Indru Vandhathum Athey Nila!
By Viji Sampath
()
About this ebook
நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சந்தோஷம், நகைச்சுவை, எதிர்பார்ப்பு, வெற்றி, கவலை, நிம்மதி, அனுதாபம், ஏமாற்றம், த்ரில் முதலிய பல்வகை உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளாலான தொகுப்பு. படித்துக் களிக்க வாருங்கள்.
Read more from Viji Sampath
Devathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5Anbendra Mazhaiyiley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalukku Mariyathai Rating: 0 out of 5 stars0 ratingsYugam Yugamaai..! Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsThaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsTheeyinil Valarjothiye Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratingsMaariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Nee..! Udal Naan..! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Indru Vandhathum Athey Nila!
Related ebooks
Kaadhal 24x7 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Unnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Oru Naal Pothuma? Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsகஸ்தூரி மானே... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Nandriyudan… Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsVazhvu Thodangum Idam Nee Thane! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMarappom Manappom Rating: 0 out of 5 stars0 ratingsOdum Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsUzhaithean Uyarnthean Rating: 4 out of 5 stars4/5Thirumbi Vaa Oliye Thirumbi Vaa... Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPencil Meesai Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Mannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsMouna Vetri Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னை தாலாட்டும் சங்கீதமே... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indru Vandhathum Athey Nila!
0 ratings0 reviews
Book preview
Indru Vandhathum Athey Nila! - Viji Sampath
https://www.pustaka.co.in
இன்று வந்ததும் அதே நிலா!
Indru Vandhathum Athey Nila!
Author:
விஜி சம்பத்
Viji Sampath
For more books
https://www.pustaka.co.in/home/author/viji-sampath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நான் எழுதுவது கடிதம் அல்ல...!
2. யாருக்கு யார் சொந்தம்?
3. தந்தை மகற்காற்றும் உதவி
4. விளையாட்டு(ம்) துணையாகும்.
5. ராசிதான்... கைராசிதான்...!
6. அஞ்சலையின் அஞ்சல்
7. ஓ.கே கண்மணி
8. இ(ம்)சை அரசன்
9. அன்பு சூழ் மனது
10. இன்று வந்ததும் அதே நிலா...!
1. நான் எழுதுவது கடிதம் அல்ல...!
அன்புள்ள அப்பாவுக்கு... இல்லையில்லை... அன்பையே காட்டாத அப்பாவுக்கு,
உங்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் துணிச்சல் இல்லாத மகன் அரவிந்தனின் கடிதம். ஒரே வீட்டில் இருந்து கொண்டு கடிதமா என்று உங்கள் புருவம் நெற்றிக்கு மேலே ஏறி இருக்கும்.
ஆமாம்ப்பா...! என்ன செய்வது? இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு உங்கள் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியம் வரப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் எப்போதும் டெர்ரர் ஆகத்தான் இருந்திருக்கிறீர்கள்.
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து உங்களிடமிருந்து எனக்கு ஒரு பாராட்டுகூட கிடைத்ததில்லை... அத்தனை ஏன்? என்னைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிந்ததாகக்கூட எனக்கு நினைவில் இல்லை. முதல் வகுப்பிலிருந்தே படிப்பில் நான் சராசரிக்கும் கீழான மாணவன்தான். அது எனக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை நீங்கள் தினமும் காலையில் எழுந்ததுமே எல்லோர் காதுகளிலும் விழும்படி பிரகடனப்படுத்துவது எனக்கு எத்தனை வேதனையைத் தரும் என்பதை நீங்கள் ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?
எல்லோரும் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி வைத்துவிட்டு அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பேன். நீங்கள் பெட் காஃபியைக் குடித்துவிட்டு, ஹாலுக்கு வருமுன்பே... உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.
எங்கே அந்தத் தடிமாடு...? இன்னும் படிக்க உக்காரலையா...? இதெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு! (மாடே எப்படி மாடு மேய்க்கும்...?)
நீங்கள் தினமும் ருசித்து, ரசித்துக் குடிக்கும் பெட் காஃபிக்கான பாலை யார் வாங்கி வந்திருப்பார்கள் என்ற சிந்தனையே உங்களுக்கு இருக்காது... நீங்கள் எனக்கு செய்யும் அர்ச்சனைகளைக் கேட்டு அண்ணனும், தங்கையும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே என்னைப் பார்ப்பார்கள்.
விடியற்காலையில் பால் வாங்க அம்மா என்னைத்தான் எழுப்புவார்கள் தூக்கக் கலக்கத்தோடுதான் போவேன். இன்னும் கொஞ்சம் தூங்கச் சொல்லிக் கண்கள் கெஞ்சும். ஆனால் பெட் காஃபி தரத் தாமதமானால் அம்மா உங்களிடம் திட்டுவாங்க நேருமேயென தூக்கத்தை உதறிவிட்டு ஓடுவேன். முதல் நாள் வாங்கி வைத்த பாலில் காஃபி போட்டால்தான் நீங்கள் குடிக்கமாட்டீர்களாமே!
