Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poongatru Sangeetham Aanathu!
Poongatru Sangeetham Aanathu!
Poongatru Sangeetham Aanathu!
Ebook175 pages57 minutes

Poongatru Sangeetham Aanathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கேப்டன் விஷாலின் ஆராய்ச்சி குழுவில் ஆள் மாறாட்டம் செய்து, பொய் சொல்லி சேர்கிறான் மஹதி. அஸ்ஸாமில் காடுகளில் ஆபத்தான இடங்களில் பயணிக்க வேண்டிய சூழல். குழுவில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதபடி கத்தி மேல் நடப்பது போல் நடக்கிறான். மஹதி - விஷாலுக்கு அவளுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள்... விஷாலுக்கு உண்மை தெரிந்ததா? அவர்கள் ஆராய்ச்சி வெற்றி அடைந்ததா? படியுங்கள்... உங்களுக்கு தெரியும்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906514
Poongatru Sangeetham Aanathu!

Read more from Lakshmi Sudha

Related to Poongatru Sangeetham Aanathu!

Related ebooks

Reviews for Poongatru Sangeetham Aanathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poongatru Sangeetham Aanathu! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பூங்காற்று சங்கீதம் ஆனது!

    Poongatru Sangeetham Aanathu!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    வாங்க பேசலாம்!

    சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் வந்த ஒரு சுவையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது.

    வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த அர்த்தம். அப்பொழுது நமக்குத் தெரியாமல், புரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில், பிற்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில், அது நமக்குப் புரியும். இதை விளக்க ஒரு சின்னக் கதை, இதோ உங்களுக்காக.

    கன்ஸர்வேடிவ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்திக்கு ஒரு அரேபிய இளைஞன் மேல் காதல் வருகிறது. அவள் இருபத்து மூன்றாம் வயதில், வயிற்றில் அவன் கருவைச் சுமக்கிறாள். ஆனால் அவள் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அவள் மனம் உடைந்து போகிறாள். ஆனால் குழந்தையும் பிறந்துவிட்டது.

    குழந்தையைத் தத்துக் கொடுப்பது என்று அவள் பெற்றோர் முடிவு செய்ய, அவள் சம்மதிக்கிறாள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அது என்னவென்றால், குழந்தையை வளர்க்க முன் வருபவர்கள், படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே அது.

    அவள் விரும்பியது போல் ஒரு வக்கீல் குடும்பம் தத்து எடுக்க முன்வர, அவள் மனம் நிம்மதி அடைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் அந்த வக்கீல் குடும்பம், தத்து எடுக்கக் கடைசி நேரத்தில் மறுத்து விட்டனர். வேறு வழியின்றி, படிப்பு அறிவில்லாத, ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்குக் குழந்தையைத் தத்துக் கொடுத்தாள் அவள். ஆனால் குழந்தையைக் கண்டிப்பாகப் படிக்க வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

    குழந்தை வளர்ந்து பெரியவனானான். கல்லூரியில் தன் 17ஆவது வயதில் கால் பதித்தான். ஆனால் ஆறு மாதத்தில் கல்லூரியில் இருந்து ‘ட்ராப்-அவுட்’ ஆனான்.

    அவனை வளர்த்த பெற்றோர்கள், ரொம்பவே வருத்தப்பட்டனர். ஆனால், தான் ஒரு நாள் வெற்றியாளர்களின் பட்டியலில் இருப்பேன், கவலை வேண்டாம் என்று அவர்களைச் சமாதானப்படுத்தினான் அவன். சொன்னதைச் செய்து காட்டினான்.

    யார் அவன்...?

    ஒரு டிகிரி கூட இல்லாமல் ‘ஆப்பிள்’ நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் அந்தப் பையன்.

    அவன் தத்து எடுக்கப்பட்டதினால்தான், கல்லூரியில் இருந்து டிராப்-அவுட் ஆனதினால்தான் ‘ஆப்பிள்’ எனும் சாம்ராஜ்யத்தை நிறுவ முடிந்தது.

    நம்புவோம்! வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் உண்டு.

    என்னுடைய நாவல்களைப் படித்துத் தொடர்ந்து விமர்சனங்களை எழுதி வரும் ஆதரவாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    அந்த நாள்

    திரும்ப வராதா?

    என்

    மனம்

    ஏங்குகிறது!

