Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Kandu Naanaada...
Unnai Kandu Naanaada...
Unnai Kandu Naanaada...
Ebook133 pages49 minutes

Unnai Kandu Naanaada...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆடி மாதம் அமர்க்களமாய் ஆரம்பித்து வைக்க தைப்பொங்கல் வரை அணிவகுத்து வரும் பண்டிகைகளை மையமாக வைத்து பின்னப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் குணாதிசியங்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என எழுதப்பட்ட சிறுகதைகள். வாங்க படிக்கலாம்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580152209516
Unnai Kandu Naanaada...

Read more from Viji Sampath

Related to Unnai Kandu Naanaada...

Related ebooks

Reviews for Unnai Kandu Naanaada...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Kandu Naanaada... - Viji Sampath

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன்னைக் கண்டு நானாட...

    (பண்டிகை சிறுகதைத் தொகுப்பு)

    Unnai Kandu Naanaada...

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அன்புப் பெருக்கு

    2. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

    3. மெல்லத் திறந்தது மனக் கதவு

    4. இறைவனிடம் கையேந்துங்கள்

    5. உன்னைக் கண்டு நானாட

    6. வந்தாள் மகாலக்ஷ்மியே!

    7. ஒளியிலே தெரிவது தேவதையா…!

    8. தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே...!

    9. அன்பு என்பதே தெய்வமானது

    10. மீண்டும் ஒரு காதல் கதை

    1. அன்புப் பெருக்கு

    (ஆடிப்பெருக்கு)

    இன்று ஆடிப் பெருக்கு.! நானும் என் கணவரும் காவிரி ஆற்றங்கரையில்.! இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு நுப்பும்,நுரையுமாக பொங்கிப் பிரவகித்து வரும் புதுவெள்ளத்தைப் போலவே எனக்குள்ளும் ஆனந்தப் பெருக்கு. என்னருகே கம்பீரமாக நிற்கும் என்னவரைப் பெருமை பொங்க, அன்பு பெருகப் பார்த்தவாறு, என் வாழ்வில் ஒளியேற்றி வைத்த காவிரிக்கு மானசீகமாக நன்றி சொல்லிக் கொண்டேன். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான நாள் இந்த ஆடிப்பெருக்கு...!

    சொல்லப் போனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய ஆடிப்பெருக்கன்று, இதோ பெருக்கெடுத்து ஓடுகிறாளே காவிரி, இவளுடைய அடிமடியில் தஞ்சமடைய முடிவு செய்திருந்தேன். என்ன மாயம் செய்தாளோ...! வெறும் ஐந்தே நிமிட இடைவெளியில் என்னுடைய முடிவைத் தவிடு பொடியாக்கி விட்டாள்.

    இப்படி மூடுமந்திரமாகச் சொன்னால் உங்களுக்கு எப்படிப் புரியும்.? விவரமாகச் சொல்கிறேன்.

    இந்தக் கிராமத்திலேயே எங்கள் வீடுதான் பெரிய வீடு. அப்பா,இரண்டு சித்தப்பாக்கள், இரண்டு அத்தைகள், அவர்களின் வாரிசுகள் என்று பெரிய கூட்டுக்குடும்பம். எங்கள் பாட்டி அலமேலுதான் வீட்டுக்குப் பெரிய தலை செத்துப் போன தாத்தா உயிரோடு இருந்த காலத்திலிருந்து இப்போது வரை பாட்டிதான் நாட்டாமை. பாட்டி சொல்வதே சட்டம் அதுவே சாசனம்.

    இப்போதே பாட்டியின் அதிகாரம் தூள் பறக்கிறதென்றால் நான் பிறந்த சமயத்தில் எல்லாம் எப்படி இருந்திருப்பார்கள்?. பாகுபலி ராஜமாதா சிவகாமி தேவியை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    வீட்டுக்கு முதல் பெண் வாரிசாக நான் பிறந்தேன், அப்படி ஒரு கொள்ளை அழகாய் இருந்தேனாம். எனக்கு ஜாதகப்படி வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் என்னுடைய அம்மா எனக்கு ரம்யா,ராதா,ரோகிணி என்ற பெயர்களை தேர்ந்தெடுக்க, என் பாட்டி எனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா...? ருக்மிணி. அதற்கான காரணம் எனக்கு என்னுடைய பதின்ம வயதில்தான் தெரிய வந்தது. அப்போதிருந்தே நான் என்னுடைய குடும்பத்தையே வெறுக்க ஆரம்பித்து விட்டேன். துள்ளி ஓடும் புள்ளிமான் போல இருந்த நான் ஓட்டுக்குள் ஒடுங்கும் ஆமையாக மாறிப் போனேன். சிரிக்க,சிரிக்கப் பேசும் நான் சிடுமூஞ்சி என்ற பட்டப்பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டேன். என்னுடைய இத்தனை மாற்றத்திற்கும் காரணம் என்னுடைய அத்தை மகன், என்னுடைய அத்தான் கிச்சா என்கிற கிருஷ்ணசாமிதான்.

