Nee Vantha Pothu…!
By Jaisakthi
3/5
()
About this ebook
Read more from Jaisakthi
Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsNila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5
Related to Nee Vantha Pothu…!
Related ebooks
Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsEn Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaruven Naan Unakkaga...! Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kanavil Vandha Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Odi Vaa Penne…! Rating: 4 out of 5 stars4/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Vizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Avalum Naanum Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsVanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Kanavugal Rating: 1 out of 5 stars1/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsNishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsSagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Vantha Pothu…!
1 rating0 reviews
Book preview
Nee Vantha Pothu…! - Jaisakthi
https://www.pustaka.co.in
நீ வந்த போது...!
Nee Vantha Pothu…!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
நல்ல வேளை! டைமுக்கு வந்து சேர்ந்துட்டோம்!
என்று எண்ணிக்கொண்டே வேகவேகமாக ப்ளாட்ஃபார்முக்கு நடந்தான் வருண். கூடவே அவனுடைய உதவியாளர் அவனுடைய பெரிய சூட்கேஸை எடுத்துக்கொண்டு வேகவேகமாக வந்தார்.
செகண்ட் ஏசிதான் சார் கிடைச்சது!
என்றார் அவர்.
பரவாயில்லை! பரவாயில்லை, எனக்கு செகண்ட் கிளாஸா இருந்தாக்கூடப் பரவாயில்லை. நீங்கதான் ஸ்டேட்டஸ் எல்லாம் பார்ப்பீங்க. விட்டா நான் காரை எடுத்துகிட்டுப் போயிடுவேன்!
என்று சொல்லிக்கொண்டே போய்த் தன்னுடைய பெட்டியைப் பார்த்து ஏறினான் வருண். உதவியாளர் உடன்வந்து அந்தப் பெரிய சூட்கேஸை சீட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இறங்கி பிளாட்ஃபார்மிலே நின்றுக்கொண்டான்.
வேறே ஏதாவது வாங்கித் தரணுமா சார்?
என்று கேட்டார் உதவியாளர்.
இல்லை இல்லை! வேண்டாம்! சோமையாதான் டிஃபன் எல்லாம் பேக் பண்ணிக் கொடுத்துட்டாரே அதனால வேண்டாம்
கூல்டிரிங்க்ஸ்... ஏதாவது?
என்றார்.
நான் எப்பய்யா கூல்டிரிங்ஸ் குடிச்சிருக்கேன்? பார்க்கலாம். ஈரோடு, சேலம் எங்காவது போய் ஒரு பால் வேண்ணா சாப்பிட்டுக்கறேன். நோ ப்ராப்ளம்! நீங்க கிளம்புங்க!
என்றான் வருண்.
இல்லல்லே! நீங்க கிளம்பற வரைக்கும் நான் இருக்கேன் சார்!
என்றார் உதவியாளர்.
ஓகே! உங்க இஷ்டம்!
என்று அவன் ஜன்னல் ஓரமாக அமர்ந்துக்கொண்டான்.
கொண்டு வந்திருந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கையிலே வைத்துக்கொண்டான். டிரெயின் புறப்படுகிற நேரத்தில் ஒரு ஜோடி வந்து ஏறினார்கள்.
பெண்ணைப் பார்த்தால் ஒரு நாற்பது வயது இருக்கும். ஆனால் கணவர் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். இந்த சீட்டுத்தானே என்று கேட்டாள் மனைவி.
இதுவாத்தான் இருக்கும் புள்ளே. பாரு, முப்பத்தாறு, முப்பத்தைஞ்சு. இரண்டும்தானே? உட்காரு. கம்முன்னு உட்காரு!
என்று சொல்லிவிட்டு அவரும் எதிர்சீட்டில் ஜன்னலோரம் அமர்ந்தார்.
அவர்கள் அமர்ந்த ஒரு சில விநாடிகளிலே டிரெயின் புறப்பட்டது. இவன் உதவியாளரைப் பார்த்து அமர்த்தலாகத் தலையசைத்து அனுப்பி வைத்தான். அவரும் ஒரு சல்யூட்டை அடித்துவிட்டு வேகமாகப் போனார்.
