Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maranthal Thane Ninaipatharku!
Maranthal Thane Ninaipatharku!
Maranthal Thane Ninaipatharku!
Ebook101 pages46 minutes

Maranthal Thane Ninaipatharku!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பலவிதமான கனவுகளையும் ஆசைகளையும் சுமந்துகொண்டு பெற்றோர்களையும் மற்ற உறவுகளையும் விட்டு விலகி புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் துணை அவளுடைய கணவனாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் அவள் எத்தனை இன்னல்களை சந்திக்கிறாள் என்ற வார்த்தை பின்னல்கள் தான் இந்த நாவல்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580129505127
Maranthal Thane Ninaipatharku!

Read more from Daisy Maran

Related to Maranthal Thane Ninaipatharku!

Related ebooks

Reviews for Maranthal Thane Ninaipatharku!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maranthal Thane Ninaipatharku! - Daisy Maran

    http://www.pustaka.co.in

    மறந்தால் தானே நினைப்பதற்கு!

    Maranthal Thane Ninaipatharku!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அந்த அழகான பங்களா முன் கார் வந்து நிற்க… ஓடி வந்து கேட்டை திறந்து விட்டான் வாட்ச்மேன். கார் போர்டிகோவில் போய் நின்றது.

    டிரைவர் இறங்கி சென்று பின் பக்க கதவை திறந்து விட்டான். முதலில் சித்தார்த் இறங்கினான். அவனை பின்தொடர்ந்து மதுமிதா இறங்கினாள்.

    காரின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியில் வந்தார்கள்.

    வாங்க, வாங்க...

    வாப்பா சித்தார்த். வாம்மா மதுமிதா! கார் பயணமெல்லாம் எப்படி இருந்திச்சி?

    ஒண்ணும் பிராப்ளம் இல்லப்பா...

    சித்தார்த்தான் பதில் சொன்னான்.

    பொண்ணு. மாப்பிள்ளை இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. ஆரத்தி எடுத்துடுறேன். அப்புறமா வீட்டுக்குள்ள போங்க.

    நடுத்தர வயதுடைய அந்த பெண் சொல்லவும் தலையசைத்தபடி அமைதியாக நின்றிருந்தாள் மது.

    ஏம்மா... அம்மா, அப்பாவெல்லாம் உன்கூட வர்றதா சொன்னாங்களே?

    அவங்க யாரும் வரலை மாமா. தம்பிக்கு நாளைக்கு பப்ளிக் எக்ஸாம் ஆரம்பிக்குது. அதனால அவன் எக்ஸாம் முடிஞ்ச பிறகு வர்றதா சொன்னாங்க.

    உன்கூட யாருதான் வந்தா?

    மதுமிதா சட்டென்று தன் கணவன் முகத்தை ஏறிட்டாள். யாரும் வரவில்லை என்றாள் தன் மாமனாரிடம்.

    அவனோ ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போல கைகளை குறுக்கே கட்டியபடி நின்றிருந்தான். மதுமிதாவின் கண்களில் கண்ணீர் முட்டியது. தன்னை கண்ட்ரோல் பண்ணியபடி நின்றிருந்தாள். ஊரிலிருந்து கிளம்பும் போது என்ன நடந்தது என்பது அவளுக்கல்லவா தெரியும்.

    ஆரத்தி சுற்றி பொண்ணு மாப்பிள்ளையை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

    உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே சித்தார்த் டிரஸ் மாற்றிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

    என்னப்பா எங்கே கிளம்பிட்டே?

    அப்பா எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு போயிட்டு வந்துடுறேன்.

    அப்படி என்னப்பா முக்கியமான வேலை? வந்ததும் வராததுமா?

    வெளியிலே கிளம்பற புள்ளையை நிறுத்தி வச்சி ஏன் கேள்வி மேல கேள்வி கேட்குறீங்க? போயிட்டுதான் வரட்டுமே. அவன் நிம்மதியை கெடுப்பதே உங்க வேலை...

