Kaadhalukku Mariyathai
By Viji Sampath
()
About this ebook
கண்டதும் காதல், காணாமலே காதல் என்று காதலில் உண்டு பலவகை. பல ஆண்டுகளாக, உருகி, உருகிக் காதலித்து பெற்றவர்களின் சம்மதத்துடனோ, அல்லது அவர்களை எதிர்த்துக் கொண்டோ திருமணம் புரிந்து கொள்ளும் காதலர்கள் வாழ்வில்... அந்தக் காதல் தொடர்கதையாகிறதா..? அல்லது திருமணமானதும் காதல் கசந்து விடுகிறதா? எந்தவித எதிர்பார்ப்புமின்றி காதலித்து விட்டு கல்யாணத்துக்குப் பிறகு தவறு செய்து விட்டோமோ என்று மருகுவது காதலுக்கு மரியாதையா? அல்லது தன் காதலை ஏற்க மறுத்த பெண்ணின் நினைவாகவே கடைசி வரை இருப்பது காதலுக்கு செய்யும் மரியாதையா..?
இந்தக் கார்ப்பரேட் யுகத்திலும் சாதி,அந்தஸ்து இவற்றைக் காரணம் காட்டி பெற்ற பிள்ளைகளின் ஆசையை நிராசையாக்குவது ஏற்புடையதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வேண்டுமா? படியுங்கள் காதலுக்கு மரியாதை சிறுகதை தொகுப்பை!
Read more from Viji Sampath
Devathai Vamsam Neeyo! Rating: 1 out of 5 stars1/5Indru Vandhathum Athey Nila! Rating: 0 out of 5 stars0 ratingsAnbendra Mazhaiyiley Rating: 0 out of 5 stars0 ratingsYugam Yugamaai..! Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyinil Valarjothiye Rating: 0 out of 5 stars0 ratingsUyir Nee..! Udal Naan..! Rating: 0 out of 5 stars0 ratingsThaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsMaariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhalukku Mariyathai
Related ebooks
Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsOdum Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsUshadeepan Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsPongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirai...? Rating: 5 out of 5 stars5/5Kaandhamunai Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruvan...! Rating: 0 out of 5 stars0 ratingsThavariya Tharunangal… Rating: 4 out of 5 stars4/5Kadanthu Pogum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Rendum Sernthathey... Rating: 0 out of 5 stars0 ratingsEzhamal Vandha Varam Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Indha Manam Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5இணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsஅமுத கீதம் Rating: 0 out of 5 stars0 ratingsAmutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAnbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5பொன்னாடை Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaadhalukku Mariyathai
0 ratings0 reviews
Book preview
Kaadhalukku Mariyathai - Viji Sampath
https://www.pustaka.co.in
காதலுக்கு மரியாதை
Kaadhalukku Mariyathai
Author:
விஜி சம்பத்
Viji Sampath
For more books
https://www.pustaka.co.in/home/author/viji-sampath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. காதலுக்கு மரியாதை
2. கலாட்டா கல்யாணம்!
3. உயிரே... உயிரே...!
4. காதல் புனிதமானது
5. காதல் என்பது எதுவரை?
6. கத்திரி, வெண்டை, காலிப் பூவேய்
7. பாசமா...? நேசமா...?
8. நான் அவனில்லை
9. வாழ வைத்த காதலுக்கு ஜே
10. இதுதான் காதல் என்பதா?
1. காதலுக்கு மரியாதை
நேற்று இரவு 10 மணிக்கு சிணுங்க ஆரம்பித்த மகாதேவனின் கைபேசி பொழுது விடிந்தும் விடாமல், அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. எடுத்துப் பேச மனமில்லாமல் அடிக்கிற வரை அடிக்கட்டும் என்று விட்டுவிட்டார் மகாதேவன். எடுத்துப் பேசினால் மறுமுனையில் என்ன பேசுவார்கள்... என்ன கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியும். ஒவ்வொருவருக்கும் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டி வரும் என்றுதான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம், யாமினியை எப்படி விட முடியும்? அவள் செய்த வேலையால் தானே இவ்வளவும் என்பதை நினைத்துத் தனக்குள்ளே மருகி வேதனைப்பட்டார் மகாதேவன்.
நேற்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம். மிகப்பெரிய பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி சேனல் ஒன்று இளம் காதலர்களை வைத்து நடத்திய லைவ் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட யாமினியிடம்
உங்கள் காதலை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு,
எனக்கு அம்மா இல்லை... அப்பா மட்டும்தான். அவர் என் காதலை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவரை எதிர்த்து என் காதலரை மணந்து கொள்வேன். என் காதலர் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதால் மதம் மாறவும் நான் தயார்
என்று அவள் கூறிய துணிச்சலான பதிலால் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்களும், மகாதேவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களும் அதிர்ச்சி அடைந்து மாறி மாறி மகாதேவனை தொடர்பு கொள்ள முயற்சித்ததன் விளைவுதான் செல்போனில் வந்த தொடர் அழைப்புகள்.
