Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannaley Pesi Pesi...
Kannaley Pesi Pesi...
Kannaley Pesi Pesi...
Ebook172 pages56 minutes

Kannaley Pesi Pesi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி வருகிறாள் வைஷ்ணவி. அவளுடைய குழந்தை திவ்யா மீது அவள் தன் உயிரையே வைத்து கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து வருகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில், அவள் சித்தார்த்தை சந்திக்க நேர்கிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய ஏற்படுகிறது. திவ்யாவிற்கு வரவிற்கும் ஆபத்திலிருந்து, அவளை காப்பற்றுகிறான் சித்தார்த். வைஷ்னவியின் மனம் சித்தார்த்தை நோக்கி மெல்ல சாய்கிறது. இது சரியா? படித்து விட்டு செல்லுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906576
Kannaley Pesi Pesi...

Read more from Lakshmi Sudha

Related to Kannaley Pesi Pesi...

Related ebooks

Reviews for Kannaley Pesi Pesi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannaley Pesi Pesi... - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    கண்ணாலே பேசிப் பேசி…

    Kannaley Pesi Pesi...

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாங்க பேசலாம்!

    இந்தக் கதை எழுதி முடிக்கும் பொழுது, திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் அவர்கள் இயற்கை எய்திய செய்தியைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

    திரை உலகத்தில் பெண்களுக்கு ஒரு தனி அந்தஸ்தை அளித்த பெருமை அவரையே சேரும்.

    தண்ணீர் தண்ணீர், நீர்க்குமிழி, பூவா தலையா, சிந்து பைரவி போன்ற மாறுபட்ட திரைப்படங்களை வழங்கிய மேதை அவர்.

    அவர் படைப்புகளில் எனக்குப் பிடித்தது வறுமையின் நிறம் சிகப்பு.

    முற்போக்கான சிந்தனைகள் நிரம்பிய பாரதியை நேசிக்கும் இளைஞன் கமல், 'வேலையில்லாத பட்டதாரி' என்ற ஸ்டேட்டசுடன் படம் முழுக்க வளைய வரும் கமலை மறக்க முடியுமா?

    முத்தாய்ப்பாக ‘சிப்பி இருக்குது' பாடல். ஸ்ரீதேவி அந்தப் பாடலில் விசில் அடிப்பது போல் ஒரு காட்சி.

    அப்பொழுது கமலின் கண்களில் ஒரு நொடி தோன்றி மறையும் ஆச்சரியம், மனதை விட்டு நீங்காது.

    பாடலின் முடிவில் ஸ்ரீதேவி 'சந்தம்' பாடுவதை நிறுத்தி விட, கமலின் மனதின் அடித்தளத்தில் மறைந்து இருந்த காதல் கவிதையாக அருவி போல் கொட்டும்.

    கவிதை உலகம்

    கெஞ்சும்

    உன்னைக் கண்டால்

    கவிஞர் இதயம்

    கொஞ்சும்...

    திரைப்படத்தில் மட்டும் அல்ல, பாடலிலும் புதுமையைப் புகுத்திய கே.பி.யை மறக்க முடியவில்லை.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    அத்தியாயம் 1

    வண்ணத்

    தூரிகைகளால்

    பிரம்மன்

    வரைந்த

    ஓவியம்

    நீ!

    வண்ண

    மலர்களால்

    சிற்பி

    செதுக்கிய

    சிற்பம்

    நீ!

    வானில்

    மட்டும்

    தேவதை

    ஏன்?

    மண்ணிலும்

    நீ

    உலா வா

    என சபித்ததால்

    தானா நீ பூமியில்?

    அழகான மாலைப் பொழுது. பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் அருகே உள்ள கடற்கரையில் மணலில் வைஷ்ணவி அமர்ந்து இருந்தாள்.

    சனிக்கிழமை என்பதால் கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சென்னையில் மக்களுக்கு இன்னமும் கடற்கரை மேல் மோகம் இருக்கிறதே. பரவாயில்லை. எத்தனையோ ஷாப்பிங் மால்கள் இங்கு வந்து விட்டன.

    முழுக்க முழுக்க ஏர்கண்டிஷனிங் செய்யப்பட்ட மால்களில் பொழுதுபோக்கு அம்சத்திற்குப் பஞ்சமே இல்லை.

    எத்தனை வகையான கடைகள், துணி முதல் செருப்பு வரை எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது.

