் அவசியத் தேவைகளுக்குக் கேட்கும் போது மட்டும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு அவளை அவஸ்தைப் படுத்தி விடுவர்.,

    குடும்பத்தலைவராய் அப்பா இருக்கும் போது.. தன்னுடைய மனைவி பெயரில் பணம் அனுப்பினால் மரியாதை யாயிருக்காது என்று அவள் கணவன் தயங்கித் தனது அப்பா அக்கௌன்ட் டுக்கே இது நாள் வரை பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான்.,

    இந்த முறை மொத்தமாய் ஒரு செட்டில்மெண்ட் தொகையுடன் வருவதாய் ஏர் மெயில் கடிதத்தில் சொன்னவனை அவளுடன் குடும்பமே ஆவலாய் அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க.,

    அவள் இந்தத் தனிமை வாழ்க்கை தனது கல்யாணம் முடிந்து ஏழாம் வருடத்தில் முடிவுக்கு வருவதை எண்ணி கொஞ்சமாய் சந்தோஷப்படும் நேரம்.,

    பெரிய நாத்தனார், அவள் கணவனின் அக்கா வந்து.,

    அப்பா, தம்பி ஒரேயடியா இங்க செட்டில் ஆக முடியாதுப்பா., நீங்கதான் அவனை மறுபடியும் பயணம் போக வைக்கணும்., இந்த வாட்டி அவன் கொண்டு வர காசுல உங்க மாப்பிள்ளை ஏதோ பிசினஸ் ஆரம்பிக்கணும்னு பிளான் வச்சிருக்காருப்பா

    முதல் குண்டு அக்கா போட்டு விட்டுப் போக.,

    அம்மா, ஏங்க, நம்ம சின்னவனுக்கு டாக்டருக்குப் படிக்க ஆகற செலவுக்கும், சின்னவளுக்கு ஒரு கல்யாணம் பண்ற வரைக்கும் மூத்தவன் அபுதாபில சம்பாதிச்சாதாங்க நல்லது., அவன் வந்த உடனே அவன்கிட்டப் பேசி அவனைத் திரும்பவும் அபுதாபிக்கே வேலைக்குப் போகச்சொல்லணுங்க

    அடுத்த இடி அவள் காதில் நாராசமாய் இறங்க என்ன செய்வதென்று புரியாமல் முழித்தாள்.

    ***

    அதிகாரம் 04.., அறன் வலியுறுத்தல்..,

    குறள் 31:

    "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

    ஆக்கம் எவனோ உயிர்க்கு"

    அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்களுக்கு  அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறில்லை.

    அத்தியாயம் 02.

    இப்போதிருக்கும் செல் போன் வசதியோ, ஸ்கைப் வசதியோ அப்போது இல்லாத காலம்.,

    ஏர் மெயில் எனப்படும் கடிதம் மூலம் மட்டுமே Communication தொடர்பு இருந்த காலம்.,

    ஆசை ஆசையாய்

    Enjoying the preview?
    Page 1 of 1