    என்னுடைய பெரிய அத்தை மகன்தான் கிச்சா. அவன் மூன்று வயதாக இருந்தபோதே ஒரு பஸ் விபத்தில் அவனுடைய பெற்றோர்களை இழந்து விட, அவனும் எங்கள் வீட்டுப்பிள்ளையாக, பாட்டியின் செல்லப் பேரனாக இருந்து விட்டான். அவனுக்கும்,எனக்கும் ஆறு வயது வித்தியாசம். என்னுடைய அண்ணன் ராமுவுக்கும் அவனுக்கும் சம வயது என்பதால் இருவரும் இணை பிரியாமல் இருப்பார்கள். என்னை சீண்டுவதும், நான் அழுதால் கை கொட்டி சிரிப்பதும்தான் அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கு.

    நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போது ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடுவதைப் பற்றி டி.வியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சகோதரி சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்டி விடுவதும் சகோதரன் அதற்குப் பரிசு கொடுப்பதைப் பற்றியும் தெரிந்து கொண்ட எனக்கு ஒரே குஷி. என்னிடமிருந்த உல்லன் நூலை வைத்து அழகாக இரண்டு ராக்கி கயிறுகளைப் பின்னினேன். மாலை என் அண்ணனும் கிச்சாவும் வந்ததும் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்து,

    இவங்க ரெண்டு பேருக்கும் நான் இந்த ராக்கி கயிறைக் கட்டி விடுவேன். எனக்கு இவங்க ரெண்டுபேரும் பரிசோ, பணமோ குடுக்கணும்

    என்று நான் விவரம் சொல்ல, படு விவரமான என் பாட்டி...

    இது சகோதரனுக்கு, சகோதரி செய்ற சடங்குதானே...? உன்னோட அண்ணனுக்கு மட்டும் செஞ்சா போதும், கிச்சா உன்னைக் கட்டிக்கப் போறவனாச்சே

    கேட்டதும்,, எனக்கு தலை சுற்றி மயக்கமே வந்தது விட்டது. எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கனவுகளோடு இருக்கும் பதின்ம வயதில் இப்படி இடி போன்ற ஒரு செய்தியைக் கேட்டால் எப்படித்தான் இருக்கும்? நான் என் அம்மாவைப் பார்க்க, அம்மாவோ தலைக்கு மேல் ஓடும் ஃபேனைப் பார்க்க... எனக்கு சகலமும் விளங்கி விட்டது. இதெல்லாம் பெரியவர்கள் முன்பே பேசி வைத்துக் கொண்ட விஷயம்தானென்பது!. பாட்டி அத்தோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை.

    "என்னடி ருக்கு அப்பிடியே தெகச்சுப் போய் நிக்கிறே... அவனுக்கு உன்னைக் கட்டிக் குடுக்கறதுங்கறது நீ பொறந்தப்பவே முடிவு பண்ணதுதானே...! அதான் அவனோட பேருக்குப் பொருத்தமா உனக்கு ருக்மிணின்னு பேர் வெச்சேன்!

    என தன் தொலைநோக்குப் பார்வை குறித்து சிலாகித்துக் கொள்ள, எனக்கோ உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. பெயர்ப் பொருத்தம் பார்க்கத் தெரிந்த பாட்டிக்கு உருவப் பொருத்தமும் பார்க்க வேண்டுமென ஏன் தோன்றவில்லை.?

    பின்னே...! எனக்கு வரப்போகும் ராஜகுமாரன் சந்தன நிறத்தில் வாட்டசாட்டமாக கம்பீரமாக, நவ நாகரீகமாக இருக்க வேண்டும் என நான் கனவு கண்டு கொண்டிருக்க,

    கன்னங்கருப்பாக, ஒடிசலாக வேட்டி சட்டையில் இருக்கும் கிச்சாவை கற்பனையில் கூட என்னருகே பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. அது மட்டுமா என் அண்ணாவும், பக்கத்து வீட்டு ரவியும் கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்து ஐ.டியில் வேலை பார்க்க, கிச்சா மட்டும் உள்ளூர் காலேஜில் பி.காம் படித்து விட்டு எங்கள் குடும்பத் தொழிலான ஜவுளிக்கடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    அதுசரி பக்கத்து வீட்டு ரவிக்கு இங்கே என்ன வேலை?

    என்று உங்கள் மனதில் சந்தேகம் விழுந்திருக்குமே.! என்னுடைய கனவு ராஜகுமாரனே அந்த ரவிதான். பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி பார்த்துக் கொள்ள நேரும். அப்போதெல்லாம் நான் அவனை தைரியமாக நேருக்கு நேர் பார்ப்பேன். அவன் எப்போதுமே ஓரப்பார்வைதான்.

    என்றைக்கு கிச்சாதான் (பேரைக்கூட கிருஷ்ணா... இல்லை க்ரிஷ் னு மாடர்னாக கூப்பிட முடியாமல் கிச்சா,கிச்சாமி) என்னுடைய எதிர்கால கணவன் என்று தெரிய வந்ததோ அன்றிலிருந்து சாப்பாடு,தூக்கம் எல்லாவற்றையும் வெறுத்தேன். புராணகாலத்துப் பெயராக இருந்தாலும்... கொஞ்சமாவது பிடித்துக் கொண்டிருந்த என்னுடைய பெயர்... கொஞ்சமும் பிடிக்காமல் போனது. கிச்சாவை பார்ப்பதை, பேசுவதைத் தவிர்த்தேன். அவனைப் பற்றிய பேச்சுகளை... அடிக்கடி அவன் செய்யும் சமூக சேவைகள்,அவன் செய்யும் இரத்ததானம் பற்றிய புகழுரைகளை உதாசீனம் செய்தேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1