Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maariyathu Nenjam
Maariyathu Nenjam
Maariyathu Nenjam
Ebook93 pages35 minutes

Maariyathu Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித மனம் விசித்திரமானது... நொடிக்கு நொடி தன் உணர்வுகளை, முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நூதனமான இயல்புடையது. அப்படிப்பட்ட சில மனங்களின் மாற்றம்தான் மாறியது நெஞ்சம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பு...

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580152209519
Maariyathu Nenjam

Read more from Viji Sampath

Related to Maariyathu Nenjam

Related ebooks

Reviews for Maariyathu Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maariyathu Nenjam - Viji Sampath

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாறியது நெஞ்சம்

    சிறுகதைகள்

    Maariyathu Nenjam

    Sirukadhaigal

    Author:

    விஜி சம்பத்

    Viji Sampath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-sampath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.தண்ணீர்… தண்ணீர்!

    2. மாறியது நெஞ்சம்

    3. நிதர்சனம்

    4. இந்தப் புன்னகை என்ன விலை?

    5. கண்ணோடு காண்பதெல்லாம்…!

    6. பாவத்தின் ஊதியம்

    7. அன்பே பிரதானம்

    8. தெய்வம் நின்று கொல்லும்

    9. அறுந்த வால்களின் அட்டகாசங்கள்

    10. மனைவி அமைவதெல்லாம்...!

    1.தண்ணீர்… தண்ணீர்!

    புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச் சரத்தை, மனைவி வேதாவின் படத்திற்கு மாலையாக இட்டு, இரு கரம் கூப்பி வணங்கினார் சிவராமன்.

    பூஜையறையில் இருந்து அவர் ஹாலுக்கு வந்ததைப் பார்த்த சமையல்காரர் ஏழுமலை, டம்ளரில் நீராகரத்தோடு வர,

    "நன்றி ஏழுமலை'' என்று புன்னகையோடு டம்ளரை வாங்கிக் கொண்டு வெளி வாசலுக்கு வந்தவர் கண்ணில், செடி முழுக்கப் பூத்திருந்த குண்டு மல்லிப் பூக்கள் பட்டதும் அவருடைய நினைவு முழுவதும் பழைய நினைவுகள் ஆக்ரமிக்கத் தொடங்கின.

    அரசு அலுவலகத்தில் கிளார்க்காகப் பணியாற்றத் தொடங்கிய போதே சிவராமனுக்கும், வேதாவுக்கும் திருமணமாகிவிட்டது. அதன் பின்னர் பல பதவி உயர்வுகள் பெற்று அரசு அதிகாரியாக சிவராமன் ஓய்வு பெறும் வரையிலும் அவர் மனைவி வேதா வாயைத் திறந்து தனக்காக எதுவும் கேட்டதில்லை. இரட்டைப் பிள்ளைகளாக ஹரீஷ் - ஹரிதா பிறந்து, வளர்ந்து, இன்ஜினீயரிங் முடிக்கும் போதுதான் சிவராமன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இன்ஜினீயரிங் முடித்த கையோடு, நல்ல வரன் வரவே ஹரிதாவுக்குத் திருமணத்தை முடித்து விட்டார். கண் நிறைந்த கணவனோடு லண்டனில் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த, ஹரீஷ்க்கும் பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

    அது வரையிலும் வாயைத் திறந்து எதுவும் கேட்காத வேதா, ஒரு நாள் காலை, சிவராமனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு,

    "என்னங்க, நான் ஒரு விஷயம் சொல்றேன், முடியும்னா, செய்யுங்க, இல்லேன்னா கோபப்படாதீங்க'' என்றாள்.

    அட, இதென்ன! புதுசா இருக்கே. என்று ஆச்சரியப்பட்ட சிவராமன், "சொல்லும்மா... . என்ன வேணும்? நகையா? புடவையா? '' என்று கேட்டார் பரிவாக.

    "இல்லங்க... . இத்தனை நாள்தான் உங்க வேலை, பிள்ளைங்க படிப்பு, கல்யாணம்னு இந்த நகரத்துச் சந்தடியில காலம் தள்ளிட்டோம். இனிமேலாவது அமைதியா, இயற்கைச் சூழலோட இருக்கிற இடத்தில் வாழ்க்கை நடத்தணும், நமக்காக நாம் வாழணும்... . அதுக்கு... .'' என்று நிறுத்திவிட்டு சிவராமன் முகத்தைப் பார்க்க,

    "ம்... . சொல்லு... . என்ன பண்ணலாம்? என்று சிவராமன் தூண்டிவிட,

    "நம்ம பக்கத்து வீட்ல இருக்கிறவங்களுக்கு ஏதோ அவசர பணத்தேவையாம். ஊருக்கு வெளியே இருக்கிற அவங்க தென்னந்தோப்புல, மெயின் ரோட்டுக்குப் பக்கமா இருக்கிற ஒரு ஏக்கரை மட்டும் பிரிச்சு விக்கிறாங்களாம். பெரிய கிணறும் இருக்குதாம்... . நமக்காகன்னா கொஞ்சம் விலையும் குறைச்சுக்கிறேன்னு சொல்றாங்க''

    சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போய்விட்டாள்.

    வேதா விஷயத்தை ஆரம்பித்த நேரம்... . தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாக இருந்திருக்கும் போல. இவர்கள் கேட்ட விலைக்கே பேரம் படிய, வேதாவின் நகைகளை விற்ற பணம், டவுனில் அவர்கள் குடியிருந்த வீட்டை விற்ற பணம் எல்லாம் சேர்த்து, தோப்பை வாங்கி, அதில் முன்பிருந்த வீட்டை இடித்து இவர்கள் தேவைக்கு வசதியாகக் கட்டி ஒரு நல்ல நாளில் பண்ணை வீட்டுக்குக் குடி போனார்கள்.

    அங்கு போனதும் வேதாவுக்கு தலை, கால் புரியவில்லை. வீட்டுக்கு முன்புறம் பூச்செடிகள் கண்ணைப் பறிக்க பின்புறம் காய்கறி, கீரைப் பாத்திகள் பச்சைப் பசேலென்று மனதை அள்ளியது. அதிலும் செடி கொள்ளாமல் பூக்கும் குண்டு மல்லிப் பூக்கள் கண்களைக் கட்டிப்போடும். அந்தப் பூச்செடி மேல்தான் வேதாவுக்குக் கொள்ளைப் பிரியம்.

    நாட்கள், ஆண்டுகளாக உருண்டோட ஹரீஷ்க்கு அவனுடைய அத்தை மகள் ஜனனியை மணம் முடித்தனர். கனடாவில் ஹரீஷ்க்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க, மனைவியோடு பறந்துவிட்டான். அப்புறமென்ன... . தான் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவித்து விட்டோம் என்ற திருப்தியோ... . இல்லை, கடமைகள் முடிந்துவிட்டன, இனி எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்தோ... . ஒரு நாள் மாலை குண்டு மல்லிப் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துக் கொண்டிருக்கையில் மயங்கிச் சாய்ந்தவள்தான்... . பின்னர் வேதா எழுந்து கொள்ளவே இல்லை.

    தாயின் சாவுக்கு வந்த மகன், மகள் இருவரும் அரும்பாடுபட்டு அழைத்தும்

    Enjoying the preview?
    Page 1 of 1