Sugamana Ragasiyam - Part 1
By Devibala
()
About this ebook
மது, பிரபஞ்சன் இருவருக்கும் திருமணம் ஆகிறது. பிரபஞ்சன் சூதாட்ட வெறி பிடித்தவன். திருமண நாளன்று மொய்ப் பையை தூக்கிக்கொண்டு விளையாட செல்கிறான். அந்த பையில் ஒரு கடிதம் இருக்கிறது. நாகேஷ் என்பவன் மதுவிற்கு எழுதி இருக்கிறான். அதில் மதுவின் வாழ்வில் மறக்க முடியாத ரகசியம் இருக்கிறது. அந்த நாகேஷ் என்பவன் யார்? எதற்காக மதுவின் வாழ்வில் வருகிறான்? பிரபஞ்சனுக்கும் அந்த ரகசியம் தெரிந்ததா? அந்த ரகசியத்தை அவன் ஏற்றுக் கொண்டானா? என்பதை பார்ப்போம்!
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sugamana Ragasiyam - Part 1
Related ebooks
Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsஜெகதா Rating: 0 out of 5 stars0 ratingsJegatha Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsAthuthanda Arasiyal! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Pothuma? Rating: 0 out of 5 stars0 ratingsKabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsNathi Ilatha Odam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Ilai Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Naalai Oru Poo Malarum Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Vinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Sappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5என் உயிரே! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sugamana Ragasiyam - Part 1
0 ratings0 reviews
Book preview
Sugamana Ragasiyam - Part 1 - Devibala
https://www.pustaka.co.in
சுகமான ரகசியம் - பாகம் 1
Sugamana Ragasiyam - Part 1
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
பொருளடக்கம்
அத்தியாயம்: 01.
அத்தியாயம்: 02.
அத்தியாயம்: 03.
அத்தியாயம்: 04.
அத்தியாயம்: 05.
அத்தியாயம்: 06.
அத்தியாயம்: 07.
அத்தியாயம்: 08.
அத்தியாயம்: 09.
அத்தியாயம்: 10.
அத்தியாயம்: 11.
அத்தியாயம்: 12.
அத்தியாயம்: 13.
அத்தியாயம்: 14.
அத்தியாயம்: 15.
அத்தியாயம்: 16.
அத்தியாயம்: 17.
அத்தியாயம்: 18.
அத்தியாயம்: 19.
அத்தியாயம்: 20.
அத்தியாயம்: 01.
தாலி கட்டி வீட்டுக்கு வந்து, ஆரத்தி எடுத்து, பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு உள்ளே வந்த மறு நிமிஷமே, பிரபஞ்சன் வெளியே புறப்பட்டு விட்டான். சேலை மாற்ற உள்ளே போயிருந்தாள் மது. அம்மா பதறிய படி மகனிடம் ஓடி வந்தாள்.
டேய். இப்பத்தாண்டா உன் கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருக்கோம். அதுக்குள்ள வெளில எங்கடா போறே?
எனக்கு வேலை இருக்கும்மா. குறுக்கே வராதே. சத்தம் போடாதே.!
பிரபஞ்சன் வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட்டு விட்டான். பைக் சத்தம் கேட்டு அப்பா துரைசாமி ஓடி வந்தார்.
ஈஸ்வரி! எங்கடீ போறான் அவன்?
மெதுவா பேசுங்க. மருமக காதுல விழ வேண்டாம். கல்யாணம் முடிஞ்சு இப்பத்தான் வீட்டுக்கு வந்திருக்கோம். அவளை கொண்டு வந்து விட அவளோட சித்தப்பா, சித்தி வந்திருக்காங்க.!
ஈஸ்வரி், துரைசாமியை இழுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை சாத்தினாள்.
இவன் மாற மாட்டானா? கல்யாணம் செஞ்சு வச்சா, ஒரு பொறுப்பு வரும்னு பார்த்தா, அது நடக்கலையே?