    பூக்களின்

    நறுமணம்

    என் நாசியை

    நிறைக்கிறது!

    வண்ணக்

    குழம்பாய்

    வானவில்

    என் வீட்டுக்

    கூரையை

    அலங்கரிக்கிறது!

    நீ

    வருவாய்

    எனக் காத்து இருக்கிறேன்

    நான்!

    வா பெண்ணே!

    மஹதி கையில் உள்ள காய்கறிப் பையைக் கீழே வைத்து விட்டுப் பூட்டைத் திறந்தாள். வீட்டினுள் நுழைந்தவள், ஸ்வெட்டரைக் கழற்றி நாற்காலி மேல் வைத்தாள். பின்பு ரூம் ஹீட்டரை ஆன் செய்தாள்.

    இந்த ஹீட்டர் இல்லாவிட்டால் ஊட்டியின் குளிரைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நல்ல காலம் ஹீட்டரை சித்தி போட்டார்கள்.

    சித்தி இல்லாவிட்டால் தன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

    பாவம் சித்தி, தனக்காக எவ்வளவு தியாகங்கள் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தன் வாழ்க்கையில் இல்லாவிட்டால், தான் இங்கே இப்பொழுது எந்தப் பயமும் இன்றி இருக்க முடியாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

    ‘சித்தி வருவதற்குள் சமைத்து முடித்துவிட வேண்டும். சாம்பாரும், கேரட் பொரியலும் செய்து விட வேண்டியதுதான். வெள்ளரிப் பிஞ்சு இருக்கிறது. அதைச் சாலட்டாகச் செய்து விடலாம்..." என முடிவு செய்தாள்.

    சித்தி இன்று, அடுத்த வாரம் பயணம் செய்வதற்குத் தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் பேக் செய்ய ஹெல்ப் செய்ய வேண்டும்.

    அப்பா, அம்மா, சித்தி, தான் என எல்லோருமே தாவரங்கள் பற்றிப் படித்து, அது சம்பந்தமான தொழிலில் இருப்பது ஆச்சரியமே!

    சித்தி, கல்லூரியில் தாவரங்கள் பற்றி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் கில்லாடி. அரிய வகை மூலிகைச் செடிகள் பற்றி சித்தி பாடம் எடுத்தால், கீழே குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவும்.

    மாணவர்கள், சித்தி பாடம் நடத்தும் விதத்தை அவ்வளவு ஆழ்ந்து கவனிப்பார்கள். அடுத்த வாரம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காடுகளில் சில அரிய வகைத் தாவரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு குழு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

    அந்தக் குழுவில் சித்தியும் ஒருவர். அந்தக் கேம்ப் பற்றி ரொம்ப ஆர்வமாக எக்ஸைட்டடாகப் போன வாரம் பேசியது, அவளுக்கு நினைவுக்கு வந்தது.

    யோசித்தபடியே சமையலைச் செய்து முடித்தாள் மஹதி.

    வாஷிங் மெஷினில் இருந்த துவைத்த துணிகளை எடுத்துப் பால்கனி கொடியில் காய வைத்தாள்.

    சுவர் கடிகாரம் மணி மூன்று ஆகி விட்டது என்பதைக் குயில் போல் கூவி உறுதிப்படுத்தியது.

    ‘என்ன...? ஏன் இன்னும் சித்தியைக் காணவில்லை. மணி மூன்றாகி விட்டதே. இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவார்களே... என்ன ஆச்சு...? என்ன இது...? ஏன் இவ்வளவு லேட் ஆகிறது?’ என்று யோசித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தாள்.

    சித்தியின் கைபேசியைத் தொடர்பு கொண்டாள். ஆனால் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ மொபைல் இருப்பதாகச் செய்தி வர, அவள் மனம் ஏனோ பதைபதைத்தது.

    ‘இப்ப என்ன செய்யலாம். அஜய் ஸாருக்குப் போன் செய்து பார்க்கலாமா...? அவருக்கு ஏதாவது தெரிந்து இருக்கலாம்...’ என முடிவு செய்தவள், அஜய்யைத் தொடர்பு கொண்டாள்.

