Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannamoochi Yenada...
Kannamoochi Yenada...
Kannamoochi Yenada...
Ebook215 pages2 hours

Kannamoochi Yenada...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒரு காதலினால் பாதிக்கப்படும் நாயகன், நாயகியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு காதல் கூடாது என இருக்க.... நாயகன் நாயகிக்கு இடையில் காணாமலே முளைவிடும் காதல்... அந்த காதல் கை கூடுமா? காணாக்காதல் கானல் நீராய் போகுமா? தெரிந்துகொள்ள படியுங்கள் கண்ணாமூச்சி ஏனடா.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580109209183
Kannamoochi Yenada...

Read more from Infaa Alocious

Related authors

Related to Kannamoochi Yenada...

Related ebooks

Reviews for Kannamoochi Yenada...

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannamoochi Yenada... - Infaa Alocious

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணாமூச்சி ஏனடா...

    Kannamoochi Yenada...

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி – 1

    பகுதி – 2

    பகுதி – 3

    பகுதி – 4

    பகுதி – 5

    பகுதி – 6

    பகுதி – 7

    பகுதி – 8

    பகுதி – 9

    பகுதி – 10.

    பகுதி – 11

    பகுதி – 12

    பகுதி – 13

    பகுதி – 14

    பகுதி – 15

    பகுதி – 16

    பகுதி – 17

    பகுதி – 18

    பகுதி – 19

    பகுதி – 20

    பகுதி - 21

    பகுதி – 22

    பகுதி – 23

    பகுதி – 24

    பகுதி – 25

    பகுதி – 1

    சென்னையின் சற்று ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஏரியாவில் இருந்த வீட்டுக்குள் இருந்து அத்தனையாக ஒரு அழுகை சத்தமும், புலம்பல் சத்தமும் வந்து கொண்டிருக்க, அக்கம் பக்கம் வீடுகள் இல்லை என்பதால் அது யாருக்கும் கேட்கவில்லை.

    தாயின் அழுகையை சற்று இரக்கமும், கோபமுமாக பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரணவ். அப்பா, என்னப்பா இது? தந்தையிடம் கண்ணை உருட்டி அவன் கேட்க,

    எனக்கு எதுவும் தெரியாதடா மவனே... மனைவி செண்பகம் அறியாதவாறு தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டார் ராயப்பன்.

    என்னது தெரியாதா? அவன் பல்லைக் கடிக்க,

    தெரியும்தான்... நான் என்னடா மகனே செய்யட்டும்? அப்பாவியாக அவர் கேட்டு வைக்க, ‘இவரை என்ன செய்தால் தகும்?’ என்றுதான் பார்த்தான்.

    ஏதாவது சொல்லி சமாதானப்படுத்துங்கப்பா... தந்தையிடம் அடிக்குரலில் மிரட்ட, அவர் நடுங்குவது அவனுக்கு நன்கு புரிந்தது.

    ‘இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியும், பொண்டாட்டிகிட்டே ஒரு வார்த்தை பேச பயத்தைப் பார்...’ மனதுக்குள் தந்தையை கடிந்து கொண்டவன், அவரை நக்கலாக ஒரு பார்வை பார்த்தான்.

    அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், எனக்கு உசுரு முக்கியமடா மவனே... அவகிட்டே போயிட்டு, யார் அடி வாங்கி கட்டிக்கிறது? ஏன் நீ போறது அவனிடம் சொல்ல,

    இந்த கூந்தல் விளக்கமெல்லாம் நான் கேட்டேனா? அவன் அதே குரலிலேயே கேட்க,

    உன்னைப் பெத்த அப்பாகிட்டே கெட்ட வார்த்தை பேசற? தப்புடா மகனே அவர் சொல்ல, அவர் சொன்ன தோரணையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

    பெத்தது அம்மாப்பா... இப்படிச் சொன்ன மகனை,

    ‘இது வரைக்கும் அந்த ஒன்றைத்தான் என் சாதனையா நினைச்சிருந்தேன், அதுவும் போச்சா?’ என்னும் பார்வை பார்த்தவர்,

    அப்போ எனக்கு இங்கே என்ன பதவிடா மகனே? அவனிடம் கேட்டு வைத்தார்.

    ‘இங்கே இருக்கும் சூழ்நிலையில் இவருக்கு குசும்பைப் பாரேன்’ என எண்ணியவன்,

    அம்மாகிட்டேயே கேட்டு சொல்றேன்ப்பா... அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல,

    ‘அட கொலைகாரப்பாவி’ என்பதுபோல் அவனைப் பார்த்து வைத்தார்.