    அது மட்டும் இன்றி, வகை வகையான சிற்றுண்டிச் சாலைகள், திரை அரங்குகள் எனக் கேளிக்கைகள் ஏராளம்.

    அதை எல்லாம் விட்டு விட்டு, இங்கே இவ்வளவு மக்கள் இருப்பது ரொம்பவே பெரிய விஷயம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள்.

    சுண்டல் வேணுமா அக்கா? சுண்டல்... சுண்டல்...

    ம்... வேண்டாம் தம்பி.

    ‘இந்தக் கடற்கரையை நம்பி எவ்வளவு பேர் பிழைப்பு நடத்துகிறார்கள்? வாழைத் தண்டு ஜூஸ், சுண்டல், பஜ்ஜி, காப்பி, டீ, சமோசா என ஸ்நாக்ஸ் வியாபாரம் செய்பவர்களின் பட்டியல் நீளும்.

    இவ்வளவு பேரும் இந்தக் கடலை நம்பித்தானே வாழ்கிறார்கள்' என்று மனதிற்குள் கடலுக்கு நன்றி செலுத்தினாள்.

    கடலின் அலைகள் மேலும் கீழும் எழும்பி அடங்குவது சிவனின் தாண்டவத்தை அவளுக்கு நினைவு படுத்தியது.

    'நான் டான்ஸ் டீச்சர் என்பதால் பார்க்கும் எல்லாவற்றையும் நடனத்தோடு இணைத்துப் பார்க்கிறேன் போல...' என்று தனக்குத் தானே சொல்லியபடி மணலில் இருந்து எழுந்தாள்.

    மணி ஐந்தாகி விட்டது. இப்பொழுது கிளம்பினால் இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் ஸீ-வார்ட் காலனிக்குச் சென்று விடலாம்.

    மயூரியின் அம்மாவிற்கு ஐந்து பத்து நிமிடம் முன்னால் சென்றால் ஏனோ பிடிப்பதில்லை.

    அதை நேரடியாக அவளிடம் சொன்னதில்லை. ஆனால், அவளால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    அதனால் சரியாக அந்த நேரத்திற்கு, அதாவது ஐந்தே காலுக்கு அவர்கள் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வாள் அவள்,

    நடந்து கொண்டு இருந்த பொழுது, சட்டென பின்னால் முதுகில் யாரோ தட்ட, திடுக்கிட்டுத் திரும்பினாள் அவள்.

    ஐயாம் ஸாரி... நான்... என்று அவன் முடிக்கும் முன்பு படபடத்தாள் அவள்.

    என்ன நினைச்சிட்டு இருக்கே மனசில... ஏன் இப்படி செஞ்சே...? சீறினாள் அவள்.

    ஹலோ... மேடம்! நான் தெரியாமல்...

    மீண்டும் அவனை முடிக்க விடாமல் அவள் குறுக்கிட்டாள்.

    தெரியுமே... என் ஃபிரெண்டை எதிர்பார்த்து இருந்தேன். அவள்னு நினைச்சு உங்களை முதுகில தட்டிக் கூப்பிட்டுட்டேன். அதைத்தானே சொல்லப் போறீங்க...

    அதற்குள் அங்கே ஒரு சிறு கும்பல் கூடியது.

    சே... இதுக்குன்னே அலையுறாங்க பார்...

    ஆமாம்... ஆமாம். பார்க்க டீஸன்ட்டா இருக்கான். ஆனால் செய்ற வேலை ஏதும் சகிக்கவில்லை.

    கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாய்க்கு வந்ததைப் பேசுவதைக் கேட்ட சித்தார்த்தின் முகம் இறுகியது.

    மேடம்... சாரி. நான் என் சித்தி பொண்ணு தீபான்னு நினைச்சு உங்ககிட்ட அப்படி பிஹேவ் பண்ணிட்டேன். ஐயாம் சாரி.

    ஆமா... எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இதே டயலாக். இதே அப்ரோச். சே! - சலித்துக் கொண்டாள் அவள்.

    ம்... புதுசா ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்க மேடம் நீங்க.... - பட்டெனக் கேட்டு விட்டான் அவன்.

    ஹலோ... கொழுப்பா! - அவள் கத்தினாள்.

