Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athuthanda Arasiyal!
Athuthanda Arasiyal!
Athuthanda Arasiyal!
Ebook118 pages41 minutes

Athuthanda Arasiyal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604314
Athuthanda Arasiyal!

Read more from Devibala

Related to Athuthanda Arasiyal!

Related ebooks

Reviews for Athuthanda Arasiyal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athuthanda Arasiyal! - Devibala

    http://www.pustaka.co.in

    அதுதாண்டா அரசியல்!

    Athuthanda Arasiyal!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பாலா! இது க்ரைம் கதை தானே?

    ஏன் அசோகன்? என்ன சந்தேகம் உங்களுக்கு?

    இல்லை... சமூகப் பிரச்னைகளையே வித்யாசமா தொட்டுத் தொட்டு பழகிட்ட உங்ககிட்ட இந்த சந்தேகத்தைக் கேட்காம என்னால இருக்க முடியலை!

    இதுவும் சமூகப் பிரச்னைதான்!

    போச்சுடா! இப்பத்தான் க்ரைம்னு சொன்னீங்க!

    க்ரைமும் ஒரு சமூகப் பிரச்னைதானே?

    கொல்றீங்க!

    அப்படியா? கொன்னுட்டா நிச்சயமா இது க்ரைம் தானே?

    மளிகைக் கடைக்குத் தர பணமே இல்லை. பால் பாக்கி அப்படியே நிக்குது. அவன் இனி பால் ஊத்த மாட்டான். பவித்ரா கடன் போகக் கொண்டு வந்த சம்பளத்துல வாடகை மட்டும்தான் தர முடிஞ்சது. வயித்துல ஈரத்துணியை இந்த மாசம் போட்டுக்க வேண்டியதுதான்.

    அம்மா, புலம்பிக் கொண்டேயிருக்கிறா... அப்பா சற்றும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஓசிப் பேப்பரில் தொலைந்து போயிருந்தார்.

    உங்கலத்தான்! நான் சொல்றது ஏதாவது காதுல விழுதா?

    தினசரியைத் தழைத்து ஒருமுறை மனைவியைப் பார்த்தார் தன் கோலிக்குண்டு விழிகளால்.

    மடித்து அதை எடுத்துக் கொண்டு மெளனமாக வெளிநடப்பு செய்தார்.

    பவித்ரா சேலைத் தலைப்பை 'பின்' செய்தபடி வெளிப்பட்டாள்.

    அம்மா! சாப்பாடுனு ஏதாவது இருக்கா?

    எல்லாருக்கும் என்னைப் பார்த்தா கிண்டலா இருக்குடி. வா! வந்து சாப்பிடு!

    வெறும் மிளகு ரசமும், சுட்ட அப்பளமும்.

    குடும்பத்தலைவன்னு பேரு! ரிடையராகி மூணு வருஷம் ஆச்சு. அட சம்பாதிச்ச பணத்துல நாலு காசு சேமிக்க முடியலை. குறையில்லை. கொஞ்சம் பொறுப்பா நாலு கடங்காரங்களுக்கு பதில் சொல்லி குடும்பத்துல ஒரு பற்றுதலோட இருக்கலாம் இல்லையா ஓசிப் பேப்பர், வெத்தலை பாக்கு, எதிர் வீட்டுத் திண்ணைல மூணு சீட்டு... சாகலாம் இதை விட!"

    யாரு?

    நான்தான் மத்தவங்களை சாகச் சொல்ல எனக்கென்ன உரிமை?

    ரசத்துல காரம் தூக்கலா இருக்கு. மிளகுக்கு விலை அதிகம்!

    சாப்பிட்டு முடித்தாள்.

    மோர் சாதம் நிரம்பிய டப்பாவை மகள் கையில் கொடுத்தாள் அம்மா.

    வாசலில் சப்தம்.

    யாரு?

    நான்தான்மா! மளிகைக்கடை நாடாரின் கரகரப்பான குரல்.

    வாங்கோ! நானே அங்கேதான் கிளம்பிட்டு இருக்கேன்!

    தேதி அஞ்சாச்சுங்களேம்மா!

    பொண்ணுக்கு இன்னும் சம்பளம் வரலை!

    ஏன்? அவங்க ஆபீஸ்ல 2ம் தேதி தந்துடுவாங்களே.

