Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Paartha Paarvai...!
Nee Paartha Paarvai...!
Nee Paartha Paarvai...!
Ebook134 pages1 hour

Nee Paartha Paarvai...!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

தங்கை ஷோபனாவின் வாழ்வில் ஏற்பட்ட விவாகரத்து பிரச்சினையைத் தீர்க்க விசாகனின் உதவி தேடி வருகிறாள் சுமங்கலி. விசாகனோ அவள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற மாதிரி ஒரு நிபந்தனை விதிக்கிறான்.நிபந்தனையை ஏற்றுக் கொண்டாளா? தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்த்தாளா? படித்துப் பாருங்கள் ஜெய்சக்தியின் சுவாரஸ்யமான எழுத்தில்

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580106007100
Nee Paartha Paarvai...!

Read more from Jaisakthi

Related to Nee Paartha Paarvai...!

Related ebooks

Reviews for Nee Paartha Paarvai...!

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Paartha Paarvai...! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    நீ பார்த்த பார்வை...!

    Nee Paartha Paarvai...!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 1

    மீட்டிங் நல்லாவே போச்சு சார் என்றார் தயாளன். விசாகன் புன்னகைத்தான்.

    நான் கூட பயந்துகிட்டிருந்தேன் சார். இந்த லேபரர்ஸ் எல்லாம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுவாங்களோ அப்படின்னு பயந்துகிட்டிருந்தேன் என்றார் தயாளன்.

    விசாகன் மறுபடியும் புன்னகைத்தான்!

    இந்தப் புன்னகையில் ஏதோ அர்த்தம் தொனிக்கிறாற்போல மாதவனுக்குத் தோன்றியது.

    சார், நீங்க சிரிக்கிறதைப் பார்த்தா ஏதோ ஒரு விதமா டாக்கிள் பண்ணிட்டீங்க போல இருக்கே என்றார் தயாளன்.

    அவனுடைய மர்மப் புன்னகை இன்னும் பெரிதாக விரிந்தது.

    அப்படித்தான் போல இருக்கு. நீங்க கண்டிப்பா ஏதோ செஞ்சுட்டீங்க போல இருக்கு என்றார் தயாளன்.

    தயாளனுக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கும். விசாகனுடைய தந்தை இந்த ஃபேக்டரியை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது தயாளன் வந்து சேர்ந்து விட்டார். அவருடைய நிர்வாகத்தின் கீழ் பத்து வருடங்கள தயாளன் தான் அவருக்குப் பி.ஏ.வாக இருந்தார்.

    தந்தையினுடைய அழுத்தமான சிபாரிசின் பேரில் விசாகன் பதவி ஏற்றுக் கொண்ட பிறகும் தயாளனையே தொடர்ந்து பி.ஏ.வாக வைத்துக் கொண்டான்.

    இருபது வயதில் இந்தக் கம்பெனிக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டான் விசாகன்.

    அப்போதிருந்தே தயாளன் தான் அவனுக்கு உதவியாக இருக்கிறார். அதனால் தயாளனிடம் அவனுக்கு மரியாதையும் உண்டு. வயதைக் கடந்த நட்பும் அவர்கள் இருவருக்கும் உண்டு. அந்த நட்பின் அடிப்படையிலே தான் தயாளன் இப்படிக் கேட்டும் விசாகனுக்கு கோபம் வரவில்லை.

    அந்த யூனியன் லீடர் இல்லே? என்றான் விசாகன்.

    ஆமா...

    அவனோட தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க அப்படின்னு கேள்விப் பட்டேன். அந்த யூனியன் லீடர் நல்லவன்தான். ஆனா அங்கே ஒரு குரூப் இருக்காங்க. அந்தத் தொழிலாளர்களுக்கு நடுவிலே. அவங்க தான் இப்படி ஏதோ ஒரு பிரச்சினையைக் கிளப்பி விடறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். யூனியன் லீடர் கிட்டே பேசினேன் என்றான்.

    இது எப்ப சார் நடந்தது? என்றார் தயாளன்.

    அது...! நீங்க இரண்டு நாளைக்கு முன்னாடி இரண்டு நாள் லீவு போட்டீங்கள்ளே அப்ப நடந்தது. அந்த கும்பல்லேயும் ஒரு ஆளைப் பிடிச்சேன். அவன் சொன்னா மத்தவங்களெல்லாம் கேட்பாங்கன்னு தெரியும். அவன் வீட்லயும் ஏதோ வீடு கட்டிட்டு கடைசிக் கட்டத்திலே திண்டாடிட்டு இருக்கான்னு தெரிஞ்சது. இரண்டு பேரையும் எப்படி ட்ரீட் பண்ணனுமோ அப்படி ட்ரீட் பண்ணினேன் அவ்வளவுதான். இவனுங்க தொழிலாளர்கள் வயித்திலே அடிக்கத் தயார் ஆயிட்டானுங்க. ஆனா நான் அப்படி இல்லை. தொழிலாளர்களுக்கு நியாயமாக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க ஒத்துக்கிட்டேன். அதனால தொழிலாளர்களும் சந்தோஷமாப் போயிட்டாங்க.அந்த கும்பல் தலைவன் இருக்கானே அவனுடைய வண்டவாளத்தையும் அப்படியே லைட்டா இன்னொருத்தரை விட்டு வெளிச்சமாக்கினேன். அதனால் அவனும் இனிமேல் பல்லைப் பிடுங்கின பாம்புதான். நம்ம யூனியன் தலைவர் இருக்காரே அவரு நல்ல ஆளு தான். அவருகிட்ட அப்பப்பப் பேசினாப் போதும் விஷயங்களை நல்லபடியாக் கொண்டு போக முடியும் என்றான் விசாகன்.