இன்னிக்கு காலைல முகூர்த்தம். சாப்பாடு முடிஞ்சு மண்டபத்தை காலி பண்ணிட்டு வந்தாச்சு. நேத்திக்கு ராத்திரி ரிசப்ஷன் நேரத்துல என்ன நடந்தது தெரியுமா?
மது ரெடியாயிட்டா. கூப்பிட்ட எல்லாரும் வந்தாச்சு. பிரபஞ்சன் வர எட்டரை மணியாயிடுச்சு. எல்லாரும் டென்ஷன் ஆனாங்க. நீங்க போய் கூட்டிட்டு வந்தீங்க. ஏன் அத்தனை நேரம்?"
இவனோட உதவாக்கரை நண்பர் கூட்டம் ஒண்ணு இருக்கே. மண்டபத்துக்கு வந்த முதல் சீட்டு கச்சேரி தொடங்கியாச்சு. இவனும் அப்பப்ப போய் ஆடினான். இங்கே ரிசப்ஷன். பிரபஞ்சன் அங்கே ஆடிட்டு இருக்கான். புடிச்சு இழுத்துட்டு வந்தேன். கையோட அந்த கூட்டத்தை விரட்டி அடிச்சேன். இப்ப நிச்சயமா அங்கே தான் போயிருப்பான். கொஞ்சம் இரு. எனக்கொரு சந்தேகம்.!
அவசரமாக ஓடினார் உள்ளே. பீரோவை திறந்து அந்த பெரிய லெதர் பையை தேடினார். அது அங்கே இல்லை. பதட்டமாக பீரோ முழுக்க தேடி விட்டு ஓடி வந்தார்.
ஈஸ்வரி! பீரோவை திறந்தியா நீ?
ஆமாங்க. ஏதாவது எடுக்கணும்னா, பீரோ திறக்காம இருக்க முடியுமா?
எடுத்த பிறகு, பீரோவை பூட்டி சாவியை இடுப்புல செருக மாட்டியா? மொய் பணத்தை லெதர் பேக்ல வச்சிருந்தேன். அதை அப்படியே தூக்கிட்டு சீட்டு விளையாட போயிட்டான். உருப்படுவானா இவன்?
என்ன பேசறீங்க? இன்னிக்குத்தான் கல்யாணம் நடந்திருக்கு. இந்த மாதிரி பேசலாமா நீங்க?
நிறுத்துடி. அவனை கெடுத்து, குட்டிச்சுவராக்கினதே நீதான். நாம பண்ணின தப்புக்கு, வந்தவ தண்டனை அனுபவிக்க போறா. நான் கூப்பிட்டு நிறைய பேர் வந்தாங்க. ஏராளமான மொய்ப்பணம். யார் எத்தனை தந்தாங்கனு தெரியலை. கவரோட அள்ளிட்டு போயிட்டான்.
சரி, வெளில நம்ம சொந்தக்காரங்க, அவங்க ஆட்கள்னு நிறைய பேர் இருக்காங்க. ராத்திரி சாப்பாட்டுக்கு அம்பது பேராவது இருப்பாங்க. கேட்டரிங் சொல்லிட்டீங்க இல்லையா? இன்னிக்குத்தான் முதல் ராத்திரி. அதுக்கு வேற எல்லா ஏற்பாடுகளையும் செய்யணும். வாங்க.!
ஏண்டீ, நான் சொல்ற விஷயத்தோட சீரியஸ் நெஸ் புரியாம ராத்திரி சாப்பாடு, முதலிரவுன்னு பேசற நீ?
எனக்கு புரியுதுங்க. இதை வெளில போய் பகிரங்கமா சொல்ல முடியுமா?
சரி, நீ எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு, உன் பிள்ளை வரணுமே?
ஏன் இப்படி தப்பு, தப்பா பேசறீங்க? வெளில வாங்க.!
வெளியில் இருவரும் வர, வயதான ஒரு மூதாட்டி நக்கலாக சிரித்தாள்.