அம்மாவுக்கு அடிக்கடி வீசிங் வந்துவிடும். அப்போதுகூட நீங்கள் ட்யூட்டிக்குக் கிளம்பும் வரை பல்லைக் கடித்துக்கொண்டு வேலை செய்வார்கள்.
உடம்பு சரியில்லேங்கறதை அப்பாகிட்ட சொல்லி... சமையலுக்கு ஒரு ஆள் போட்டுக்கலாமே அம்மா
என்றால்...
வெற்றுச்சிரிப்புதான் அம்மாவிடமிருந்து வரும்.
அம்மாவுக்கும் உங்களிடம் பேசுவதற்கு பயம் என்னைப்போலவே! அதற்கான காரணம் எனக்குத் தெரிய வந்தபோது... உங்களிடமிருந்து நான் இன்னும் சில அடிகள் விலகி வந்துவிட்டதைப்போல உணர்ந்தேன்.
அம்மா அதிகம் படிக்கவில்லை என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்ட உங்களைத் தாத்தாவும், பாட்டியும் அத்தைக்கு வாக்கு கொடுத்துவிட்டார்கள் என்பதற்காகக் கட்டாயபடுத்தி அம்மாவைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்களாமே. படிப்பு மட்டுமே ஒருவரை எடை போடுவதற்கான தகுதி ஆகிவிடுமா என்ன? அம்மா பள்ளியிறுதி தாண்டவில்லைதான். ஆனால் அம்மாவின் தனித்திறமைகள் பற்றி அறிந்துகொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? தன்னுடைய ஆசைகள், எண்ணங்களை வெளிக்காட்ட முடியாமல்... மனதுக்குள்ளே அடக்கி வைத்து... அடக்கி வைத்து அந்த மன அழுத்தத்தில்தான் அம்மாவுக்கு அடிக்கடி வீசிங் தொல்லை ஏற்படுகிறது. எங்களுக்கு நல்ல அம்மாவாக... உங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு அடிமை மனைவியாகத்தானே இருக்கிறார்கள்?
என்ன செய்வது...? காவல்துறை அதிகாரியான நீங்கள்... கஞ்சி போட்டு இஸ்திரி போட்ட உங்கள் காக்கிச்சட்டை யூனிஃபார்ம்போல விறைத்துக்கொண்டு தான் இருப்பீர்கள் வீட்டிலும். ஸ்டேஷனில் கைதிகளைப் பார்க்கும் தோரணையில்தான் என்னையும், அம்மாவையும் பார்ப்பீர்கள். ஆனால் அண்ணனிடமும், தங்கையிடமும் நீங்கள் காட்டும் பாசமும், பரிவும் வேற லெவல்.
நீயும் அவங்களை மாதிரி நல்லாப் படிச்சா அப்பா உங்கிட்டயும் பாசமா இருப்பார்
னு அம்மா சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாவுக்கும், மகனுக்குமான பாசத்திற்கு படிப்பு ஒரு தடைக்கல்லாக இருக்க முடியுமா என்ன?
உங்களுக்கு வேண்டுமானால் படிப்பு வராத முட்டாள் மகனான என் மீது பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உங்கள் மடியில் அமர்ந்து... உங்கள் முறுக்கு மீசையைத் திருக வேண்டும்... நீங்கள் என்னை கட்டியணைத்துக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் இருக்குமென்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டாப்பா? ஆனால் அவையெல்லாம் நிறைவேற வேண்டுமானால் நான் வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும். முடியவில்லையே. என்னால் முடிந்தளவுதானே என்னால் படிக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் என்னுடைய மார்க் ஷீட் வரும்போதெல்லாம் என்மேல் உள்ள கோபத்தில் அம்மாவை வசை பாடுவீர்கள். எனக்கு செல்லம் கொடுத்து அம்மாதான் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்று திட்டுவீர்கள். அம்மாவைப் போலவே படிப்பு வராத மரமண்டை என்று ஏளனம் செய்வீர்கள். உங்களுக்குத் தெரியுமா அப்பா...? அம்மாவுக்குப் படிப்பில் எவ்வளவு ஆர்வம் இருந்ததென்று? அம்மாவின் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாலதான் அம்மாவின் படிப்பை நிறுத்திவிட்டார்களாம். கல்யாணத்திற்குப் பிறகு அஞ்சல் வழியில் படிக்க ஆர்வமாக இருந்தார்களாம். ஆனால் நீங்கள்தான் அம்மா