Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandhuvidu Ennavane...
Vandhuvidu Ennavane...
Vandhuvidu Ennavane...
Ebook114 pages52 minutes

Vandhuvidu Ennavane...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129504755
Vandhuvidu Ennavane...

Read more from Daisy Maran

Related to Vandhuvidu Ennavane...

Related ebooks

Reviews for Vandhuvidu Ennavane...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandhuvidu Ennavane... - Daisy Maran

    http://www.pustaka.co.in

    வந்துவிடு என்னவனே…

    Vandhuvidu Ennavane…

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    உறவுக்காரர்களின் நடமாட்டத்தில் களைகட்டி இருந்தது, 'லெட்சுமி விலாஸ்'.

    சாம்பிராணியின் நெடியையும் தாண்டி, நெய்யில் வேகும் கேசரியின் மணம் மூக்கைத் துளைத்தது.

    வசந்தா... வசந்தா...- சிவநேசன் அழைத்தார்.

    இதோ... வந்துட்டேங்க! என்ன விஷயம்... சொல்லுங்க?

    மோகனா 'ரெடி'யாகிட்டாளா?

    தெரியலையே...!

    போய் பார்த்துட்டு வா.

    இதோட பத்து முறை ஏறி இறங்கிட்டேன். இனி என்னால முடியாது. முட்டி வலி தாங்க முடியல.

    சரி, விலகு. நானே பார்த்துட்டு வர்றேன்.

    அப்பா...! அக்கா எப்பவோ தயாராயிட்டாங்க... மாடியில் இருந்து இறங்கியவாறு சொன்னான்.

    தயாராயிட்டாளா... நல்லது. சரி... நீ போய் 'டிரெஸ்' மாத்திட்டு வா.

    மகனை அனுப்பிவிட்டு, தன் நண்பனைத் தேடிச் சென்றார் சிவநேசன்.

    டேய் குமரேசா... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எங்க வந்துட்டு இருக்காங்கன்னு போன்' போட்டுக்கேளு.

    செல்போனை' எடுத்துப் பேசிய குமரேசன், அவங்க நம்ம ஊருக்குள்ள வந்துட்டாங்களாம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கே வந்துடுவாங்களாம். புரோக்கர் தான் பேசினார் என்றார்.

    சிவநேசனுக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

    ஏய் வசந்தா... இங்க வா. அவங்க வரும்போது வாசல்ல நின்னு வரவேற்கிறதுதானே முறை?

    ஆமாங்க... இதோ வந்துட்டேன்.

    வசந்தா, வியர்வை முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்டே வெளியில் வந்தாள். கணவனின் அருகில் வந்தவள்.

    என்னங்க... நம்ம மோகனாகிட்ட கேட்டுட்டுதானே இவ்ங்களை வரச் சொன்னீங்க...?

    இதை எத்தனை முறை கேட்பே? அவகிட்ட சொல்லிட்டுத்தான் மாப்பிள்ளை வீட்டாரை வரச் சொன்னேன்.

    இல்ல... இதுக்கு முன்னாடி வந்த வரனையெல்லாம் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வேண்டாம்னு முடிச்சிட்டாளே! அது மாதிரி இதையும்... மென்று விழுங்கினாள்.

    அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. நீ தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காதே!

    'ஹாரன்' சத்தம் கேட்டது. இவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, 'கேட்' பக்கம் திரும்பிப் பார்த்தனர்.

    இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்றன. கைகளில் தட்டுடன் மாப்பிள்ளை வீட்டார்.

    வசந்தாவும், சிவநேசனும் கைகூப்பி அவர்களை வரவேற்றனர்.

    உறவுக்காரர்களைத் தொடர்ந்து மாப்பிள்ளை இறங்கினார். நல்ல உயரம், சிவந்த நிறம், கம்பீரமான தோற்றத்தோடு ‘பளிச் சென்று இருந்தார்.

    என்னோட 'செலக்ஷன்' எப்படி? மனைவியிடம் மெதுவாகக் கேட்டார். வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று இருக்கைகளில் அமர வைத்தனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு, சற்று நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.

    காப்பி எடுத்துட்டு வா...

    மனைவியை அனுப்பினார்.

    இல்லைங்க! முதல்ல பெண்ணை வரச் சொல்லுங்க. அதுக்குப் பிறகுதான் மத்ததெல்லாம் என்று நடுத்தர வயதுக்காரர் சொன்னார்.

    சிவநேசன், அருகில் நின்றிருந்த தன் தங்கையை அழைத்தார்.

    நீலா... நீ போய் மோகனாவை கூட்டிட்டு வாம்மா.

    இதோ... அழைச்சிட்டு வந்துடுறேன்.

    'விறுவிறு வென்று படிகளில் ஏறிச் சென்றவள், சிறிது நேரத்துக்குப் பிறகு அழைத்து வந்தாள்."

    களையான நிறம், கொடிபோன்ற உடல்வாகு. பார்வையால் சுண்டி இழுக்கும் கயல் விழிகள். மொத்தத்தில் அழகுப் பதுமை.

    கரும்பச்சை நிறத்தில் அடர்ந்த ஜரிகையோடு கூடிய பட்டுச் சேலை அணிந்திருந்தாள். அது அவளுக்கு மேலும் அழகை கூட்டிக் காட்டியது.

    மெல்ல படி இறங்கி வந்தவள், அங்கு அமர்ந்து இவர்களை ஒரு முறை அளந்தாள்.

    அந்தப் பார்வை ஒரு எதிர்பார்ப்போடு எதையோ தேடியது.

    வாம்மா... வந்து நமஸ்காரம் பண்ணிக்க. குமரேசன், மோகனாவிடம் கூறினார்.

    ஆனால், அவளின் காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை.

    அவளது தேடல், மாப்பிள்ளையிடம் வந்ததும் நின்றது. உடனே முகம் வாடிவிட்டது. 'இந்த முறையும் அவன் வரவில்லையா?' ஏமாற்றம் தெரிந்தது. 'ஆனால், என்றாவது ஒரு நாள் வருவான்... கண்டிப்பாக வருவான். என் ராஜகுமாரன் வந்து என்னை அழைத்துச் செல்வான்'- மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

    அப்பா சொன்னதுக்காக எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் வைத்தாள்.

    அப்படி உட்காரும்மா.

    ஒரு பெரியம்மா சொல்லவும்... மறுக்க முடியாமல் ஓரத்து நாற்காலியின் முனையில் அமர்ந்தாள்.

    அதற்குள் மாப்பிள்ளை, பக்கத்தில் இருந்தவரிடம்...

    மாமா எனக்கு பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு என்க…

    அட... என்ன அவசரம்? அதுக்குள்ள 'பொசுக்'குன்னு அப்படி சொல்லக்கூடாது. கொஞ்சம் பொறுமையா இரு.

    அடக்கினார் அவனின் மாமா.

    தம்பி என்ன சொல்லுது.? குமரேசனின் கேள்விக்கு அவரேதான் பதில் சொன்னார்.

    "மாப்பிள்ளைக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம். பொண்ணுகிட்டேயும் கேட்டு சொல்லீட்டீங்கன்னா...

    Enjoying the preview?
    Page 1 of 1