உங்க பையனுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போய் கதவை சாத்திக்கறீங்க. பழைய நெனப்பு வந்துடுச்சா?
துரைசாமி கடுப்பாகி விட்டார். அவருக்கு இருந்த டென்ஷனில், கிழவியை கொல்ல தோன்றியது.
உன் வயசுக்கு நீ பேசற பேச்சா இது?
இதுக்கு மட்டும் வயசே இல்லைடா சாமி. புள்ளைங்களுக்கு நாம தான் வழி காட்டணும். கோவப்படறியே!
பெரீம்மா கொஞ்சம் சும்மா இரு!
ஈஸ்வரி அடக்கி விட்டு உள்ளே வர, மது வெளியே வந்தாள். கூடவே அவள் சித்தி.
மாப்ளை கண்ணுலயே படலையேம்மா.!
அவன் ஒரு முக்கியமான சொந்தக்காரங்களை வழியனுப்ப ஏர் போர்ட் வரைக்கும் போயிருக்கான். வந்துடுவான். மது! நீ உன் துணிமணிகளை புது பீரோல அடுக்கி வை. அவளுக்கு நீங்க உதவி செய்ங்க.
அந்த சித்தி மதுவுடன் உள்ளே வந்தாள்.
என்னடீ மாப்ளை இப்படி இருக்கார்? கல்யாண மண்டபத்துக்கு லேட்டா வந்தார். ரிசப்ஷன்ல ஒக்கார லேட்டு. எங்க யார் கிட்டேயும் சிரிச்சு பேச மாட்டேங்கறார். கல்யாணம் முடிஞ்சு வந்த கையோட வெளில போயாச்சு. உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகக்கூடாதா?
சித்தி பேசியது மதுவுக்கு பிடிக்கவில்லை.
சித்தி! கல்யாணம் ஆகி இன்னிக்குத்தானே வந்திருக்கேன்? அவருக்கு என்ன வேலை? யாரெல்லாம் சொந்தக்காரங்கன்னு நமக்கு தெரியுமா? நீ பேசறது அவங்க மனுஷங்க காதுல விழுந்தா தப்பா போயிடும் சித்தி. நீ வீட்ல பேசற மாதிரி இங்கே பேசாதே.!
நான் பேசலை. ஆனா நீ எதுக்கும் வாய் திறக்காம உங்கம்மா மாதிரி இருந்தா நல்லதில்லை. நீயும் உத்யோகம் பாக்கற பொண்ணு. முறையா பெரியவங்க பார்த்து பண்ணி வச்ச கல்யாணம். மாப்ளையும் மத்திய அரசாங்க உத்யோகத்துல நல்ல சம்பளத்துல இருக்கார்னு உங்கம்மா பெருமைப்பட்டா. சரியா விசாரிச்சாங்களானு தெரியலை. நான் மண்டபத்துல பார்த்த வரைக்கும் அவரோட நட்பு வட்டாரம் சரியில்லை. மண்டபத்துல குடி, சீட்டாட்டம் எல்லாம் நடக்குதுன்னு செல்லதுரை சொன்னான். இவரும் ரிசப்ஷனுக்கு வர ரொம்ப லேட் பண்ணினார். எல்லாம் முடிஞ்சு ராத்திரி படுக்க ஒரு மணி.
போதும் சித்தி. குற்றப்பத்திரிகை படிக்கத்தான் என் கூட வந்தியா? நீங்க ரெண்டு பேரும் புறப்படுங்க.!
உன் சாந்தி முகூர்த்தத்துக்கு வேண்டிய சாங்கியங்களை செய்யாம நாங்க புறப்பட்டா, உங்கம்மா என்னை சும்மா விட மாட்டா. முடிச்சதும் போயிர்றேன். ஆனா நீ கவனமா இரு. வா, துணிகளை அடுக்கலாம் பீரோல.!
மது தனியாரில் வேலை பார்க்கும் பெண். நியாயமான சம்பளம். படிக்கும் ஒரு தம்பி மட்டும். அம்மா குடும்பத்தலைவி.