    ஹாய் மஹதி. நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைத்தேன். அதுக்குள்ள நீயே என்னைக் கூப்பிட்டுட்ட

    "எ... என்ன அங்கிள், ஏதாவது ப்ராப்ளமா...? சித்தி இன்னும் வீட்டுக்கு வரலை. அதான் எனக்குக் கவலையாக இருக்கு. மழை வேற தொடர்ந்து பெய்யுது. எப்பவும் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவாங்க. இன்னிக்குக் காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ் வேற எதுவும் இல்லை. என்னாச்சுன்னு தெரியலை.

    எப்பவும் லேட்டாகிற மாதிரி இருந்தால் போன் செஞ்சு ‘லேட்டாகும்னு’ சொல்லிடுவாங்க. பட் இன்னிக்குப் போன் காலும் அவங்கக்கிட்ட இருந்து வரலை. அவங்க போனும் அவுட் ஆஃப் ரீச்சில் இருக்கு. அதனால் தான் உங்களுக்குப் போன் செய்தேன் அங்கிள். சித்தி உங்கக்கிட்ட ஏதாவது சொன்னாங்களா...? என்ற மஹதியின் குரலில் அப்பட்டமான பயமும் பதட்டமும் தெரிந்தது.

    ம்ம்... மஹதி, உன்னோட சித்தியை டூவீலரில் போக வேணாம்னு நிறையத் தடவை சொல்லியாச்சு. பட் அவங்க கேட்கிறதே இல்லை. ஸாரி, ஒரு சின்ன விபத்து, அவங்களுக்கு இன்னிக்கு... என்று அவர் முடிக்கும் முன்பு மஹதி அலறினாள்.

    அங்கிள், எ... என்ன ஆச்சு சித்திக்கு...? இப்ப அவங்க எங்க இருக்காங்க? உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லையே. என்ன ஆச்சு அங்கிள்...? என்று கதறினாள் அவள்.

    ம்ம்... மஹதி, கூல் டவுன். சித்தி இஸ் ஸேஃப். அவங்க எங்க மருத்துவமனை வாசல்கிட்ட வரும்பொழுது, ஒரு லாரி, டூவீலரில் வந்து கொண்டு இருந்த சித்தியை இடித்து விட்டது.

    ஐயோ... காட்...!

    மஹதி, லக்கிலி, லாரியும் மெதுவாக வந்ததால், பெரிய விபத்தாக இது மாறவில்லை. அனிதா கையை ஊன்றிக் கொண்டு கீழே விழுந்ததால் கையில் அடி, பிராக்சர் என்று கன்ஃபர்ம் ஆகி விட்டது. நான்தான் அனிதாவை ட்ரீட் செய்தேன். அதனால் நீ கவலைப்படாதே.

    பயப்படும்படி ஏதும் இல்லை. இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அனிதாவை ட்ராப் செய்கிறேன். அதனால் டென்ஷன் இல்லாமல், பதட்டப்படாமல் இரு, ப்ளீஸ். உனக்கே தெரியும், அனிதாவிற்கு உன் மேல் எவ்வளவு பிரியம் என்று. நீ கவலையாக இருந்தால், ஷி வில் ஃபீல் ஸாட். நான் இதை ஒரு டாக்டராகச் சொல்கிறேன். எல்லாருக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக, பாஸிட்டிவ் அப்ரோச்சுடன் உறவினர்கள் இருந்தால், அவர்கள் சீக்கிரமாகவே குணம் அடைந்து விடுவார்கள். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்.

    அதனால் எனக்கு உன் உதவி தேவை. உன் ஒத்துழைப்பு இருந்தால் அனிதா சீக்கிரமாகவே குணம் அடைந்து விடுவாள். ஸோ, நீ இதை ஞாபகம் வைத்துக் கொள். அவளிடம் உற்சாகமாகப் பேசு. அவள் எனர்ஜி லெவல் ஹையாக இருப்பது முக்கியம். அதுதான் அவள் குணம் அடைய உதவும். என்ன, புரிந்ததா மஹதி...?

    "யெஸ் அங்கிள். நான் இதை மனதில் வைத்துக் கொள்கிறேன். நான் சித்தியிடம் மோடிவேடிங்காகப் பேசுவேன். அழுது, மன உறுதியைச் சலனப்படுத்த மாட்டேன். தேங்க்ஸ், எனக்குப் புரியும் வகையில் தெளிவாகச் சொன்னதற்கு. நான் என் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சித்தி

    Enjoying the preview?
    Page 1 of 1