இவன் தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். ஒரு அரை மணிநேரம் அந்தத் தம்பதியர்கள் அமைதியாக வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த அம்மையாரிடம் கணவர் கேட்டார். ஏன் கன்னியம்மா? என்னத்துக்கு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டிருக்கே?
என்று அவர் பேச ஆரம்பித்த உடனேயே இரண்டுபேரும் கோவை கொங்குத் தமிழ்க்காரர்கள் என்று புரிந்தது.
நான் என்னத்துக்கு மூஞ்சியத் தூக்கி வச்சுட்டு இருக்கேன். நான் பாட்டுக்கு கம்முன்னு இருக்கேன்!
என்றாள் கன்னியம்மா.
இதா பாரு உன்ற ஆயுசுல இப்படி ஏ.சி பெட்டியில போயிருக்கியா? ஒரு வாரமா காசி, டெல்லினெல்லாம் போயிட்டு வந்தமல்லோ? அதுக்கெல்லாம் உன்றகிட்ட காசு ஏது? எல்லாம் அந்த மாணிக்கத்தோட காசுதான்!
என்றார் அவர்.
ஆமா, நல்ல... மாணிக்கம்!
என்று முணுமுணுத்தாள் அவள்.
ஏன் நல்ல மாணிக்கம் இல்லாட்டி என்ன? அவன் பேரு முழுசா தங்க மாணிக்கம். தங்கம், மாணிக்கம் ரெண்டும் சேர்ந்தவன் புள்ளே அவன். வசதியா இருக்கான். என்ன வேண்ணாலும் நமக்கு செஞ்சு கொடுப்பான். அவனுக்குப் புள்ளையைக் கொடுக்க உனக்கு கசக்குதாக்கும்?
என்றார் அந்த மனிதர்.
நீங்கதான் அவனை மெச்சிக்கணும். என் தலையெழுத்துத்தான் அப்படி ஆகிப் பொச்சு!
என்றாள் அவள்.
எப்படி ஆகிப் போச்சு!?
என்று வேகமாகக் கேட்டார் அந்த மனிதர்.
எப்படி ஆச்சா, உங்களுக்கும் எனக்கும் என்ன வயசு வித்தியாசம்? இருபது வயசு வித்தியாசம் அன்னைக்குத்தான் எனக்கு வறுமை. வேற வழியில்லே எங்க அப்பனும் கட்டி வச்சுப் போட்டாரு!
என்றாள் அவள்.
என்ன புள்ளே? என்னமோ நான் வந்து கெஞ்சிகிட்டிருந்த மாதிரிப் பேசறே? உங்க அப்பன்தான் வந்து ‘பொன்னுச்சாமி பொன்னுச்சாமி என் மகளுக்கு வேற வழியில்லே. நீயும் தனிமரமா நிக்கறே என்ற புள்ளையக் கல்யாணம் பண்ணித் தரேன்’ அப்படின்னு கெஞ்சினாரேன்னு பண்ணிகிட்டேன்!
ஓஹோ! இவரு பேரு பொன்னுச்சாமியா?
என்று சிரித்துக் கொண்டான் வருண்.
இப்ப யாரு குறை சொன்னா? என்னமோ காலம் ஓடிடுச்சு. இதோ இப்ப எனக்கு நாற்பத்தைஞ்சு வயசு. உங்களுக்கு அறுபத்தைஞ்சு வயசு. உங்களுக்குப் பண்டிதம் பாக்கறதுக்கே எனக்கு சரியாப் போகுது!
என்றாள்.
என்ன புள்ளே? நான் என்ன சீக்காளியா? நான் உழைப்பாளி. பாரு, கிண்ணுன்னு இருக்கேன் பாரு!
என்று கையை உயர்த்திக் காட்டினார் பொன்னுச்சாமி.
வருணுக்கு சிரிப்பாக வந்தது.
இங்க பாருங்க! நம்ம காலம் ஓடிடுச்சு. ஆனால் நம்ம புள்ளைய படிக்க வச்சிருக்கோம். அவ கால்ல அவ நின்னுக்குவா. என்ற புள்ளை அழகா இருக்கா. அவளுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்!