    மனைவியின் முணுமுணுப்பை கேட்டு முகம் சுழித்தவர்.

    சுந்தரி... சமையலறையில் வேலை கீலையிருந்தா போய் பாரு.... உரத்த குரலில் கட்டளையிட்டார்.

    "அப்பா நான் வர்றேன்பா...''

    மதுமிதாகிட்ட சொல்லிட்டுப் போ, அவதான் உன் மனைவி இந்த நினைப்பு உன்மனசுலே இருக்கட்டும்.

    தனிந்த குரலில் எச்சரித்தார் ராமலிங்கம்.

    ஓ! அப்படியா? - என்றவன். மதுமிதாவிற்கும், தனக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றான். அறை கதவு வெறுமனே சாத்தியிருக்க, கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.

    கம்மல், ஜிமிக்கி மாட்டல். வளையல் என விதவிதமாக அம்மா பூட்டி விட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழற்றி பாக்ஸில் வைத்துக் கொண்டிருந்தவள், கதவு தட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

    என் பிரண்ட்ஸ் கூட இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்கு. அதனால் நைட் வர லேட்டாகும்.

    அவன் சொன்னவுடன் அவள் முகத்தில் ஒரு பளிச் தெரிந்தது.

    அதை கவனித்தவனின் முகம் கடுகடுத்தது.

    நீயாவது எதையாவது கற்பனை பண்ணிக் கொள்ளாதே! அப்பா. உன்கிட்ட சொல்லிட்டு போக சொன்னார் அதனால்தான் சொன்னேன்.

    அவள் முக வாட்டத்தை கவனித்தவன் உதட்டோர புன்னகையோடு அந்த அறையை விட்டு வெளியில் சென்றான்.

    மூடிய கதவையே வெறித்தபடி நின்றவள். போன் அடிக்கும் சத்தம் கேட்டு தான் சுயநினைவுக்கு வந்தாள்.

    போனைகையில் எடுத்தவளின் முகம் மலர்ந்தது.

    அப்பாதான் போன் பண்ணிக் கொண்டிருந்தார்.

    ஹலோ... அப்பா சொல்லுங்கப்பா...

    மதும்மா சென்னைக்கு போய் சேர்ந்துட்டீங்களா?

    வந்துட்டோம்பா. வந்தவுடனே போன் பண்ண சொன்னீங்க, போன் பண்ணத்தான் மறந்துட்டேன்.

    பாத்தியா, பாத்தியா, மாமியார் வீட்டுக்கு போன உடனே எங்களை யெல்லாம் மறந்திட்டே பாரு.

    அப்படியெல்லாம் இல்லேப்பா...

    "சரி. சரி... உங்க அம்மாகிட்டே பேசு. இந்தா லெஷ்மி.''

    ஹலோ அம்மா!

    என்னடா குரல் ஒரு மாதிரி இருக்கு?

    அழுதியா?

    இல்லையேம்மா...

    இனி உன் வீடு அதுதான். உன் புருஷன். மாமனார், மாமியார், மச்சினன், நாத்தனார்னு அவங்கள்தான் உனக்கு எல்லாமும். சரியா?

    ம்ம்... சரிம்மா...

    சமத்தா இருக்கணும். எங்களைப் பற்றி கவலைப்படக் கூடாது...

    இப்போது லஷ்மியின் குரல் உடைந்தது.

    இந்தாங்க... உங்க பொண்ணுகிட்டு பேசுங்க...

    என்னாச்சிப்பா?

    ம்கும்..உனக்கு ஆறுதல் சொல்றேன்னுட்டு அவ அழுதுகிட்டு இருக்கா...

    அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் குட்நைடப்பா....

    கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி செல்போனை ஆஃப் பண்ணினாள்.

    மதுமிதாவுக்கு தன் அப்பாவையும், அம்மாவையும்

    Enjoying the preview?
    Page 1 of 1