    அப்பா, அம்மாவைப் போய் சமாதானப்படுத்துங்கப்பா அவன் மீண்டுமாக அழுத்திச் சொல்ல, விட்டால் அழுதுவிடுவேன் என்பதுபோல் அவனைப் பார்த்தார்.

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததைப் பாத்துமாடா என்னை போகச் சொல்ற? சற்று நடுங்கியவாறே கேட்டார்.

    அட, நீங்க பாக்காததாப்பா... போங்க... இல்லன்னா இதுக்கும் நாமதான் பாட்டு வாங்கணும்.

    ‘சேர்ந்து போனா... சேர்ந்து தானே வாங்குவோம்... தனியாப் போனா பிரிச்சு மேஞ்சுடுவாளேடா மகனே...’ உள்ளுக்குள் எண்ணியவர்,

    ஏன் மகனே... இந்த வேலையை நீ ஏன் தனியா செய்யக் கூடாது? அவர் அவனிடம் எதிர் கேள்வி கேட்டு வைக்க, அவரை முதல் முறையாக முறைத்தான்.

    நக்கலு...? அவன் ராகமாக இழுக்க,

    ‘ஆம்’ என தலை அசைத்தவர்... வேகமாக இல்லை என ஆட்டி வைத்தார்.

    குசும்பு தான... சொன்னவன், தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

    ‘ச்சை... என்ன வாழ்க்கைடா இது?’ உள்ளுக்குள் சலித்துக் கொள்ள,

    என் மனைவிக்கு நீ பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்கும் அவர் வார்த்தைகளை அப்படி இழுக்க,

    அந்த ஆறுதலை கொடுக்கப்போய் நான் சிக்கி சின்னாபின்னமாகறது உங்க கண்ணுக்கு தெரியல?.

    நம்ம வீட்டில் நீதானே மகனே கொஞ்சம் தைரியசாலி... அதான்... ‘ஹி...ஹி...’ அவனைப்பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க,

    ‘சகிக்கல...’ என்னும் விதமாக உதட்டை வளைத்தவன்,

    ஏன்... அந்த தைரியத்துகாகவே, ஒரு வாரமா அவங்க என்னை வச்சு செய்யறது போதாதா? இன்னும் என்கிட்டே சேதாரமாவ ஏதாச்சும் மிச்சம் இருக்கு? அவன் படு நக்கலாக வினவ, அவனை வேகமாக ஆராய்ந்தார்.

    அவரது பார்வையைப் பார்த்தவன், என்னத்த தேடறீங்க? அவரது பதில் என்னவாக இருக்கும் எனத் தெரிந்தே கேட்டான்.

    முழுசாத்தான் மகனே இருக்க... எனக்கு வெளிப்பார்வைக்கு ஒன்னும் தெரியலையே... இப்படிச் சொன்னவரை அப்பா என்றும் பாராமல் ரெண்டு அப்பு அப்பினால் என்ன என்றுதான் யோசித்தான்.

    அம்மா உங்களை அடிக்கிறப்போ காயம் எல்லாம் வெளியே தெரியுமா என்ன?.

    ச்சே... ச்சே... நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா செய்வா மகனே என் மனைவி. குத்துறது பூரா ஊமைக் குத்துதான்... ஒரு பய கண்டு பிடிக்க முடியாதே அவர் பெருமையாக சொல்ல, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

    த்து... இதெல்லாம் ஒரு பெருமை கூந்தல்னு வெளியே வேற சொல்லிக்கறீங்க?.

    இன்னும் இலைமறை காய் மறையா ரெண்டு பேச்சு வேண்ணா பேசிக்க, ஆனா என் மனைவிகிட்டே பேசிடேன்.

    ஏன் நேரா திட்டினா உங்க கெளரவம் தூக்குல தொங்கிடுமோ?.

    இல்ல, இல்ல... உங்க கௌரவம் இறங்கிடுமேன்னு பாத்தேன் அவர் சொல்லிவிட்டு அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்க்க, அவரை கழுத்தை நெரித்துவிடும் வேகம் அவனிடம்.

    அதைப் பார்த்தவர், வேகமாக இரண்டடி விலகி நிற்க, மீண்டுமாக அவரை நெருங்கி நின்றவன், போனவன் என்னமோ போயிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கான். நாமதான் இங்கே சாவறோம் தன் தம்பியை மனதுக்குள்ளேயே கழுவி ஊற்றியவாறு, வெளியே நிதானமாகவே நின்றான்.

    அவனாவது சந்தோஷமா இருக்கட்டுமேடா... இப்படிச் சொன்ன தந்தையை கெட்ட வார்த்தையிலேயே திட்ட இதழ்கள் துடிக்க, அழுத்தமாக வாயை மூடி அதைத் தடுத்தான்.