மகாதேவன் ஒரு ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் அவரிடம் படித்த மாணவர்கள், அவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு மனித உருவில் நடமாடும் தெய்வம். அவ்வளவு இனிமையான சுபாவம் கொண்டவர். கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது, சக ஆசிரியர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என பல நல்ல குணங்களின் இருப்பிடம். அப்படிப்பட்டவருக்குத்தான் இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கி விட்டாள் அவருடைய மகள் யாமினி.
யாமினி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு இப்போது எம்பிஏ முதல் வருடம் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் படிக்கும் தீபக்கை தான் விரும்புவதாகவும், படிப்பு முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள அவருடைய சம்மதத்தை பொங்கல் விடுமுறைக்கு வந்திருந்தபோது அவரிடம் கேட்டாள் யாமினி.
அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் யோசித்து பதில் சொல்வதாக அவளிடம் சொல்லிவிட்டு சென்னையில் உள்ள நண்பர்கள் மற்றும் உயிர்த்தோழன் சூசை மூலமாக யாமினியின் காதலனைப் பற்றி விசாரித்தார் மகாதேவன். கிடைத்த தகவல்கள் திருப்திகரமாக இல்லை என்பதோடு அவன் காதலிக்கும் நான்காவது பெண் யாமினி என்பதும், பொழுதுபோக்குக்காக காதலிக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்றும் அவருக்கு தகவல் வந்தது. இதை யாமினிடம் எப்படி சொல்வது என்பதை அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஊருக்கு புறப்படத் தயாராக தோளில் பையை மாட்டிக் கொண்டு, காதில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு வந்தாள் யாமினி.
என்னம்மா அதுக்குள்ள கிளம்பிட்டே? இன்னும் நாலு நாள் விடுமுறை இருக்கு இல்ல
அன்போடு கேட்டார் மகாதேவன்.
இல்லப்பா இங்க ரொம்ப போர் அடிக்குது. ஹாஸ்டலுக்கு போனா கொஞ்சம் அசைன்மென்ட் வேலை எல்லாம் முடிக்கலாம்
புன்னகையோடு பதில் அளித்தாள் யாமினி. அவள் பதிலால் ஏமாற்றம் அடைந்தவர்,
சரி மா, கால் டாக்ஸிக்கு ஃபோன் பண்ணட்டுமா ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்கே
என்ற கேள்வியோடு மகளை ஏறிட்டார்.
ஆமாம் இன்னும் நேரம் இருக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்ப்பா. அப்புறம் கிளம்புறேன். நான் சொன்ன விஷயத்தைப் பத்தி யோசிச்சீங்களா?
அப்பாவை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள் மகள்.
இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் காதல்னு வந்துட்டாலே பெண்களுக்குத் துணிச்சல் தானா வந்துடும் போல இருக்கு
என்று மனதுக்குள் நினைத்தவருக்கு நான்ஸியின் முகம் மனதுக்குள் வந்து போனது.
என்னப்பா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க பதிலே பேச மாட்டேங்கறீங்க
என்ற யாமினியின் குரலால் நினைவுக்கு வந்தவர்,
அதுவா அம்மா, உன் படிப்பு முடியட்டுமே... அதுக்கப்புறம் இதைப்பற்றி யோசிக்கலாம்னு நினைக்கிறேன் அந்தப் பையனைப் பத்தி விசாரிக்கணும் இல்லையா?
என்றதுதான் தாமதம் பொங்கி எழுந்து விட்டாள் யாமினி.
தெரியும்பா... உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு! அவன் வேற மதம் நம்ம வேற மதம். அதுதானே உங்க தயக்கத்துக்குக் காரணம்? ஆனால் வெளியில மட்டும் எம்மதமும் சம்மதம்... ஜாதின்னா ஒரே ஜாதிதான் அது மனுஷ ஜாதின்னு கொள்கை பேசுறீங்க. இதோ உங்க சொந்த விஷயம்னு வந்தா எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டிடுவீங்க அப்படித்தானே?
மூச்சு வாங்கப் பேசியவளை அமைதியாகப் பார்த்தார் மகாதேவன்.
இங்க பாருமா! என்னை பொறுத்தவரை ஜாதி மதம் என்பது எல்லாம் நமக்கு நாமே போட்டுக்கிற தடைகள். அதை உடைச்சு வெளியில வந்தாதான் மனிதகுலம் சண்டை, சச்சரவு இல்லாமல் இருக்கும் என்கிறது என்னுடைய உறுதியான கொள்கை. நான் உன்னுடைய காதலை ஏற்கிறதோ, மறுக்கிறதோ சாதி அடிப்படையில் இல்லை அந்தப் பையனோட குணம், நடவடிக்கை, பழக்கவழக்கங்கள் எனக்கு திருப்தியா இருக்கணும் அது மட்டும்தான் என்னுடைய ஒரே கண்டிஷன் அதுக்கு நீயும் என்னோட ஒத்துழைக்கணும்.