    உண்மையாகவே தயாளன் மலைத்துப் போனார். சும்மா சொல்லக் கூடாது சார்! நிர்வாகங்கறது உங்க ரத்தத்திலே ஊறியிருக்கு. அப்பாவும் இப்படித்தான். எதை எப்படி முடிக்கணுமோ முடிப்பாரு. ஆனா அதே சமயத்துல யாருக்கும் பாதிப்பு இல்லாம நியாயமா முடிப்பாரு என்றார்.

    ஆமாம், பின்னே? தொழிலாளர்களை ஏமாத்தி நாம சொத்து சேர்த்து ஒரு பொழப்பு நடத்தணுமா என்ன? அது தேவை இல்லை. ஆனா தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கலாம்னு நினைக்கறான் பாருங்க. அவுங்ககிட்ட நாம எச்சரிக்கையா இருக்கணும் என்றான் விசாகன்.

    ஒரு காஃபி சாப்பிடலாமா? என்றான். உடனே தயாளன் உதவியாளரை அழைத்து அவன் அருகில் வந்தவுடன் திரும்பி ஏன் சார் இஞ்சி டீ சாப்பிடலாமா? என்றார்.

    ம்... கொண்டு வரச் சொல்லுங்க. இவ்வளவு நேரம் பேசி முடிச்ச பிறகு தொண்டைக்கு இதமா இருக்கும் என்றான் விசாகன்.

    தயாளன் சிரித்தபடி எதிரிலே அமர்ந்தார். அப்போது இன்னொரு உதவியாளர் வந்தார். சார், ஷோபனா மேடத்தோட சிஸ்டராம். உங்களைப் பார்க்கணும்னு வந்திருக்காங்களாம். ரிஸப்ஷனிஸ்ட் ஃபோன் பண்ணினாங்க

    விசாகனின் ஒற்றைப் புருவம் உயர்ந்தது. இங்க எதுக்கு வர்றாங்க? என்றான்.

    தெரியலை சார். இங்க பார்க்கறதுதான் சரியா இருக்கும் அப்படின்னு சொன்னாங்களாம். அதான் உங்களைக் கேட்டுட்டு... வரச் சொல்லலாமான்னு என்று இழுத்தார்.

    எங்கே இருக்காங்க? என்றார்.

    ரிஸப்ஷன் ஹால்ல வெயிட் பண்றாங்க சார் என்றார்.

    சரி வரச் சொல்லுங்க! என்றான்.

    சரி நான் அப்போ என் கேபின்ல போய் டீ சாப்பிட்டுக்கறேன் சார்! என்று சொல்லி விட்டு தயாளன் அங்கிருந்து விலகினார்.

    ஷோபனாவின் பெயர் அடிபட்டவுடனேயே இது குடும்ப விஷயம் என்று இங்கிதம் தெரிந்தவராக அவர் அங்கிருந்து நகர்ந்தார். விசாகன் புன்னகைத்தான். இந்த இங்கிதம் தான் உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது என்றான்.

    தாங்க்ஸ் என்று சிரித்து விட்டு அவரும் தன்னுடைய கேபினை நோக்கிப் போனார். அவனுடைய அந்தப் பெரிய அறைக்கு அடுத்ததாகவே அவருக்கு ஒரு அறை இருந்தது. அவன் மெதுவாக அந்த இஞ்சி டீயை ருசித்தபடி ஒரு எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தான்.

    அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்!

    அவன் பார்வை அந்தப் பெண்ணின் மேல் பதிந்தது. லேசான ஆச்சரியம் தோன்றியது! ஏன் என்றால் ஷோபனாவுக்கு நேர் எதிராக இருந்தாள் அந்தப் பெண்.

    ஷோபனா எவ்வளவு ஆடம்பரமாக வருவாளோ அதற்கு நேர் எதிராக இருந்தாள். ஷோபனாவின் முகத்தில் எப்போதும் மிகையான மேக்கப் இருக்கும். ஆனால், இந்தப் பெண் அலங்காரமே தெரியாதபடி அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள்.

    கைத்தறி ஆடை அணிந்திருந்தாள். ஆனால் அந்தக் கைத்தறி புடவையும் கஞ்சி மடிப்புடன் அயர்ன் செய்யப்பட்டு அழகாக உடுத்தப்பட்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த விதத்தில் அந்தப் புடவைக்கே அழகு கூடி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

    முகத்தில் சின்னதாகத் திலகமிட்டிருந்தாள். பெரிய கண்களுக்கு மையிட்டு இருப்பது தெரியாமலே மையிட்டிருந்தாள். முகத்தில் அறிவுக் களை தாண்டவமாடியது. ஆனால் கூடவே ஒரு எளிமையும் இருந்தது.

    வாங்க! என்றான் விசாகன்.

    ஷோபனாவின் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் வந்தபொழுதெல்லாம் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறோம் என்று தோன்றியது. ஆனால் இவள் தன்னை முழுதுமாக வெளிக் காட்டிக் கொள்ளாமல் பின்னால் இருந்து காரியங்களை நகர்த்துவதைப் பார்த்திருக்கிறான். அதெல்லாம் இப்பொழுது ஞாபகத்துக்கு வந்தது.

    உட்காருங்க! என்றான்.

    மணி அடித்தான். உடனே உதவியாளர் ஓடி வந்தவுடனே. மேடத்துக்கும் ஒரு டீ கொண்டு வா என்றான்.

    இல்லை பரவாயில்லை! என்றாள் அவள்.

    "இருக்கட்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1