    இவ நாலு நாளா லீவு. இன்னிக்குப் போறா. ஹெட் ஆபீசுக்கு விவரம் சொல்லி, சம்பளம் வர மூணு நாளாகும். நானே விவரம் சொல்ல வந்துட்டுத்தான் இருக்கேன்!

    பவித்ரா வெளியே வந்தாள்.

    மன்னிச்சிடுங்க நாடார். சம்பளம் வந்தாச்சு எனக்கு!

    பாப்பா...!

    கையில பணமில்லை. அவ்ளோ கடன். அம்மா. பாவம், ஏதாவது ஒண்ணைச் சொல்லணுமேனு உங்ககிட்ட சப்பைக் கட்டு கட்டறாங்க. ரெண்டு நாள் பொறுங்க. வட்டிக்குக் கடன் வாங்கியாவது உங்க பாக்கியைத் தீர்த்துர்றன். அது வரைக்கும் நீங்க மளிகை எதையும் தர வேண்டாம்!

    இல்லை பாப்பா! உன் வார்த்தைகளை நான் நம்பறேன். லிஸ்ட் கொடுத்து விடுங்க. பையன்கிட்ட கொடுத்தனுப்புறேன் வரட்டா?

    நாடார் போய் விட்டரர்.

    கொஞ்சமும் வளைந்து கொடுக்காத பெண்.

    பொய் சொன்னால் யாரென்றும் பார்க்காமல் அங்கேயே மூக்கை உடைத்து விடுவாள்.

    ஆபீசிலும் அத்தனை பேரும் பகை.

    தனித்து நிற்கிறாள்!

    உயர் அதிகாரிக்கு மட்டும்தான் இவளிடம் மதிப்பு. ஒரு சமயம் கம்பெனி சம்பந்தமாக வாடிக்கையாளர்களிடம் பொய் சொல்ல நேர்ந்தால், பவித்ரா இல்லாத சமயத்தில்தான் அதைச் சொல்லுவார் அவர். அவள் இருந்தால் அபாயம்.

    ஆனால் கடுமையான உழைப்பாளி.

    எதையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள மாட்டாள்.

    ஆனால் கடனாகக் கேட்கத் தயங்க மாட்டாள். ஒரு ப்யூனிடம் கேட்கக் கூட கேவலப்பட மாட்டாள்.

    அப்படிப்பட்ட ஒரு வினோத பிறவி.

    மனித வாழ்வில் பிராணவாயுவை விட அதிகம் அவசியப்படுவது பொய். விடிந்தால் பொய்யுடன்தான் பல குடும்பங்கள் தன் நாட்களைத் துவங்குகிறது.

    அவசியமோ, அவசியமில்லையோ, சில பேருக்குப் பொய் சொல்வதென்றால் பலாச்சுளை விழுங்குவதைப் போல.

    அவர்களுக்கு மத்தியில் பவித்ரா ஒரு பைத்தியக்காரி. நிஜத்தையே பேசுவது என்ற வைராக்கியம் கொண்ட அந்தப் பெண்ணை ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடுத்த வாரமே தேடி வந்தது.

    *****

    2

    சுமித்ராவுக்கு விடிந்தால் கல்யாணம்.

    பவித்ராவின் கல்லூரி நாள் தோழி சுமி. அதனால் கல்யாணத்துக்கு நேரில் வந்து அழைத்து விட்டுப் போயிருந்தாள் சுமித்ரா.

    கல்யாண மண்டபத்தில் இரவு விருந்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க,

    மாப்பிள்ளை அழைப்புக்கான ஏற்பாடுகள் ஒருபுறம். சுமித்ராவை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

    எல்லாரும் கொஞ்சம் வெளில இருங்க. பவித்ரா கூட நான் பேசணும் கொஞ்சம்!

    மற்றவர்கள் வெளியேற,

    பவித்ராவைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள் சுமி.

    ஏண்டீ! விடிஞ்சாக் கல்யாணம்! இந்த நிலைல நீ அழுதா என்ன அர்த்தம்? பையனைப் பிடிக்கலையா உனக்கு?

    ...

    இல்லை உன்னால் காதலிக்கப்பட்டவங்க யாரும் உண்டா?

    ரெண்டுமே இல்லை பவி!

    பின்ன என்னா?

    அப்பா இல்லாத குறை அனுபவிக்கறேன்!

    "ஏன்? உங்கண்ணா

    Enjoying the preview?
    Page 1 of 1