என்றவரை எரிப்பது போல முறைத்துப் பார்த்த யாமினி,
நீங்க சொல்றது மாதிரி ஆராய்ச்சி பண்ணி அப்புறமா வரதுக்கு பேரு காதல் இல்லை. பார்த்ததுமே ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்துப் போய் வருவதற்கு பெயர்தான் காதல்
என்றாள் விடாப்பிடியாக.
எனக்கும் யோசிக்க டைம் கொடு... நீயும் கொஞ்சம் நான் சொன்னதை சிந்திச்சுப் பாரு. ஒரு அப்பாவா என் நிலைமையில் இருந்து யோசிச்சேன்னா நான் சொல்றது சரின்னு உனக்கும் தோணும்.
அவர் சொன்னதை முழுதாகக் காதில் வாங்கிக்கொள்ளாமல், போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல் காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வாசலை நோக்கி வேகமாக நடந்தாள் யாமினி.
கால் டாக்ஸிக்கு போன் பண்ணலையே எப்படி போவே?
என்று கேட்டவரிடம்,
வழியில் ஆட்டோ பிடிச்சு போவேன், இல்லேன்னா நடந்தே போவேன்.
வெடுக்கென்று சொல்லிவிட்டு போனவளிடம் இருந்து இதுவரை ஒரு தகவலும் இல்லை. இவராக போன் செய்தாலும் கட் செய்து விடுவாள். சரி கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே என்று இருந்ததுதான் தவறாக போயிற்றோ? சென்னைக்கு சென்று அவளுடன் நேரில் பேசி சமாதானப்படுத்தி தான் கேள்விப்பட்ட தகவல்களை அவளிடம் சொல்லி சரி செய்திருக்கலாமோ? என்று தனக்குள்ளாக ஆயிரம் கேள்விகளை கேட்டுத் தானே அதற்கு பதிலையும் சொல்லிக் கொண்டார் மகாதேவன்.
தாயில்லாத பெண்ணாயிற்றே என்று மிகவும் செல்லமாக வளர்த்ததுதான் மிகப்பெரிய தவறு என்று தாமதமாக அவருக்குத் தோன்றியது. அவளுடைய காதலை தான் ஏற்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்து விட்டதால்தான் எடுத்த முடிவை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக பட்டென்று போட்டு உடைத்து விட்டாள் போலிருக்கிறது.
அவளை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் சிறந்தது என்று முடிவு செய்து அப்போதே ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு நெல்லையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் மகாதேவன். அவருடைய பால்ய நண்பர் சூசை வீட்டுக்கு போய்க் குளித்து, மதிய உணவு முடித்து இருவரும் யாமினியின் ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தனர். சூசையை வெளியே இருக்க சொல்லிவிட்டுத் தான் மட்டும் மகளை சந்தித்தார். கொஞ்சம் கூடத் தான் செய்த செயலுக்காக வருத்தப்படாமல்...
இப்ப எதுக்காக வந்திருக்கீங்க? பேசி சமாதானப்படுத்துற வேலையெல்லாம் எங்கிட்ட நடக்காது. என்னோட தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பாத்தீங்கல்ல? என்னோட முடிவை உங்களுக்கு சொல்றதுக்காக நான் தேர்ந்தெடுத்த வழிதான் அது!
என்றாள் வீம்பாக.
நான்தான் நல்லா யோசிச்சு முடிவு எடுக்கலாம்னு சொன்னேனே? அதுக்குள்ள உனக்கென்ன அவசரம். எப்படியும் படிப்பு முடியணும்ல?
கனிவோடு பேசிய அவரை முறைத்துப் பார்த்தாள் யாமினி.
"எனக்காகப் பரிஞ்சு பேச இங்க யார் இருக்காங்க? சின்ன வயசுலயே அம்மாவை இழந்த துர்ப்பாக்கியசாலியா இருக்கேன். அம்மாவப் பத்தி உங்ககிட்ட பேசினாலே உங்களுக்குக் கோபம் வரும். ஒருவேளை நீங்க அவங்ககிட்ட ரொம்பக் கடுமையா நடந்துக்கிட்டதாலதான் மனசு வெறுத்து அவங்க சீக்கிரமா செத்துட்டாங்களோ? இருந்தாலும் இருக்கும். காதலை வெறுக்கிற நீங்க எங்கே அம்மாகிட்ட பாசமா நடந்துகிட்டிருக்கப் போறீங்க? உங்க பக்கத்து உறவுக்காரங்களோ... இல்லை அம்மா பக்கத்து உறவுக்காரங்களோ ஒரு நாளாவது நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்களா? உங்க கடுமையான நடவடிக்கைகளாலதான் அம்மா சீக்கிரம் செத்துப்