    இவ்வளவு வாங்கியும், அவன்மேல பாசம்... இருக்கட்டும், இருக்கட்டும். அம்மாகிட்டே சொல்றேன்... நீங்கதான் அவனை அந்த பொண்ணோட அனுப்பி வச்சீங்கன்னு அவன் சொல்ல, அப்படி ஒரு அதிர்ச்சி அவரிடம்.

    மவனே... இதைச் செய்யறதுக்கு உன் கையாலேயே எனக்கு கொஞ்சம் விஷத்தை வாங்கி வாயில ஊத்தி விட்டுடுடா, அவர் சொல்ல...

    ஓ... விஷத்தை வாங்கித் தந்தா கூட போதாது... அதை நான் உங்க வாயிலே வேற ஊத்தணுமோ?.

    ஆமாடா மவனே, நானே வாங்கி குடிக்கறதா இருந்தா, எப்போவோ குடிச்சிருக்க மாட்டேன்? உன் தாயோட வாழறதுக்கு அது எம்புட்டு பெரிய விடுதலை தெரியுமா? அவர் கேட்டு முடிக்க, அவரை கொள்ளையாய் முறைத்தான்.

    திடுமென அத்தனை நேரமாக ஓலமிட்டு அழுது கொண்டிருந்த தாயின் ஓசை கேட்காமல் போகவே, தகப்பனும் மகனுமாக திரும்பிப் பார்க்க, உக்கிர காளியாக அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார் செண்பகம்.

    அதைப் பார்த்த ராயப்பன்... ஆத்தா, மகமாயி... மலை இறங்கிடும்மா சொன்னவாறே வீட்டுக்குள் அங்கப்ரதட்சணம் செய்யத் துவங்கிவிட,

    ‘இந்தா பெர்ஃபாம் பண்ணிட்டாருல்ல... இப்போ நான்தான் பலியாடு’ எண்ணியவன், தாயை ஏறிட்டான்.

    அப்போ... அவன் செஞ்ச ஈனத்தனத்துக்கு இவரும் கூட்டா? தரையில் உருண்டுகொண்டு வந்த கணவனை, அப்படியே ஏறி மிதித்துவிடும் கோபம் செண்பகத்திடம்.

    அம்மா, அதான் விழுந்து புரளவே ஆரம்பிச்சுட்டாரே, அவரை விடுங்க. இப்போ என்னத்துக்கு இந்த அழுகை? அவரிடம் கேட்க, அத்தனை நேரமாக உருண்டு கொண்டிருந்த ராயப்பன், தன் வேண்டுதலை சட்டென நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

    அவரது செய்கையில் பக்கென ஒரு சிரிப்பு எட்டிப் பார்க்க முயல, அதை முயன்று தன் வாய்க்குள் அடக்கியவன், தாயை ஏறிட்டான்.

    மனைவியின் கவனம் தன்னிடமிருந்து சற்று விலகியது, உயிரைக் காப்பாற்றும் வேகத்தில், ஆசையில், அங்கிருந்து எழுந்து ஓடினான்.

    அவர் பம்மிக்கொண்டு ஓடிய விதத்தைப் பார்க்கையில், இன்னும் சிரிப்பு வர, உள்ளுக்குள் உருண்டு பிரண்டு சிரித்தவாறே தாயை அமைதியாக ஏறிட்டான்.

    என்னடா எதுவுமே இங்கன நடக்காத மாதிரி கேக்க?.

    எனக்கு நல்லாவே தெரியும்தான்... பத்து நாளைக்கும் மேல ஆன விஷயத்துக்கு இப்போ எதுக்கு நலுங்கு வச்சுட்டு இருக்கீங்க?.

    நம்ம சொந்தக்காரங்களுக்கு பூரா சேதி தெரிஞ்சுபோச்சுடா மகனே அவர் மூக்கை உறிய, அவனிடம் அத்தனை முறைப்பு.

    நம்ம அப்பா சொந்தத்தைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவன் கேட்க,

    அவனுங்களா... பொறாமை பிடிச்சவங்க... அந்த நன்றிகெட்ட பயலுகளைப் பத்தி பேசாதடா... எனக்கு கெட்ட கோவம் வரும் அவர் திடுமென அவிழ்ந்து விழுந்த கூந்தலை அள்ளி முடிந்தவாறு ஆக்ரோஷமாக கத்த, வாசலில் இருந்து தலையை மட்டும் உள்ளுக்குள் செலுத்திய ராயப்பன்,

    ‘ஏன்டா மகனே இந்த கொலைவெறி உனக்கு?’ என்பதுபோல் கையை அசைக்க, அவர் காட்டிய குறளி வித்தையில், வெடித்து கிளம்பிய சிரிப்பை இதழ் கடித்தே நிறுத்தினான்.