    பின்ன என்ன மேடம்... தெரியாமல் செய்துட்டேன்னு சொல்றேன். நம்பாமல் திரும்பத் திரும்ப அதையே சொன்னால் எப்படி?

    அவர்தான் தெரியாமல் செய்து விட்டதாகச் சொல்கிறாரேம்மா... அவரை விட்டு விடுங்களேன்... என்று கூட்டத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணி அவளைப் பார்த்துச் சொன்னார்.

    ஆமாம்மா... பாவம். பார்க்கவே பாவமா இருக்கார்.

    கூட்டத்தில் அவனுக்கென சில அனுதாபிகள் இருக்கிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது.

    சரி... சரி. இனி, எந்தப் பெண்ணிடமும் இப்படி நடந்துக்காதீங்க. இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும், என்று சொல்லி விட்டு விடுவிடுவென நடந்தாள்.

    ‘எவ்வளவு சொல்லியும் நம்பாமல் தன்னைக் குற்றவாளியாகவே கருதும் இந்தப் பெண் சரியான திமிர் பிடித்த முட்டாளாக இருப்பாள் போல...' எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து வேகமாகக் காரை நோக்கி நடந்தான் சித்தார்த்.

    காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீரைக் குடித்த பின்பு கூட அவனின் கோபம் தீரவில்லை.

    எல்லாம் இந்த தீபாவால் வந்தது. அவள் அணிந்திருந்த சல்வார் போலவே அந்தப் பெண்ணும் அணிந்திருந்தாள். அதனால் வந்த குழப்பமே இது.

    சே! இப்பதான் இந்த மெசேஜை நான் பார்க்கிறேன். 'வர மாட்டேன். அவசர வேலை...'ன்னு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள்.

    எல்லாமே தீபாவால் வந்தது. சே....! என்றபடியே காரைக் கிளப்பினான்.

    மயூரியின் வீட்டிற்கு அன்று பதினைந்து நிமிடம் தாமதமாகச் சென்றாள் வைஷ்ணவி.

    என்ன மேடம்... லேட்? கிளாஸ் முடியுற நேரத்துக்கு வந்திருக்கீங்க... என்று மயூரியின் அம்மா கிண்டலாகக் குத்திக் காட்டினாள்.

    சாரி, மேடம். வழியில் சின்ன பிரச்சினை...

    ம்... பரவாயில்லை. வாங்க...

    நெக்ஸ்ட் கிளாஸ்ல காம்பன்ஸேட் செஞ்சிடறேன், மேடம்!

    குட் ஈவினிங், மேடம்! என்ற மயூரியின் குரல் அவளுக்கு உற்சாகத்தை வரவழைத்தது.

    குட் ஈவினிங் மயூரி. நேத்திக்குச் சொல்லிக் கொடுத்த ஜதியை இப்ப பிராக்டீஸ் பண்ணலாமா?

    ஓ.கே. மேடம்! என்று உற்சாகமாகத் தலையசைத்தாள் மயூரி,

    வைஷ்ணவியை நமஸ்காரம் செய்து விட்டு ஆடத் தயாரானாள் மயூரி.

    "தை தை தை

    தித் தித் தை..."

    என்று தாளமிட்டபடியே பாடத் தொடங்கினாள் வைஷ்ணவி.

    கால் ஸ்டெப் தப்பாப் போடுற மயூரி...

    ஸாரி மிஸ்.

    மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்.

    ஓ.கே. மிஸ்.

    அடுத்த அரை மணி நேரம் மயூரிக்கு நடனம் சொல்லிக் கொடுப்பதில் தன்னை மறந்தாள் அவள்.

    மேடம்... நான் கிளம்பறேன்...!

    சரிம்மா. அடுத்த கிளாஸ் காம்பன்ஸேட் செய்ய மறக்காதீங்க.

    ஓ.கே. மேடம், என்று சொல்லி விட்டு அங்கு இருந்து கிளம்பினாள் அவள்.

    வெளியே இருள் நன்றாகச் சூழ்ந்து இருந்தது. 'திவ்யா வீட்டுக்கு வந்து இருப்பாள்.

    நல்ல நேரம், எதிர்த்த அபார்ட்மெண்ட் ஆன்ட்டியிடம் சொல்லி விட்டு வந்து இருக்கிறேன். அதனால், அவர்கள் திவ்யாவை நான் வரும் வரை பார்த்துக் கொள்வார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1