என்றாள் அவள்.
நான் ஒண்ணும் வேணுமா வேண்டாம்னு கேட்கலையே? மாணிக்கத்துக்கு என்ன குறை? மிராசுதார். உன்ற புள்ளை அங்கப் போனா ராணியாட்டம் இருக்கலாம்!
என்றார் பொன்னுசாமி.
அவ ராணிபோல இருக்காளோ இல்லையோ? நீங்க ராஜாவாட்டம் இருப்பீங்க. உங்களுக்கு வேணுங்கறதை அந்த ஆள் குடுத்துருவாரு. அதுக்குத்தானே இப்படி அலையறீங்க! அதுவும் இந்த அறுபத்தஞ்சு வயசிலே! இன்னும் எத்தனை காலம் இருக்கப் போறீங்க! உங்க வாழ்க்கைக்காக என்ற புள்ளை வாழ்க்கையை நாசம் பண்றீங்க!
என்றாள் கன்னியம்மா. அவள் கண்கள் கலங்கின.
என்னடி இப்ப பெருசாப் பேசிகிட்டிருக்கே? என்னடி பெரிய வயசு வித்தியாசம்? ஒண்ணும் பெரிய வயசு வித்தியாசம் இல்லை!
என்றார்.
என்ன இப்படிப் பேசறீங்க? பிள்ளைக்கு இருபத்திரண்டுதான் ஆச்சு. அந்த ஆளுக்கு முப்பத்தேழு ஆச்சு. மொதப் பொண்டாட்டி கட்டி இறந்துப்போனா...? அதுக்கு எம்பொண்ணுதான் கிடைச்சாளா? முடியவே முடியாது!
என்றாள்.
இதோ பாருடி! இனிமே டிரெயினுக்குள்ளே உட்கார்ந்துட்டு ஏதாவது நாயம் பேசினே, பல்லைப் பேத்துருவேன். மரியாதையாப் படு!
என்றார் அவர்.
ம்க்கும்! இது ஒண்ணு ஆ, உன்னா சொல்லிப் போடுவீங்க. சரி படுங்க. நான் மேல் பர்த்துக்கு ஏறிக்கறேன் உங்களுக்குத்தான் ஏர்றதுக்கு கையாலாகாதே!
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மேல் பெர்த்துக்குப் போய்விட்டாள். போகிற போக்கில் அவரை ஒரு சாடு சாடிவிட்டு ஏறியதைப் பார்த்து வருணுக்கு சிரிப்பாக இருந்தது.
சென்னையிலே இருந்து கோவைக்கு ஒரு வேலையாக அவன் வந்துக் கொண்டிருந்தான். சென்னையிலும் அவனுக்கு வீடு இருந்தது. கோவையிலும் அவனுக்கு வீடு இருந்தது. அவனுடைய பெற்றோர்கள் கோவையில்தான் இருந்தார்கள்.
இவன் அவ்வப்பொழுது சென்னையில் போய் தங்கிக் கொள்வான். பெரும்பாலும் வாரத்தில் மூன்று நாட்கள் அங்கே மூன்று நாட்கள் இங்கே என்பது போலத்தான் இருந்தான்.
சென்னையிலே இருந்த பங்களாவிலும், சமையல்காரர் மற்ற வேலை ஆட்கள் என்றெல்லாம் இருந்தார்கள். அதனால் அவனுக்கு வசதியாகத்தான் இருந்தது. எப்பொழுதும் முதல் வகுப்பில் பயணம் செய்வான். முதல் வகுப்பில் கிடைக்கவில்லையென்று செகண்ட் ஏ.சி. வகுப்பில் டிக்கெட் போட்டிருந்தார்கள்.
மிகவும் அவசியமாக இருந்தால்தான் விமானத்தில் பயணம் செய்வான். என்ன இப்ப? இதிலே ஏறிப் படுத்தால் காலையில் எழுந்து விடுகிறோம். எதற்காக நிறைய செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பவனாக இருந்தான். அதனால்தான் இந்த வயதிலே அவன் இரண்டு இடங்களிலும் பெரிய பழப்