    முயன்று அதை கட்டுப்படுத்தி, சரி... உங்க பக்க சொந்தங்கள் எல்லாம் எப்படி?.

    அவங்களைப்பத்தி இப்ப என்னடா? பூரா சுயநலவாதிங்க... தேவைக்கின்னா மட்டும் வாசல்ல வந்து நிப்பாக... இல்லையா, கண்டுக்கவே மாட்டாக... அவர் சொல்ல, பெரிதாக புன்னகை முகம் காட்டினான்.

    இந்த சொந்தத்துக்கு எல்லாம் விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு எங்க நிம்மதியை எல்லாம் குழி தோண்டி புதைக்கணுமா? இல்ல எனக்கு புரியல... அவன் கேட்க, பட்டென அவரிடம் ஒரு அமைதி நிலவியது.

    அம்மா, நாம மத்தவங்களுக்காக எல்லாம் வாழ முடியாது, நாம நமக்காகத்தான் வாழ்ந்தாகணும். கொஞ்சம் அமைதியா இருங்க அவன் சொல்ல, செண்பகம் அமைதியாகிவிட்டார்.

    மகன் பேசப் பேச, வாயடைத்துப்போய் நின்றிருந்த மனைவியை எட்டாவது அதிசயமாகப் பார்த்தார் ராயப்பன்.

    ‘சூப்பர் டா மகனே...’ அவர் எட்டிப்பார்த்து விரல்களை மடக்கி சொல்ல, தலையை அசைத்துக் கொண்டான்.

    டேய் அவன் உனக்கு தம்பிடா... உனக்கு கல்யாணமாக முன்னாடி, அவன் ஏதோ ஒரு பொண்ணை இழுத்துட்டு போனது எப்படிடா நியாயமாகும்? இப்போ உனக்கு எவன்டா பொண்ணு கொடுப்பான்? இல்லன்னா நீயும் அவனைப்போல் என் தலையில் கல்லைப் போட இருக்கியா? அவர் கேட்க, தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.

    அம்மா... எனக்கு எவன் பொண்ணு கொடுப்பான்னும் கேக்கறீங்க? பிறகு நானே எவளையாவது கூட்டி வந்துடுவேனோன்னு குழப்பறீங்க... என்னம்மா உங்க பிரச்சனை...?.

    கணவரே... இவன் பேசறதைக் கேட்டீங்களா? இவனும் நம்ம தலையில கல்லைப் போடப் போறான்... சொன்னவர் ‘ஓ...’ வென அழ, ராயப்பன் விரைந்து வந்தார்.

    மகனே, என் மனைவியை ஏன் இப்படி அழ வைக்கற? இதை நான் ஒத்துக்கவே முடியாது மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு, அவருக்கு அரணாக நின்றுகொள்ள, தகப்பனை முறைத்தான்.

    ‘யோவ்...’ பல்லை லேசாக கடித்து அவன் பார்த்த பார்வையில், ராயப்பன் எதற்கு அவனைப் பார்க்கப் போகிறானாம்?

    ‘நொட்ட முடியாது... என் வாயில நல்லா வருது...’ தகப்பனின் காதுக்குள் அவன் முனக, ‘எனக்கு கேக்கவே இல்லையே...’ என்னும் பாவனையைக் கொடுத்தார்.

    அம்மா... இப்போ நீங்க அழாமல் இருக்க நான் என்ன செய்யணும்? பத்து நாட்களாக விஷயம் இந்த ஒரு கேள்வியில் மட்டுமே முடிவுக்கு வந்திருக்க, பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

    "அப்படிக் கேளுடா மகனே... அம்மாவுக்கு வாக்கு கொடுடா... எங்களுக்கு இப்போ இருக்கற ஒரே ஆதரவு நீதான். உன் கல்யாணத்தையாவது நாங்க பண்ணிப் பாக்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதாடா.

    எவளையும் காதலிக்க மாட்டேன்... இழுத்துட்டு போக மாட்டேன்னு சொல்லுடா. நான் பாக்கற பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுடா... வேகமாக கண்களைப் புடவை முந்தானையில் துடைத்துக்கொண்ட செண்பகம் அவன் பக்கம் கரத்தை நீட்டினார்.

    "சத்தியம் தானே... தாராளமா பண்றேன். ஒரு வேளை...

    Enjoying the preview?
    Page 1 of 1